கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இக்கவிதையை எழுதியவர் யார் என்பதை யாராவது அறிந்து கூறுங்கள் பார்க்கலாம் ? நட்புடன் வாசுதேவன். ---------------------------------------------------- கவிதை என்பது சுதந்திரம்: கவிதை என்பது சுதந்திரம் அப்போது தெரிந்தது நான் இன்று வரையிலும் எழுதியிருப்பவை கவிதைகள் அல்ல என்பது என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது பூஜ்ஜியம் உளறல்கள் பேரர்த்தம் கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள் கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம் நான் எழுதியிருப்பவையல்ல கவிதைகள் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும். ****
-
- 5 replies
- 2.2k views
-
-
பெருமூச்சு வலிபடைத்து முறமெடுத்துப் புலியடித்த தமிழகம் கிலிபிடித்த நிலைபடைத்து வெலவெலத்து வாழ்வதோ? பகையொதுங்கப் பறைமுழங்கிப் புகழடைந்த தமிழகம் கதிகலங்கி விழிபிதுங்கி நடுநடுங்கி வாழ்வதோ? படைநடத்தி மலைமுகத்தில் கொடிபொறித்த தமிழகம் துடிதுடித்து அடிபிடித்துத் குடிகெடுத்து வாழ்வதோ? கடல் கடந்த நிலமடைந்து கதையளந்த தமிழகம் உடல் வளைந்து நிலை தளர்ந்து ஒளியிழந்து வாழ்வதோ? மகனிறக்க முலையறுக்க முடிவெடுத்த தமிழகம் புகழிறக்க மொழியிறக்க வெளிநகைக்க வாழ்வதோ? கவிஞர் காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து
-
- 3 replies
- 1.6k views
-
-
காதலர் தினத்தையொட்டி இரு காதல் பாடல்கள். அனைத்து யாழ்கள உறவுகளும் மகிழ்வோடு காதலர் தினத்தைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன் என் மனதில் விழுந்த நதிக்காக நான் எழுதிய இரு பாடல்கள் இங்கே. இந்தப் பாடல்களின் தோற்றத்தால் இரு இறுவட்டுக்களும் ஒரு திரைப்படமும் உருவானதில் பெரு மகிழ்ச்சி. காதலர் தினத்தைக் கொண்டாட தயங்குபவன் தமிழனாக இருக்க முடியாது. காதலைப் போற்றாதவன் மனிதனாக வாழ முடியாது. காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டும். காதல் என்பது என்னைப் பொறு…
-
- 1 reply
- 1.1k views
-
-
காதலி மலர்களிலும் சிறந்தவளே என் கரம் மறுத்த கனிமொழியே - உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வஞ்சி உன்னிடம் நான் கெஞ்சி நிற்க வெஞ்சினம் கொண்டு வெறுத்து சிவந்;தவளே செவ்வானமும் சிறகடிக்கும் புள்ளினமும் வண்ணிலவும் வருடும் பூங்காற்றும் செந்தணல் மூட்டி என்னைச் சிதறடிக்க உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வெண்சங்கு கழுத்தழகி விலையற்ற மணியவளே உன் சொல்லில் உண்மையில்லை உதயம் இனி உலகிலில்லை வெறுத்து நிற்கும் மலரிடம் வெதும்பி நிற்கும் வண்டு இது உயிரற்று விழுமொழிய ஒதுங்கி மட்டும் போய்விடாது என்றாவது உன் உணர்வுகளில் சலனம் என்று ஒன்று வந்தால் உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில். . . . eelam…
-
- 1 reply
- 998 views
-
-
தேம்ஸ் நதியின் புன்னகை வ.ஐ.ச.ஜெயபாலன் பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும் கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம். கழுத்தை நெழித்து சிறகை அகட்டி நீர்மீது ஓடி வான் எழுந்த அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு மோனத் தவத்தில் முகில்களின்மீது எந்தன் கவிமனசு. சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள். நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன். ”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்.. இதே தேம்ஸ் இதே இதே இதே தே…
-
- 2 replies
- 1.8k views
-
-
அன்புத்துளியே!! வானில் இருந்து விழுந்த மழைதுளியில் ஒரு துளி நீயம்மா கல்லான என் இதயத்தை ஈரமாக்கிய அந்த ஒரு துளி நீயம்மா... என் விழியில் வடிந்த கண்ணீரை நீக்கிய என் அன்பு துளி நீயம்மா சில மழைதுளி போல் என் வாழ்வில் உடைந்திடாத அன்பு துளி நீயம்மா!! இதமான பேச்சில் இதயத்தையே தொட்டுடும் துளியம்மா நீ என் கோபத்தை கூட புன்சிரிப்பில் கரைத்திடும் அன்பு துளியம்மா நீ.. மழையில் கிடைத்த இந்த துளியை கண்ணில் வைத்தேன் என் கண்மணியாய் அக்கணமே என் கண்ணில் இருந்து கண்ணீர் துளி வருவதில்லையம்மா.. குடை பிடிக்க மறுக்கும் என் கரங்கள் குடை பிடிக்க தொடங்கிவிட்டன வேறோரு மழைதுளி என் மேல் விழாமல் என் கண்ணில் இருக்கும் உனைக் காக்க.. …
-
- 17 replies
- 2.6k views
-
-
சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் …
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்.. நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!
-
- 22 replies
- 4.2k views
-
-
2 Poems on Canada ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி. அம்மாவின் மரணத் துயரோடு வெண்பனியையும் உருக்கிவிட்ட காலம் வலியது. ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில் குனிந்துவந்த சூரியன் ஒளி விரல்களால் மிலாறுகளை வருடிவிடுகிறது. மொட்டை மரங்களின்மீது பசிய அறோரா துருவ ஒளியையும் வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். எங்கும் பசுமையும் பூக்களும் பட்டாம் பூச்சியுமாய் வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும். உலகம் சிருஸ்டி …
-
- 7 replies
- 3k views
-
-
நெஞ்சில் இனித்த நினைப்பு --------------------------------- -மு.கருணாநிதி தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும் தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும் வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும் கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய் ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும் பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல் ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும் எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய் ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட…
-
- 0 replies
- 1.1k views
-
-
தொலைந்து போன சுயங்கள் அங்கீகாரமே தேடலென்றாகி, மாற்றார் மதிப்பீட்டில் சுயத்தை அளப்பதால், மற்றவர் கணிப்பே தீர்ப்பென்றாகித், தொலைந்து போனது எத்தனை சுயங்கள்? அம்மா மகிழ வைத்தியராகி, அயலார் மதிக்க பட்டங்கள் அடுக்கி, மனையாள் மகிழ ஊதியம் கூட்டி, மனதுக்குள் புழுங்கி யாருக்கு லாபம்? "பத்திஞ்சி"யைப் பன்னிரண்டாக்கும், மின்னஞ்சல் விளம்பரம் மெய்யெண்டு நம்பி, இல்லாத காசைக் கடனாகப் புரட்டிக், களிம்பு தடவுவோர் உள்ளது எதனால்? சிலிக்கன் நிரப்பும் சில்லெடுப்புக்களும், "கன்னிமை"ப் பம்மாத்துச் சத்திர சிகிச்சையும், உதட்டுக்கும் மூக்கிற்கும் பிட்டத்துத் தசையிற்கும், வயிற்றிற்கும் தோலிற்கும் அறுப்புக்கள் எதனால்? நாலு பேரிற்கு நாலாயிரம் சதுரஅடி, …
-
- 19 replies
- 2.9k views
-
-
இனியது கேட்கின். ------------------------------------------------------------ நிதானமாக நடந்து வந்த குளிர்காலம் மரங்களைத் துகிலுரித்து அவற்றின் கிளைகளெங்கும் தன் நிர்வாண சர்வாதிகாரத்தை நிலைநாட்டியிருந்தது. நகரின் சந்தடிகளையும் வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில் உலர்ந்து ஆவியாகின. புனித மார்ட்டீன் ஓடையின் கரைகளை ஒளித்துவைத்திருந்தது மண்டிக்கிடந்த பனிமூட்டம் புறப்படுவதற்காகவோ அல்லது தரித்து நிற்பதற்காகவோ ஒரு உல்லாசக் கப்பல் அங்கு தனியனாக மிதந்துகொண்டிருந்தது. ஒரு பூனையும் வெளியே புறப்படாத குளிரிரவில் …
-
- 8 replies
- 1.9k views
-
-
கவிதை அந்தப் பொழுது..... ஒவ்வொரு முறையும் எனது இருளக்குள்ளேயே நான் தொலைந்து போகிறேன் ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு ஓர் ஒளியிடையேனும் விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு மூலையில் கிடக்கிறது இருள். எல்லா நியாயங்களுக்குமான கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன். எனது சுமைகள் எதனையும் பொருட்படுத்த முடியாமல் பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன். உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம். மரணம் பற்றிய ஒவ்வொரு நினைவினூடாகவும் கழிந்து போகின்றன நொடிகள். இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு ஒரு இயலாக் கருவியாய் எறியப்பட்டுப் போனேன் மூலையில் ஒரு புரட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
என்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்... உன் கண்கள் காணும் காலை நேரம் எனக்கு காதலர் தினம்... உன் இதயத்திற்கள் நானிருக்கும் இனிய நிமடpமெல்லாம் எனக்கு காதலர் தினம்... உன் இடது பக்த்தில் என் இதயததையு; எனத இடது பக்கத்தில் உனது இதயத்தையும்... நாம் தாங்கும் நாளெல்லாம் எமக்கு காதலர் தினம்.. அப்பாடா ரெம்ப தேடுதல் வேட்டையில் சிக்கியது கலைஞனின் வேண்டுதலுக்காக இங்கே சுட்டு ஒட்டுகிறேன்.. சத்தியமா எனதல்ல.. சுட்டது...இங்கே http://kaathdal.tripod.com/
-
- 1 reply
- 923 views
-
-
கல்லரை முன் கண்ணீர் சிந்தி கண்துடைக்க என்னை எழுப்பிவிடாதே உன் கருவறையில் ஜனனிக்க வேண்டும் நான்! ......................... உன் உள்ளங்கையில் குடியேற ஆசைப்பட்டு முற்றத்தில் சொட்டியது அந்திமழை ....................... உதிர்ந்தது பூ வலியில் துடித்தாய் நீ! .................... சொட்டுச்சொட்டாக உள் இறங்கி உரைந்துப் பனிச்சிலையானது! மனசெல்லாம் நீ! ...................... தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நான் பூக்களை பரித்துவிட்டால் உன் பாதி உயிர் கரையுதடி நீ என்ன முரண்களின் மகளா! .................. என் உதடு யாத்திரீகன்கள் உன் …
-
- 0 replies
- 10.7k views
-
-
சில கற்பனைகள் உன்னுடன், இது போன்றதொரு தருனம், இனி நிகழாதெனில், இன்றே என் வாழ்வின், இறுதி நாளாகட்டும்..!!! உனைப் பார்த்த அந்த சில நொடிகளிலேயே, பற்றிக் கொண்டது காதல் நெருப்பு...! காதல் நெருப்பிலே, நான் கருகுகிறேன்..... நீ... குளிர்காய்கிறாய்....!!!!!!!!!! suddathu....http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_115712824924957211.html
-
- 0 replies
- 795 views
-
-
காதல் உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன் Posted by கஜந்தி at 9:04 AM காதலன் ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே... Posted by கஜந்தி at 9:15 AM கணவன் இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்.. Posted by கஜந்தி at 6:07 AM புரியவில்லை... படிப்பது அக்காவா பிள்ளையா என்று …
-
- 0 replies
- 808 views
-
-
மூன்றாம் காதல் -------------------------------------------------------------------------------- - நெப்போலியன் பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் ! வேலைக்குச் செல்கையில் ரயில் வண்டியில் எதிர் இருக்கையில் இரண்டு வருடத்திற்கும் மேலாய் அடைகாத்து ? சொந்த வாகனம் உடையவன் அறிமுகம் கிடைத்ததும் பரிதவிக்க விட்டுப் பறந்துபோன இரண்டாம் காதல் ! மூத்தவன் வலது கையிலும் இளையவன் இடது கையிலும் என் விரல்களைக் கோர்த்தபடி நடந்துகொண்டிருக்க... கடைக்குட்டியை அவள் வயிற்றில் சுமந்தபடி முற்றுப்பெற்ற மூன்றாம் காதல். சுட்டது...இ…
-
- 0 replies
- 728 views
-
-
இணையம் கண்டெடுத்த இதயம் (சும்மா ஒரு எதுகை மோனைக்காக!) எப்போதோ சந்தித்த ஒருவர் உலகத்தின் இன்னொரு மூலையில் வந்தபின் மீண்டும் ஹலோ சொல்வதால் வரும் சந்தோசம் பெரிது! கணினித் திரை வழி கைகள் சொடுக்கி இணையத்தில் தேடினேன் சந்தை நிலவரம் முதற்கொண்டு சாதிக் கலவரம் வரை உலகத்தின் வினையத்தனையும் விபரமாய்த் தரும் இணையத்தில் முந்தை ஒரு நாள் வீதியில் புன்னகைத்துச் சென்றவளும் சேதிகள் பலகொண்டு தேடியே வருவாள் என்று என்றேனும் நினைத்தேனா? விந்தையிது வென்று கூத்தாடி நான் மகிழேன்... இணையத்தின் அகன்ற கைகளில் உலகம் வெறும் எள்ளுருண்டை! http://kaviruban.spaces.live.com/blog/cns&...B!170.entry அண்ணா சும்ம…
-
- 0 replies
- 722 views
-
-
வணக்கம். தமிழீழ விடுதலை காணங்கள் தேவை. படைப்பாளிகளிடமிரந்து எதிர்பார்க்கப் படுகிறது . உங்கள் ஆற்ரலை வெளிப்படுத்த இவை நல்லதொரு சந்தர்பம் தமிழீழத்தின் பிரபல பாடக்கர்கள் ஊடாக இவை வெளி வர இருக்கின்றன இவை அணைத்தும் தமிழீழ தேசத்தை பற்றிய கருப்பொரளாக அந்த விடுதலை சம்பந்தமாக அமையப் பெற வேண்டும். இன்றே களமிறங்குங்கள் படைப்பாளிகளே ஆர்வலர்களே மொழியால். இனத்தால் ஒன்று பட்டு விடிகின்ற எம் தமிழீழ சேத்திற்கு பாட்டால் உயிர் கொடுத்து நாமும் உணர்வு கொண்ட எழுக உங்கள் படைப்புக்களை எமக்கு தனிமடல் ஊடாக அனுப்பி வையுங்கள். உங்கள் பெயர் தொலைபேசி இலக்கம் அல்லது கலகத்தின் அங்கத்தவராயின் தனிமடல் ஊடு தொடர்பு கொள்ளலாம். மேலும் படிக்க.... …
-
- 5 replies
- 2.1k views
-
-
பனிச் சோலை உன்னைப் பகலெல்லாம் பார்த்துக் கனிச்சாற்றே சொன்னேன் கவிதை_தனியே உன்னை மறந்து இங்கே உயிர்வாழ்வதென்றால் நினைவிளந்து போகாதோ என் மனம் மூச்சாகி என் மனசில் மோக நினைவூட்ட நீச்சலிட்டு ஆடிடும் நித்திலமே_பூச்சாரம் போல் என் இதயத்தில் பூத்தவளே ஏந்திழையுன் எண்ணமின்றி இன்னொன்று இல்லை இனி தூங்க மறுத்துத் துடிக்கின்ற கண்ணிமையும் ஏங்கி தவிக்கும் இதயமும்_பூங்கொடியே உனை எண்ணி புலம்பிடுதே உன் இன்முகம் காண துடிக்குதே என் கண் நம்மை தொட்டுப் போன தென்றல் நாளை வருமென்றே_நான் இமை கொட்டாதிருக்கின்றேனே துயிலின்றி உள்ளேன் துடித்து
-
- 10 replies
- 2.2k views
-
-
Feb 10 2005, 08:49 PM இதயத்து சேகங்களை இறக்கிவைத்து சுமக்கும் சுமைகளையும் சொல்லிட வார்த்தைதேடி கலைந்துபோகும் என் கனவுகளை கலைத்து பிடித்து கட்டிவைக்க விழையும் வாலிபன்நான் வசந்தத்தை அனுபவிக்கும் வயதில் வறுமையை தாங்கலாம் வெறுமையை...........?? முடியவில்லை வீதியில் வீசப்பட்டடோ விக்கப்பட்டவனே இல்லை சொந்தம் சுற்றம் எல்லாம் உண்டு உற்றாருக்கும் பெற்றாருக்கும் உதவி உதவியே உதிரிபாகங்கள் தேய்ந்துபோய் உடலும் மனமும் சோர்ந்து.....என் துக்கங்களை தூக்கம்மட்டும் அவ்வப்போது தத்தெடுத்து கொள்ளும் இதோ என்னை தத்து கொடுத்துவிட்டேன் நிதந்தரமாக (ஒரு நண்பனின்உண்மை கதையிது
-
- 13 replies
- 2.8k views
-
-
Jan 21 2005, 05:53 AM ஓஓ என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? பழைய பதிவினை தேடிஎடுத்துத் தந்த மேகனிற்கு நன்றிகள்;
-
- 6 replies
- 1.7k views
-
-
அவலம் உனக்கு காண்...! காட்டு மிருகமுடன் கலவியாடி பெற்ற பிள்ளை நாட்டை ஆளுதென்றால்- நாடு நாறாமல் என் செய்யும்...?? கூற்றுவனே அவனாகி- தமிழர் குரல் வளை அறுக்க வந்தால் ஏ.கே.யை தூக்காமல்- என்ன ஏப்பையா அவர் எடுப்பார்...? விழுந்து படுத்ததென்றா- புலி வீராப்பு நீர் போட்டீர்...? எழுந்து பாயும் இனி - உன்னை எவன் வந்து தான் காப்பார்...?? அரக்கர் குலம் நீவீர்- தமிழரை அழிக்க வருகையிலே- புலி பார்த்தா நிற்க்கும் என்ன பைத்திய காறர்களே...?? சிந்தனை உமக்கென்றா சிறகடித்து நீர் பறந்தீர்..? ஒடிந்து விழுந்தீர் பார்- இனி ஓலம் உமக்கு காண்...! -வன்னி மைந்தன் - http://www.kalakam.com/forum/viewtopic.php?p=125#125 …
-
- 7 replies
- 1.8k views
-