வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார். சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், "ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு …
-
- 0 replies
- 721 views
-
-
கண்ணா லட்டு தின்ன ஆசையா', படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு உள்ளது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களிலும் அவர் மீது மோசடி வழக்குகள் குவிந்துள்ளன. தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களிலும் வழக்கு பாய்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அடுத்து ஆந்திர மாநில போலீசாரும், அவரை பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழகத்தை பொறுத்தமட்டில் ரூ.7 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், வெளிமாநில வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் பல கோடி…
-
- 0 replies
- 418 views
-
-
ஹரியின் இயக்கத்தில், சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் நடப்பது போன்று கதை பண்ணியுள்ளார்களாம். அதனால் அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கதாபாத்திரம் தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம். இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அத்துடன் சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்தது…
-
- 10 replies
- 9.8k views
-
-
நண்டு கொழுத்தா வலையில தங்காது.. வாய் கொழுத்தா வாழ்க்கை தங்காதுன்னு சொல்வாங்க… அது சிலர் விஷயத்தில் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. சின்மயி விஷயத்தில் இது எப்படி என்று கீழ் வரும் அவரது பேஸ்புக் ஸ்டேடஸைப் படித்துவிட்டு சொல்லுங்கள்… ட்விட்டர், பேஸ்புக்கில் குழாயடிச் சண்டை நடத்தி, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமைதியாக இருந்த சின்மயிக்கு, இப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன, பாடுவதற்கு. அந்த தைரியத்திலோ என்னமோ அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள சவால் ஸ்டேடஸைப் பாருங்கஷள்… “ஒரு வருடம் கூட ஆகல. தமிழ்நாட்டிலேந்தே துரத்த்தறேன், நீ பாடாம இருக்க அத செய்யறேன் இத செய்யறேன் ன்னு இந்த பேஜ் லயே வந்து மிரட்டினாங்க சில பேர். கடவுள் என்னையும் என் தாயாராயும் நல்லா காப்பாத…
-
- 1 reply
- 623 views
-
-
செவ்வாய், 4 ஜூன் 2013 இந்தியில் நிஷாப்த், கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜியாகான் பிரிட்டனை சேர்ந்தவர் பாலிவுட்டில் பிரபல திரைப்படங்கள் மற்றும் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து …
-
- 1 reply
- 550 views
-
-
தமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்…
-
- 0 replies
- 5.5k views
-
-
தொடர்ந்து தன்னைத் தேடி வருகின்ற எல்லா மொழிப்படங்களையும் அப்படியே கவ்விக் கொண்டு படங்களில் பிஸியாக நடித்து நயன் தாரா தற்போது உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். ஆமாம், நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸ் சினிமாவில் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தாலும் அதில், அவருக்கு திருப்தியே இல்லையாம். காரணம் சமீபகாலமாக அவர் கமிட்டாகி நடித்து வரும் எல்லா படங்களிலும் அவரை ஒரு ஹெஸ்ட்ரோல் மாதிரி தான் பயன்படுத்துகிறார்களாம். அதே படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுக்குத் தான் முக்கியமான கேரக்டர்களை கொடுக்கிறார்களாம் டைரக்டர்கள். குறிப்பாக நயன்தாரா நடித்து வரும் "வலை படத்தில், டாப்சிக்கும், "ராஜா ராணி" படத்தில், நஸ்ரியா நஸிமுக்கும், ஹீரோக்களுடன் டூயட் ஆடும் கேரக்டர்களாம். மேலும் படத்தின் கதைகளு…
-
- 4 replies
- 835 views
-
-
இசையமைப்பாளரானார் டிரம்ஸ் சிவமணி...! விக்ரம் பிரபு நடிக்கும் "அரிமா நம்பி" படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, முதன்முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக "அரிமா நம…
-
- 0 replies
- 508 views
-
-
கொடிய போரில் ரத்தத்தில் தீக்குளித்த இலங்கை நாட்டின் மேப் போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இந்த புகைப்படம் உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டைரக்டர், நடிகர் என பன்முக திறன் கொண்டவர். தற்போது இவர் 'இனம்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் போது அதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில மாதங்கள் இலங்கையில் இருந்து ஆய்வு செய்து இந்தப்படத்தை எடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தில் தோய…
-
- 0 replies
- 695 views
-
-
நேரம் - சினிமா விமர்சனம் “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..” கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் : “வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் க…
-
- 0 replies
- 911 views
-
-
மரியான் கதாநாயகி பார்வதி மேனனுடன் ஒரு செவ்வி மரியான் படப்பிடிப்பாளர் marc konincckx உடனான செவ்வி
-
- 1 reply
- 517 views
-
-
நடிகைகள் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே அஞ்சலி 'ஊர்சுற்றி புராணம்' என்ற தமிழ் படத்தில் நடித்தார். அப்படத்தில் தற்போது நடிக்க மறுப்பதால் பாதியில் நிற்கிறது. ஸ்ருதிஹாசனுக்கும் தமிழ் படங்கள் கைவசம் இல்லை. ஆனால் இருவரும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்கள். அஞ்சலி பலுபு, கோல்மால் என இரு படங்களில் நடிக்கிறார். 'பலுபு' படத்தில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகனாக ரவிதேஜா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பலுபு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் ஸ்ருதிஹாசனும், அஞ்சலியும் பங்கேற்றனர். ரவிதேஜாவுடன் அருகருகே இருவரும் அமர்ந்து இருந்தார்கள். பின்னர் ஸ்ருதிஹாசன் ம…
-
- 0 replies
- 745 views
-
-
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘சிங்கம் -2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நாளை ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 2010- ஆம் ஆண்டு ரிலீஸான ‘சிங்கம்’ படம் தமிழில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் அந்தப்படம் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக்காகி வசூலில் சாதனை படைத்தது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய திட்டமிட்டி டைரக்டர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை 'சிங்கம்-2' என்ற பெயரில் டைரக்ட் செய்துள்ளார். இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் ரிலீஸுக்கு ரெடியாகி வரு…
-
- 0 replies
- 819 views
-
-
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா? இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் தீபிகா படுகோனேயுடன் பேச்சுவார்த்தை நடந்தது. முன்னணி நடிகைகள் பலரும் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே தேதி இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு நடிகையை தேட ஆரம்பித்த முருகதாஸ், தீபிகா படுகோனேவுக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அப்படி அமையும்பட்சத்தில் விஜய், சமந்தா இணையும் முதல் படமாக இப்படம் இருக்கும். h…
-
- 0 replies
- 1.3k views
-
-
நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து க…
-
- 1 reply
- 475 views
-
-
3 தடவைகள் திருமணம் செய்து கொண்ட நடிக நடிகைகள் https://www.youtube.com/watch?v=gfHYuOjTQ-0
-
- 5 replies
- 768 views
-
-
ஷாருக்கானுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட நயன்தாரா மறுத்ததால் அவருக்கு பதில் பிரியாமணி ஆடினார். ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், மனோரமா உட்பட அதிகமான தமிழ் நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷாருக்கானுடன் தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவரை ஆட வைத்து குத்தாட்ட பாடல் காட்சியொன்றை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக நயன்தாராவை அணுகி கேட்டனர். ஆனால் அவர் ஒரு பாடலுக்கு ஆட முடியாது என மறுத்து விட்டார். அதே நேரம் தனுஷ் அழைப்பை ஏற்று அவர் தயாரித்த எதிர…
-
- 0 replies
- 477 views
-
-
இனவெறி சிங்கள அரசினால் துரத்தி அடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வலிகளைச் சொல்ல ‘சிவப்பு’ என்ற டைட்டிலில் ஒரு படம் தயாராகி வருகிறது. நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்ஷிணி கோவிந்த் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் படம் தான் இந்த சிவப்பு. ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் ஹீரோக்களாக நடிக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். கழுகு என்ற ஹிட் படத்தை கொடுத்த சத்யசிவா இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை டைரக்ட் செய்க…
-
- 0 replies
- 528 views
-
-
பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். http://www.bbc.co.uk/tamil/india/2013/05/…
-
- 41 replies
- 12.3k views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வருவோம் என்கிறது சி.பி. சி.ஐ.டி. போலீஸ். இதனால் பிரபல நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் தூதராக நியமிக்கப்பட்டவர் நடிகர் விஜய், இவருக்கு ஜோடியாக நயன்தாராவைச் சேர்த்தனர். இவர்களை அழைத்து வந்தது சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன். ஒரு விருந்தின் போது, குருநாத்துக்கும் நயன்தாராவுக்கும் மோதல் நடந்ததால் ஐ.பி.எல்.லில் இருந்து விலகிக் கொண்டார் நயன்தாரா. இருவருக்கும் ஏன் மோதல் நடந்தது? வீரர்களுடன் நெருக்கமாக இருக்க நயன்தாரா வலியுறுத்தப்பட்டாரா? என்பது பற்றி விசாரிக்கப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். நயன்த…
-
- 13 replies
- 1.5k views
-
-
உலக அளவில் அதிக மரியாதைக்குரியதாக கருதப்படும் சர்வதேச திரைப்படவிழா, கேன்ஸ். அதில் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவதாக கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினியும் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. ரஜினி கேன்ஸ் செல்லவில்லை, ட்ரைலரும் வெளியிடப்படவில்லை. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே கேன்ஸுக்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சிலர் கூறினர். ஆனால் அதனை படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மறுத்துள்ளது. படத்தின் ட்ரைலர் சிறப்பாக வர வேண்டும் என்று ரஜினி தெரிவித்ததால் ட்ரைலரை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், அதனா…
-
- 0 replies
- 327 views
-
-
சென்னை: 19 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பாலை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற "ரெட் சில்லீஸ்" என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (25). "ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா", "கோப்ரா" ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் "மெட்ராஸ் கபே" படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார். லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ…
-
- 0 replies
- 539 views
-
-
மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்…
-
- 1 reply
- 880 views
-
-
-
- 20 replies
- 1.6k views
-
-
மிக அழகான நடிகை ஹன்ஷிகா தான் என்று சிம்பு ஒருபக்கம் அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார், ஆனால் ஹன்ஷிகாவோ சித்தார்த் தான் செம க்யூட்டான நடிகர் என்றும், அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால், நம்மை நிஜ காதலி போலவே பார்ப்பார் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சித்தார்த்துடன் பல படங்களில் டூயட் பாடியவர் தான் ஹன்சிகா. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், தொடர்ந்து பட படங்களில் இணைந்து நடித்த அவர்கள், சில படங்களில் அதிக நெருக்கத்துடனும் நடித்தனர். இதனால் தெலுங்கில் அவர் ரொமாண்டிக் ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் தமிழில் ஹன்ஷிகாவுகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தந்தால் தெலுங்கு பட உலகை விட்டு வந்தார். இதனால் தொடர்ந்து அவரால் சித்தார்த…
-
- 0 replies
- 437 views
-