Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் இருப்பின் எல்லைக்குள் என் வசமாகுமா? வெள்ளி மீன் சிரிக்கும் வானக் கடலினுள்ளே பிள்ளை நிலா தவழ்ந்துவரும். மல்லிப் பூ விரிக்கும் மோகனப் பொழுதினிலே உள்ளம் என் வசமிழக்கும். படம் விரித்த கடல் நாகம் தரையிலே மோதும். - பாவம் இடம் விட்டு கரைமகுடி அதைத் திருப்பி அனுப்பும். உப்புக் காற்று வந்து - என் உடல் தழுவி, சப்புக் கொட்டி - பல சண்டித்தனம் செய்யும். தப்பென்று யான் முறைத்தால் அப்பால்ச் சென்று தென்னங்கீற்றோடு கை கொட்டிச் சிரிக்கும். பட்டுத் துகிலுடுத்திச் சிட்டுக்குருவி வரும். மொட்டவிழ் மலரினுள்ளே மட்டு எடுத்துக் கொண்டிருக்கும். வட்டமாய் விழி அகல, வெட்டாமல் யான் முழிக்க - தன் குட்டிச் சொண்டாலே, - எனைக் க…

    • 2 replies
    • 1k views
  2. Started by இனியவள்,

    மீள் ஆயுள் ஓலிவடிவில்... உன் தோள்களை விட்டு நகர்ந்தால் என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே இரவில் உலாப் போக பிடிக்கும் என்பதால் நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே உனக்கு பிடித்த பகலை இரவாக்கி காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய் வாழ்வின் இறுதி நாளில் தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் நீ தொலைந்ததை மறந்து யார் செய்த பாவமடா? யார் தந்த சாவமடா? உன்னை காதலித்தபடி இந்த ஆயுள் என்னை மறு ஆயுளுக்காக அழைக்கின்றது நான் சென்று வருகிறேன் -இனியவள்

  3. ஊரோடு என் உடல் கரையும்! உன்னோடு நானிருந்து உறங்காமல் விழித்திருந்து கண்ணால் தழுவுவதும், - உன் கவின் பூத்த புன்னகையில் நான் காணாமல் போவதுவும், என்னிரு கை விரித்து உன்னை நான் அணைப்பதுவும், உரிமையோடு ஆண்டு நீயென்னை அடக்குவதும் எப்போது நிகழுமென்று என் நெஞ்சம் ஏங்குதிங்கு! உள்ளங் காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும். கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட கனித்தமிழ் காவிரியே! தள்ளாடும் இதயமடி தவிப்பணைக்க ஏது வழி? உன்னடியில் தளமிட்டு உலக உலா செல்வதற்கு கண்ணடியில் கனவு சேர்த்துக் காத்திருக்கேன் கண்ணாட்டி வேளை வரும் என்று நீயும் வெகுநாளாய் இயம்புகிறாய் காலம் வரும் என்று நானும் காதல் கள்ள…

  4. எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா? வானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும் கார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில் ஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க காலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார் ஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன் வழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா? துளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின் துயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா? ஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும் அன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா? ஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி காண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா? மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே தனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா? வன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர …

    • 3 replies
    • 11.2k views
  5. இரத்தம் எழுதிய கவிதை மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கனைத்த…

    • 3 replies
    • 1.5k views
  6. Started by வெண்ணிலா,

    அன்பே வா...... நீயும் நானும் அன்போடு நீண்ட காலம் இன்போடு உறவு என்ற ஓடத்தில் ஏறி உல்லாசமாக ஒன்றாக உலகைச் சுற்றி ரசிக்கணும் என உறக்கத்தில் கனவு கண்டேன் உன் பொல்லாத கோவம் கண்டு என் கனவு நனவாகா என இன்றுதான் உணர்ந்தேன் நான் அன்று போலில்லை நீ என்பதை எப்போதும் இனிமையாக இருந்தேன் தப்பேதும் நான் செய்ததறியேன் வேண்டாம் என்மேல் அன்பே வீணான கோவம் உனக்கு துன்பங்கள் புடைசூழ நீயின்றி துவண்டு துடிக்கின்றேன் உனைப்போல் வேறோர் துணையின்றி ஊனை மறந்து கலங்குகின்றேன் விட்டுவிடு உன் கோவமதை கட்டியணை பாவியிவளை கெட்டிக்காரி என அடிக்கடி தட்டிக்கொடுப்பவனே அடிமேல் அடிவைத்து உனக்கு நடை பழக்கிய உன்னவளை இடி ப…

  7. Started by nunavilan,

    உன் புன்னகை ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென்று உன்னிடம் சொல்ல மட்டும் ஆயுள் கால தயக்கம் எனக்கு. நீ புன்னகைப்பதை நிறுத்தி விடுவாயோ …

    • 4 replies
    • 17.6k views
  8. Started by ரஞ்சித்,

    தம்பி ! நீயும் நானும் திரிந்தலைந்த எல்லப் பற்றைகளும்- முள்ளேறிய வீதிகளும் இப்போதும் வந்துபோகும் ! கருக்கம் மட்டை பிய்த்து-திராட்சை பறித்த கணங்களும் காரிருளில் மின்னி மறையும் ! பூவரசங்கிளையில் வாள் பிடித்து-மெய்யாவுமே அடித்தழுத நினைவுகளும் என்னைச் சுற்றி வரும்- ஆனால் நீ மட்டும் வராமலயே இருந்துவிட்டாய் ! நீ- புரவியேறிப் போன செய்தி கேட்டு விழித்திருந்தோம் இரவாகி நீ விண்ணேறிய சேதி வந்தது- கதறக் கூட முடியவில்லை- ஊர்சுற்றிக் காவலிருந்தது ! உன் இழப்பிலும் ஒரு உற்சாகம்-நான் கொடுத்து வைக்கவில்லை ! வைத்திருந்தால் உன் முன் நான் சென்றிருப்பேன் !

  9. Started by இளைஞன்,

    தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? கன்னத்தில் முத்தமிட்டால் ...

    • 3 replies
    • 1.4k views
  10. தாய் நிலமும் தனையர்களும் இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு. நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும் 'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள் இழந்து படுவோமா ..... 'அறுகம் குடாவில்' தோணிகள் மீது அலைகள் எறியும் கடலை அதட்டி, வலைகளை விரித்து நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ? வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு! எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே. உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும். மனுகும…

    • 0 replies
    • 792 views
  11. அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம். இன்பம் இருவரும் நாடியதுதான். நட்பு நான் மட்டுமே தேடியதோ ? முதற் கண் பொழுதில் முதுகு சில்லிட ஒரு கணம் தரித்தாய். உன் இதயத்துள் இருந்து அடி வயிறு அதிர இறங்கிய இன்பச் சூனியம் மறைக்க சினந்து முகம் திருப்பினாய். நானும் கள்வன் என்பதறியாது. அடுத்த நாள் ஆயிரம் ஒத்திகையோடு வந்து மணி கேட்டேனே. ஏழனம் தெறித்தது உன் பார்வையில் …

    • 21 replies
    • 4k views
  12. துரத்துகிறேன்...என்னைத்தான்* நிஜத்தைத் தொட நிழலின் வாலைப் பிடிக்கிறேன். நான் திருப்பித் தீண்டிட நிழலும் திருப்பிக்கொள்கிறதே? கற்பனைக்கு எல்லை குறிக்கிறேன் - அது என்னை மீறி எங்கோ சஞ்சரிக்கிறது... சுடும் நெருப்பை அறிந்த பிறகும் - அதுவே சுகமென - என் சுட்டு விரலை கரித்துக்கொள்கிறேன். கொடுங்காயங்கள் நிச்சயமென அறிந்தும், விபரீதத்தோடு - நான் விளையாடுகிறேன்! ஆற்றுபெறா ரணங்கள் பெற்றுத் தந்த பாடங்களை புரிந்து கொள்ள - நான் துரத்துகிறேன்... விடாது... என்னைத்தான். - சூர்யா

    • 2 replies
    • 1.3k views
  13. Started by yaal_ahaththiyan,

    உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்

  14. Started by yaal_ahaththiyan,

    நீ எழுதும் கவிதை அழகுதான் அதற்காக யார் கண்ணையும் நம்பி என்னைக் கைவிட்டுவிடாதே * நீ இல்லாத தருணங்களில் வாடிப்போகும் எனக்காக நீ கொடுத்த பூச்செடிதான் என்னை மலரவைத்துக் கொண்டிருக்கிறது * எதுவும் கேக்காமலே என் மடியில் நீ உறங்கியபோதுதான் தெரிந்தது உன் அன்பின் ஏக்கம் அதற்காக உன் குழந்தைதனத்தை கையிலுமா வைத்திருப்பாய் என்னை பிடித்தவாறே உறங்குகிறாய் * எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும் உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது முதல் முதல் சந்திப்பில் நான் வரும்வரை நீ சாய்ந்து நின்ற வீதிச்சுவர் * நீ பிரியும்போது கவனமாய் இரு என்று சொன்னதற்கு பதிலாய் உன்…

  15. Started by மோகன்,

    பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபால‎‎ன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரிய‎ன் அரபிக் கடல்‏ இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் ‏இருந்தோம். கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக் கருங்கூந்தல் இரப்பர் காட்டில் சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது. வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி முதல் துளியையே குருவி எச்சமாய் அருவருத்து நச்சு வசவுகளை உமிழ்கிறாள். நாளை ‏அவளே வெட்கமி‎‎ன்றி பொங்கலும் வைத்து மழையே வா எனப் பாடுவாள். ‏இது வாழ்வு. வானில் இரவு த‎ன் இளம்பிறை மதுக் கிண்ணத்தை உயர்த்திய…

    • 5 replies
    • 1.5k views
  16. ஏய்.. உலகமே விழித்துக்கொள்.. இரும்புக்கம்பிகள்.. நம்மை என்ன செய்யும்.. உலகமெலாம் தமிழனை உருட்டுவதேன்.. சிறைகள்.. வெறுமையாகும்.. நேரமெல்லாம்.. அப்பாவித்த தமிழனையா உள்ளே... அடைப்பது.. அடிப்பது... உதைப்பது... மனிதாபிமானத்துக்குள்.. அடங்காத மனிதனா கேட்பாரில்லாத.. குடிமகனா தமிழன்... மகிந்த மேய்க்கின்ற மந்தைகளா தமிழன்.. சொந்த நாட்டிலேயே.. அகதியான.. பாவியா தமிழன்.. ஏய் உலகமே.. விழித்திரு.... எங்களைப் பாதுகாக்க.. நீ வரவில்லை.. எங்களை நாங்களே பாதுகாக்க நீ விடவில்லை.. ஒரு கண்ணில் எண்ணெய்.. எம் துயர் உனக்கு தெரியமாலிருக்கலாம்.. என் தங்கையின் அழுகுரல்.. குழந்தைகளின்.. ஓலம்.. தாயின் விசும்பல்.. உன் காதுகளில் விழவில்லை.. கா…

  17. அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் எவர்க்கும் பணியா வன்னி பிள்ளைகளைப் பறிகொடுத்து விம்மி அழுகிறது. எதிரிகள் அறிக எங்கள் யானைக் காடு சிந்துவது கண்ணீர் அல்ல மதநீர். விழு ஞாயிறாய் பண்டார வன்னியனும் தோழர்களும் கற்சிலை மடுவில் சிந்திய குருதி செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில் எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை புதைத்து வருகின்றோம். புலருகிற ஈழத்தின் போர்ப்பரணி பாடுதற்க்கு. எங்கள் மூன்று அம்மன்களும் பதினெட்டுக் காதவராயன்களும் முனியப்பர்களும் எங்கே ? அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய் வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது. போராளிகளுக்காக தேன் வாசனையை வாகை மலர் அரும்புகளில் பொதிந்து காத்த…

    • 22 replies
    • 4.9k views
  18. யோசி....நேசி....![/ அந்திசாயும் இதமான நேரம் மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ் உன் தோளில் என் தலைசாய்த்து பன்னாட்டு கதை பல பேசி.... இனிமையான அப்பொழுதில் இணைந்த நம் இதழ்களோடு நாசிகள் உரசியவேளையில் நங்கையிவள் சட்டென கூசி... இன்னும் எத்தனையோ சில்மிசங்கள் இவையனைத்தயும் ஒருநொடியில் மறந்ததுமேனோ மன்னவனே மனம் திறந்து நீ யோசி.... என் உடல் உருக உருக உன்னையே தினமும் சுற்றி சுற்றி கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த வெண்ணிலாவை ஒருகணம் யாசி... பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள் விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து தன்னந் தனிமையில் அல்லாடும் கன்னியவளை வா வந்து நேசி...

  19. கவிதையின் அரசே! வாழீ! துள்ளிடும் வாலிபத்தால் துணையற்று வெண்நரையும், வில்லிடும் நாவளத்தால் வேதனை செய்விதியும், கள்ளிடும் கவின்பாவால் காணாமல் போகட்டுமென தள்ளி நிலம் வாழுகின்ற தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது. இருவயது மழலையாக இதயத்தில் உலவு கவியே! அறுபது அகவையய்யா அகத்திலே பதியவில்லை. ஆண்ட நின் புலமைகென்றால் ஆயிரம் அகவை தாண்டும். பூண்ட மண்கோலத்திற்குள் புதிர் கூடி நிற்குதய்யா! தீரப் பெருங்கவியே! தீராத மாவரம் தந்த துரோணக்குருவே! ஏறுபோல் நிமிர்ந்த எழுத்தின் வீரியமே! கண்ணூறு படுமய்யா! கரிநாச் சொல்லிது. காலடி மண்ணெடுத்துக் கற்பூரச் சுடரிலே போட்டிடுக! கூர்வடிவேலை ஆளும் சுந்தரப் பேச்சும், வேரடி வீரம் …

  20. Started by Kavallur Kanmani,

    வரமா? சாபமா? நாளை மணக்கோலம் காண மனமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து விட்ட மல்லிகையே உன் சந்தோசக் கனவுகளுக்கு இன்றுடன் சாவுமணி அடிக்கப்படுவது உன் காதுகளுக்கு கேட்காது நாளை உன் கழுத்தில் இடப்படும் விலங்கு உன்னை ஆயுள் கைதியாக்குவதை நீ அறியாய் உன் கைத்தலம் பற்றக் காத்திருப்பவனின் கைகளில் நீ ஒரு விளையாட்டுப் பொம்மை நாளை உன் சிறகுகள் ஒட்ட நறுக்கப்படும் இன்று நீயோ பருவச் சிட்டு நாளை முதல் சிறகொடிந்த பறவை நாளையிலிருந்து உன் நெஞ்சில் மனச்சுமை அதனால் தான் இன்று உன் தலையில் மலர்ச்சுமை உன் உடலெங்கும் கொள்ளை நகைகள் காரணம் உன் புன்னகையை அபகரிக்கத்தான் குங்குமப் பொட்டு மங்கைக்கு மங்கலமாம் இதுவே உன் வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி …

  21. தடமரித்த லாகா அலைஇ மகளிர் படமெடுத்துப் போட்ட அது தேடின் திரும்பா அலைநின் விழியிரண்டும் ஆடவள் கண்ணில் உளவே நுரைபால் இனிமை இலமே உளது நுரைக்கும் அவளின் நுரை இரைச்சல் அடங்கி அலைபுரளும் பெண்டிர் உரைச்சல் தவழ்ந்து வரின் முத்துக்கள் என்ப விலையில்லா நல்மணிகள் அத்துணையும் கேசத்தின் ஈறு அசையும் அதரத்தே தோற்குமே ஈர்ப்பில் இசையும் கடலின் அலை தொல்கவின் பேராழி நீலம்போல் எஞ்ஞான்றும் நல்கவின் பெண்டிர் சிறப்பு வற்றா கடலன்ன அன்புடையாள் வற்றினள்நீர் வற்றிய வற்றிலும் பற்று கடல்குடித்தால் தீராது தாகம் மகளிர் மடல்குடித்தால் தீர்ந்து விடும் அஞ்சுதல் துஞ்சுதல் விஞ்சுதல் எல்லாமே வஞ்சியர் பின்னும் உள

  22. Started by nunavilan,

    இளமைக்கால நட்பு நீயும், நானும் கரகமாடிய அந்த ஒற்றை விளக்கு அரசமரத்தடி... தோல் கிழிந்து இரவெல்லாம் சிராய்ப்பு வலி கொடுத்த நாய்க்கர் வீட்டு வேப்பமரம்... மட்டைகளை தோளில் சுமந்து மைல்கணக்கில் நடந்து கிரிக்கெட் ஆடிய சொசொரப்பு மைதானங்கள்... எதிரியின் பம்பரங்களை சில்லு சில்லாக உடைத்த பிரேமா வீட்டு முன்வாசல்... பசியெடுக்காத நிலாவுக்கு கும்மி தட்டி சோறு£ட்டிய தாவணி சிட்டுக்களை காண அமர்ந்த திண்ணைகள்... குமாரிடம் மூக்குடைபட்டு இரத்தம் சிந்திய நெருஞ்சி முட்புதர்... இப்படி ஒவ்வொன்றாய் பதினைந்து ஆண்டுகளில் எல்லவற்றையும் மிதித்தழித்துவிட்ட கால அரக்கன்.. மிஞ்சியிருக்கும் நினைவுகள் மட்டும் சுவடுகளாய்…

  23. Started by yaal_ahaththiyan,

    என் சோம்பேறி மனசு செய்த வீரமான செயல் உன்னைக் கண்டதும் ஓடிப்போய் உன்னைத் தொட்டுவிட்டு திரும்பி வராததுதான் * கையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறாய் நீ விடை பெற்றுப் போகும் கடைசி நாள் மாணவன் போல் வீடு செல்ல மனமில்லாமல் நான் * நம் காதலுக்கு முதல் எதிரி நேரம்தான் பார் நாம் சேர்ந்திருக்கும் போது மட்டும்தான் போட்டி போட்டு ஓடுகிறது * உன்னைக் காதலிக்க வேண்டாம் என்பவர்களை கூட்டி வா ஒரு நிமிடம் நீ இல்லாத என்னை கொடுத்துப் பார்ப்போம் சமாளிக்க முடிந்தால் சமாதானம் பேசுவோம் * என் கைகளுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்னை எதுவும் கேக்காமலே உன்னை அணைத்து பழகி…

  24. Started by மோகன்,

    திரு முருகு - வ.ஐ.ச.ஜெயபாலன் தினைப் புனத்தின் மத்தியிலே வேங்கை மர நிழலில் தேன் தினைமா துடைத்து வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன். தேவதைபாதி சூனியக் காரிபாதியாக காவல் பரணில் சிரிக்கின்றாள் வள்ளி வயல் நிறைய பூனையாக்கப் பட்ட யானைகள் அலைகிறது. நிலா முகத்தி மான்விழியாள் முல்லைச் சிரிப்பழகி தேன் மொழியாள் என்று சொன்ன கவிதை எல்லாம் பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள். வேங்கை மரத்தடியில் உடைந்த புல்லாங்குழல் பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும் கண் சிமிட்டிக் கண்ணனும் வந்தவர் என்கிறாள் ஏளனப் பணிவு இதில் வேறு எள்ளல் சிரிப்பு. வெறிக்கும் சோம மது புறக்கணிப்பின் ஆலகால விசம். எல்லார்க்கும் தேன் கமழ்ந்து எட்டாத குறிஞ்சி மலர். விந்த…

    • 5 replies
    • 1.7k views
  25. ஒரு பிரகடனத்தின் எதிர்வினை - சஹானா எங்களுடைய புன்னகையை சந்தேகிக்கும் எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல் அழகாயிருந்தது எங்கள் நதியிடம் சங்கீதமிருந்தது எங்கள் பறவைகளிடம் கூட விடுதலையின் பாடல் இருந்தது….. எங்கள் நிலத்தில்தான் எங்கள் வேர்கள் இருந்தன… நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம் எம்மூரில்… அவர்கள் எங்கள் கடலைத் தின்றார்கள்… அவர்கள்தான் எங்கள் நதியின் குரல்வளையை நசித்தார்கள்… அவர்கள்தான் எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்…….. எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத் துரத்தினார்கள் அவர்கள்தான் எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை தெருவில் போட்டு நசித்தார்கள்….. நாங்கள் என்ன சொல்வது நீங்களே தீர்மானித்து …

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.