வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா. சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள். ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார். அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார். இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது…
-
- 0 replies
- 405 views
-
-
நாளை சூப்பர்ஸ்டார் ரசிர்களுக்கு சரியான வேட்டைக் காத்திருக்கிறது! இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு போனஸ் செய்தி. கோச்சடையான் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் டைரக்ஷன் மேற்பார்வையாளராக இருக்கும் இயக்குனர் மாதேஷ் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோச்சடையான் படத்தின் டீஸரை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது. மேலும் தெலுங்கு வெர்ஷனுக்கான சான்றிதழுக்காக இன்று படத்தை திரையிடுகிறார்கள். Source www.vuin.com
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ்சினிமாவின் திரையிசைத் தமிழை செழுயடையச் செய்த கவிஞர்களி முதன்மையானவர் கவியரசு கண்ணதாசன். ரசிகர்களால் என்னென்றைக்கும் மறக்க முடியாத பல பாடல்களை தந்து, தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தகண்ணதாசனுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரின் பாடல்கள் பல தொகுதிகளாக ஏற்கனவே வெளி வந்திருந்தாலும் எந்த பாடல் எப்போது எழுதப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இப்போது அந்த குறையை நிவர்த்தி செய்யும் பணியில் கண்ணதாசன் பதிப்பகம் இறங்கியுள்ளது. இதற்காக எந்த பாடல் எந்த வருடத்தில், எந்த தேதியில், எங்கு எழுதப்பட்டது என்பதை துல்லியமாக கண்டறியும் பணியில் இறங்கி, அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட கவியரசரின் பாடல்களின் தொகுப்பு விரைவில் வெளிவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் டிரைய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியன்று (செப்படம்பர் 9) ரிலீசாகிறது. தற்போது கோச்சடையான் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி உள்ளது. 125 கோடி ரூபாய் செலவில் மோசன் கேப்ச்சர் (அவதார்) தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்தப் படத்துக்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இதன் வியாபார எல்லையை தயாரிப்பு நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் படத்தை கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறது. அதற்காக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகி…
-
- 1 reply
- 794 views
-
-
தலைவா படத்தினால் பெருத்த நஷ்டம். சென்னையை விட்டு வெளியேற தயாரிப்பாளர் முடிவு. சர்ச்சைகளுக்கு இடையில் வெளிவந்த 'தலைவா’ எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினுக்கு பெருத்த நஷ்டம். ''படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு சம்பளமாகப் பேசப்பட்ட தொகையில் பாதிதான் முதலில் தரப்பட்டது. மீதியையும் கேட்டு ஜெயினை நெருக்கி இருக்கிறார். 'படம் சரியா போகலையே... கொஞ்சம் நாளாகட்டும் தர்றேன்’ என இழுத்திருக்கிறார் ஜெயின். ஆனால், சங்கத்தில் பஞ்சாயத்தைக்கூட்டி மீதியையும் கறந்துவிட்டார் ஏ.எல்.விஜய். இந்நிலையில் விஜய்க்கு தரவேண்டிய சம்பளப்பணமும் பாக்கி இருக்கின்றதாம். ஆனால் விஜய் அதை பெருந்தன்மையாக கேட்கவே இல்லையாம். கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை த…
-
- 7 replies
- 3.3k views
-
-
எஸ் ஷங்கர் நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா இசை: யுவன் சங்கர் ராஜா மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: போட்டான் கதாஸ் எழுத்து - இயக்கம்: ராம் வாழ்க்கையில் சில விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பதில்லை மனித இனம். பூவின் வாசம், மழையின் மகத்துவம் மாதிரிதான் சில மனித உறவுகளும். அவை இயற்கையானவை. அதை ரொம்பவே மிகைப்படுத்தி முக்கியத்துவம் தரும்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதை உணரலாம்! தங்க மீன்களுக்கு வந்த பிரச்சினை இதுதான். இது நல்ல படமா... மகள் மீது பாசம் என்ற பெயரில் இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்வாரா ஒரு ஏழை அப்பா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது'…
-
- 1 reply
- 2k views
-
-
பிரபல நடிகை ஒருவரால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். சிம்புவும், ஹன்சிகாவும் தாங்கள் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கை பரிசாக அளித்தார். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. அடடா இருவரும் நல்ல காதலில் உள்ளனர் என்று நினைத்தால் அவர்களுக்குள் லடாய் ஏற்பட்டுள்ளதாம். பிரபல நடிகை ஒருவர் அண்மையில் சென்னை வந்தபோது ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார். காதலில் விழுந்த ஹன்சிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு சிம்புவை பற்றி உனக்கு தெரியாதா என்று ஒரு குண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிம்பு தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் வயது வித்தியா…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்களையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும், மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் அந்தப் படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.திரையரங்க உரிமையாளர்கள் தமிழகத் தில் இப்படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துவிட்டனர். இன்னொரு புறம் மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பது கருத்துவுரிமைக்கு எதிரானது என்கிற கருத்தும் வழக்கம் போல் பரப்பப் பட்டு வருகிறது. அதுவும் வட இந்திய ஊடகங்களும் ஆங்கில ஊட கங்களும் விஸ்வரூபம், தலைவா, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிட எழுகின்ற சிக்கலை மையப் படுத்தி, தமிழ்நாடு கருத்துவுரிமைக்கு எதிரான மாநிலமா? என சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களையும் ஓரே நேர்க்கோட்டில்…
-
- 0 replies
- 597 views
-
-
ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார். கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. சினி…
-
- 1 reply
- 426 views
-
-
அக்கா ஸ்ருதிஹாசனைப் போலவே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அக்ஷரா ஹாசன். இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நிறைய பேர் கேட்டுள்ளனர் ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லை இயக்குனராக விரும்புகிறேன் என மறுத்து வந்தார் அக்ஷரா. இப்போது திடீரென கதாநாயகியாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்கிற பால்கி, பாலிவுட்டில் இயக்குனராக உள்ளார். இவர் கமல்ஹாசனின் நண்பர். இந்தியில் அமிதாப் நடிப்பில் சீனி கம், பா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் அக்ஷரா நடிக்க உள்ளார். இதற்கிடையே அக்கா ஸ்ருதியை போல மும்பையில் தனியாக வசிக்க அக்ஷரா முடிவு செய…
-
- 2 replies
- 965 views
-
-
சினிமாவுகான தனிக்கைக் குழு என்பது, தனித்த அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி அமைப்பாகத்தான் இயங்க வேண்டும்! ஆனால் சென்சாரில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது! பணத்தைக் கொடுத்தால், யூ/ஏ சான்று தரவேண்டிய படத்துக்கு ‘யூ’ கூட வாங்கலாம் என்ற நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்சாரில் சினிமா ஊடகம் பற்றித்தெரியாத, அதேநேரம் ஆளும்கட்சியின் ஊழியர்களாக அதில் அங்கம் வகிக்கும் ஆட்கள், தற்போது அந்த ஊடகத்தை எப்படிப்பார்க்க வேண்டும் என்பது தெரியாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது! இதற்கிடையில் செல்வாக்கு மிக்க மாஸ் ஹீரோக்களின் படங்களில், தனிக்கை விதிகளின்படி வெட்ட வேண்டிய பல காட்சிகளையே விட்டுவிடுகிறார்கள். ஆனால் சின்ன படங்களை எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசு…
-
- 0 replies
- 492 views
-
-
'காதல் மன்னன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். 'அமர்க்களம்', 'ரோஜா வனம்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'பாண்டவர் பூமி', 'ரோஜா கூட்டம்', 'ஜெமினி', 'அன்பே சிவம்', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக, 'அசல்' படத்திற்கு இசையமைத்தார். இதன்பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்ததுபோல் பரத்வாஜ் திருக்குறளுக்கு இசையமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக உலக முழுவதும் உள்ள தமிழறிஞர்களை சந்தித்துள்ளார். 1330 குறளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் ஒ…
-
- 0 replies
- 483 views
-
-
நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவின் பொலிவூட் ரசிகர்கள் அவரைப் போன்றே மெழுகுச் சிலையொன்றை உருவாக்கியுள்ளனர். நயன்தாராவை பிரிந்த பிறகு பிரபுதேவா பொலிவூட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொலிவூட்டில் அவரை ரீமேக் மன்னன் என்று புகழாரம் செய்து தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பிரபுதேவாவுக்கு அவரது பொலிவூட் ரசிகர்கள் மெழுகுச் சிலையை செய்துள்ளனர். மும்பை – பூனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை திறப்பு விழா நடந்தது. சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று பார்த்து அதிசயித்தார் பிரபுதேவா. தன்னை பெருமைப்படுத்திய பொலிவூட் ரசிகர்களுக்கு தன் மனதில் ஸ்பெஷல் இடத்தை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா.…
-
- 0 replies
- 427 views
-
-
மோசடி வழக்கு... புழல் ஜெயில், திகார் ஜெயில் என்று சுற்றியடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், ஜாமீனில் வெளிவந்து படப்பிடிப்பில் மீண்டும் பிஸியாகிவிட்டார். பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஆர்யா சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்ற சீனிவாசனை ரசிகர்கள் அன்பினால் திக்குமுக்காடச் செய்து விட்டார்களாம். நடிப்பதோடு, பாட்டுப்பாடி,(!) நடனமாடி(!!) அசத்தியிருக்கிறாராம் பவர்ஸ்டார் இதை அவரே தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். பாண்டிச்சேரியில் நடந்த படப்பின்போது ரசிகர்கள் பவர் மீது காட்டிய அன்பு நெகிழ வைத்து விட்டதாம். 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தை காட்டிலும் ஆர்யா, சூர்யா படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கதை கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இரண்டு இளைஞர்களின் எளிமையான கதை என்கிறார் …
-
- 2 replies
- 722 views
-
-
கரீனா கபூரின் மாமியார் அதாவது சைப் அலிகானின் தாயார் கரீனா கபூரிடம் சில அன்புக்கட்டளைகளை பிறப்பித்துள்ளாராம். அவற்றில் ஒன்று சினிமாவில் கூட வேறு நடிகர்களுக்கு முத்தம் தரக்கூடாது, படுக்கையறை காட்சிகளில் நடிக்கக்கூடாது என்பதுதானாம் அது. மாமியார் ஷர்மிளா தாகூர் மீது கரினாவுக்கு அளவில்லாத மரியாதை. அவருக்கு உடன்பாடில்லாத எதையும் செய்வதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறாராம் கரீனா கபூர். இதனால் பாதிக்கப்பட்டது ரசிகர்களும் பாலிவுட் நடிகர்களும்தான் என்கிறார்கள். சத்யகிரஹா படத்தில் அஜய் தேவ்கானுக்கும், கரினா கபூருக்கும் நெருக்கமான காட்சி. முத்தமிட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. ஆனால் முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டார் கரினா. இதற்கு முன் …
-
- 3 replies
- 1.1k views
-
-
நடிகர் சிம்பு இயக்கியதாக கூறப்படும் மன்மதன் படத்தை உண்மையிலேயே சிம்பு இயக்கவில்லை வெறொருவர் இயக்கியதை தன்னுடைய பெயரை இயக்குனராக போட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மன்மதன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு. தனுஷ் எதை செய்தாலும் உடனே அதற்கு போட்டியாக செய்யும் குணம் படைத்த சிம்பு, தனுஷ் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருவதை கண்டு பொறுக்காமல் தான் உடனே தயாரிப்பில் இறங்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘மன்மதன்’.படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு …
-
- 0 replies
- 496 views
-
-
சென்னை: வெற்றி படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த கலைக் குடும்ப வாரிசு நடிகர் ப்ரோவின் லீடர் படத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்துவிட்டு தான் நடிக்கும் படத்தில் உள்ள அரசியல் பஞ்ச் வசனங்களை நீக்குமாறு கூறியுள்ளாராம். வெற்றி படத்தின் மூலம் ஹீரோவாகி தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்துவிட்ட அந்த கலைக்குடும்ப வாரிசு தற்போது ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் பல அரசியல் பஞ்ச் வசனங்களை பேசும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். நடிகரும் பயங்கரமாக பஞ்ச் பேசியுள்ளார். அதன் பிறகு அரசியல் பஞ்ச் வசனங்களுக்காக ப்ரோவின் லீடர் படத்தின் டப்பா டான்ஸ் ஆடியதை பார்த்து வெற்றி நடிகர் ஆடிப் போய்விட்டாராம். உடனே இயக்குனரை அணுகி ஐயா சாமி தயவு செய்து நம் படத்தில் உள்ள அ…
-
- 2 replies
- 899 views
-
-
அலெக்ஸ் பாண்டியன் தோல்விக்குப் பிறகு கார்த்திக்கு படங்கள் ஏதும் வெளியாகவில்லை! ஆனால் தற்போது கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இதில் ‘பிரியாணி’ படத்தை வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ‘பிரியாணி’ ரிலீஸ் தள்ளிபோகும் நிலையில் இருப்பதால், தீபாவளி வெளியீடாக முதலில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப்படம் காமெடி கலந்த குடும்பப்படமாக இருப்பதால் தீபாவளி வெளியீடாக வந்தால் குடும்ப ரசிகர்களை சென்றடையும் என்பதால் இ…
-
- 0 replies
- 934 views
-
-
அயன் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தர் கே.வி.ஆனந்த்! மாற்றான் படம் படுதோல்வியாக அமைந்தாலும், அந்தப்படத்தை பார்த்த ரஜினி, கே.வி.ஆனந்தை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். அந்தகேப்பில் ரஜினிக்கு கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்து விட்டது! ஆனால் கோச்சடையன் படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தனுஷை இயக்க தயாராகிவிட்டார் கே.வி.ஆனந்த்! இடையில் தனுஹை இயக்கும் முன்பு விக்ரம் படத்தை இயக்கவும் முடிவ்பு செய்தார். ஆனால் ஐ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் முடியும் என்ற சூழல் இருப்பதால் தற்போது தனுஷை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார்! கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவரை மட்டுமே தேடிப்போகும் கே.வி.ஆனந்த், தற்போது தனுஷுக…
-
- 0 replies
- 706 views
-
-
தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு படி உயர்த்தும், ஒரு உன்னதமான படம். - இயக்குநர் சீனுராமசாமி.
-
- 0 replies
- 516 views
-
-
மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தள…
-
- 10 replies
- 719 views
-
-
கர்நாடக சங்கீதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் முதன்மையானவர் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஒருவரான தியாகராஜர். இவருக்கு இணையாக கொண்டாடப்படும் மற்றொருவர் கர்நாடக தேசத்தில் பிறந்து வளர்ந்த புரந்தரதாசர் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைமேதை மட்டும்மல்லாமல், இசையின் வழியாக கடவுளைக் கண்ட ஆன்மிகமிவாதியும் ஆவார். இவரது பெயரால் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது! ஸ்ரீ புரந்தர இண்டர்நேஷனல் அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு சார்பில் பெங்களூரில் குரு வணக்க நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோச்சடையான் பட வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் போக முடியவில்லை. தனக்கு பதில் தன்ன…
-
- 1 reply
- 486 views
-
-
ஐயா பழ.நெடுமாறன் எழுதிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் டைரக்டர் வ.கெளதமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் உயிருக்கு நிகரான தமிழ் மக்களுக்கு என் வணக்கம். உலகம் தோன்றிய காலத்தில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகள் பெய்த கடும் மழையால் மூன்று பகுதி நீரும் ஒரு பகுதி நிலமும் உருவானதாக கூறுகிறது அறிவியல் செய்தி. இந்த பூமிப் பந்து உருவான காலத்திலிருந்து எந்த இனமும் சிந்தாத பெருமளவு இரத்தத்தை நம் தமிழ் இனம் சிந்தியிருக்கிறது என்கின்றது வரலாற்றுச்செய்தி. அப்படி ஈழத்திலே சொல்லமுடியாத துயரங்களை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அனபவித்துள்ளார்கள். நம் வீரத்தின் அடையாளம் தங்கள் உரிமைக்கு விடுதலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
தொடர்பு எல்லைக்குள் வந்தார் அஞ்சலி... திருமணம் குறித்து விளக்கம்! சென்னை: அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார். இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: …
-
- 9 replies
- 1k views
-
-
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்….! சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர். இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து…
-
- 7 replies
- 762 views
-