Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத் சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன…

  2. 'மருதநாயகம்' படத்தை தயாரிக்கிறதா லைக்கா நிறுவனம்? ஐங்கரன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் 'மருதநாயகம்' போஸ்டர் 'மருதநாயகம்' படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்' நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்…

  3. கமல், மம்மூட்டியைவிட மோடி மிகச்சிறந்த நடிகர்... சான்றளிக்கும் குஷ்பு!09:10 (17/12/2015) கோழிக்கோடு: கமல், மம்மூட்டியைவிட, பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நடிகர் என்று சான்றளித்துள்ளார் நடிகை குஷ்பு.கேரள மாணவர் யூனியன் சார்பில் கோழிக்கோட்டில் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசும்போது, ''மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர். கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மோடியின் நடிப்பில் தோல்வி அடைந்து விடுவார்கள்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்…

  4. திரை விமர்சனம்: ஈட்டி உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் ‘ஈட்டி’. புகழேந்தி (அதர்வா) தஞ்சாவூரில் கல்லூரி மாணவர். தடை ஓட்ட வீரரான அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தயாராகிவருகிறார். அவருக்கு ரத்த உறைவின்மை நோய் இருப்பது சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. மகனின் உடலில் சிறு காயம்கூடப் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார், காவல் துறையில் வேலைபார்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ். இதற்கிடையில், சென்னையில் படித்துவரும் நாயகி காயத்ரி (ஸ்ரீதிவ்யா) யாரையோ திட்டுவதற்குப் பதில் தவறுதல…

  5. ‘‘எல்லோரையும் சிரிக்கவைத்த என்னால் ஏனோ சிரிக்க முடியவில்லை அது இறைவனுக்கும் பிடிக்கவில்லை எல்லோரையும் சிரிக்கவைத்தே பழக்கப்பட்டவன் நான் என் சோகத்தை யாரிடமும் சொல்ல விருப்பமில்லை ஆண்டவனுக்கே கேட்க நேரமில்லை இனி யாரிடம் சொல்லி அழ? பிரச்சினைகளை என் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியவில்லை என் உயிரை பிரித்துக் கொள்கிறேன். அன்பு ரசிகர்களே! வேறு ஒருவன் வருவான் உங்களை சிரிக்க வைக்க அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் நான் விடைபெறுகிறேன்...’’ உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், உயிரைவிடும் முன்பு எழுதிய கடைசி கடிதம் இது. இவர் திறமை மிகுந்த ஆலிவுட் நடிகர். உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த நடிகரால், சிரித்து மகிழ்ச்சியாக வாழமுடியவில்லை. பிரச்சினைக…

  6. அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா தமிழ்த் திரை­யி­சை­ய­மைப்­பா­ளர்கள் பலர் இருந்­தார்கள்; இருக்­கி­றார்கள்; இருப்­பார்கள். இவர்­களில் பலர் வந்­தார்கள்; போனார்கள். ஆனால், இந்த இசை­ய­மைப்­பா­ளர்­களில் தமிழ்த் திரை­யி­சையின் தற்­போ­தைய வளர்ச்­சிக்­கான முன்­னோ­டிகள் யாரெனக் கேட்டால் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாறு­பட்ட கருத்து இருக்­கலாம். எனது சிற்­ற­றி­வுக்குப் புரிந்­த­வரை இந்த முன்­னோ­டி­களின் அத்­தி­யாயம் ஜீ.ராம­னா­தனில் இருந்து ஆரம்­பிக்­கி­றது. அதற்கு அடுத்­தவர் கே.வி. மகா­தேவன் என்­பதே என் கருத்து. இவ­ருக்கு அடுத்து வந்­த­வர்­களே மெல்­லிசை மன்­னர்கள். கே.வி. மகா­தே­வனை அன்­பாக மாமா என்றே அப்­போது எல்­லோரும் அழைப்­பார்கள் என்று பல வரு­டங்­க­ளுக்…

  7. நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார். அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும். ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார் அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள…

  8. ஆசியாவின் டாப் 10 அழகிகள் இவர்கள்தான் . அழகு இருக்கும் இடத்தில் புகழும், பாராட்டும் தானே வந்து சேரும் என்பதை மூன்றாவது முறையாக நிரூபித்துவிட்டார் பிரியங்கா சோப்ரா. இவர் ஆசியாவின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் இந்த வருடம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு வருட இறுதியிலும் ஈஸ்டன் ஐ என்ற பத்திரிக்கை ஆசியாவின் செக்ஸியான ஐம்பது பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். இதில் டாப் 10 பிரபலங்களில் 10வது இடத்தை பாகிஸ்தானின் மஹிரா கான் பிடித்துள்ளார், மற்ற 9 இடங்களை இந்தியர்களே பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,01. பிரியங்கா சோப்ரா: தற்போது முதல் இடத்தை பிடித்துள்ள பிரியங்கா சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக டாப் 10 வரிசையில் தொடர்ந்து வருகிறார்…

  9. மும்பை போர்ப்ஸ் இதழின் இந்திய பதிப்பில் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷாருகான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.டோணி கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி 4-வது இடத்தில் தான் உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் ஆமீர் கான் 5-வது இடத்திலும், அக்ஷய் குமார் 6வது இடத்திலும், விராட் கோலிலி 7-வது இடத்திலு…

  10. தமஷா (இந்தி) - திரை விமர்சனம் சமூகமும், குடும்பமும் தனிமனிதனின் தேடல்களையும், கனவுகளையும் பின்தொடர முடியாமல் எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி. ஆனால், இம்தியாஸ் அலிக்கு இந்தக் கதைக் கரு ஒன்றும் புதிதல்ல. அவரது, ‘ஐப் வி மெட்’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹைவே’ போன்ற படங்கள் தனிமனிதத் தேடல்களையும், லட்சியங்களையும் அழகியலுடன் பேசியிருக்கின்றன. இந்தப் படங்களின் நவீன வடிவமாக ‘தமாஷா’வைச் சொல்லலாம். சிறு வயதில் இருந்தே கதைகளிலும், கதைசொல்லல் மீதும் ஆர்வத்துடன் வளர்கிறான் வேத் (ரன்பீர்). கதை உலகின் மீதிருக்கும் காதலால் கோர்ஸிகாவுக்கு வருகிறான் வேத். அதே மாதிரி, ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ கதைகளைப் படித்து…

  11. சென்னை:-சென்னை வெள்ளத்தில் ஆர்யா, விஷால், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் முதல்மாடிக்கு சென்று தங்கினர். அதேசமயம் விஷால், கார்த்தி. சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர். தெலுங்கு படப்பிடிப்புக்காக விஜயவாடாவில் தங்கி இருக்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறியது: தகவல் தொடர்பு சாதனங்கள் முடங்கி உள்ளதால் கடந்த 3 நாட்களாக எனது பெற்றோரிடம் பேச முடியவில்லை. கடந்த ஒரு வாரமாக நான் தூக்கமில்லாமல் இரவு பொழுதை கழித்து வருகிறேன். எனத…

  12. 1 ரூபாவும் கொடுக்காத விஜய்.. அஜித்துக்கு.. ரசிகர்கள் முகநூலில் ருவிட்டரில் கோடி.. இலட்சம் கொடுத்ததாக போலி விளம்பரம். அந்த விளம்பரங்களை மறுக்காமல் அதில் குளிர்காயும் பிரபல்ய நடிகர்களின் கீழ்த்தரமான புத்தியை இப்போதாவது தமிழ் மக்கள் கண்டுணர வேண்டும். இவர்களின் சுயபுத்தியை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் எதிர்பார்ப்புக்களை வைப்பதை.. ரசிகர் சங்கங்கள் அமைப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.!! அதை அதை அங்க அங்க வைச்சால்.. உந்தப் பிரச்சனையே இல்லை. ரஜினி நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ பத்து லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எ…

  13. திரை விமர்சனம்: இஞ்சி இடுப்பழகி உடல் பருமனான ஸ்வீட்டியை (அனுஷ்கா) திருமணக் கோலத்தில் பார்க்க அம்மா ராஜேஸ்வ ரிக்கு (ஊர்வசி) ஆசை. அனுஷ்காவின் உடல் எடையைப் பார்த்து மாப்பிள்ளைகள் பின்வாங்குகிறார்கள். அப்படிப் பெண் பார்க்க வரும் அபியும் (ஆர்யா) அனுஷ்காவும் திரு மணப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டாலும் நட்பு தொடர்கிறது. அனுஷ் காவுக்கு ஆர்யா மீது காதல் வரும்போது அவர் இன்னொரு பெண்ணை விரும்புவ தாகத் தெரிகிறது. ஆர்யா தன்னை விரும்பாத தற்குத் தனது உடல் எடைதான் காரணம் என நினைக்கும் அனுஷ்கா, உடனடி எடை குறைப்புக்கு உத்தரவாதம் தரும் ஒரு நிலை யத்துக்குப் போகிறார். அங்கு அதிர்ச்சியான உண்மைகளைக் கண்டறிந்து போராட்டத்தில் குதிக்கிறார்…

  14. திரை விமர்சனம்: 144 அடிக்கடி 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஒரு கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்துக்காகப் போராடும் உள்ளூர், வெளியூர் மக்களின் முயற்சிதான் நகைச்சுவை முயற்சியான 144. பக்கத்து கிராமத்துடன் சண்டையிடு வதால் வருடத்தில் பல நாட்களை ஊரடங்கு உத்தரவிலேயே கழிக்கிறது எரிமலைக் குண்டு கிராமம். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரிய மனிதர் ராயப்பன், அவரிடம் டிரைவராக வேலை செய்யும் மதன், அவன் காதலிக்கும் ராயப்பனின் மகள் திவ்யா ஒரு பக்கம். அதே கிராமத்தைச் சேர்ந்த தேசு, எந்தப் பூட்டாக இருந்தாலும் திருடும் பலே திருடன். அவனும் அவனுடைய காதலி பாலியல் தொழிலாளி கல்யாணியும் ஒரு பக்கம். இவர்களுக்கு நடுவில் தனது எத…

  15. நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம் பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். 'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

  16. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு... நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர் டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய…

  17. மாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு ஹரிதாஸ் திரைப்படத்தின் ஒரு காட்சி இந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, "ஹரிதாஸ்" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது. மாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது. ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய "ஹரிதாஸ்" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் …

  18. திரை விமர்சனம்: உப்புக் கருவாடு முதல் படம் தோல்வி. இரண்டா வது படம் பாதியில் கைவிடப் பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக் கிறது கருணாகரனுக்கு. ஆனால் ஒரு நிபந்தனை. படத்தைத் தயாரிக்க முன் வரும் எம்.எஸ். பாஸ்கரின் செல்ல மகள் நந்திதாவைப் படத்தின் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும். பட வாய்ப்பைப் பெற்றுத்தந்த மயில்சாமி பரிந்துரைக்கும் கிராமத்து இளைஞன் ‘டவுட்’ செந்திலை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமரசங்களைச் செய்துகொள் ளும் இயக்குநர் கருணாகரன், தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து படத்தை இயக்கத் தயாராகிறார். அவ ரால் தயாரிப்பாளரின் மகளை நடிக்க வைக்க முடிந்தத…

  19. “கிறீட்” வெளியீட்டு விழாவில் அசத்திய ஸ்டாலோனின் புதல்விகள் ஹொலிவூட் சுப்பர் ஸ்டார் சில்­வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த கிறீட் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழாவில் அவரின் மகள்கள் மூவரும் கலந்­து­கொண்டு அனை­வரின் கவ­னத்­தையும் ஈர்த்­தனர். சில்­வெஸ்டர் ஸ்டாலோனின் ரொக்கி திரைப்­பட வரி­சையில் 7 ஆவ­தாக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள திரைப்­படம் கிறீட். இப்­ப­டத்தின் வெளியிட்டு விழா 19 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்­றது. 69 வய­தான சில்­வெஸ்டர் ஸ்டாலோ­னுடன் தனது மனைவி ஜெனிபர் பிளாவின், மகள்கள் சோபியா (19), சிஸ்டைன் (17), ஸ்கார்லெட் (13) ஆகி­யோ­ருடன் இவ்­வி­ழாவில் பங்­கு­பற்­றினார். …

  20. அஜித் 56; ‘காதல் புத்தகம்’ முதல் ‘வேதாளம்’ வரை 'அஜித் என்றால் தன்னம்பிக்கை; அஜித் என்றால் தைரியம்; அஜித் என்றால் ஆச்சர்யம்’ எனச் சிலாகிக்கிறார்கள் சினிமா உலகில். அதற்கு ஏற்ப அஜித்தும் தன் சினிமா கரியரின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு விநாடியையும் அவராகவே செதுக்கியிருக்கிறார். அது பற்றிய ஒரு ரீவைண்டு நினைவுகள்... காதல் புத்தகம் செப்பல் விளம்பரத்துக்காகத்தான் கேமரா முன்பாக முதன்முதலில் நின்றார் அஜித். அந்த விளம்பரம் பார்த்துதான் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்’ படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தனர். அந்தப் படம் தமிழில் 'காதல் புத்தகம்’ என்ற பெயரில் டப்பிங் படமாக வெளியானது. அதுதான் அஜித்தின் முதல் வெள்ளித்திரை பிரவேசம்! …

  21. புருஸ் லீ பிறந்த தினம் - சிறப்பு பகிர்வு நவம்பர் 27: புருஸ் லீ பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு.... தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவ…

  22. பொங்கல் படங்கள் ஒரு பார்வை ஜே.பி.ஆர். Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (13:16 IST) பொங்கல் திருநாள் தமிழ் சினிமாவுக்கு எப்போதும் முக்கியமானது. முன்னணி நடிகர்களின் மூன்று நான்கு படங்களேனும் வெளியாகும். முக்கியமான திருவிழா தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதி காரணமாக பொங்கல் மேலும் முக்கியமாகிறது. 2016 பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் வெளியாகின்றன. மிருதன் ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கும் மிருதன் பொங்கலுக்கு வெளியாவதாக விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். தமிழுக்கு முற்றிலும் புதிதான ஸோம்பிக்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ள…

  23. த பேர்ட்ஸ்: மர்மங்கள் நிறைந்த பறவைகளின் கோபம் கலிபோர்னியாவின் பொடேகே வளைகுடா பகுதிக்கு புதிதாக வந்திருக்கும் மிட்ச் பெரென்னரின் குடும்பத்தினரை மட்டும் குறிவைத்து மர்மமானதொரு காரணத்தால் பறவைகள் தாக்குவதை 'த பேர்ட்ஸ்' (The Birds) திரைப்படம் பதைபதைக்க காட்டுகிறது. மெலானி என்ற இளம்பெண் தன் தங்கையின் 11வது பிறந்த நாளுக்கு லவ்பேர்ட்ஸ் தேடி சான்பிரான்சிஸ்கோ நகரெங்கும் அலைகிறாள். நகரத்தில் பெட் ஷாப்புகளில் லவ் பேர்ட்ஸ் கிடைக்கவில்லை. அந்தக் கடை ஒன்றுக்கு வேறு ஏதோ வேலையாக வந்த மிர்ச்சியிடம் அவளுக்கு பரிச்சயம் உண்டாகிறது. அங்கு வந்த மிர்ச்சி அவளுக்கு லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடியைத் தருவதாகவும் கூறுகிறான். மிர்ச்சி, தான் தங்கியி…

  24. திரை விமர்சனம்: ஒரு நாள் இரவில் சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது. காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அன…

  25. "நான் தமிழ்நாட்டின் தங்கமகன்!” தனுஷுக்கு இது ஹாட்ரிக் சீஸன்! 'அனேகன்’, 'மாரி’யைத் தொடர்ந்து 'தங்கமகன்’ எனத் தடதடக்கிறார் தனுஷ். சென்னையின் மழை வெள்ளத்தில் நீந்தி 'வொண்டர்பார்’ அலுவலகத்துக்குள் நுழைந்தால், செம ஃப்ரெஷ் தனுஷ். ''சினிமாவுக்குள்ள வரும்போது நான் ரொம்பச் சின்னப் பையன். அதனால பெத்தவங்க பேச்சைக் கேட்காத, மத்தவங்க பேச்சை மதிக்காத பையன் கேரக்டர்களா நிறைய நடிச்சேன். அந்தப் படங்கள் அடுத்தடுத்து ஓடினதால, தொடர்ந்து அதே மாதிரியான கதைகளே எனக்கு வந்தது. இன்னமும் ஒட்டியிருக்கும் அந்த இமேஜை இப்போ 'தங்கமகன்’ உடைப்பான்'' - நம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்கிறார் தனுஷ். '' 'வி.ஐ.பி-2’ என்பதால் பெரிய பிரஷர் இருந்திருக்குமே... எப்படிச் சமாளிச்சீங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.