வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9 Posted by: Mayura Akilan Published: Tuesday, April 30, 2013, 8:47 [iST] நார்வே: 2013ம் ஆண்டிற்கான நார்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. …
-
- 0 replies
- 608 views
-
-
´தலைவா’ வெளியீட்டு சிக்கலால் ’ஜில்லா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார் விஜய். வெளியீட்டுக்கான தடை நீங்கிய தகவல் கிடைத்ததுமே சென்னை பின்னி மில் வளாகத்தில் ‘ஜில்லா’ படப்பிடிப்பு சுறுசுறுப்பாகத் தொடங்கியது. பொதுவாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் நுழையக்கூடாது என்பதால் ரொம்பவே கெடுபிடி இருக்கும். இப்போது அந்த கெடுபிடி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆஜானபாகுவான பத்துக்கும் மேற்பட்டவர்களை சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள் படக்குழுவினர். கடந்தவாரம் விஜய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பின் இடைவேளையின்போது ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். …
-
- 0 replies
- 677 views
-
-
திருமண உறவு முறித்த பிறகு,சீதாவுக்கு ஒரு சினேகிதன் கிடைத்துவிட்டார்.பார்த்திபனுக்கு ஒரு சிநேகிதி கிடைக்கவில்லையா? தென்றல் வீசிய கலைஞனின் வாழ்க்கையில் தீ பரவியது ஏன்? அண்மையில் ‘மைனா’படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போல இருந்தாரே, படங்கள் எதுவும் இல்லாததாலா? ‘வித்தகன்’ தயாரிப்பாளருடன் மனக்கசப்பா? ஆளாளுக்கு அரசியல் மேளம் அடிக்கும் போது பார்த்திபனும் இறங்க வேண்டியதுதானே?ஒரு திறமைசாலிக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போனது ஏன்? இப்படி பல கேள்விகளுடன் விடை தேடிச் சென்றபோது, ‘‘எனது வாழ்க்கையில் மட்டும் தென்றலும் தீயும் ஏன் என்பது எனக்கு நானே கேட்டுக் கொள்கிற கேள்வி!இருபது வருடங்களுக்கு முன்பு ‘புதியபாதை’ எடுத்தபோது புதிய கருத்துகளை சொல்லணும்கிற த…
-
- 0 replies
- 1.1k views
-
-
December 21, 2018 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் மற்றும் 96 ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 13ம் திகதி முதல் நடைபெற்ற 16-வது சர்வதேச திரைப்படவிழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றநிலையில் அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்த…
-
- 0 replies
- 291 views
-
-
சென்னை:-சென்னை வெள்ளத்தில் ஆர்யா, விஷால், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் முதல்மாடிக்கு சென்று தங்கினர். அதேசமயம் விஷால், கார்த்தி. சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர். தெலுங்கு படப்பிடிப்புக்காக விஜயவாடாவில் தங்கி இருக்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியது: தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கி உள்ளதால் கடந்த 3 நாட்களாக எனது பெற்றோரிடம் பேச முடியவில்லை. கடந்த ஒரு வாரமாக நான் தூக்கமில்லாமல் இரவு பொழுதை கழித்து வருகிறேன். எனத…
-
- 0 replies
- 402 views
-
-
திரை விமர்சனம்: சேதுபதி சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அர…
-
- 0 replies
- 501 views
-
-
குசேலன் படம் திரைக்கு வருவதையட்டி ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஜப்பானில் ரஜினியின் முத்து படம் திரையிட்டபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. ரஜினியின் ஸ்டைலில் ஜப்பானியர்கள் பலர் மயங்கினர். டோக்கியோவில் 23 வாரங்கள் முத்து படம் ஓடி சாதனையும் படைத்தது. தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் திரையிடப்படுகின்றன. சிவாஜி திரைக்கு வரும் நேரத்தில் ஜப்பானியர்கள் சென்னை வந்து ரஜினியை சந்தித்தனர். இப்போது தனது ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ரஜினி அங்கு செல்கிறார். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=210
-
- 0 replies
- 550 views
-
-
விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு நடிகர் விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்…
-
- 0 replies
- 369 views
-
-
விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன் 17 நவம்பர் 2012 விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒர…
-
- 0 replies
- 568 views
-
-
நயன்தாரா மீண்டும் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி ஆனதில் த்ரிஷா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று தமிழ்த் திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறேன் என்று சொல்லிவந்த திரிஷா கூட, தற்போது இன்னும் 10 வருடங்கள் நடிக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட காஜல் அகர்வாலோ, 'வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் இந்தி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். அதோடு, இயக்குனரின் நடிகையாக இருக்கவே எனக்கு ஆசை என்றும், கதாபாத்திரங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் தனது உதவியாளர்களிடம் சொல்லி, இயக்…
-
- 0 replies
- 486 views
-
-
நடிகை காவ்யா மாதவன் மலையாளத்தில் விதவிதமான கேரக்டரில் நடிப்பதில் விருப்பம் கொண்டவர். தனது கேரக்டர் அழுத்தமாக இருந்தால் போதும், எப்படிப்பட்ட வேடமானாலும் சரி, நடிக்க ஒப்புக்கொள்வார். இதுபோலவே, தற்போது 20 வயது அம்மாவாக நடிக்கும் கேரக்டர் ஒன்று அவரை தேடி வந்துள்ளது. இயக்குனர் அவரை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டதும், உடனே கதையை கேட்டு, தனக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எண்ணி, உடனே ஒப்புக்கொண்டார். காவ்யா மாதவனுக்கே தற்போது 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் 20 வயது பையனுக்கு அம்மாவாக நடிப்பது என்பது ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை அம்மாவாக நடித்துவிட்டால், இவர் அம்மா நடிகை என முத்திரை குத்தப்படும் இந்த் சினிமா உலகத்தில், மிகத்துணிச்சலான முடிவை …
-
- 0 replies
- 750 views
-
-
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆடியோ சி.டி.யை நடிகர் விஜய் வெளியிட்டார். நாளை நடிகர் விஜய்-ன் பிறந்தநாள் என்பதால் விழாவில் அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விஜய் தன் ரசிகர்களுக்கு தலைவா பாடல்களை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். படவிழாவில் கலந்து கொண்ட சத்யர…
-
- 0 replies
- 814 views
-
-
சந்தப் பேழையில் நிரம்பிய திராட்சை இசை: கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி மறக்க முடியாத இணைகள்: எம்.எஸ்.வி கண்ணதாசன் முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னணியில் வீற்றிருக்கும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் திரைப்படப் பாடல்களின் மூலம் பாட்டுப் பந்தி வைத்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி மேற்கொண்ட உரையாடல். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்குமான இணக்கம் இருக்கிறதல்லவா, அது எப்படி ஒரு காவிய அழகாகப் பரிணமித்தது? இந்தக் கேள்வியில் இருக்கிற இணக்கம் என்கிற வார்த்தையை மிகவும் ரசிக்கிறேன். ஓர் இசையமைப்பாளர் ஒரே காலகட்டத்தில் பல பாடலாசியர்களைக் கொண்டு எழுதுகிறார். ஒரு கவிஞர் ஒரே காலகட்…
-
- 0 replies
- 529 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிப்பு - சூர்யா, அசின் இயக்கம் - ஹரி இசை - யுவன்ஷங்கர்ராஜா (கதை) ஆயிரம் அரிவாளால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை, ஆறு அறிவால் சாதிக்க முடியும் என்பதே படத்தின் மையக்கரு. (நடிகர்) சூர்யா, அசின், வடிவேலு, நாசர், சரண்ராஜ், கலாபவன்மணி, சார்லி, அம்பிகா மற்றும் பலர். (சிறுதுளிகள்) * 'பேரழகன்' படத்திற்கு பிறகு சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். * 'கஜினி' படத்தைத் தொடர்ந்து சூர்யா ஜோடியாக நடிக்கும் அசின், ஐயர் வீட்டு பெண், மார்டன் கேள் என இருவித…
-
- 0 replies
- 938 views
-
-
கனடாவில் கட்டபொம்மன் Veerapandiya Kattabomman Language: Tamil Runing Time: Release Date: 2015 Saturday, 29 August, 2015 04:00 PM, 07:00 PM, 10:00 PM
-
- 0 replies
- 447 views
-
-
The way back ஆங்கில சினிமா சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள். மறுபு…
-
- 0 replies
- 598 views
-
-
இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார். இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு. இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்…
-
- 0 replies
- 712 views
-
-
பொங்கலுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் பரதேசி பிப்ரவரி 22 ந் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது. 'விஸ்வரூபம்' படத்தின் டிடிஎச் விவகாரத்தின் முடிவுக்காக அநேக முன்னணி பட முதலாளிகள் இரை தேடும் கொக்கு போல காத்திருக்கிறார்கள். முடிவு கமலுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அத்தனை வழிகளும் டிடிஎச்-ல் வந்துதான் முடியும் போலிருக்கிறது. பாலாவும் அதை முன்னிட்டுதான் தனது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தாராம். இதே தேதியில்தான் அமீரின் ஆதிபகவனும் திரைக்கு வரப்போகிறது. இதற்கிடையில் கார்த்திக்கின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை சன் டிடிஎச் சுக்காக கேட்டார்களாம். கமல் கெடு விதித்திருக்கும் 11 ந் தேதி வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கலெக்ஷன் நல்லாயிருந்தா அன்னைக்கு நைட்டே அக்ரிமென்ட் போட்டுரல…
-
- 0 replies
- 515 views
-
-
டாக்சியில் பயணிக்கும் கோடீஸ்வரன் ஒருவனுக்கு அந்த டாக்சிக்காரன் கொடுக்கிற டார்ச்சர்தான் கதை! காலையில் துவங்கி இரவில் முடிவதாக கதை அமைந்தாலும், இரண்டே மணி நேரத்தில் 'சுருக்' என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன். அதற்காகவே மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கலாம் (16 ரீலில் படம் எடுத்து பாடாய் படுத்தும் இயக்குனர்கள் இவரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்க!) தன்னை எல்ஐசி ஏஜென்ட் என்று மனைவி சிம்ரனிடம் பொய் சொல்லும் பசுபதி, பார்க்கும் தொழிலோ கால் டாக்சி ஓட்டுகிற டிரைவர் வேலை. சவாரிக்கு வரும் அஜ்மல், 'வேகமா போ வேகமா போ' என்று துரத்த, ஆக்சிலேட்டர்.... சிக்னல்... ஆக்சிடென்ட்! தன்னை காப்பாற்ற வேண்டிய பயணி கூச்சல் குழப்பத்துக்கு நடுவே காணாமல் போக, கம்பி எண்ணுகிறார் ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
மைக்கேல் ஜாக்சனின் நடனங்களில் மிகவும் பிரபலமானது மூன் வாக் நடனம். இந்த நடனத்தின் சில அசைவுகளை உலகில் உள்ள எல்லா நடனக்கலைஞர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். அப்படிப்பட்ட மூன்வாக் நடனத்தை சோனாக்ஷி சின்ஹா ஒரு பாலிவுட் படத்தில் ஆட இருக்கின்றார். அஜய்தேவ்கான், தமன்னா ஜோடியில் பாலிவுட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கபப்ட்டுவரும் ஹிம்மத்வாலா என்ற இந்திப்படத்தில்தான் இந்த மூன்வாக் நடனத்தை ஆட இருக்கின்றார் சோனாக்ஷி சின்ஹா. இந்த நடனம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என பேசப்படுகிறது. தமன்னா படம் முழுவதும் காட்டப்போகும் கவர்ச்சியை சோனாக்ஷி இந்த பாடலில் காட்டி பெயர் தட்டிச்செல்லும் நிலை இருப்பதால்,தமன்னா அதிர்ச்சியில் உள்ளார். இயக்குனரிடம் அவராகவே வலிய சென்று த…
-
- 0 replies
- 800 views
-
-
கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை. -நரசிம்மன், சென்னை. கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது. கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் சித்தரித்துள்ளனர். உழைக்கும் மக்களைப் பற்றி படம் எடுப்பவர்கள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையை, வாழ்க்கை முறையை இரண்டு கதாபாத்திரங்களுக்குள் சுருக்கி, அதற்குள் தங்களின் விருப்பு, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கதை சொல்லி முடித்துவிடுகிறார்கள். அதனால்தான் மக்களின் …
-
- 0 replies
- 571 views
-
-
இம்சை அரசன், இரும்புக்கோட்டையில் முரட்டு சிங்கம் என தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு வீறு நடை போட்ட டைரக்டர் சிம்பு தேவனுக்கு கோடம்பாக்கத்து மார்க்கெட்டில் இது கடையடைப்பு நேரம்! மீண்டும் வடிவேலுவை வைத்து அவர் இயக்க நினைத்தாலும் புயலின் கதவு மூடியே கிடப்பதால் வேறு யார் யாரையோ சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. இவரிடம் சிஷ்யனாக பணியாற்றிய டைரக்டர் பாண்டிராஜே 'நான் உங்களுக்கு வாய்ப்பு தர்றேன். என் தயாரிப்பில் நீங்க படம் இயக்குங்க' என்றாராம். ஆனால் ஹீரோ கிடைக்க வேண்டுமே! அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் சிவகார்த்திகேயனை அழைத்த பாண்டி, 'சிம்புதேவன் படத்துல நடிச்சுக் கொடுங்க. நான்தான் தயாரிக்கிறேன்' என்று சொல்ல முள்ளு கரண்டிய…
-
- 0 replies
- 784 views
-
-
* எம்.ஜி.ஆர். பிறந்தது இலங்கை கண்டியில். அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். * எம்.ஜி.ஆரை 'ராமு' என்றுதான் அவரது தாயார் அழைப்பார். * அவர் நடித்த மொத்த படங்கள்-136. இயக்கிய படங்கள்-3. முதன் முதலாக வாங்கிய சம்பளம் ரூ.100 * 'குலேபகாவலி' படத்தில் 'டூப்' போடாமல் புலியுடன் சண்டை போட்டார். * எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்பட 5 பேர்கள் இணைந்து தொடங்கியதே 'மேகலா பிக்சர்ஸ்' பட நிறுவனம். * முதன் முதலில் எம்.ஜி.ஆர். வகித்த பதவி- மாநில அரசின் சிறுசேமிப்புத்துறைத் துணைத்தலைவர் பதவி. * என்.எஸ்.கிருஷ்ணன், கண்ணாம்பா என பலரின் வீடுகளை ஏலத்திலிருந்து மீட்டுக் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். * பொங்கல் தவிர எந்தப் பண்டிகையையும் எம்.ஜி.ஆர். பிரதானமாகக் கொண்டாட மாட்ட…
-
- 0 replies
- 966 views
-
-
கணேஷின் முட்டைக் கணக்கு, விஜய்யின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive “பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேடி வாங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2' படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கின்றேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் சார் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்கு போகணும்’ என்று அழுதுகொண்டு இருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாக போய்க்கொண்டு இருக்கிறது. …
-
- 0 replies
- 555 views
-