Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இது தான் இறுதி தாக்குதல்.....[/color] நேற்று தான் உன் வீட்டில் வெடித்தது குண்டு சிதறின உன் உடலில் பல துண்டு... ஓடிய குருதி காய முன்னே ஓடி வருவாயா எல்லையில் நீ என்ன...??? வேதனை தான் உனக்கு அதற்க்காய் ஏன் புலம்புகின்றாய் பொன்சேகா...??? வாகரை என்ன உன் வாசல் படியா....??? எங்கள் வீட்டுக்கு ஏறி நீ வருவாயா வா... பந்தி வைக்கின்றோம் உனக்கு நீ முந்தி வா.... முறிந்து விழுந்த உன் முதுகெலும்பு எங்கே..?? சிதறிய உன் சதை துண்டெங்கே...?? தேடி எடுக்க இங்கு வாராயா வா.... சுற்று மதில் காவலுற்குள் சுற்றி நீ இருக்க சுற்றி வந்துன்னை சுழன்றடித்தோம் அதற்குள் மறந்தாயோ...??? அகந்தை கொண்டாயோ...??…

  2. வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …

  3. Started by shanthy,

    என்றும் போல.... நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின் சிரித்த முகம் கொல்லாமல் கொல்…

    • 2 replies
    • 1.1k views
  4. அழுவதற்காகவா தமிழினம் பிறந்தோம்....??? இமயங்கள் இமயங்கள் இடிந்தே வீழ்குது இன்றேன் தமிழுக்கு இத்தனை துயரம்...??? கண்ணீர் ஆறுகள் கடலென ஓடுது நெஞ்சத்தில் ரணங்கள் ஏனின்று கூடுது....??? விடுதலை ஊற்றுக்கள் விரைவாய் அடையுது காலனுக்கேன் இத்தனை கடுகதி அவசரம்...??? ஒளியென உதித்த உதயங்கள் எல்லாம் இருளதை அளித்து இறப்பதால் சோகம்.... புயலென எழுந்த விடுதலை வீரர்கள் பகையதை சருகாக்கி அழித்ததால் மகிழ்ந்தோம்... அருகில் இருந்ததால் அடைந்தோம் ஆனந்தம் அவரை இழந்ததால் அடைகிறோம் சோகம்... தீயென எழுந்த தீர வீரர்கள் தீயினில் எரிந்ததால் தேம்பியே அழுதோம்... மார்கழி வந்தாலே மரணத்தின் ஓலம் அழு…

    • 4 replies
    • 1.2k views
  5. """"இந்தியாவே எம்மை காத்திடாயா....???"""" தேசம் எரியுது தீயினிலே தமிழ் உடல்கள் வீழ்குது வீதியிலே.... அழுகுரல் வருகுது காற்றினிலே அட உலகே விழலாயா உன் செவியினிலே....??? குருதியில் நனையுது புலவுகளே வலி - கோரத்தில் துடிக்குது உறவுகளே.... போக்கிடமின்றி தவிக்கின்றதே போகவும் வழியின்றி துடிக்கின்றதே.... உணவுகள் இன்றி வதங்கின்றதே உதவுவார் இன்றி கலங்கின்றதே.... தாவிட கூடுகள் வேறில்லையே தாவிய கூடுகள் காணலயே... அந்நியன் வன்முறை அடங்கலயே அகதி வாழ்வின்னும் குறையலயே.... ஓடியே ஒதுங்கவும் முடியலயே ஒளிந்திட மறைவிடம் இன்றில்லையே... குண்டுகள் தோண்டிய குழியதுவே - புதை குழியாய் நமக்கின்று …

  6. """"குழி வெட்டும் மகிந்தா..."""" ஏய்... மகிந்தா ஏன் நீ மரணத்தை கண்டு மிரண்டோடுகிறாய்....??? உயிர் மீது உனக்கித்தனை ஆசையா...??? பாவி உயிர்களை பகலிரவாய் பறித்தாயே அது மறந்தா நீ பதுங்கு குழி வெட்டுகின்றாய்...?? வெட்டு நல்லாய் வெட்டு ஆழ கிடங்கெடுத்து அழகாய் நீ கட்டு.... அட முட்டாளே உனக்கு தெரியாதா அது தானே உனக்கு புதை குழி... இப்போ எங்கு ஓடுவாய்...??? - வன்னி மைந்தன் -

  7. """"கூட்டமாய் கூடாதீர் தளபதிகளே"..."""" அன்புத் தளபதியே அஞ்சும் மனதொன்று கெஞ்சி கேட்கிறது கூட்டம் இட்டு கூட்டமாய் கூட்டத்தில் நீவீர் ஏன்....??? நீர் மக்களின் தொண்டன் மரணம் உங்களுக்கு தூசு புரிகிறது இருந்தும் மனசு பதைக்கிறது... விருட்சங்களே எங்களின் விசாலங்களே நீவீர் வீழ்ந்தால் எம் விடுதலை என்னாவவது....??? வட்டமிட்டு வானத்தில் வள்ளூறு சுற்றி திரிகிறது... அலரி மாளிகையின் அரக்கன் உயிர் குடித்து ஏப்பம் விடுகின்றான்... வீதி உலா போகும் மனித மரங்களை வெட்டி எறிகின்றான்... ஆணி வேர் அறுந்து எத்தனை குடுமபங்கள் அல்லாடுகிறது... கண்ணீரோடு எத்தனை உறவுகள் தள்ளாடுகிறது... சுமையா…

  8. Started by இலக்கியன்,

    இருளினிலே மருளுகின்ற விண்மீன்கள் கொண்டாட்டம் இருவிழிகள் கருவிழியால் விடுகிறதே காதல் தேரோட்டம் மின்சார விழிகள் இரண்டும் மின்னி இழுக்கிறது மின்மினியாய் கயல்விழியே என் இதயம் காந்தமாகக் கவர்கிறதே தேவதையே உன் நினைவுகள் தேய்ந்துவிடாத வளர்பிறையே தேம்பி அவனும் அழுகின்றான் தேங்காமல் நீயும் வந்துவிடு தேனைப்பருக என்று தேடிவந்த தேனிகூட தேவி உன் முகம் கண்டு தேகம் சிலிர்த்ததுவோ தீண்டவில்லை உன் இதழை தித்திக்கும் சுவைகண்டும் தீங்கிழைக்க விரும்பாமல் தீர்க்கமாய் காத்திருக்கு தேவலோக கன்னியே நீயும் வந்துவிடு தேவனுக்கு அன்பே நீயும் உன்னைத்தந்துவிடு

  9. ''கண்ணீர் துடை கலங்காதே.. வைகோ..."" அண்ணனே வைகோ நீ அழுவதா...??? உன் விழியில் நீர் வீழ்வதா...??? நீ சீறும் புலி உன் நெஞ்சில் என்ன வலி....??? உன் கோட்டைக்குள் உளவாழி உனக்கே இன்று வெடி குண்டா...??? ""மூக்கு கண்ணாடிக்கு"" முதுகு சொறிபவன் உன் கட்சிற்குள் ஏன் சவாரி செய்கின்றான்...??? துரத்தவனை தூக்கி எறி முடிந்தால் தூக்கில் மாட்டு.... லஞ்சம் அங்கு லட்சியம் மறக்கிறது வஞ்சம் உனக்கு வம்புக்கு வருகிறது.... துரோக சன்னங்கள் உனை துளையிட பார்கின்றது விடாதே நீ எழு வீழ்த்தவனை.... களம் கண்ட புலி நீ கண்ணீர் வடிப்பதா...??? சீறு சிறுத்தையாய் எழு... நீ மலை உனை என்ன ச…

  10. பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை -கவிஞர் காசி ஆனந்தன்

  11. தேசத்தின் குரலுக்கு கண்ணீர் அஞ்சலி ********************************* வெண்மேகம் மறைந்தது-இருள்பரப்பி கார்மேகம் சூழ்ந்தது வெண்ணிலவு தண்ணொளியை ஒரு கணம் இழந்தது மின்னிய பின் பேரிடிகள் மேதினியில் தொடர்ந்தது-தமிழ் மேனிகளோ வேதனையால் கண்ணீரை வடித்தது உன் பிரிவால் இத்தனையும் உலகமெங்கும் நடந்தது விண்ணதிர்ந்த சேதிவந்து வேதனையைத் தந்தது அன்னைத்தமிழ் மண்முழுதும் கண்ணீரில் நனைந்தது தேசத்தின் குரலே தேசத்தின் குரலே தமிழீழ தேசத்தின் குரலே உலகெங்கும் தமிழினத்தின் இருள் அகற்றப் புறப்பட்ட சத்தியத்தின் ஜீவனே எங்கே நீ சென்றாய் மூ பத்து வருடங்கள் அயராது உழைத்தாய் -தமிழ் தேசத்தின் துன்பத்தை உலகெங்கும் உரைத்தாய் ஈழத்தை பெறுதற்காய் காலமெல…

  12. தேசத்தின் குரலோனே செங்கதிர் சொல்லோனே தேசியத்தின் சுவடோடு சென்றுவிட்ட வல்லோனே தமிழ் வாழும் நாள் எல்லாம் வாழ்ந்திடுவீர் எம்மோடே காலனின் வருகை கண்டும் கலங்கினீர் தமிழனுக்காய் காலம் கனியும் நேரம் கவர்ந்து விட்டான் காலதேவன் பேனா முனைகளிலே பேசியது உம் உணர்வு துப்பாக்கித் தோட்டாவாக துளைத்தது சிங்களத்தை பேச்சுவார்த்தை மேசைகளில் பேரமிட்ட சிங்கள துவேசிகளை மதியுரைஞர் உம் மதியினாலே மதியிழந்து கலங்கவைத்தீர் போரும் சமாதனமும் தந்தீர் போற்றுகின்ற பொக்கிசமாய் நோய் வந்து உழன்றபோதும் நேசித்தீர் சமதானத்தை தேசியத்தலைவரின் நேசத்துக்குரிய நண்பா தேசம் போற்றும் உம் நேசக்கரம் என்றும்

  13. மூத்த தளபதியே எங்கள் முதல்வனே உன்னை தேடி எங்கள் தேசம் அலைந்தது.... எங்கே நீ என்று ஏங்கி தவித்தது... காலம் கடந்தொரு சேதி வந்தது வீரனாகியே நீ வீழந்தாய் என்றது.... அடியென நெஞ்சில் இடியொன்று வீழ்ந்தது உன்னையிழந்தெம் தேசம் தவித்தது... கண்கள் சிவந்து குளமாய் நிறைந்தது அழுதோம் துடித்தோம் ஆற்றுவாரின்றி தவித்தோம்... வீரனே எங்கள் விடுதலையின் ஊற்றே கண்ணி வெடி நாயகனே உன்னையா நாமிழந்தோம்....??? நம்ப முடியலயே.... மரண படுக்கையிலே மரனமாய் கிடைக்கையிலே மா பாவிகள் உன்னை கடத்தி போயினரோ....??? எங்களின் வேங்கையர் எத்தனை நீ காத்தாய் எம்மால் இயலலயே உனை காக்க முடியலயே... உளவு எடுக்க உன் உயிர் வதைத்த…

  14. Started by வர்ணன்,

    ஒன்பது தசாப்தங்கள் -கடந்து.. செத்தொழிந்து... மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்... ஏன் அந்த - உற்சாக கிழவன்... உன் மனசில் - துருத்திகொண்டே கிடக்கிறான்?? வெளிப்படையாய் -பேசினாலென்ன... அந்த வெள்ளி - தாடி .. நாத்திகனுக்கு-....... ஆத்திகனாய் - இருப்பவர் தரும்... அதரவு - அதிகம் ..!!! எல்லாம்..... அவர் கருத்து...... அதிலொரு சிறு குழப்பம்... பட்டு சேலையை சாமிக்கு உடுத்தி....... அழகு பார்த்து.... பக்கத்து உறவுகள் ... ஊத்தை - துணியுடன் கிடப்பதை ரசிப்பதில் உனக்கென்ன பெருமை?? அவர் - வார்த்தையில் சொல்லுறேன் -கேளேன்... நீ வெங்காயம்!!

  15. இன்னுயிர் நீக்கி..... எம் உயிர் கலங்க் வைத்து...... எவ்விடம் சென்றயோ பாலா மாமா?? அன்பு கொண்ட நெஞ்சங்கள் துடிக்கின்றன... ஆதரிக்க நீ இன்றி தவிக்கின்றன! நீ பிறந்த மண் இன்று கண்ணீர் வாடிக்கின்றது..... அன்னை மடி உன் முகம் தேடி துடிக்கின்றது! உன் இனம் உன் பிரிவை கேட்டு....... சுய நினைவை இழந்து........ நடை பிணம் ஆனாது மாமா! எம் தேசிய தலைவரின் வலது கரம்..... இன்று தகர்ந்தது ஏன் மாமா? மலைப்போல நிமிர்ந்த உள்ளங்களும்....... இன்று சய்ந்தது உன் இழப்பால்! தேசத்தின் குரவலையை நசித்த..... சிங்கள இனத்திற்க்கு எதிராய்....... ஓர் குரலாய் எழுவாய் என்று அழைத்த...... எம் தேசத்தின் குரலே! இன்று உன் குரல் அடங்கியதோ? பால்லாயிரம் குரல்களை …

  16. குடு முஸ்தபாவின் குடு அடி...(சிறையிருந்து [i] சிறகடித்து பறந்த என்னை சிறகொடித்து சிறயடைத்தீர்..... இந்தோ சீறியே வருகின்றேன் சிறு காலம் பொறுத்திடுவீர்... உறுமியே உலவிடுவேன் ஊடகத்தில் ஏறிடுவேன்.... வன்னி புலி புலியென்று வசையதை பொழிந்திடுவேன்.... எண்ணில்ல இடர்களை எண்ணி உமக்கு தந்திடுவேன்.... அறிவாழி என்னையா நீர் அடைத்து வைத்தீர்....??? என்ன யான் செய்தேன் என்று என்னை நீர் இழித்தீர்.... வங்கியில் ஒரு கொள்ளை சின்னதாய் ஒரு சின்ன கொலை.... கள்ள மட்டையில் காசு கறந்தேன் தாலி கொடிகள் தனை அறுத்தேன்.... கன்னியவளை கற்பழித்தேன் இதை விட வேறென் செய்தேன் இது தப்பா..…

  17. தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…

    • 4 replies
    • 1.4k views
  18. இதோ இன்றைய பொழுதுடன்.......... ஒரு அரசியல் வேட்டைக்காரன் -எம்மிடமிருந்து ....... விடைபெறுகிறான்!! அலைகடல் கடந்தும் - நிலை தளராது.... வேரினை மட்டும் -கடலடி துழைத்து..... மண்ணில் - படரவிட்டு.......... ஒரு விருட்சம்....... எமை விட்டு விட்டு விலகி ........ தன் முகம் சாம்பலாக்கி ..... சரித்திரம் முடிக்கிறது! பாவபட்ட இனத்துக்காய் ... பகலையும் இரவையும்... சமமாய் மதித்து உழைத்த சரித்திர புருசனே........ போய் வா இந்த பொய் உடம்பு தொலைத்தாய்! நீ போட்ட அத்திவாரம் ஆட்டம் காணாது அதுவரை - உம் தூக்கம் கலைக்க மனசு வராது........... வென்றோம் என்றொரு சேதி மெல்ல வந்து காதில் உரைக்கும்........ காலம். வரும்...! அப்போ …

    • 6 replies
    • 1.3k views
  19. தேம்பியழுகிறது தேசம்...! ஐயகோ....! எம் ஜீவனழுகிறதே மீள ஓர் முறை.... என்ன கொடுமையிது... நோயுன்டதே - எம் பேறறிவை....! ஏன் இந்த துயர் மீண்டும் _ எம் நெஞ்சேற விம்மிப் புடைக்கிறோம்..? தூண் சரிந்ததோ..? மீண்டும் எம் நூலகம் எரிந்ததோ...? தலைவனை தம்பியென்றழைத்து தத்துவம் சொன்னவரே எரிமலையில் குடிகொன்ட எம்மினிய அறிவூற்றே......! கரைந்து போனதே - மதிக் கடலொன்றிங்கே....! பகையோடு பேச இனியேதுமில்லை என்றெண்ணிப்போனீரோ...? உம் பணி முடிந்ததென்று உரைத்தவர் யார்....? இடை நடுவில் வழி தேடியன்றோ நிற்கின்றோம்....! தேசத்தின் குரலே......! தேம்பி அழும் எமை தேற்றி அறிவுரைக்க வருவீரோ...?…

  20. உன் மூளையை சலவை செய்..... வெள்ளை வேட்டியை கட்டிய வெறியன் ஆட்சியில் இருப்பது அது இன்று முறையோ....??? சிங்கள காடையன் சிகரத்தில் குந்தியான் தமிழரை காப்பதாய் சொல்வது முறையோ....??? பாதையை அடைத்தவன் பட்டினி போட்டவன் படையை ஏவி மிச்சத்தை அழிப்பவன்.... ஆட்சியில் குந்தியது அது இன்று முறையோ....??? இது சுதந்திர நாட்டிற்கு சுபிற்சத்தை தருமோ....??? விடுதலை கொடுப்பதாய் வீராப்பாய் சொல்பவன் ஏன் - தமிழரை சிறையில் அடைத்தவன் வதைகள் புரிகிறான்....??? புலியென கூறியே தமிழரை பிடித்தவன் சிறையில் ஏனவன் தினமும் அடைக்கிறான்....??? ஊடகமீதிலே ஏறியே குந்தியான் உள்ளம் விட்டென உண்மையா உரைக்கி…

  21. Started by vanni mainthan,

    வாடா....வா... பெரியவரா பெரியவரா பெரகரா - நீங்க பெரிய அடி வேண்ட வேணும் பெரகரா.... ஓடி வந்து ஆட்சியில ஏற வாங்க ஓலமது கண்டு நீங்க ஓடணுங்க.......... எம் தமிழில் பாதியரை கொன்றவரே ஏறி குந்தி ஆட்சியிலே ஓட வாங்க.... நாட்டை விட்டு வேறு நாடு ஓடினாயோ....?? உன் உடலை நரியும் களுகும் கொத்த வேணும் ஓடி..வாடா.......... பண்டை கால புலி என்றா நீ நினைத்தாய்....??? அட உனக்கு பாடை கட்ட வேணுமின்று ஓடி வா.... அடுக்கடுக்காய் நெஞ்சுக்குள்ளே அடுக்கி வைத்தோம்- உன்னால் அழிந்தவரின் சோகங்களை தேக்கி வைத்தோம்..... இறக்கி வைக்க முடியாமால் தவித்து நின்றோம் இப்போ உன்னை இறக்க வைத்து நாங்களதை தணித்து வைப்போ…

  22. நரபலி காட்சி வந்து நீ பார்.... இங்கே வந்து பாரு உலகே இங்கே வந்து பாரு அந்த கயவர் செய்யும் கோரமதை இங்கே வந்து பாரு.... துண்டு துண்டாய் உடலறுந்து கிடைக்கும் நிலை பாரு அந்த குண்டுகளை ஏவியவன் செய்யும் கோரம் காணு..... முண்டமதாய் மூச்சிழந்து கிடக்கும் நிலை காணு எங்கள் முந்தையர்கள் விட்ட தவறால் வந்த நிலை காணு..... என்ன செய்தார் என்றிவரை ஏனழித்தான் கேளு.... உயிர் குடிக்கும் இன வெறியன் மகிந்தன் செயலை காணு.... உணவாக தமிழர் உடலை உண்ணும் நிலை காணு.... மனிதம் உள்ளாய் நீ என்றால் வந்து நீயு பாரு உனக்கு - உள்ளம் இருந்தால் வந்து பார்த்து உலகே தீர்ப்பு கூறு.... நம்ம மக்கள் …

  23. சிறையிருக்கும் சிந்தனைகள்.. சிறு வயது - எம் சிந்தனைகள் சிறையிலிருந்த காலம்... தாயின் சொல்லே - என் தாரக மந்திரம்... தந்தையின் சிந்தனைகள் என் செயல் வடிவாகும்... ஆசிரியறின் அறிவியல் என் தீர்மாணங்களாயின...... பிரம்புகளும் முறைப்புக்களும் - என் சிந்ததனைக்கு சிறையாயிருந்தன..... எனினும் .... அடங்கும் வரை தானே அடக்குமுறை .... அணையிருக்கும் நீர் உயர்ந்ந்து உரத்து சொல்வதில்லையா..? திறவுங்கள் -அன்றேல் திறக்கப்படும் என்று.....! அது போன்றே -என் சிந்தனையும் சிறகெடுத்தது புதுத் திசை நோக்கி......! கற்பெனில் கண்ணகி - இது கற்காலக் கருத்து.... கோவில் எடுத்து குடமுழுக்காடி... கற்ப…

    • 8 replies
    • 1.6k views
  24. என்னவளாம் இன்னவள் அன்பின் சிகரமாம், அறிவின் ஒளிமயமாம், அழிகின் சிலைவடிவாம், என்னவளாம் இன்னவளின் செவ்விதழின் சிரிப்பொலியாம், பிரம்ம தேவன் படைப்பின் விசித்திரமாம், கலைத்தாயாம் கலைமகளையும் கவர்ந்த அந்த புன்னகையாள் கவியருளும் கவிமொழியும் அவள் நாவில் நற்றுணையானது.. நான் எதிர்பார்த்த அத்தனையும் அவளிடத்தில் இருக்கையிலே என்னவளாம் என்னவளை, என்னிடத்தில் சேர்ப்பதற்கு தூது சொல்லச் சென்றவளும் துணைவனிடம் சென்று விட்டாள். என்னவளாம் இன்னவளை என்னிடத்தில் சேர்ப்பதற்கு என்மனதில் துணிவில்லை, அவள் நாவின் வல்லமையால் என் நாவும் மௌனித்தது.. மௌனத்தின் மௌனத்தால் காத்திருக்கும் வேளையிலே காலங்கள் கரைந்தோடி கறுப்பினிலே நரை தட்டினாலும் காத்திருப்பேன் காத…

    • 11 replies
    • 1.9k views
  25. Started by vijivenki,

    நண்பர்களே - கவிதை ஒன்று அன்புக்கு என்றும் பஞ்சமில்லை!! வாருங்கள் - என்னிடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறையவே கிடைக்கும்!! ஆனால் ஒன்று அதற்கான தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும் - என்னிடம் பணமாக!!! அன்புக்கும் விலை பேசும் சில மனிதர்கள்!!! என் செய்வது??? என்னுடைய ஆற்றாமை இது. உங்கள் கருத்து எதுவாயினும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.