வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நாட்டியத்திலிருந்து கோட்டை வரை பா. ஜீவசுந்தரி அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் வ…
-
- 0 replies
- 667 views
-
-
அண்மையில் வெளியான விஜய் - அசின் நடிப்பிலான காவலன் படத்தின் இடைவேளைக்கு முன்னான ஒரு காட்சியில் விஜன் சண்டை போட்டு எதிரிகளை அடித்து விழுத்த அசின் வசனம் பேசுவாராம்.. 'காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம்"...என்று இதை பார்த்தவர்கள் சிலர் சொல்லிக் கொண்டார்கள். காட்டில் உள்ளவைக்குத்தான் வன்முறை.. நாட்டில் உள்ளவையோடு சமாதானம் என்றால்... இதன் தொனிப் பொருள் என்ன.. ராஜபக்சவோடு விருந்துண்டு வந்தததன் தத்துவமா..??!
-
- 0 replies
- 786 views
-
-
தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம் கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஜனவரி 2023 'தொட்டி மீன்கள்' எனும் குறுந்திரைப்படம் - எல்லைகள் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனங்களையும் ஈர்த்திருக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் படத்தை நடராஜா மணிவாணன் இயக்கியிருக்கிறார். தேசியளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'தொட்டி மீன்கள்', 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா' உள்ளிட்ட பல தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மணிவாணன் - ஆரம்பத்தில் வானொலி ஊடகவியலாளராகப் பணியாற்றினார். அப்ப…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
பாலூட்டி வளர்த்த கிளியும் பஞ்சவர்ணக்கிளியும்... திரைப்படம் என்பது பல திறமையாளர்களின் கூட்டு முயற்சி என்பது தெரிந்ததே. அத்தகைய முயற்சியில், சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் முழுமையான உழைப்பை ஒரு தவ நிலை அர்ப்பணிப்போடு அளிக்கும்போது அது சரித்திரத்தின் ஒரு பக்கமாகின்றது. 1973ல் வெளி வந்த ‘கௌரவம்’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உச்சகட்ட திறமையை வெளிக்கொணர்ந்த படங்களில் ஒன்று. வியட்நாம் வீடு சுந்தரம் மிக நேர்த்தியாக திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் ‘கெளரவம்’. ஒரே படத்தில் எத்தனை வேடங்கள் போட்டாலும் தன் முகபாவனை, உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மலையளவு வித்தியாசம் காட்டும் …
-
- 0 replies
- 686 views
-
-
மும்பை: பாலிவுட் உலகின் புதிய வரவான "பிகே" திரைப்படம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 150 கோடியை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு பகுதியில் மட்டும் "லிங்கா" திரைப்படத்துடன் போட்டி போட இயலாமல் தவித்து வருகின்றது. அந்த நாடு "மலேசியா". மலேசியாவில் முதல் வாரத்தில் இப்படம் வெறும் 8 லட்சத்தினை மட்டுமே குவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் மலேசியாவில் "பிகே" திரைப்படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். ஆனால், பிகேவால் லிங்கா திரைப்படத்தினை மீறி திரையில் ஜொலிக்க முடியவில்லை. முதல்வாரத்திலேயே லிங்கா திரைப்படம் 2.26 கோடி வசூலைக் குவித்தது. மலேசியாவில் அதிக அளவில் இருக்கும் தமிழ் மக்களால் தமிழ்…
-
- 0 replies
- 716 views
-
-
இப்போதுள்ள நடிகைகள் ஆடைகளை குறைத்து ஆபாசமாகவும், அருவருப்பாகவும் நடித்து சினிமாவின் தரத்தை குலைத்துவிட்டனர் என்று சோனாலி பிந்த்ரே ஆதங்கப்படுகிறார். பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகரும், இயக்குநருமான கோல்டிபெல்லை திருமணம் செய்த பின்னர், சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இருந்தும் டி.வி., நிகழ்ச்சிகளில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் சோனாலி பிந்த்ரேயை மீண்டும் சினிமாவில் நடிக்க சொல்லி சிலர் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். இதுபற்றி சோனாலி பிந்த்ரே கூறும்போது, சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால்…
-
- 0 replies
- 917 views
-
-
'ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கொரிய நாடகமான ஸ்க்விட் கேம் 2021-இல் வெளியிடப்பட்டபோது உலகளவில் பேசப்பட்டது எழுதியவர், ஜீன் மெக்கென்சி பதவி, சோல் செய்தியாளர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, "ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்," என…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
இந்த காணொளியில்.. ஒரு இடத்தில் இராமனின் பின் அணிவகுத்து போருக்குச் செல்லும் வானர வீரர்கள்.. "இந்தியா ஜெயிக்க" என்று கத்திச் செல்கின்றனர். இந்தியா என்ற சொல்லே.. பிரித்தானிய காலனித்துவத்தோடு பிறந்த சொல். அது எப்படி இராமாயண இதிகாச சொல்லாக இந்தக் காணொளிக்குள் புகுத்தப்பட்டது..???! இப்படித்தான்.. இலங்காபுரியை ஆண்ட செல்வச் செழிப்பும்.. தொழில்நுட்ப.. அறிவியல்... அறிவும் மிக்க.. தமிழ் மன்னனான இராவணனின் வளர்ச்சியை சிதைக்க.. அவனை.. கெட்டவனாகக் காட்டிய.. வட இந்திய ஆளும் வர்க்கம்.. அவன் இராச்சியத்தை அழிக்க.. ஒரு பெண்ணை மையமாக வைத்து அவனை ஒரு பயங்கரவாதியாக்கி போர் செய்து.. சிதைத்தனர். தங்களின் இந்த பயங்கரவாதச் செயலுக்கு தர்மம் என்று பெயரிட்டு அதனை மக்கள் மனங்களில் நியாயம் என…
-
- 0 replies
- 656 views
-
-
2015 வருடத்தின் தெறி ஹிட் 15 பாடல்கள் இந்த வருட தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் மட்டுமல்லாது பாடல்களும் வைரல் களத்தில் இறங்கியது. சிறந்த பாடல் என்பதையும் தாண்டி யு ட்யூப் வியூவ்ஸ், ஃபேஸ்புக் ஷேர்ஸ், ஆக்டிவ் நெட்டிசன்களின் ரிவ்யூ என பல இத்யாதிகளே ஒரு பாடலின் வெற்றியை முடிவு செய்தன. அப்படி 2015ம் வருடம் வைரல் ஹிட் லிஸ்ட்டில் வரும் முக்கியமான 15 பாடல்கள் இங்கே.. மெர்சலாயிட்டேன்: (படம்- ஐ) இந்த வருட தமிழ் சினிமாவின் முதல் வைரல் மெர்சலாயிட்டேன் சாங் ப்ரோமோ. ’ஐ’ படத்தில் ரஹ்மான் இசையில் அனிருத் பாடியதென்பது வேற லெவல் எதிர்பார்ப்பைக் கிளப்ப தியேட்டரில் பாட்டின் விஷுவல்ஸை பார்த்தவுடன் நம் அனைவரின் கண்களிலும் இதயம் பூத்து குலுங்கியது…
-
- 0 replies
- 565 views
-
-
லேட்டஸ்ட் மேக்ஸிம் பரபரப்பாக மாறியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. வர வர மேக்ஸிம் இதழில் அரைகுறை போஸ் கொடுப்பதற்கு பாலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டு வருகிறது. லேட்டஸ்டாக புது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. இவர் கொடுத்துள்ள பிகினி உடை போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுத்தது தனக்கு எந்த வகையிலும் அவுசகரியமாக இல்லை என்று கூலாக கூறியுள்ளார் ஷ்வேதா. சோனி டிவியில் ஒளிபரப்பான ஜலக் திக்லா ஜா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ஷ்வேதா சால்வே. அந்த ஷோவில், ஷ்வேதாவின் கவர்ச்சிகரமான ஆட்டம் இந்தி ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்தியத் தொலைக்காட்சியின் செக்ஸ் சைரன் என்ற பெயரும் ஷ்வ…
-
- 0 replies
- 932 views
-
-
திரை விமர்சனம்: கவலை வேண்டாம் காதல் திருமணம் செய்து கொள்ளும் ஜீவா - காஜல் அகர்வால் ஜோடி, திருமணத்தன்றே பிரிந்து விடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து பாபி சிம்ஹாவைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் காஜல். இதற் கிடையில் சுனைனா, ஜீவா வைக் காதலிக்கிறார். இவர்களது வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே ‘கவலை வேண்டாம்'. திரைக்கதையைப் பற்றிக் கவலையே வேண்டாம் என்று இயக்குநர் டீகே முடிவுசெய்து விட்டார். மலினமான காமெ டியை அடுத்தடுத்து அரங்கேற்றி னால் போதும் என்ற முடி வுக்கு வந்துவிட்டார். திரைக் கதை, ரசிக்கும்படியான காட்சி கள், கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள், பாத்திர வார்ப…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், கேயார், டி.சிவா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆக…
-
- 0 replies
- 241 views
-
-
கிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்! கிழக்கே போகும் ரயில் - கே.பாக்யராஜ் ஒரு படத்தில் டைட்டில் என்று படத்தில் உழைத்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் போடுவார்கள். ஒரே படத்தில், டைட்டிலில், நான்கு இடங்களில் பெயர்கள் வரும் அதிசயம், ஆச்சரியம் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைகளை நிகழ்த்தியவர்... திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஒருவகையில், கே.பாக்யராஜுக்கும் இதுவே முதல்படம். ஆமாம்... பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே. மிகப்பிரமாண்டமான …
-
- 0 replies
- 657 views
-
-
முள்வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம்போல் ஆனேனே,அன்பே உன் அன்பில் நானும் தனி நாடாகிக் போவேனே இது அண்மையில் வெளியாகின விக்ரமின் ராஜ பாட்டை படத்திலுள்ள ஒரு பாடலின் ஒரு வரி..இந்த வரிக்கு ஈழத்தமிழர்களிடமிருந்து சில எதிர்ப்பு குரல்கள் எழுந்தன ...அதற்க்கு அப்பாடல் ஆசிரியர் யுக பாரதி தனது வலைப்பூவில் பதிலளித்துள்ளார் இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜபாட்டை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.விழா முடிந்த ஓரிரு தினங்களுக்கு உள்ளாகவே சமூக வலைதளங்களின் மூலம் அப்பாடல்கள் சிலாகிக்கப்பட்டன.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு ஆறுதலாக இருக்கும் தமிழ்த் திரையிசை பாடலுக்கு இத்தனை வரவேற்புக் கிட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.அப்பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடலாகப் பனியே பனிப்பூவே ப…
-
- 0 replies
- 840 views
-
-
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கதகளி’ : - பொங்கலன்று வெளியாகிறது! [Sunday 2016-01-03 00:00] பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதகளி’. பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷால் மாஸ் ஹீரோ இமேஜை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரமாக நடித்துள்ளாராம். அதுவும், இப்படத்தில் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பாடல்களை, கதைக்கு ஒத்துவரவில்லை என்று விஷாலே எடுக்க சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு இப்படம் ஒரு நாவலைப் போல அமைந்துள்ளதாக கூறினார். கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா…
-
- 0 replies
- 981 views
-
-
திரை விமர்சனம்: பெங்களூர் நாட்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எ…
-
- 0 replies
- 349 views
-
-
பார்ட்டிக்குப் போவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறார் திரிஷா. தென்னிந்திய கனவு தேவதை என ரசிக, ரசிகையரால் பட்டம் சூட்டப்பட்டுள்ள திரிஷா, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜோடி படத்தில் சிம்ரனுடன், வந்த தோழியர் கூட்டத்தில் ஒருவராக இடம் பெற்றிருந்த திரிஷா, இன்று தென்னிந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவர். தற்போது கெளதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம், சர்வம், அபியும் நானும் என பிசியாக இருக்கிறார் திரிஷா. சமீபத்தில் திரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு தமிழை விட தெலுங்குதான் சிறப்பாக அமைந்துள்ளது. அங்குதான் எனது திறமைக்கேற்ற, கேரக்டருக்கேற்ற படங்கள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் நான் நடிப்பை ச…
-
- 0 replies
- 950 views
-
-
பாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு! சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் முடிச்சுப் போடுகிற கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்பதான படங்களும் நிறையவே உண்டு. இந்த இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு, ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு! அப்படியொரு வெற்றி, எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. படம் பார்க்கப் போய்விட்டு, ஹவுஸ்புல் போர்டு மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவந்தவர்களை வைத்து, ஒரு ஷோவே நடத்தலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இதுதான் நிலைமை. அதுவும் ஆறேழு தடவையாகவும் இருபது முப்பது தடவையாகவும் அறுபது எண்பது முறையாகவும் படத்தைப் பார்த்தவர்கள…
-
- 0 replies
- 488 views
-
-
கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு. சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். விருதுகள்... ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். செவாலியே... தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச…
-
- 0 replies
- 305 views
-
-
கடந்த 1993ம் ஆண்டில் வெளிவந்த மணிச்சித்திரத்தாளு என்ற படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர். தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை. ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படமும் சூப்பர்ஹிட் வெற்றிப்படமானது. இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார். கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ஷோபனா கௌரவ கதா…
-
- 0 replies
- 539 views
-
-
'''பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா... நான் ரொம்பக் கவலையா இருக்கேன்...’ என்றாள் என் மகள். எல்லாம் முடிந்து, அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். 'இந்தச் சின்னப்பிள்ளைக்கு யார் இதையெல்லாம் சொன்னது?’ என்ற அதிர்ச்சி. அவளை அள்ளித் தூக்கி, 'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பாப்பா. தாத்தா எங்கயும் போகல. அவரு நட்சத்திரமாகிட்டாருப்பா. வானத்துல நாம நட்சத்திரம் பார்ப்போம்ல. அப்படி தாத்தாவும் இப்ப ஸ்டாராகிட்டாருப்பா...’ என்று உடைந்துபோய் அழுதேன். அப்பனின் அழுகை புரியாமல், 'ப்பா... அழாதப்பா...’ என்று என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் பாலுத் தாத்தாவின் பேத்தி அகிலா (எ) பிரார்த்தனா. ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். 'அப்புக்குட்டி அப்புக்குட்டி’ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன். …
-
- 0 replies
- 687 views
-
-
இது சவாலான நேரம்: சமந்தா மின்னம்பலம்2022-04-18 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவர் நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' விரைவில் வெளிவர இருக்கிறது. தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். திருமணம் செய்து கொண்ட பின்னும் சமந்தா முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில்தான் இருக்கிறார். கணவருடன் பிரிவு அறிவித்த பின்னும் சமந்தாவின் சினிமா வாய்ப்புக்கள் குறையவில்லை. இருந்தபோதிலும் தன்னை எப்போதும் பொதுவெளியில் பரபரப்புக்குரிய நடிகையாக வைத்துக்கொள்ளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடை குறைப்பு செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிகமாகவ…
-
- 0 replies
- 299 views
-
-
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA
-
- 0 replies
- 617 views
-
-
லண்டன் பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகபட்ச வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பெற்றார். நம்மூர் விஜய், ரஜினி, அஜீத் ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான் ரூ.244.5 கோடி வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.அமிதாப்பச்சன் (ரூ.196.5 கோடி) 2 வது இடத்திலும், ஷாருகான் ( ரூ.202.4 கோடி) 3 வது இடத்திலும், தொடர்ந்து எம்.எஸ் தோணி (ரூ.141.8 கோடி), அக்சய் குமார், வீராத் கோலி, அமீர்கான், தீபிகா படுகோனே,ஹிருத்திக் ரோசன், சசின் தெண்டுல்கர் ஆகியோர…
-
- 0 replies
- 956 views
-
-
-
- 0 replies
- 490 views
-