கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை ****…
-
- 7 replies
- 6.5k views
-
-
எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
வணக்கம் நண்பர்களே! இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே! பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என் பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே! கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம். கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என…
-
- 26 replies
- 4.3k views
-
-
பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........
-
- 3 replies
- 1.4k views
-
-
வாழ்க்கை அழகான வாழ்க்கையது கடவுளின் வரம் அழகுற மாற்றுவது மானிடத்திறம் துன்ப இன்பம் விதியின் திடம் நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம் அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம் ஆனால் பணமே தேடுவது மானிட மனம் கடவுள்தான் வாழ்க்கையின் மூலம் இதை மறந்தால் நாமெல்லாம் மடம் காதல் பிரிவு காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல் - என்மனது ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு - - என்னோடு நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளை…
-
- 80 replies
- 8.8k views
-
-
"காதல் கனியும் நேரம் கவிதைகளோடு உன்வாசலில்..". எரிமலையின் உச்சியிலும் ஏற்றிடும் எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும் பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப் பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும் முன்னெவரும் கண்டிராதது போலவே முதல் உன்னை சிந்திக்க வைத்திடும் நித்திரையின் போதும் உன் நினைவுகளை நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும் சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும் எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில் எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும் இன்னுமதைச்சொல்லப் போனால்-உன் இரவுகளை சுட்டெரித்துவிடும் பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம் பட்டப்பகலிலும் வான்வெள…
-
- 7 replies
- 1.7k views
-
-
காகம் இருந்தும் கற்றுக்கொள்ள கிளிகளுக்கு கர்வம் அதிகம் நிறம் சரியில்லை என்றது ஆந்தைக்கு முழி சரியில்லை என்றது பிலக்கொட்டை குருவிக்கு துள்ளல் துடிப்பு அதிகம் என்றது உன் சத்தம் மெத்தக் கூடிப்போச்சு என்று செண்பகம் சொன்ன போது உனக்கு சோர்வு அதிகம் என்றது அடக்கி வாசி என்று அடைக்கலக் குருவி சொன்ன போது உடைத்து விடுவேன் மூக்கை என்று பேச்சுரிமை பேசியது பொந்துக்குள் கிளிகள் பத்திரமாக தனித்தனியே குந்தியிருக்கின்றது பொழுது சாயும் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக தென்னோலைகளை கிழித்து விடுவதுடன் அடங்கி விடுகின்றது அது மார்கழியின் கெற்போட்டம் இல்லை கார்த்திகையின் கனமழை காற்றும் வேகமாக வீசி முன் வேலி முருங்கை முறிந்து விழ…
-
- 9 replies
- 2.8k views
-
-
சிங்காரி சரக்கு…….. சின்னத் திரை என்னும் வண்ணத்திரை வனிதையவள் கன்னிப் பெண்ணாக கருத்திற்கு விருந்தாக எண்ணத்தில் இனிக்கின்ற கன்னற் சுவையாக கொட்டும் கண்ணீரில் சொட்டும் அமிலத்தால் பந்தமென்றும் சொந்தமென்றும் பாசமென்றும் நேசமென்றும் ஆனந்தம் சொரிகின்ற அழகு வசந்தமென்றும் கெட்டிமேளம் கொட்டிவிடும் மெட்டிஒலி மகளென்றும் செல்லமடி நீ என்றம் செல்வத்தின் மனைவி என்றும் அத்திப் பூ அரசி என்றும் கஸ்தூரி மானென்றும் எத்தனைதான் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றாள் செற்றிக்குள் இருந்தபடி இச் செப்படி வித்தைகளை கண்டு மனம்கசிந்து கைக் குட்டை நனைக்கின்ற கண்ணான எம்மவரின் புண்ணான நிலை கண்டு எண்ணத்தின் கோலத்தை எழுத்தில் வடித்திட்டேன் மென்மைக்கும் பெண்மைக்கும் மெய்ப் பொருளை…
-
- 2 replies
- 1.3k views
-
-
கண்ணின் மணியாய் கனிந்தவளே கனக்குதடி இதயம் காணத்துடிக்குதடி உன்னை.. கண்ணோடு கண் கொண்டு கதைகள் பேசி கணங்கள் மறந்து களித்திருந்த நினைவுகள்..! கனவுகள் கூட கணமும் காட்டுதடி உன்னை கனக்கும் பிரிவுக்குள் கண்கள் சிவக்குதடி தினமும். கண்ணீரின் நிறையது கடல் தாண்டிப் போனதடி கனக்கும் சோகம் கட்டிலில் நோயோடு கட்டியதடி என்னை. கனவாகிப் போனதுவே காளையிவன் களிப்பு..! கணமும் ஏங்குதடி கண்ணில் உன் விம்பம் நாடி. கதறுகிறேன் இன்று தனிமையில்.. கனிந்த உன் நினைவுகள் கனக்குதடி மனசெங்கும்.. கழுத்தில் ஒரு சுருக்கு களிப்புடன் தா கனவில் உன்னைக் கண்டபடி கழற்றி விட என் உயிரை கழன்று விடுகிறேன் உலகை விட்டே கண்களால் நீ என்றும் என்னைக் காணாதிருக்க…
-
- 10 replies
- 2k views
-
-
ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! சிப்பியென எனையெண்ணி முத்தொன்றை சேர்க்க முனைந்தேன் முடிவறியுமுன்னே முழுதாய் பறித்தெறிந்தாய் ஓற்றை வெண்ணிலா ஓய்யார உறக்கத்தில் பற்றேதுமின்றி பாவியாய் இருந்ததே ! இமைக்கும் நொடியினுள் இருளாக்கி மறைந்தாய் எனக்குள்ளே என்னை உருக்கி ஏழ்மைக்காதலை வளர்த்து வைத்தேன் காற்றினில் கரைத்து காதலை பறித்தெறிந்தாய் ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! மூன்றெழுத்தே என் மூச்சென்று முடிவாய் வாழ்ந்திருந்தேன் …
-
- 4 replies
- 1.1k views
-
-
கலி முத்திப் போச்சு இன்னும் மேலே மேலே எட்டாத உயரத்தைத் தொட்டுவிடும் துடிப்புடன் இறக்கைகளை அடித்து எழும்பிட முயல்கிறாய் ஆயினும் வாடையின் வேகம் உன் ஆடையை உரசி கட்டுக்குள் அடங்காத உன் கனத்த இறக்கைகளை முறித்திட முயல்கையில் ஏதிர்க் காற்றை முறியடித்து நீயோ எத்தனை தவிப்புடன் காற்றின் திசை நோக்கி வேகம் பிடிக்கிறாய் வேகம் அதைவிட வேகம் ஆனாலும் நீ பெட்டைக்குருவி பேதமை உன்னுடன் கூடப் பிறந்த புpறவிக் குணமா? ஏனோ தெரியவில்லை ஏகிறி எகிறி உன் சிதறிய கனவுகளுடன் கீழே கீழே இன்னும் கீழே மண்ணோக்கிய உன் மனச் சிதைவுகளுடன் வலியின் வேதனையை மிடறுக்குள் விழுங்கியபடி மனப் புதிருக்குள் மண்டிக் கிடக்கின்றாய் விதியின் கையிலோர் விளையாட்டு…
-
- 4 replies
- 1.7k views
-
-
வாயும் வயிறும்.. ஜம்மு பே(பி) யின் வாய்..! விடிந்த அந்த பொழுதினில் வீசிய இதமான வாசனையில் கருவாட்டின் மணம் முகர்ந்து விரிந்துகொண்டது வாய்! விரிந்த அந்தவாய் கருவாட்டு வாசம்வந்த குசினிப்பக்கம் பார்த்து ஏவறை விட்டுக்கொண்டது! பின்னர் வாய் திறக்கப் பட்டபோது வயிறு புழுங்கி எரிந்தது.. வாயை திறந்ததும்.. வாயிலிருந்த பற்கள் ஒவ்வொன்றும் பலவிதமான நாற்றத்தை உருவாக்க.. இந்த நாற்றம் வயிறுவரை சென்றுவிட்டது போலும்..! வயிறு அதனை விரும்பவில்லை..! நெடியின் கோரத்தில் தலைக்கு தலைசுற்ற அது குப்பறப்படுத்துக் கொண்டது! வாய் உடனடியாக மூடப்பட.. மீண்டும் கருவாட்டு வாசனை வர இப்போது வயிறு வாயை தவிர்த்து மூக்குடன்…
-
- 24 replies
- 3.9k views
-
-
பனிக்குளிரில் இதம் சேர்க்க ஓர் இழுத்தணைப்பு..! மெல்லத் தொட்டு மேனி தடவி இதழோடு இதழ் வைத்து வெப்பமூட்டி அவள் மூச்சில்.. என் சுகம்..! சுவாசம் எங்கும் அவள் வாசனை தரிக்க உடலோடு ஐக்கியமாகி சொர்க்கத்தின் வாசல் திறந்தாள் எனக்காய் மட்டும்..! நான் தொட்டுத் சுகித்து இன்புற்று பின்.. தூக்கி எறிந்தேன் அடுத்தவன் உறவானாலும் எனக்கென்ன என்ற நினைவில்..! பார்த்திருக்க வீதியால் சென்றவன் எடுத்தணைத்தான் அவளும் ஒட்டி உரசி அவனோடும்.. சீ சீ.. என்ன அசிங்கம் இதுவும் ஒரு வாழ்வா..??! விபச்சாரி.. பட்டம் வழங்கி நான் புனிதனானேன்..! கண்டவன் போனவன் சிரித்தவன் எடுத்தவன் அடுத்தவன் எல்லாம் சுகித்த பின் தூக்கி எ…
-
- 21 replies
- 2.6k views
-
-
அகரமெனும் சிகரம் அள்ளி எடுத்தேன் அழகுமயில் அணங்கவளை துள்ளி விழுந்தாள் துவண்டாள் என் அணைப்பில் கள்ளி நீதான் என்று கன்னம் வருடி நின்றேன் உன் பள்ளி அறையினிலே பாசமுடன் விளையாட எனக்கோ கொள்ளை ஆசையென்று கொஞ்சு மொழி உரைத்தாள் நெஞ்சம் முழுவதுமே மஞ்சு மேகமதாய் பஞ்சாய்த் தான் மிதந்து அஞ்சுகமாய் சிறகடித்தேன் நீல வானத்தில் நித்தம் பவனி வரும் கோல வெண்ணிலவும் கொஞ்சம் நாணி நின்றாள் என் பாவை எழிற்கோலம் பார்த்த காரணத்தால் வானத் தாரகையும் வெட்கித் தலை குனிந்தாள் “என் அன்பே உன் பெயரை அறிய ஆவல்”என்று அநேக தரம் கேட்டும் அவளோ மௌனித்தாள். “உன் பெயரைக் கூறாவிடினும் என்னுயிரே உன் பிறந்த இடம் ஏதென்று” பிரியமுடன் கேட்டேன் “என் பிறந்த இடம் பொதிகை வளர்ந்த இடம் மது…
-
- 6 replies
- 1.4k views
-
-
மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…
-
- 42 replies
- 6.5k views
-
-
காதலென்று அலைந்ததில்லை கனவதில் மிதந்ததில்லை என்னோடு உன்னை கற்பனைக் கண்கள் காணும் வரை! காலம் உன்னை இனங்காட்ட காரணமில்லாமல் கரைகிறது என் மனம் உன் நினைவில்! பாராத உன்னுருவம் பார்க்கத் துடிக்குது என் பருவம் பார்த்த விழிகள் பூத்திருக்கு இமைகள் அசைக்காது.! இடியே வரினும் இசைக்காத என் செவிகள் ஏங்குதுன் காற்றிலாடும் சொல் வாங்க! அர்த்தமில்லா கீதம் கூட அற்புதமாய் காதில் விழுகுது! இடைவிடாது இடிக்கும் அந்த இதயம் கூட அமைதிகாக்குது இதமாய் உன் பெயர் உச்சரிக்க! இரவோடு வந்த உறக்கம் கூட இரந்து கேட்டும் இரக்கப்படமால் இல்லையென்று கிடக்குது.! மோதலுக்கு வரியெழுதும் கரங்கள் கூட காதலுக்கு வரியெழுதத் துடிக்குது! நடை பயில பஞ்சிப்பட்ட கால்கள்…
-
- 15 replies
- 2.3k views
-
-
கன்னித்தமிழோ கவிதை மொழியோ கொஞ்சும் அழகோ கொவ்வை இதழோ பிஞ்சு விரலோ பேதை மனமோ கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லுதே ! கோவில் புறாவாய் ஓடி ஓளியுதே ! வஞ்சம் கொண்ட என்முன்னே வட்ட நிலாவாய் தோன்றி மறையுதே ! விழியழகோ மொழியழகோ மோதிச்சென்று வீழுதே ! விழிதீண்டிச்சென்று விரகதாபம் தோற்தே ! கனவா நினைவா கவிதை தந்து செல்லுதே அழகா ஆபத்தா அருகில் வந்து போகுதே !
-
- 5 replies
- 2.1k views
-
-
கண்கள் பூத்திருக்க கருவிழிகள் பார்த்திருக்க வெஞ்சமரில் விதையான வீரர்களின் வாழ்த்தொலியில் பொங்குதமிழால் பூரித்த மண்ணிலே வெந்து வெந்து நீறான சிங்களத்தினை வெற்றிகொண்டெழும் எம் வீரப்புலிக்கொடி நாட்கள் அதிகமில்லை நன்னாளும் தொலைவில் இல்லை பார்க்கும் இடமெங்கினும் பார்புகழும் வகைதன்னிலே பறந்திடும் எம்கொடி பார் தமிழே பார் வீரத்தமிழ்த்தலைவன் வெற்றியின் அரசனவன் வீறுகொண்டெழுந்திடுவான் வெற்றித்திலகத்தை பெற்றிடுவான் ஆற்றல் மிக்க அவனிடம் ஆயிரம் கலை உண்டு தோற்றோடும் பகைகண்டு தொடைதட்டி மகிழ்ந்திடான் விதையான தன்மக்களை மனதார நினைத்திடுவான் தாய்க்கு பிள்ளையாய் தமிழிற்கு தாயாய் வந்துதித்த எம்தலைவன் வெற்றி வாகை சூட வீறுகொண்டு நாம…
-
- 3 replies
- 1k views
-
-
எங்கே அந்த வெண்ணிலா ............... எங்கே அந்த வெண்ணிலா ..எங்கே அந்த முழுநிலா சலனம் அற்ற வானத்திலே பூரண சந்திரனாய் வெளி முழுக்க ஒளி பரப்பி விண்மீது நின்றாயே கரு முகில் மறைத்ததோ ,கயவர் கவர்ந்தாரோ நானா உன்னை அனுப்பினேன் நீயாக வந்தாய் நீயாக சென்று விட்டாய் ,தவிக்கிறேன் ,தேடுகிறேன் விழிநீர் சிந்துது இதயம் கனக்குது உலகம் வெறுக்குது மீண்டும் வந்து விடு என் இனிய பூரண சந்திரனே
-
- 4 replies
- 1.9k views
-
-
விழியும் மலரும்..!! மலர்ந்த அந்த பொழுதினில் வீசிய இதமான தென்றலில் மலர்களின் மெல்லிசை கேட்டு மலர்ந்தது என் விழி... மலர்ந்த விழி மொட்டுடைந்த அந்த மலரின் மெல்லிசை வந்த திசையினை தேடின..!! தேடிய அந்த விழியில் விழுந்ததோ பல மலர்கள் வாடின விழிகள்.. பூத்திருந்த மலர்களை பார்த்தும்.. மலர்கள் ஒவ்வொன்றினதும் இதமான சிரிப்பு விழிகளிள் விழுந்த போதும்..!! விழிகள் அதனை ரசிக்கவில்லை.. வீசிய தென்றலில் மலர்கள் தலையசைத்து விழியிடம்.. பேசின பல கதைகள்.. ஆனால் விழியோ மெளனம்..!! விழியின் ஏக்கம் அறியுமா மலர்கள்.. மலரின் குணம் அறியுமா விழிகள்.. மலரில் தேன் அருந்த தேனிக்கள் மெதுவாக …
-
- 53 replies
- 10.6k views
-
-
எட்டுத் திக்கும் முட்டிப் பொங்கு! உறவுக் கொடியே உணர்வைப் பொங்கு! எழுந்தது ஈழக்கொடியது என்று எழுகைத் தமிழே உரத்துப் பொங்கு! இன்னல் தன்னை இடித்துப் பொங்கு! இமயம் கொண்ட தாகம் பொங்கு! இனிவரும் காலம் தமிழரின் கோலம் உயரும் உயரும் பொங்கு! அண்ணன் காட்டிய பாதையிலே - எங்கள் அன்னையைக் காக்கும் விதி செய்வோம். (எட்டுத் திக்கும்) கொற்றத் தமிழே கூவிப் பொங்கு! சுற்றம் கூடி ஆளப் பொங்கு! செங்களம் வந்த சிங்களத் திட்டம் வேங்கையின் முன்னால் வீழ்ந்திடப் பொங்கு! தாயகத் துயரெல்லாம் தீ விழும் தமிழரின் பூமியில் அழகேறும். (எட்டுத் திக்கும்) திக்குத் திக்காய் தமிழே பொங்கு! தேசப்பாடல் பாட…
-
- 1 reply
- 1k views
-
-
இதுவும் ஒரு காதல் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகளே கால நீட்சியாய் தொடர்கிறது. பிரம்மனே காணமுடியாத முடி அவன் அடி நான் ஈர்ப்பு என்பதை அறிமுகம் செய்தது நாங்கள் தான் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகள் மணித்துளிகளாய் தொடங்கி மணிக்கணக்காய் மாறி யுகங்களாய் தொடர்கிறது. ஒரு மாலைப் பொழுது.. அவனைப்பார்த்தபடி நானும் என்னைப் பார்த்தபடி அவனும் பொழுது இரவை அழைக்க காற்று குளிரை நிறைக்க மரங்கள் இலைகளை உதிர்க்க அவன் என்னை நெருங்கி வருவதாய் உணர்ந்தேன் நெற்றி வியர்த்திட சத்தமிட்டுப் பல முத்தங்கள் பொழிந்தான் என் நிலவு காய்ந்த முற்றத்தில். குளிர்ந்து போய் நானும் ஒரு குட்டி நிலவ…
-
- 19 replies
- 2.7k views
-
-
அப்பா என்றால் அன்பு……. எம் முகவரிகளுக்கு முதலெழுத்து எம் அகரங்களுக்கு தலையெழுத்து நாம் முந்தி நின்று முகம்காட்ட தன்னை தந்து உருவாக்கிய சிற்பி குடும்பச் சுமைகளில் அன்னைக்கு ஊன்று கோல் இடுக்கண் சமயங்களில் இவரின் சொல் ஆறுதல் மனம் நோகும் வேளையிலோ இவர் வாய் மொழி மயிலிறகு குடும்ப வட்டத்திற்குள் உலகத்தையே உற்று நோக்கிய தத்துவ ஞானி இசை இவரது உயிர் இனிமை இவரது குணம் மௌனம் இவர் தரும் தண்டனை மனமெல்லாம் மழலைகள் சிந்தனை அன்பு இவரது மந்திரம் இவரிடம் இல்லை என்றும் தந்திரம் கல்விக்கு இவர் வாழ்வில் முதலிடம் கடமைதான் இவரது புகலிடம் இறைவனுடன் உறவாட விருப்பம் ஏராளம் இவரின் கை மட்டும் கொடுப்பதில் தாராளம் ஏம் தந்தை எமைப்பிரிந்து ஆண்டுகள் பதினாறாகு…
-
- 11 replies
- 17.2k views
-
-
கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு உண்மை தடைகளைத் தகர்த்து வீச தாயக மண்ணில் வீரர் தமதுயிர் துச்சம் என்றே தளர்வின்றிப் பணியில் உள்ளார் களத்திலே நிற்கும் அந்தக் காளையர் உடன் பொருதக் கடினமே அதை அறிந்த கயவரின் கொடுமை கேளும் மனிதரின் உரிமை என்று மற்றவர் போற்றும் சட்டம் மஹிந்தவின் ஆட்சி தன்னில் மரணமாய்ப் போன தன்றோ? கடத்தலும் பணப் பறிப்பும் கைதியாய் அடைத்து வைப்பும் கொலைகளும் செய்து நிற்கும்; கொடியவர் செயல் உரைப்போம் மனிதனை மிதிக்கும் அந்த மந்திகள் செயலை இந்த மாநிலம் அறியும் வண்ணம் மன்றிலே உரைத்து நிற்போம் பொங்கிடும் தமிழர் நாளில் பொலிவுடன் நாமும் கூடி …
-
- 5 replies
- 1.1k views
-