கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்61-ம் ஆண்டு பிறந்தநாள்:26.11.2015வாழ்த்து-----------இயற்கை எனது நண்பன்...!வாழ்க்கை எனது தத்துவாசிரியன்...!வரலாறு எனது வழிகாட்டி...!மொழிந்தாய் முன்னாளில் தெளிந்தேதறிகெட்ட தமிழர் தமக்கோஅனைத்து மானாய் நீயே!வாழ்க நின்தவம் பல்லாண்டு!!அறம் அறிவு வீரம்சேர்ந் ததோர் வடிவாய்...ஈனம்சார் உலகில் மானம்சார்தலைவன்! தம்பியு மானாய்!!தமிழ்வீர மரபின் விளைவாய்போருலகில் புதுமை கண்டுஉலகில் தமிழர் முகமானாய்!வாழ்க நின்வீரம் பல்லாண்டு!!பெளத்த நெறிவிடுத்து மகாவம்சகதைப்படித்த மொக்குச் சிங்களன்பகைமுடித்து ஈழம் வென்றெடுத்துஆளவா தமிழி னத்தைபுவி போற்றவா நம்குலத்தை!வாழ்க நின்புகழ் பல்லாண்டு!!-----------------------------------இவண்: வன்னிவேலன்
-
- 0 replies
- 980 views
-
-
நேற்றைய இரவு முழுதும் அழுதபடியிருந்தவர்களை கண்டு தாளாது போரிட சென்றவர்கள் வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல் பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும் பிணைந்த புணர்வில் பிறந்த குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா? என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க சிந்தனையில்லா கோமகனை கொன்று நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும் பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன் விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள் கைகுலுக்கிக் கொண்ட நாட்களில் சிவப்பு கழுத்து…
-
- 8 replies
- 5.2k views
-
-
இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…
-
- 0 replies
- 1.9k views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். மணியோசை க…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஈமத்தாழி - தீபச்செல்வன் ஈமத்தாழி மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறி…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால் கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும் பழசெல்லாம் வந்து வந்து போகின்றது காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல் தொட்டதுக்கும் துணைவேண்டி துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன் கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்…
-
- 16 replies
- 8.7k views
-
-
சூர சம்கார சுதந்திரச்சிற்பிகள் அதிகாலை அரும்பாகி அந்தியிலே சருகாகும் ஆழகான மலரும் அல்ல மலர் சூடி மணமேடை மணக்கோலம் தான்காணும் மங்கலம் இவர்க்கில்லை காண் உயிரோடு உயிர்ப்பூவை உணர்வோடு ஒருங்காக்கி விதையாக விழுகின்றார் பார் இவர் உயிர்மீது தமிழீழம் உருவாகி வரும்வேளை எதிர்பார்க்கும் இளவேனில்கள் கருவோடு திருவாக உருவாகி வரவில்லை இரவோடு உருவானார்கள் இவர் தெருவுக்குள் விளையாடி பருவத்துக் கனவெல்லாம் உருவற்று உருக்கிட்டார்கள் மருவுற்ற மனங்களில் செருவுற்ற சேதிகள் விரவிட்ட வி~வித்துக்கள் எங்கும் பரவிட்ட பாதிப்பில் பாசறை புகுந்திட்ட உதயத்து விடிவெள்ளிகள் தேனான நிலவுகள் தினம் தோய்ந்து எழும்ப இவர் தேகத்தில் துடிப்புமுண்டு வானத்து ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
மாட்சிமை பொருந்திய பெருநரகம் யாரிவார். நாட்களின் சிதைவுகளில் நாற்றம். கனவின் மீதியெங்கே எதைத் துணைகொள்வது நாய் கட்டையை சுற்றி கறிக்கு அலையும் நாய். எறும்புகள் புற்றை நீங்குகின்றன. வாயில் இரை. இனி எப்பாம்பு அங்கு நிலை கொள்ளுமோ? வெளிச்சத்தில் கடவுள் தலைகுனிந்திருந்தார். கேள்விகளில்லை. சந்தனம் குங்குமம் பன்னீர் கலந்த வாசனையும் இல்லை ஓவியன் வரைந்திருந்த சிறு புன்னைகை கூட இல்லை. சிவந்த உதடுகளை முத்தமிட நெருங்கினேன். ஓ கடவுளே மரணித்துவிட்டாயா ? யாரிடமிருந்து பகலை திருடமுடியும் தானாய் விடிந்த ஒரு பகல். கால்களில் இடறுகிறது கிழிந்துபோன நேற்றைய பகல். இருளின் முடிவில் நல்நிமித்தங்கள்…
-
- 1 reply
- 1.7k views
-
-
தலைவரை வாழ்த்தி பதியப்படும் கவிகளை இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு கவிதைகளை இணைக்க வேண்டும் என்னும் ஒரு ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள் கண்களுக்கு தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள் உறவுகளே . 1. எங்களுக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போதுநீ இன்னும் எங்களுக்குள் ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்வெறும் பேச்சுக்களில் பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென நினைக்கும் வியாபாரிகள் மத்தியில் நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய் உனது மயிராகவும் கூட ஒருவனும் ஆக முடியாது என கடந்த ஆறு வருடத்தில் வரலாறு நிரூபித்துவிட்டது கால புருசர்கள் வெறும் கைதட்டல்கள் மத்தியில் உருவாக முடியாது. நெடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு நெரு…
-
- 9 replies
- 47k views
-
-
மண் காக்க தனை தந்த மாவீரரே மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே எதிரியை சூறையாட வெறி கொண்டீரே எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே தேசத்தின் கனவை சுமந்தபடியே தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே நமக்காக நம் தேசம் மலரும் என்று நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம் இந்நாளிலே …
-
- 4 replies
- 3.3k views
-
-
உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள். உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள். மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம் வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும் ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும். தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும் 61 வது ஆண்டுகள் தொடர்ந்திடும். தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம் சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம் நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம். தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார் தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார். தமிழனின் உதிரத்தில் உணர்வின வி…
-
- 0 replies
- 851 views
-
-
இதமான வசந்த காலம் தன் வனப்பை இழந்து நொடிந்து போகிறது தெளிவான அந்த நீல வானமும் கருமையை வேண்டி பூசிக்கொள்கிறது குதூகலிப்புடன் பூத்து குலுங்கிய மலர்களும் தன் சோபையை பறிகொடுத்து வாடி வதங்குகின்றன பச்சை வர்ண இலைகள் மண்ணில் விழுந்து ஒப்பாரி வைக்கிறது அதெப்படி முடிகிறது ? வசந்தகாலத்தில் இலையுதிர்காலம் எப்படி நுழைந்தது ? நேற்றைய சந்தோஷ வானில் இன்று மின்னலுடன் கூடிய பேரிடி ! நட்சத்திர விளக்குகள் அத்தனையும் அணைந்த நிலையில் வானமும் இருண்ட நிலையில் ! என் சந்தோஷ இறகுகள் விரிக்க திரணியற்று வலுயிழந்து போன நிலையில் உணர்வலைகளும் தோற்றுப் போய்விட்டன இன்று நட்பாக வந்த நல்ல இதயம் நஞ்சு ஊறிப்போய் தன் சுயநல போர்வையில் நினைவுகளுக்கு சுகமான ராகம் மீட்ட நினைத்த வேளையில் நரம்பருந…
-
- 8 replies
- 2.3k views
-
-
எல்லோரும் புறப்படுவார்கள் ஆயத்தங்கள் மிக மிக இலாவகமாகவே நடக்கின்றது நேற்று ஒருவன் புறப்படிருந்தான் இன்று ஒருவன் புறப்பட்டுவிட்டான் நாளை ஒருவன் புறப்படுவான் சிலர் அடம் பிடிக்கின்றார்கள் நிச்சயமானவர் தாங்கள் என்று அவர்களை அதட்ட முடியவில்லை அது அறியாமையின் முதற்புள்ளி வலுக்கட்டாயமாக இழுக்கவும் முடியவில்லை அழுத்தங்கள் கொடுப்பது அறிவுடையவன் செயலன்று இப்போது என்ன செய்வோம் இந்த பயணத்தை நினைத்து உறக்க அழுவோமா? இல்லை இருக்கும் காலத்தை இனிமையாக்குவோமா? யாரெல்லாம் ஆசைப்படுகிறார் கோவப்படுகிறார் கொஞ்சித்திரிகிறார் கொள்கை பரப்புகிறார் வாருங்கள் உரக்கத்சொல்வோம் எங்கள் பயணத்தை எங்கலோடு விட்டு விடுங்கள். கட்டாயம் திணிக்காதீர்கள் அத…
-
- 0 replies
- 698 views
-
-
பரம பிதாவே இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள் கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம் எம் சாவை பற்றி அவர்கள் அறிந்து கொண்டுதான் இருந்தார்கள் நீர் அறிவீர் அதை பிதாவே அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில் எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை வலியுறுத்தி கட்டளையிட்டன நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட மந்தைகள் என்றனர் எம் சாவின் மூலம் உலகின் முதலாம் தர நியாயம் வலியுறுத்தப்படும் என்றனர் எம் குழந்தைகளின் இரத்தத்தினால் மட்டுமே தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர் பரம பிதாவே நீரே ஒத்துக் கொள்வீர் அந்த வார்த்தைகளில் அந்த எழுத்துகளில் அந்த எத்தனிப்புகளில் வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று ஆ…
-
- 9 replies
- 1.5k views
-
-
எப்போது ஒரு இனம் அழிகிறது ...? ------ விடுதலை போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!! எப்போது ஒரு இனம் அழிகிறது ...? பொருளாதார வளங்கள் அழியும்போது .... பொருளாதார தடை விதிக்கும் போது .... பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது.... பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது .... யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் .... இனத்தின் அடையாளங்களை அடமானம் .... வைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!! தந்து விட்டுப்போன சுதந்திரத்தை .... தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் .... பக்திகொண்டு போராடுவோம் ..... உணவோடு உணர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கருகாத பூக்கள் .....!!!-------எம் .....மண்ணில் தான் ....கறுப்பு பூக்கள் அழகழகாய் ....பூத்தது - பூத்த பூக்கள் ....வாடிவிட்டதே - நினைக்காதீர் ....எம் மனதில் என்றும் வாடாமலர் ....உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!எம் மண்ணில்தான் கடலில் ....நீலபூக்கள் பூத்தன ....பூத்த பூக்களை அலை ....அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!கறுப்பு எண்ணங்களாலும் ....கருப்பு ஜூலையாலும் ....கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....கறுப்பு சிந்தனைகளால் ....கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....கருகாத பூக்கள் .....!!!
-
- 6 replies
- 3k views
-
-
தேசத்து அன்னையவள் துயர் துடைத்திட பெற்றவர் மறந்து நீர் புலிப்படை கண்டீர் பாரினில் பலரும் பயந்து நடுங்கிடும் படை கண்டு பகை வென்று போர் கண்டு நின்றீர் ஊனாகி உயிராகி உதிரத்துள் உணர்வாகி உயிரை நீர் எமக்காகத் தந்தீர் ஊரெங்கும் உறங்காது உணர்வுகள் பொசுக்கி உங்கள் மண் காத்திட ஒன்று திரண்டீர் போர் கண்ட பூமியில் புது நெற்களாய் நீர் பூத்துக் காய்த்துப் பொலிந்து தான் நின்றீர் பாதகர் கண்கள் பட்டதனால் இன்று பகடைக் காய்களாய்ப் போனீரோ வீரரே வேர் கண்டு விழுதாகி விருட்சமாய் ஆனீர் வினை கெட்டு விதி கெட்டு வில்லங்கம் சூழ வீழ்ந்திட முடியா மானிடர் நீங்கள் வீதிகள் எல்லாம் வீழ்ந்துதான் போனீர் …
-
- 8 replies
- 4.6k views
-
-
காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.
-
- 2 replies
- 2.2k views
-
-
மேவும் துயர்கழுவியொரு மழை பொழியட்டும் தீச்சொரிந்து வானம் திசையழித்து எழட்டும் அந்த ஒளி விழுந்தெங்கும் பரவட்டும் அந்தோ... இருள் மூடி எந்தைநிலம். நிலப் பிளவுகளிலிருந்து எழுகின்ற ஓலம் கேட்கிறதா, சிதைந்த கற்கோளங்களில் எழுகின்ற பாடல் புரிகிறதா காற்றோடு கலந்துபோன பிள்ளைகளின் நேசம் தெரிகிறதா பெருங்கனவுடன் துடித்துக் கிடக்கிறதே மண் மேடுகள் அதாவது புரிகிறதா நிலமே எனைசுமந்த நிலமே ஊரோடுகூடி காந்தள் சூடி ஒளியேற்றி உணர்வெழுந்து மணியொலித்து முகம் பார்க்கும் உறவுகள் எங்கே... விழிநீர் மறைத்து மேனி தழுவிக் கரம் பிடித்து களமாடிய கதைபேசும் தோழர்கள் எங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்த மலைகளுக்கப்பால் தான் நான் இருக்கிறேன் மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி இந்த மலைகளுக்கப்பால் சமவெளிகளை விளைவிக்கிறது பகலிரவு காலத்தை நகர்த்தும் உக்கிரச் சூரியன் உதிப்பதும் இந்த மலைகளுக்கப்பால் இருந்தே மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும் தவழ்வன பொழியும் மழைக்காடும் இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள் இந்த மலைகளுக்கப்பால் காற்றும் நிலமும் நீரும் ஆதிநிர்வாணாத்தோடிருக்கும் முடிவிலா ஆரண்யமிருப்பதும் இந்த மலைகளுக்கப்பால் தான் இரவு அந்தகார சுவையுடன் இருளாகவேயுள்ளது இந்த மலைகளுக்கப்பால் கடவுள் எல்லைக்கோடு அகதிகள…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் …
-
- 11 replies
- 2.2k views
-
-
எனக்கொரு முகவரி தேடிஇரவினைப் புரவிகளாக்கிசாட்டையில் புறத்தினை தோய்துதனிமையில் சொர்ப்பணம் கொண்டாள் இருதயம் துடித்திடும் போதுஎன் கணம் நீண்டிடும்போதுவிடத்துடன் நாகத்தை தேடிவிடை கொடு உடலிம் உயிரேசருகினில் பற்றிய தீயேகொடியிடம் செந்நிறம் கொண்டாய்புலவியில் பிதற்றளும் முறையேபுன்னகை கொண்றிடும் மனமேதிதியது நெரிங்கிடும் நேரம்கனிகளும் விதைகளாய் விழுமேகாந்தளின் தொடுகையில் விழவேமேகமும் கரையுது நிலவேகுறையது நிறையதைக் கொள்ளும்குற்றமும் தண்டனை தூக்கும்இரு நிலை இயங்கியல் உலகில்இடைவெளி சேர்தலின் காளமேஇறந்திடாத் தூடித்திடு மனமே
-
- 0 replies
- 751 views
-
-
நீராவியென அனுபவத்திரட்சி ஒடுங்கும் தருணத்தில் முதுமை பெற்றேன் கட்டுடைத்த பெரும் குளமெனச் சிதரும் வார்த்தைப் பிரளயம் புழுதி மழையில் நனையும் பூவரசம் சருகெனச் சரசரக்க நீர்க்குடம் உடைத்த நெடி மாறாக் கன்றுகள் பறக்கும் மேகத்தை புகை என்ற பருவம் தொலைத்த அனுபவங்களின் சீவன் கட்டும் சொற்களை கன்றுகள் கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
-
- 7 replies
- 2.2k views
-