Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். இவருக்கு அசிஸ்டெண்டாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல். ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள். இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். இதில் நைனிகாவின் பெயரையும் இழுத்துவிடவே, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்து போட வ…

    • 20 replies
    • 2k views
  2. நடிகர்கள் ஜோக்கர்களாக தெரிந்தார்கள்... நடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் #சிம்பு அதிரடி நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்த நாள் முதல் சிம்புவும், அஜித்தும் நட்சத்திர கிரிக்கெட் சார்பாக அமைதி காத்ததும் மேலும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வருகை தராமல் இருந்ததும் என பல செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையில் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சங்கத்தை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவிப்புக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் ப…

  3. நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன் விவரம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கி…

  4. என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நமீதா சிறப்பு பேட்டி அதிரடி எடைக்குறைப்பு, அகோரி கதாபாத்திரம் என்று நமீதா பார்க்கவே புதிதாக இருக்கிறார். “கடந்துபோன நாட்களைப் பற்றிக் கவலையில்லை; இனி வரும் நாட்கள் எனக்கானவை” என அவர் இந்து தமிழுக்காக உற்சாகமாகப் பேசியதிலிருந்து ஒரு பகுதி எதற்காக இத்தனை அதிரடியாக உடல் எடையைக் குறைத்தீர்கள்? தமிழ் சினிமாவுக்கு நான் வந்தபோது மிகச் சரியான தோற்றத்தில் இருந்தேன். கடந்த 12 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் …

  5. இந்தி நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம் ; மும்பை மருத்துவமனையில் அனுமதி மும்பை: இந்தி திரை உலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மூச்சு திணறல் காரணமாக மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 93 வயதான திலீப்குமார் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவரது திரை சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது ( 2015 )ல் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் பத்மபூஷன் விருது ( 1991 ) , தாதாசாகேப் பால்கே விருது ( 1994 ), பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது (1997 ), உள்ளிட்ட ஏராளமான விருதுக…

  6. ஐஸ்வர்யா ராய்க்கு விருது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு (42) இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. தனது மகள் ஆராத்யாவுக்கு விருதை அர்ப்பணித்த ஐஸ்வர்யா ராய், ‘‘சர்வதேச மேடையில் இந்திய பெண்மணியாக பிரதி நிதித்துவம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நடிகையாகவும், சிறந்த பெண் மணியாகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள்…

  7. துப்பாக்கி மிலிட்டரியை ஓவர்டேக் செய்திருக்கிறதா 'தெறி' போலீஸ்..?! - தெறி விமர்சனம் #theri கேரளாவில் பேக்கரி நடத்திக்கொண்டு தன் மகள் நைனிகாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். நைனிகாவின் பள்ளி டீச்சரான எமி ஜாக்சன், ஒரு சின்ன விபத்தின்போது, இடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்துவிட, ’எந்தப் பிரச்னையும் வேண்டாம்’ என்று புகாரை வாபஸ் செய்ய விஜய் செல்ல, அங்கே விஜயைப் பார்க்கும் ஒரு ‘பேட்ச் மேட்’ மூலம் ’ஜோஸப் குருவிலா என்று தன்னை சொல்லிக் கொள்ளும் இவர் யார்?’ என்ற கேள்வி எமி ஜாக்சனுக்கு எழுகிறது. அதற்கான விடையை, கமர்ஷியல் ஐஸ்க்ரீமில், செண்டிமெண்ட் டாப்பிங் கலந்து தந்திருக்கும் படம்தான் ‘தெறி’ நடிப்பிலும் சரி அழகிலும் சரி விஜய்க்கு…

  8. வெள்ளை மாளிகையின் விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அழைக்கப்பட்டுள்ளார். பொலிவூட் நடிகையாகத் விளங்கிய பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ தொலைக்காட்சித் தொடர், மற்றும் பே வொட்ச் திரைப்படம் மூலம் அமெரிக்காவிலும் பிரபலமானவராகி விட்டார். கடந்த ஒஸ்கார் விருது வழங்கல் விழாவிலும் அவர் விருதொன்றை கையளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, திருமதி மிஷெல் ஒபாமா ஆகியோர் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்காக நடத்தும் வருடாந்த விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு பிரியங்கா சோப்ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹொலிவூட் நட்சத்திரங்களான பிரட்லி கூப்பர், லூசி லியூ, ஜேன் ஃபொன்டா, கிளாடிஸ் நைட் ஆ…

  9. “என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை பாரதிராஜா நிறுத்தவேண்டும்” என்று இயக்குநர் பாலா எச்சரித்துள்ளார். ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில் இயக்குநர் பாலா சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து பாரதிராஜா, ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க பூஜை போட்டிருக்கிறார். ஆனால் நான் வேலராமமூர்த்தி எழுதிய ‘கூட்டாஞ்சோறு’ நாவலில் இருக்கும் சில சம்பவங்களை எடுத்துக்கொண்டு மேலும் சில காட்சிகளைச் சேர்த்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன். நான் எடுக்க இருப்பது கதை. பாரதிராஜா எடுக்க இருப்பது வரலாறு. இரண்டுக்கும் சம்மந்தமில்லை. நான் எடுக்க…

    • 0 replies
    • 231 views
  10. விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு நடிகர் விஜய் நடித்த தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்…

  11. தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன. இந்நிலையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக ரகுமானின் வீட்டைச்சுற்றிலும், பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். http://www…

  12. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா காதல் ஒருகட்டத்தில் முறிந்துபோனது. காலப்போக்கில் இதை நாம் எல்லாம் மறந்துவிட்டாலும் பாதிக்கப்பட்ட பிரபுதேவா மறக்கவில்லை. அதை தன் சகாக்களிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது பிரபுதேவா தயாரிப்பில், இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு படத்தை தயாரிக்கிறார்.…

  13. “அஜக்குன்னா.. அஜக்குத்தான்” - கவிஞர்களின் ஸ்பெஷல் குறும்புகள்! சினிமா பாடல்களில் கவிஞர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டுவது ரசிகனைப் பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம். மறைபொருளாக சிலவற்றை வைத்திருப்பார்கள். அதில் வாலி, அடித்து ஆடுகிற கோஹ்லி மாதிரி. இளையராஜாவுக்கு எழுதுகிற பாடல்களில் சாமர்த்தியமாக ராஜாவைப் புகழ்ந்துவிடுவார். ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’ என்று நேரடியாகவும் சரி, ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்று மறைமுகவாகவும் சரி. இவற்றில் பல செவி வழிச் செய்திகள். சில உறுதிப்படுத்தப்பட்டவை. ஆனாலும் அவை தரும் சுவாரஸ்யமும், கவிஞர்களின் இயல்பும், ‘இவங்க நிச்சயம் இப்டி பண்ணீருபாங்க’ என்றே தோன்றுகிறது! கண்ணதாசன் காங்கிரசிலிர…

  14. பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டது.கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் இதுபோல் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாக 1 கோடியே 15 லட்சம் வரி ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியலில், இந்தியாவில் இருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும…

  15. நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா ? பரபரப்பு தகவல் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்போது மிகவும் பலமானவராக எல்லோருக்கும் முன் இருக்கும் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா சோப்ராவின்…

  16. நயன்தாரா மீது வீடு புகுந்து பாய்ந்த மர்ம நபர்கள் நடிகை நயன்தாராவின் வீட்டுக்குள் புகுந்து அவரை சிலர் கடுமையாகத் தாக்கி தப்பிச்சென்றுள்ளனர். இதுவரை காலமும் நட்சத்திர ஹோட்டல்களிலே தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு அருகே ஒரு வீடு வாங்கி குடியேறி அங்கே தங்கி வருகின்றார். சில தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி நயன்தாராவின் வீட்டிற்குல் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதால் அவருக்கு பலத்த காயங்களுக்குள்ளாகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின…

    • 5 replies
    • 837 views
  17. திரை விமர்சனம்: ஹலோ நான் பேய் பேசுறேன் நூதனமான முறைகளில் திருட்டுத் தொழில் செய்துவரும் அமுதன் (வைபவ்) கவிதாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) காதலிக்கிறார். ஐஸ்வர்யாவின் அண்ணன் விடிவி கணேஷ், குப்பத்தில் சாவுக் குத்து நடனம் கற்றுத்தருகிறார். குத்து நடனத்தில் தான் வைக்கும் சோதனையில் வென்றால்தான் தன் தங்கையை வைபவுக்குக் கல்யாணம் செய்து தருவேன் என்கிறார். சோதனையில் வென்று காதலுக்கு அனுமதி பெற்ற சந்தோஷத்தில் வளைய வரும் வைபவ், சாலையில் விழுந்து கிடக் கும் ஒரு செல்போனைத் திருடிக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அந்த செல்போனில் இருந்து பேய் (ஓவியா) கிளம்புகிறது. வைபவ், கணேஷ், ஐஸ்வர்யா ஆகியோர் பேயிடம் மாட்டிக்கொண்டு அல்லாடு கிறார்கள். பேய் ஐஸ்வர்…

  18. திரை விமர்சனம்: டார்லிங் 2 நண்பனின் துரோகத்தால் தான் தங்களது காதல் தோற்றது என்று கருதும் காதல் ஜோடி ஆவியாக வந்து நண்பனைப் பழிவாங்கத் துடிப்பதே ‘டார்லிங் 2’. ஒரு பெண்ணுக்குப் பேய் பிடிப்பது போன்ற திகில் காட்சியுடன் தொடங்கு கிறது படம். அடுத்த காட்சியில் தற்கொலை. அடுத்து, கலையரசன், காளி, ஹரி (மெட்ராஸ் ஜானி), அர்ஜுன், ரமீஸ், ஆகிய நண்பர்கள் வால்பாறைக்குச் சுற்றுலா போகிறார் கள். வால்பாறையில் ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்கள். நண் பர்கள் ஒவ்வொருவராக ‘காட்டு காட்டு’ என்று காட்டுகிறது ஆவி. ஒரு கட்டத்தில் கலையரசனின் உடலில் புகுந்துகொள்ளும் ராமின் ஆவி, கலையரசனைக் கொல்லப்போவ தாக மிரட்டுகிறது. ஆவிக்கு ஏன் கலையரசன் மீது கோபம்? கலையரசனால் ஆவ…

  19. காதல் தோல்வியால் நடிகை தற்கொலை:மும்பையில் சோகம் மும்பை: காதல் தோல்வியால் விரக்தி அடைந்த மும்பை நடிகை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா பானர்ஜி. 24 வயதான இவர், ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரதியுஷா நேற்று (வெள்ளி) இரவு 7 மணியளவில் திடீரென அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதியுஷா பானர்ஜி குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை …

  20. குயில்களின் சொந்தக்காரி மப்றூக் இந்திய பின்னணிப்பாடகி பி.சுசீலா ஒரு தடவை தெலுங்குத் திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து இசையமைக்க, பாடலைப் பாடகர் முழுமையாகப் பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுவே அப்போதிருந்த முறைமையாகும். சுசீலாவைப் பாட வைக்கும் இசையமைப்பாளர் வந்திருந்தார். பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சுசீலா பாடப்போகும் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் என்று அனைவரும் ஒலிப்பதிவு செய்யுமிடத்தில் கூடியிருந்தனர். இசையமைப்பாளர்…

  21. பிரபலமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. அதிலும் ரஜினி படம் வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமகவே கொண்டாடுவார்கள். தங்கள் விருப்பமான நடிகர்களை தெய்வமாகவும் அவர்களது படத்திற்கு அபிஷேகங்கள் செய்வதும் ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. இப்படி ரஜினி ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தது ரஜினிக்கு எதிராக திரும்பி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் பெங்களூர் மேயோ ஹால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், ரஜினி ரசிகர்கள் கட்-அவுட், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்க…

  22. Posted on March 20, 2016 by Diraviam in விமர்சனம் மேடையேறிப் பேசுகிறார் என்றால் அவர் நினைக்கிறபோது மொத்தக்கூட்டமும் சிரிக்கும், அழும், மனதில் கொந்தளிப்போடு திரும்பிச் செல்லும். ‘ராமய்யாவின் குடிசை’, ‘என்று தணியும்’ ஆகிய ஆவணப்படவுலகின் இரண்டு முக்கிய பதிவுகளை ஆக்கியவரான பாரதி கிருஷ்ணகுமார் இப்போது வழங்கியுள்ள முழுநீளத் திரைப்படம் இது. மேடையில் அவரது உயரத்திற்கு ஒலிவாங்கி நிலைக்காலை சரிப்படுத்துவதற்கு சிறிது நேரமாகும். திரையுலகில் சொல்ல நினைத்த கதையைப் படமாக்குவதற்கு இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று போலும். இந்தியச் சமுதாயத்தில் மனிதத்துவ மாண்புகளை எரித்திடும் சாதியக் கொடுநெருப்பு எப்போது அணையும் என்ற கேள்வியை எழுப்புவதே படத்தின் இலக்கு. இக்கேள்விய…

  23. பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு 2016 ஜனவரி 28-ல் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 1952-ல் திரைவாழ்வைத் தொடங்கிய பி.சுசீலா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் ஜோடிப் பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியுள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyDRdSXlp5E.html

  24. விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார்.இந்த நிலையில் விஷாலுக்கு யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.அதில் திரு. விஷால் எங்களை பகைத்தால் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டுள்ளனர். இது யார் செய்த செயல் என்று தெரியவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=154383&category=EntertainmentNews&language=tamil

  25. தேசிய திரைப்பட விருதுகள்: பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு! புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சிறந்த திரைப்படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. 63வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்கான விருதை பாகுபலி திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. மேலும், இன்று அறிவிக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு சஞ்சய் லீனா பன்சாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப் …

    • 2 replies
    • 548 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.