வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மைக்கேல் ஜாக்சனின் நடனங்களில் மிகவும் பிரபலமானது மூன் வாக் நடனம். இந்த நடனத்தின் சில அசைவுகளை உலகில் உள்ள எல்லா நடனக்கலைஞர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட மூன்வாக் நடனத்தை சோனாக்ஷி சின்ஹா ஒரு பாலிவுட் படத்தில் ஆட இருக்கின்றார். அஜய்தேவ்கான், தமன்னா ஜோடியில் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கபப்ட்டுவரும் ஹிம்மத்வாலா என்ற இந்திப்படத்தில்தான் இந்த மூன்வாக் நடனத்தை ஆட இருக்கின்றார் சோனாக்ஷி சின்ஹா. இந்த நடனம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என பேசப்படுகிறது. தமன்னா படம் முழுவதும் காட்டப்போகும் கவர்ச்சியை சோனாக்ஷி இந்த பாடலில் காட்டி பெயர் தட்டிச்செல்லும் நிலை இருப்பதால்,தமன்னா அதிர்ச்சியில் உள்ளார். இயக்குனரிடம் அவராகவே வலிய சென்று த…
-
- 0 replies
- 787 views
-
-
நடிகை காவ்யா மாதவன் மலையாளத்தில் விதவிதமான கேரக்டரில் நடிப்பதில் விருப்பம் கொண்டவர். தனது கேரக்டர் அழுத்தமாக இருந்தால் போதும், எப்படிப்பட்ட வேடமானாலும் சரி, நடிக்க ஒப்புக்கொள்வார். இதுபோலவே, தற்போது 20 வயது அம்மாவாக நடிக்கும் கேரக்டர் ஒன்று அவரை தேடி வந்துள்ளது. இயக்குனர் அவரை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டதும், உடனே கதையை கேட்டு, தனக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எண்ணி, உடனே ஒப்புக்கொண்டார். காவ்யா மாதவனுக்கே தற்போது 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் 20 வயது பையனுக்கு அம்மாவாக நடிப்பது என்பது ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை அம்மாவாக நடித்துவிட்டால், இவர் அம்மா நடிகை என முத்திரை குத்தப்படும் இந்த் சினிமா உலகத்தில், மிகத்துணிச்சலான முடிவை …
-
- 0 replies
- 744 views
-
-
1980களில் சிலுக்கு இல்லாத படமே இல்லை என்னும் நிலை இருந்தது. பக்திப்படமாக இருந்தாலும் சரி, பாடாவதி படமாக இருந்தாலும் சரி அதில் சிலுக்கின் குத்துப்பாட்டு ஒன்று கண்டிப்பாக இருக்கும். கிட்டத்தட்ட அதே நிலைக்கு வந்துவிட்டார் ஆம்பள சிலுக்கு என்று அழைக்கப்படும் பவர்ஸ்டார். தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் மெகா பட்ஜெட் இயக்குனர் ஷங்கரின் ஐ முதல் சாதாரண படங்கள் வரை எல்லா படத்திலும் பவர்ஸ்டார் தலைகாட்டுகிறார். சில படங்களுக்கு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதனிடையே 1967ல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படம் காமெடி, மாயாஜாலம் என இரண்டும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டிருந்தன. இப்போது நீண்ட ஆண…
-
- 0 replies
- 719 views
-
-
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் ஜோடி தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் காக்கா முட்டை. ஆனால் இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை. அவருடைய உதவியாளர் மணிகண்டன் இயக்க, வெற்றிமாறன், தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஏற்கனவே சிம்புவுடன் இரண்டு படங்கள் உள்பட பிஸியாக இருக்கும் ஹன்சிகா இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், ஹன்சிகாவைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என தனுஷ் தனிப்பட்ட முறையில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். சிம்புவுட்ன் நெருக்கமாக காத…
-
- 1 reply
- 796 views
-
-
அரபுக்குதிரை போல ஹாட்டாக இருக்கும் நடிகை அனுஷ்காவையே கலங்க வைக்கும் ஒரு செய்த ருத்ரமாதேவி படப்பிடிப்பில் நடந்துள்ளது. ருத்ரமாதேவி என்ற வரலாற்று தெலுங்கு படத்தில் ராணி ருத்ரமாதேவியாகா அனுஷ்கா ராணியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராணா கணவர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அனுஷ்காவிற்கு குதிரை சவாரி எல்லாம் உண்டு. குதிரையில் சவாரி செய்து எதிரிகளோடு மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது என இதன் இயக்குனர் குணசேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இப்போது ருத்ரமாதேவியில் புதிதாக இரண்டு கேரக்டர்கள் உள்ளே நுழைக்கப்படுகிறதாம். அதாவது ராணி ருத்ரமாதேவியின் தங்கைகளாக நடிப்பதற்கு இரண்டு நடிகைகளை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர். இரண்டு பேரும் பி…
-
- 0 replies
- 537 views
-
-
திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக நடித்த நடிகைகள் கூட திருமணத்திற்கு பின் போர்த்திக்கொண்டு நடிப்பதுதன் வழக்கம். ஆனால் சினேகா விஷ்யத்தில் எல்லாமே தலைகீழ். திருமணத்திற்கு முன்பு வரை தன் வசீகர சிரிப்பை மட்டுமே கவர்ச்சியாக காட்டிய சினேகா (பாண்டி போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு), தற்போது திருமணத்திற்கு கவர்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளார். புதிதாக ஒப்பந்தமாகியுள்ள பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிற்காக கொடுத்த போஸ் ஒன்று படுகவர்ச்சியாக இருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த போஸ் கொடுத்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்த பின்புதான் பிரசன்னாவிற்கே தெரியுமாம்....கைகளை மேலே தூக்கியபடி, தொப்புள் தெரியும் இந்த கவர்ச்சி போஸை பார்த்து கடுப்பில் இருக்கிறார் பிரசன…
-
- 0 replies
- 1.1k views
-
-
அஜீத் நடிக்கும் வலை படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி நடிக்கும் இப்படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல ஒரு பாடல் காட்சியை எடுக்க இருக்கின்றார்களாம். இதற்காக மும்பையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள செட் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. மார்ச் 26 தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இதற்காக வலை படக்குழு நாளை மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த படத்தில் இந்த பாடல் காட்சிதான் ஹைலைட் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும் இந்த படத்தின் மூலம் அஜீத் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்…
-
- 0 replies
- 582 views
-
-
அமிதாப் மகனாகவும், அவரது மகன் அபிஷேக் தந்தையாகவும் நடித்து பிரமாதமாக ஓடிய "பா" வெற்றிப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், பி.சி.ஸ்ரீராம் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும்தான். தற்போது வந்துள்ள புதிய செய்தி மீண்டும் இசைஞானி பாலிவுட்டின் ஒரு படத்திற்கு இசையமைக்க இசைந்துள்ளார் என்பதுதான். "பா" இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசைஞானிதான் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கும் ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். "இசைஞானியுடன் இணைந்து வேலை செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தென்னகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பெயர் வாங்கிய இசைஞானிக்கு இந்த் படம் ம…
-
- 0 replies
- 383 views
-
-
விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க நடிகர் விஜய் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ஒரு விழா ஒன்றை நடத்தி விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்து வந்ததால் பாதுகாப்பிற்கு நின்றவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் முதலில் வார்த்தையில் சண்டை போட்டு, பின்னர் விபரீதமாகி தங்களுக்குள் கைகலப்பு நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்யும் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போன கில்லி விஜய், உடனே பின்பக்கம் வழியாக ஒரே ஓட்டமாக ஓடி தன்னுடைய காருக்குள் புகுந்து கொண்டு, விழாவும் வேண்டும் ஒன்றும் வேண்டாம் என ஓட்டமெடுத்தார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கடும் அ…
-
- 2 replies
- 745 views
-
-
பிரிவு: சினிமா செய்திகள் சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பின் போது ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு வந்ததாகவும், இருவரும் ஹோட்டலில் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து ஹன்சிகாவிடன் கேட்டதற்கு சிம்புவுக்கும் எனக்கும் காதல் கிடையாது. அது வெறும் வதந்தி. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று நடிகைகளுக்கே உண்டான பதிலையே சொல்லுகிறார். ஆனால் சிம்பு தரப்போ ஹன்சிகாவை புகழ்ந்து வருகிறது. இப்போது இருவரும் இணைந்து 'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படப்பிடிப்பின் சமயத்தில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட…
-
- 0 replies
- 861 views
-
-
ஆட்டிஸம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழகச் சூழலில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கும் அவன் தந்தைக்குமான உறவையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் படம் `ஹரிதாஸ்’. கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் பிரச்சாரம் செய்யும் ஒரு டாக்குமெண்ட்ரி படமாகியிருக்கக் கூடிய இந்தக் கதைக்களம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் புத்திசாலித்தனத்தால் பிரமாதமாக வந்திருக்கிறது. என்கவுண்டர் ஆபீஸராக வரும் கிஷோர் மற்றும் அவரது டீம் ஒரு கும்பலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுவதிலில் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போகும் படம் சிறிது நேரத்திலே வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது. என்கவுண்டர் பணியிலிருந்து விலகி ஆட்டிஸம் பாதித்த மகனை கவனித்துக்கொள்ள விரும்புகிறார் கிஷோர். அவர்களுக்கிடையிலான உறவ…
-
- 3 replies
- 1k views
-
-
மேக்கப்பில்லாமல் தீபிகா படுகோனேவை பார்த்திருக்கீங்களா? மும்பை: படத்தில் நடிகைகளைப் பார்க்கையில் அடடா என்ன அழகு, எத்தனை அழகு என்று சொல்வோம். ஆனால் அவர்கள் மேக்கப் இல்லாமல் வருகையில் அந்த பொண்ணு தானா இந்த பொண்ணு என்று வியந்தவர்களும் உண்டு. படங்களில் நடிகைகளின் தோல் மினுமினுக்கும். அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும். அது அவ்வளவும் மேக்கப்பால் வந்த அழகு என்று தெரிந்தும் அவர்களின் படத்தையே பார்ப்பவர்கள் ஏராளம். அதே நடிகைகள் மேக்கப் இல்லாமல் வந்தால் பயங்கர வித்தியாசமாக இருக்கும். உண்மையிலேயே இவர் தான் அந்த படத்தில் நடித்திருந்தாரா என்று வியக்கத் தோன்றும். ஆனால் அதிலும் சில நடிகைகள் மேக்கப் இல்லாமலும் அழகாக இருப்பார்கள். பாலிவுட்டில் குறுகிய காலத்தில் பிர…
-
- 17 replies
- 2.8k views
-
-
'வெள்ளச்சி படம்' ஒரு பார்வை [Wednesday, 2013-03-13 20:45:15] தந்தையால் சின்னா பின்னமாகும் ஒரு இளைஞனின் காதல்கதை.. பால் வியாபாரம் செய்பவர் செவ்வாளை. இவரது ஒரே மகன் பிண்டு. செவ்வாளை பல பெண்களுடன் தகாத உறவு வைத்து பணத்தை செலவிடுகிறார். இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக்காதலியின் கணவனிடமும் தந்தையை மாட்டி விடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல்.. அதே ஊரில் பிழைக்க வரும் சுசித்ரா உன்னியை பிண்டுக்கு பிடித்துபோக காதல்.. சுசித்ரா உன்னிக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். பிண்டுவின் நல்ல குணம் சுசித்ரா உன்னியையும் காதல்பட வைக்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய எதிர்க்கின்றனர். காதலை பிரிக்க பிண்டு மீதான வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடூர திட்டம் வகுக்கிறார். அதன் ப…
-
- 0 replies
- 815 views
-
-
நான் நேற்றிரவு ஒரு படம் பார்த்தேன்.படத்தின் பெயர் வனயுத்தம்.வீரப்பன் கதை சொல்லும் படம் என்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் எடுத்த படம் என்றும் சொன்னார்கள். படத்தில் கிஸோர் என்பவர் வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.அவருடைய புன்னகை கொள்ளையழகு அர்ஜீன் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். நான் அறிந்த வரையில் நிஜ வாழ்க்கையில் வீரப்பன் முதலில் யானைத் தந்தங்கள் கடத்துபவனாகவும் பின்னர் சந்தன மரம் உட்பட வாசனைத் திரவியங்கள் கடத்துபவனாகவும் இருந்திருக்கிறார்.அவரை இப்படி கடத்தற்காரராய் ஆக்கியதே பெரிய பண முதலைகளும்,மந்திரிகளும் என்றும் சுத்தி வர இருக்கும் அனைத்து மக்களுக்கும் வீரப்பன்…
-
- 4 replies
- 853 views
-
-
http://youtu.be/HT4INxNjBQs
-
- 0 replies
- 603 views
-
-
அப்பாடா தப்பித்தால் போதும் என்று ஓடிய நடிகர் விஜய் . விழுப்புரத்தில் இலவச திருமணம் செய்து வைக்க வந்த நடிகர் விஜய் , முதலில் ஒரு பொது இடத்தில ரசிகர்களை சந்தித்தார் . அந்த இடத்தில இருந்து அவர் இலவச திருமணங்கள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்று அங்கு திருமணங்களை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் . ஆனால் அங்கு சென்றாலும் பொது கூட்டத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அந்த மண்டபத்தில் நுழைய முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு , ஒருவருக்கு ஒருவர் அடிதடியும் செய்து கொண்டனர் . நிலைமை கட்டு கடங்காமல் செல்வதை கண்ட Vijay கல்யாண சுற்று மண்டபத்தை தாண்டி மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். திருமண மண்டபம் பெரிய சண்டை நடந்த கலவர பூமியாக மாறி காட்சி அளித்து இருந்தத…
-
- 0 replies
- 898 views
-
-
கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்த அ ஞ்சலி... படப்பிடிப்பு நிறுத்தம். சென்னை: ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடித்து வரும் அஞ்சலி படப்பிடிப்பில் கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்தானது. டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் ஊர் சுற்றி புராணம். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைப் பெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது. நேற்று ( சனிக்கிழமை) களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப் பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற் படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன…
-
- 3 replies
- 743 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘செங்கடல்‘ என்ற திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னைப் பிராந்திய தணிக்கைக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் எதிராக சிறிலங்காப் படையினர் நிகழ்த்திய கொடூரங்களை விரிவாக சித்திரிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கைக்குழு அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர். லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனர் ‘செங்கடல்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தணிக்கைக் குழுவினர் இரட்டைவேடம் போடுவதாகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ம…
-
- 0 replies
- 1k views
-
-
குஷ்பு போல அரசியலில் குதிக்க விருப்பமா? த்ரிஷாவின் அதிரடி பதில் ... சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேல் மட்டத்தில் இருந்து இதற்கான மாற்றங்கள் உருவாக வேண்டும். பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும். நடிகைகள் குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான வி…
-
- 1 reply
- 928 views
-
-
சிரிப்பு நடிகர் என்று அந்த துறையில் தனி இடத்தை வாங்கிய வடிவேலுவின் மூத்த மகள் திருமணம் அடுத்த மாதம் 7-ம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டு பணிகளில் உள்ளார் வடிவேலு . திருமணத்தை எளிதாக நடத்த திட்டமிட்டிருக்கும் வடிவேலு, இதுவரை யார்க்கும் பத்திரிக்கை என்று எந்த வித அழைப்பையும் கொடுக்கவில்லையாம் , அவருக்கு இன்னமும் நெருக்கமாக இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் சிலர் ஏன் என்னாச்சு என்று கேட்கையில் , தயவு செய்து திருமண நிகழ்ச்சிக்கு யாரும் வராதீர்கள் , அது என்னோட சினிமா கேரியரை கடுமையா அடி வாங்க வைக்குதுன்னு புலம்புறாராம். திமுகவிற்கு பிரச்சாரம் செய்த வடிவேலுவின் நிலை இப்படிதானா அல்லது அரசியலில் இறங்கும் அனைவரையும் இப்படி மாற்றிவிடுமா ? http:/…
-
- 0 replies
- 638 views
-
-
ரூ.10 கோடி நில அபகரிப்பு புகார் பிரபல இசையமைப்பாளர் தலைமறைவு சென்னை : போலி ஆவணம் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரது மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பன். இவர் சேலம் துணை நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள 75 சென்ட் நிலத்தை வாங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை திரைப்பட இசையமைப்பாளர் மணி சர்மா மற்றும் அவரது மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக கருப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டால் இருவ…
-
- 0 replies
- 488 views
-
-
சென்னை: தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்! விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர். சமீபத்திய பேட்டி ஒன்றில், "விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள். எப்படி ஈ…
-
- 0 replies
- 605 views
-
-
புயல் இசை பத்தியும் மத்தவங்க பத்தியும் பர்சனலா வசந்த இசை அட்டாக் பண்ணியிருந்தாரு. யாரையும் தனிப்பட்ட முறையில விமர்சிக்காத புயல் இசை, இது பத்தி கேள்விப்பட்டும் கண்டுக்கலையாம்... கண்டுக்கலையாம்... உசுப்பேத்தி மோதிப் பார்க்கலாம்னு காத்திருந்த வசந்தம், பொலிவிழந்துட்டாராம்... பொலிவிழந்துட்டாராம்... ஆண்டிரி ஹீரோயின பத்தி கொல வெறி இசை அமைப்போட லிங்க் பண்ணி கிசுகிசு வந்துச்சு. ஒரு வழியா அதுக்கு பதில் சொல்லி முடிச்சி வச்சிருக்கற நேரத்தல மயக்கம் வாட் படத்துல நடிச்ச சுந்தரான நடிகரோட ஆண்டிரி நடிகைக்கு லவ்வுனு கிசுகிசு பரவியிருக்காம்... பரவியிருக்காம்... இத கேட்டு கடுப்பாகிப்போன நடிகை, அதுபத்தி யாராவது கேட்டா எரிஞ்சி விழுறாராம். அவரும் நானும் பிரெண்ட்ஸ்தான். புரளி கௌப்பறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…
-
- 12 replies
- 1.3k views
-
-