வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்! பிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுயுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம். தெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குழந்த…
-
- 7 replies
- 2.1k views
-
-
ஈழத்தில் நடந்த உண்மையை எடுத்து சொல்லும் யாழ் படம்: - பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளியீடு! [Saturday 2016-01-23 21:00] புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் யாழ்.பல தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கிய படம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வருகிற பிப்ரவரி மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.மேலும் இப்படத்தில் நடிகர் வினோத் கிஷ்ணன், மிஷா மற்றும் பாலுமகேந்திராவால் பெரிதும் பாராட்டப்பட்ட சஷி நடித்துள்ளார். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய திரைப்படமாக வந்துள்ளது, இதில் இடம் பெற்றுள்ள சிவாய நம பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப…
-
- 0 replies
- 324 views
-
-
ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?! ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர், சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா. அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெ…
-
- 0 replies
- 375 views
-
-
தன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..!! எல்லோருக்கும் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும். வரலாற்றில் நம் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் சிறு தோல்வி ஏற்பட்டாலே நாம் முடங்கி போய் விடுகிறோம். ஆனால் விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த ஒன்றாலும் நம்மை தோற்கடிக்க முடியாது. நம்மால் சாதிக்க முடியும் என்பதை நம் மனதுக்குள் விதைக்கிற உணமைக் கதையை அடிப்படையாக வைத்த படங்கள் இதோ உங்களுக்காக. 1. தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் ஒரு காலத்தில் சாப்பிட உணவில்லாமல், தங்குவதற்கு வீடு இல்லாமல் ரயிலிலும், லிப்ட்டிலும், என கிடைக்கும் இடத்தில் எல்லாம் தங்கி, விடா முயற்சியுடன் வாழ்க்கையோடு போராடி இன்றைக்கு பல மில்லியன் டால…
-
- 1 reply
- 558 views
-
-
ஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு 73-வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர…
-
- 2 replies
- 505 views
-
-
நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…
-
- 6 replies
- 470 views
-
-
கதகளி - திரை விமர்சனம் இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் விஷால், கேத்ரீன் தெரசா நடித்திருக்கும் ‘ஆக்ஷன் - த்ரில்லர்’ திரைப்படம் ‘கதகளி’. கடலூர் தாதா தம்பாவுடன் (மது சூதன் ராவ்) ஏற்படும் பிரச்சினையால் ஊரைவிட்டுச் செல்கிறான் அமுதன் (விஷால்). அதற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு, தன் காதல் திருமணத் துக்காக ஊருக்குத் திரும்பிவரு கிறான். அமுதனின் காதலி மீனுக்குட்டி (கேத்ரீன் தெரசா). திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது தாதா தம்பாவை யாரோ கொன்று விடுகிறார்கள். அந்தக் கொலைப் பழி அமுதன் மீது விழுகிறது. திருமண வேலைக்காகச் சென்னைக்குச் சென்றிருக்கும் அமுதனைக் காவல் துறை உடனடியாகக் கடலூருக்கு வர…
-
- 0 replies
- 755 views
-
-
கெத்து - திரை விமர்சனம் இயற்கை எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார். குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடு…
-
- 0 replies
- 448 views
-
-
தாரை தப்பட்டை - திரை விமர்சனம் சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) பிரபலமான இசைக் கலைஞர். இவருடைய மகன் சன்னாசி (சசிகுமார்), தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் பிரதான நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). சூறாவளிக்கு சன்னாசி மீது தீராக் காதல். சன்னாசிக் கும் சூறாவளி என்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் வெளிக்காட்டுவ தில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சூறாவளிக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைக்கிறது. அவளுடைய ஆட்டத்தைத் தொடர்ச்சியாகக் காணும் அரசாங்க ஊழியர் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) சூறாவளியை மணமுடிக்க விரும்புகிறார். “ஆயுளுக்கும் ஆட்டக்காரியாக அவள் அவதிப்பட வேண்டாம் நிம்மதியாக வாழட்டும்” என நினைக்கும் சன்னாசி, தனது காதலைத் தியாகம் செய்கிறான். திருமணத்த…
-
- 1 reply
- 642 views
-
-
பூலோகம் திரை விமர்சனம் [ Friday, 8 January 2016 ,09:00:44 ] நடிகர் : ஜெயம் ரவி நடிகை : திரிஷா இயக்குனர் : கல்யாண கிருஷ்ணன் இசை : ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு : சதீஷ் குமார் சென்னையில் 1948ல் இருந்து இரண்டு பகுதிகளுக்கு இடையே குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் குத்துச் சண்டையில் போட்டியிருக்கிறார். இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய குத்துச் சண்டை வீரனாகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார். இந்நிலையில், தொலைக்காட்சி ந…
-
- 0 replies
- 449 views
-
-
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். 'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம். 'தாரை தப்பட்டை' படம் எப்படி? சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார…
-
- 0 replies
- 720 views
-
-
ரஜினிமுருகன் எதை காப்பாற்றுகிறான் தெரியுமா? ரஜினிமுருகன் விமர்சனம்! மதுரைக்காரங்க வெட்டு குத்து கொலை என்று அலைந்துகொண்டேயிருக்கிறவர்கள் என்கிற தமிழ்த்திரையுலகின் கற்பிதத்தை உடைக்க வேண்டுமென்பதற்காகவே சிரிக்கச் சிரிக்கப் படமெடுத்து அதில் சிந்திக்க வைக்கும் சில விசயங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். எல்லாப்படங்களிலும் பிறக்கிற குழந்தைக்கு அப்பா அம்மா பேர் வைப்பார்கள் என்றால் இந்தப்படத்தில் தீவிர ரஜினிரசிகரான அப்பாவின் நண்பர் கதாநாயகனுக்கு ரஜினிமுருகன் என்று பெயர் வைக்கிறார். நாயகன் சிவகார்த்திகேயனின் அப்பா பள்ளித்தலைமையாசிரியர், அம்மா அதே பள்ளியில் ஆசிரியர், அவருடைய அண்ணன்கள் இருவர், ஒருவர் மென்பொருள்துறையிலும் இன்னொருவர் இராணுவத்தில…
-
- 25 replies
- 4.6k views
-
-
சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு ‘மயங்குகிறாள் ஒரு மாது’ பட வெற்றி விழாவின்போது கண்ணதாசனிடம் விருது பெறும் எஸ்பி. முத்துராமன். நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்… என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்ல…
-
- 109 replies
- 32.6k views
-
-
தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவில் ஏகபோக கதை களங்கள். அண்ணன் தங்கை பாசம், காதல், தாய் தந்தை பாசம், தோழமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம். இப்படி உயிர் கொடுத்த படத்தை வெளியிடுவது தான் இங்கே மிக மிக சிரமம். எந்த நேரம் யார் மனுவுடன் நீதிமன்ற வாசலில் நிற்பார்களோ என தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம். 2000 வரை கூட வெகு ஜன மக்கள் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாகவே பார்த்தனர் தமிழக மக்கள். 2000-க்கு பிறகு மக்கள் திரைப்படங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர். அதற்கு பிறகுதான் தொடங்கியது தலைவலி. எதை எடுத்தாலும் குற்…
-
- 0 replies
- 649 views
-
-
திருமணத்திற்கு தயாராகும் அசின்! [Monday 2016-01-11 22:00] மலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23–ந்தேதி திருமணம் நடக்கிறது. டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு விழா என்று திட்டமிட்டு உள்ள அசின் திருமண ஏற்பாடுகளை தனது வருங்கால கணவர் ராகுல் சர்மாவுடன் இணைந்து தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அசினுக்கு காதலர் ராகுல்சர்மா ரூ.6 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு ‘‘எங்கள் திருமணத்துக்காக உங்கள் 3 நாட்களை சேமித்து வையுங்கள்’’ என்ற பொருள்…
-
- 1 reply
- 432 views
-
-
தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்ஷன் மாஸ்டர்ஸ்! கார்த்தி, விஷால், ஆர்யா ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது! ‘ஜெயம்’ ரவி அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ எ…
-
- 0 replies
- 771 views
-
-
ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்கள் -முழு பட்டியல் ஆஸ்கருக்கு இணையான மற்றும் ஆஸ்கார் விருதிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. 73வது கோல்டன் க்ளோப் விருது சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகனான லியனார்டோ டிகாப்ரிகோ 2015ல் வெளியான ரெவனண்ட் படத்திற்காகப் பெற்றார். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது. சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான விருதினையும் தட்…
-
- 1 reply
- 762 views
-
-
பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …
-
- 0 replies
- 760 views
-
-
உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம், இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடல் இயற்றும் தன்மை, பாடகராகவே உருவாகிய விதம், இசைக்கருவிகள் கையாளும் வல்லமையென எல்லாதுறைகளிலும் இளையராஜாவின் பெரும்பங்கை சுட்டிக்காட்டிருக்கின்றது. சக தமிழனாக, இசைரசிகனாக இசைஞானி இளையராஜாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரின் சமகாலத்தில் வாழும் மனிதன் என்பதும் கூடுதல் சிறப்பே. …
-
- 0 replies
- 344 views
-
-
அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் 'ஏ.பி.சி' என்ற சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சி தொடரில் புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடருக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா வழங்கும் சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'பீயுப்பிள் சாய்ஸ்' எனப்படும் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகைகளான எம்மா…
-
- 0 replies
- 332 views
-
-
மோடியை சந்தித்த பின்னர் அரசியலில் நுழைகிறார் அஜித்? Published by Rasmila on 2016-01-08 09:19:33 நடிகர் அஜித் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் அரசியலில் களமிறங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். தற்போதைய சூழ்நிலையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அஜித் விரைவில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்ந…
-
- 0 replies
- 429 views
-
-
இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது. நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா? http://www.seithy.com/breifNews.php?newsID=148808&ca…
-
- 2 replies
- 578 views
-
-
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…
-
- 0 replies
- 361 views
-
-
இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…
-
- 2 replies
- 3.7k views
-
-
சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை » காலை 10.30 மணி Eksik|Eksik Dir.: Baris Atay Turkey |2015|110’ 1981ல் இருந்து 1984 வரை நடந்த இராணுவப் புரட்சியிலிருந்து கதை துவங்குகிறது. அப்போது புரட்சியாளர்கள் பலர் வேட்டையாடப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் மேலேக்கின் கணவன் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுகிறான். குழந்தை பெற்றவுடனேயே தனது மாமனாரால் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். அவளது மூத்த மகன் டெனிஸை மாமனார் தன்னிடம் வைத்துக் கொள்கிறார். 30 வருடங்கள் கழித்து தனித…
-
- 18 replies
- 2.2k views
-