Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உங்களைச் சுற்றி மௌனம் மட்டுமே மலர்ந்து நிற்கிறது மனதுக்குத் தெரியாத மர்மங்களில் .. எங்களைச் சுற்றி இனங்கள் மட்டுமே இடித்துக் கொண்டு நிற்கிறது.. மனதுக்குத் தெரிந்த மர்மங்களில் ...! http://tamilpaingili.blogspot.com.au/2011_11_01_archive.html

  2. “திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன. ஸ்டிக்கர் --------------- மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்! இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை. நவீன உலகுக்கேற்ப நீதிகளை மறைபொருளாக வழங்குகிறார்கள். மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும் இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர் குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும். குறைந்தபட்சம் கோபத்தில் கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும். சிகரெட் பெட்ட…

  3. நீர்ப்பறவையின் கேலிக் கோடு - அஞ்சலிக் கவிதை! தீபச்செல்வன் மீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில் ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும் காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும் கீவ் நகரை கடந்தவனைக் காணாது ஊசியிலை காடுகளும் துடித்தன போலாந்து எல்லையில் வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர் துயரப்பிக் கிடக்கின்றன உன் கேலியின் கோடுகள் கூடுகள் பறிபோயிருக்கலாம் இரையற்று பசியில் மரிக்கலாம் எல்லாப் ப…

  4. இன்று திலீபனின் நினைவு நாள். புலிகளுக்கு ஆயுதமும் தெரியும் அகிம்சையும் தெரியுமென உலகுக்கு உணர்த்திய நாள் உலகில் காந்தி என்ற பெயர் அடிபட்டுப்போனநாள். அரக்கர்களின் காலடியில் எல்லாமே கனவாகிப்போனதுவோ என கலங்கி நின்ற தமிழரை தன் வயிறை முடக்கி எழச்செய்தநாள் அவனை நாம் மறக்கமாட்டோம் அவலங்களை மன்னிக்கமாட்டோம் அவனை மீள் நிறுத்தி இன்று மீண்டும் தமிழர்களின் எழுச்சி காணும் நாள்.. வீரவணக்கம் திலீபனே...

  5. அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்

  6. அதிகாலை எழுந்து..... ஆண்டவனை நினைத்து ..... இனிய புன்னகையுடன்..... ஈகை எண்ணத்துடன்...... உழைக்க ஆரம்பியுங்கள்.... அனைத்தும் வெற்றியாகும்.....!!! ^^^^^ இனிய காலை வணக்கம் இனிய உள்ளங்களே இவன் உங்கள் இனியவன் ^^^^^^ இனிய காலைமதியம் மாலை இரவு வணக்கத்தை தெரிவிக்க விரும்பும்உறவுகள் இந்த திரியில் தொடர்ந்து வாழ்த்தலாம் நன்றி நன்றி

  7. என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது ஜாதகம் எழுதிய அப்பாவின் நண்பர் சிறீபதி மாஸ்ட்டர் என் பெற்றோரை மகிழ்விக்கவோ என்னவோ . இவர் கவிஞராவார் என எழுதி வைத்திருந்தார்.…

    • 2 replies
    • 1.3k views
  8. POETRY AND THE FATE கவிதையும் விதியும் என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது …

    • 0 replies
    • 828 views
  9. காற்றுக்காக அவர்கள் விசிறிக்கொண்டிருக்கும் மின் மட்டைகளில் கொசுக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றன? -சேயோன் யாழ்வேந்தன் (புழல் சிறையில் தற்கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு)

  10. தீபமே எங்கள் திலீபமே! தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும் தமிழீழ உயிரொன்றையும் மறக்கடிக்கச் செய்வதற்கு யாரடா உள்ளனர்! நிலம் மீட்கும் துணிவோடு மண்ணின் மக்களின்று அகிம்சைப் போர் தொடுத்து ஆங்காங்கே நகர்கின்றார்! வேதியலுக்கும் புரியாத வேங்கையரின் வீரத்தை வீறுடனே பதியமிட்ட அகிம்சையின் வேந்தனே காந்தியைத் தலைகுனிய வைத்த கிந்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்து முரசறைந்தாய் திலீபமே! பெரும் புயலாக மேலெழுந்து திலீபமாய் மூட்டிய தீயின்று அணைந்து விட்டதாய் யார் யாரோ சொல்கின்றார் சிங்கத்தின் கால் கழுவி யானையின் கை தடவி அரசியல் பிழைப்புக்காய் அலைகிறது ஒரு கூட்டம் அ…

  11. வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து உறவுவந்தால் ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

  12. " என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "-------" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "-------" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "-------"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "-------"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"-------" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "-------" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "-------" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "-------"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "-------"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "-------"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "-----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "---…

  13. உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை

  14. பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -01 --- பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -02 மேலும் தொடரும் ....................

  15. என் பிரியமான மகராசி ------ நிலவின் வடிவத்தை..... உடலாக கொண்டு ..... நிலவின் ஒளியை உடல்..... நிறமாக கொண்டவள்..... என் பிரியமான மகராசி.......!!! மயிலைப்போல் பாடுவாள்..... குயிலைபோல் ஆடுவாள்.... நடனமாடும் சிகரமவள்.... அவள் வதனத்தை உவமைக்குள் ..... பூட்டிவைக்கமுடியாததால்..... உவமைகளையே ...... மாற்றவைத்துவிட்டாள்.............!!! அவளை கவிதை வடிக்கிறேன்..... வரிகள் வெட்கப்படுகின்றன...... அவளின் வெட்கத்தையும்.... கவிதையின் வெட்கத்தையும்..... இணைக்கும் போது எனக்கும்.... வெட்கம் வருகிறது - அவளை..... வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!! அவளை தொட்டு பார்க்கும் ......... பாக்கியம் எனக்கு கிடைக்குமோ.... கிடைக்காதோ தெரியாது ..…

  16. 2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! (கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்) வாழ்நாள் முழுவதும் கொசுக்களோடு போராடியவன் கொசுக்கடியால் நோயுற்று செத்தே போனான். சுருள்கள், வில்லைகள், திரவங்கள், மின்மட்டைகள் என்று கொசுவுக்கு எதிராக அவன் பிரயோகித்த ஆயுதங்கள் முடிவுறாத அவனது போராட்டத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவன் மரணத்தை தொலைக்காட்சியில் விவாதித்தவன் சொன்னான், கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில் அவன் சட்டை அணிந்திருந்தால் கொசு கடித்திருக்காதாம்! (பரு…

  17. உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

  18. 10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சமக் குறியீடு நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன் நடந்துவரும் என்னை அழைக்கும்முன் நீ சற்று யோசித்திருக்க வேண்டும். விசிலூதி என்னை உண்ண அழைத்தது உன் தவறுதான். பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது என் தவறுதான் பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான். இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து, நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு என்னை வெளியேற அனுமதி அய்யனே. -சேயோன் யாழ்வேந்தன் …

  19. காதலித்து கெட்டு போ.அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து கொடுமேகமென கலைமோகம் வளர்த்து மிதமதி கெட்டு மாய்கவிதைகள் கிறுக்குகால்கொலுசில் இசை உணர்தாடி வளர்த்து தவிஎடை குறைந்து சிதைஉளறல் வரும் குடிஊர் எதிர்த்தால் உதைஆராய்ந்து அழிந்து போமெல்ல செத்து மீண்டு வாதிகட்ட,திகட்ட காதலி..~ முனைவர் டாக்டர் நா.முத்துக்குமார்----------------------------------------------------------------------------------------------------------------------------------------------நா.முத்துக்குமார் "" துளிப்பாக்கள் ""உள்ளாடைக் கடைகளில்அளவு கு…

    • 0 replies
    • 148.6k views
  20. நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..…

  21. இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

  22. பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியேஉன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்துருவேறிய துப்பாக்கியைஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்அவர்களின் தேவைபிள்ளைகளைத் தேடும்எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவேசிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்வீழ்ந்து புறளும் தாயேஉன் ஒடிந்த தேகத்தில்உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியைஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்அவர்களின் தேவைஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்கஅகதிமுகாமொன்றில் தவமிருக்கும்மெலிந்துருகிய குழந்தையேஉன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியைஏனெனில், நம்மை அகதிமுகா…

    • 0 replies
    • 950 views
  23. காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16

  24. கவிஞர் கலாப்ரியா பதில்கள்… தமிழ் ஹைக்கூ கவிதைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? – தூய்ஷன், மலேசியா. முதலில் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஹைகுவின் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழில் பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’ என்று எழுதுகிறார். ஹைகு அல்லது ஹொக்கு முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப்பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்துவைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.