வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் எனும் இளையராஜாவுக்கு இன்றோடு வயது 74. ஞானதேசிகன் என்றிருந்த இயற்பெயரை பள்ளியில் சேர்க்கும் போது ராஜைய்யாவாக்கினார் ராஜாவின் தந்தை. வீட்டுக்கு ராஜைய்யாவாக இருந்தாலும் ஊர்மக்களுக்கு ராசைய்யாவாக இருந்தார் சில காலம். 70 களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ரயிலேறியதும் ராஜையாவை அவரது இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர் ‘ராஜா’ மட்டும் போதுமென சுருக்கினார். தமிழ் சினிமாவில் முன்னதாக பிரபலமான இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா இருக்கும் போது மேலுமொரு ர…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: சிவகார்த்திகேயன் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தொலைக்காட்சியிலிருந்து திரையுலகில் நுழைந்து முன்னணிக் கதாநாயகனாக வென்ற பலர் வட இந்தியாவில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அப்படியொரு இடத்தைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 1985, பிப்ரவரி 17-ம் தேதி தாஸ்- ராஜி தம்பதிக்கு மகனாகச் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிறந்தவர். இவரது தந்தை சிறைத் துறையில் தலைமை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து தமிழக அரசின் தங்கப் பதக்கம் வென்றவர். தந்தையின் வேலை காரணமாகக் குடும்பம் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றது. அதில் ஒன்று திருச்சி. அங்கே பள்ளிப் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் 18 வயதில் …
-
- 0 replies
- 4k views
-
-
ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள் படத்தின் காப்புரிமைTWITTER Image captionடிவிட்டர் பதிவு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Image captionகோப்புப்படம் "THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் காப்புரிமைTWITTER Image c…
-
- 0 replies
- 1.3k views
-
-
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமா…
-
- 0 replies
- 907 views
-
-
"நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர் வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்…
-
- 1 reply
- 470 views
-
-
மீண்டும் நாயகியான நமீதா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நமீதா காட்டிய கவர்ச்சி, ஒருகட்டத்தில் இரசிகர்களுக்கு சலிப்புத்தட்டவே அவருக்கான திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. சில ஆண்டுகளாக காணாமல் போன நமீதா, கடந்த ஆண்டு “இளமை ஊஞ்சல்”, “புலிமுருகன்” திரைப்படங்களில் நடித்தாலும், இரண்டிலுமே அவர் ஹீரோயின் இல்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு “மியா” என்ற திகில் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மெத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். “மற்ற பேய் திரைப்படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே …
-
- 2 replies
- 690 views
-
-
காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல் மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும். மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை…
-
- 52 replies
- 32.6k views
-
-
சமந்தா, அமலாபோலவைவிட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 'அது' குறைவாம் தலைப்பை பார்த்து தாறுமாறா யோசிக்காதீங்க... வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் திரைப்படத்தில் முதலில் சமந்தா பின்னர் அமலாபோல் ஆகியோரும் ஒப்பந்தமாகியிருந்தனர். இந்த நிலையில், “வடசென்னை” திரைப்படத்துக்கு சமந்தாவுக்கு கோடி ரூபாய் சம்பளம் பேசியவர்கள், பின்னர் அமலாபோலுக்கு அதைவிட கொஞ்சம் குறைவாக பேசியதாகவும், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அதைவிட குறைவாக பேசியிருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி ஐஸ்வர்யா…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …
-
- 1 reply
- 459 views
-
-
demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம் .. இலங்கைத்தீவில் கடந்த முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஆவணப்படம். கான் (CANNE) உலகத் திரைப்பட விழாவில் .. கான் உலகத்திரைப்பட விழா demon in paradise படக்குழுவினருடன்
-
- 1 reply
- 570 views
-
-
சினிமா விமர்சனம்: பிருந்தாவனம் சிவகுமார் உலகநாதன்பிபிசி தமிழ் திரைப்படம் பிருந்தாவனம் நடிகர்கள் அருள்நிதி , விவேக், தான்யா, தலைவாசல் விஜய் , எம். எஸ். பாஸ்கர், மற்றும் பலர் இசை விஷால் சந்திரசேகர் இயக்கம் ராதா மோகன் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக படத்தில் தோன்றும் அருள்நிதி, அறிமுக காட்சியில் மெக்கானிக் ஷாப் விலாசம் கேட்டு வந்த ஒருவரிட…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்? - ‘தொண்டன்’ விமர்சனம் உயிரைக் காக்க நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உயிரை எடுக்க நினைக்கும் மந்திரியின் மகனுக்குமான நீதி-அநீதி போராட்டம்தான் ‘ தொண்டன் ’. ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட் (ஓட்டுநர்) சமுத்திரகனி. மந்திரி ஞானசம்பந்தனின் மகன் நமோ நாரயணன். நமோவின் அடியாட்கள் நடுரோட்டில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள். வெட்டுபட்டவரை நமோவின் அடியாட்களையும் மீறி தன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று காப்பாற்றுகிறார் கனி. ‘உயிரை காக்குறதுதான் என் தொழில். நாளைக்கு நீங்களே உயிருக்கு போராடிட்டு இருந்தாலும் இப்படித்தான் காப்பாத்தி இருப்பேன்’ என்கிறார் கனி. ஆனால் ந…
-
- 1 reply
- 594 views
-
-
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி? கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது? ஒரு கனவு முளைக்கும்போது அதைப் பத்திரப்படுத்தி, பாதுகாத்து, சரியான சமயத்தில் சிறகை மாட்டிப் பறக்கவிடவேண்டும். கனவுகளைச் சுமந்து சிறகை விரித்துப் பறப்பவன், உயரத்தைத் தீர்மானித்துக்கொள்வான். 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ட்ஸ்' திரைப்படம் சொல்வது, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக…
-
- 0 replies
- 718 views
-
-
The Last Halt | கடைசி தரிப்பிடம் | Sujeeth G | Siva Santhakumar | shathiesh படத்தை வாடகை முறையில் யூட்டியுப்பில் பார்க்கலாம். இயக்கினடுடைய செவ்வி... படம் நன்றாக உள்ளது, நீங்களும் பார்த்து கருத்துக்களை பகிரவும் !!!
-
- 1 reply
- 690 views
-
-
அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1 ஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா. ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந…
-
- 13 replies
- 5.1k views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: விஷால் 1. ஆகஸ்ட் 29-ம் தேதி 1977-ல் ஜி. கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி தம்பதியின் இரண்டாவது மகனாகச் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷால். சக மனிதர்கள், சக கலைஞர்கள் மீது பரிவும் மரியாதையும் கொண்டவர். விலங்குகள் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து வளர்த்துவந்த ஜூலி என்ற நாய் இறந்தபோது கதறி அழுதிருக்கிறார் விஷால். பிரபல நடிகராக ஆனது முதல் தனது பிறந்தநாளை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிவருகிறார். 2. விஷாலின் தந்தைக்கு கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முக்கியத் தொழில். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் தீவிர ரசிகர். சினிமா மீது அவருக்கு இருந்த ஈட…
-
- 0 replies
- 243 views
-
-
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani கவுண்டமணி - தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரம். 'சின்ராசு பாட ஆரம்பிச்சுட்டா குழந்தை அழுகுறதை நிறுத்திடும்' என ஒரு வசனம் வருமே. அதன் நிஜ வெர்ஷன் கவுண்டமணி. கல்லையே கரைத்துக் குடித்த சிடுமூஞ்சிக்காரர்களையும் லேசாக்கும் வித்தை இவருக்கு மட்டுமே சாத்தியம். 'மனசே சரியில்லை. யாராவது கவுண்டமணி காமெடி போடுங்கப்பா' என உச்ச நட்சத்திரம் சிவாஜி சொன்னது இதன் ஒரு சோறு பதம். இளையராஜாவோ இன்னும் ஒரு படி மேலே. ரீ-ரெக்காடிங்கின்போது வெடிச் சிரிப்போடு வெளியேறுவார். இப்படி சகலரையும் சிரிக்க வைத்த அந்த காமெடி அரசருக்கு இன்று பிறந்தநாள்! யோசித்துப் பார்த்தால் வாழ்த்துகளோடு எழுத அவ்வளவு விஷயங்கள் இருக்கின்ற…
-
- 2 replies
- 2.5k views
-
-
ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவு உள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள…
-
- 2 replies
- 595 views
-
-
இந்திய சினிமாவிலிருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்குபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே தான் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், அதன் புகைப்படங்கள் வெளிவந்தது வைரலாகியது. ஆனால், அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்டு வெளியே வராத ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. (வாசகர்கள் நன்மை கருதி படம் இணைக்கப்படவில்லை) http://www.cineulagam.com
-
- 12 replies
- 1.6k views
-
-
சமந்தாவின் திருமண திகதி அறிவிப்பு பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண திகதி குறித்த தகவல் கசிந்துள்ளது வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாசார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றுவரும் 70வது கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர்கள் ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி உள்ளிட்ட தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. படத்தின் காப்புரிமைSRI THENANDAL FILMS Image captionசங்கமித்ரா படக் குழுவினர் சர்வதேச அரங்குகளில், இந்திய திரைநட்சத்திரங்கள் என்றாலே பெரும்பாலும் ஐஸ்வரியா ராய், தீபிகா பாதுகோன்,சல்மான் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அறியப்பட்ட நிலையில், பிரபலமான தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் அடங்கிய பட…
-
- 0 replies
- 342 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…
-
- 0 replies
- 636 views
-
-
திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற படம் சங்கிலி புங்கிலி கதவத் தொற நடிகர்கள் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி, தேவதர்ஷினி, தம்பி ராமைய்யா, ராதாரவி, கோவை சரளா இசை விஷால் சந்திரசேகர் இயக்கம் ஐக் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரக…
-
- 1 reply
- 727 views
-
-
படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்படவே இல்லை.சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்க…
-
- 0 replies
- 219 views
-
-
தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்! இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கோங்கரா நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட இந்தியத் திரைத்துறையில் சில நூறு பெண் இயக்குநர்கள் கூட கிடையாது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திரைத்துறையில் நேரடியாக இயக்குநர் ஆகும் முயற்சிகள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அத்துறையில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். வெற்றி விகிதம் மிகக் குறைவாக உள்ள திரைப்பட இயக்குநர் என்கிற துறையில், ஆண் - பெண் பாகுபாடு இல்லாத நிலை உள்ளது என்ற…
-
- 0 replies
- 233 views
-