ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
கொரோனாவிலிருந்து இலங்கை தப்புமா?தவறான முகாமைத்துவம் பெரும் அழிவை ஏற்படுத்தும் 30 Views இலங்கையில் மூன்றாவது அலையாக கோவிட்-19 தொற்று தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. 24 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இருந்து நாடு மீண்டு வருமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக இலங்கையின் சுகாதார அமைச்சின் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதனுடன் ‘இலக்கு’ மேற்கொண்ட நேர்காணலில் அவர் கூறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம். 2019 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த கோவிட்-19 தொற்று உலகம் முழு…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மேலும் பரவுவதற்கான ஆபத்து உள்ளமையினால் இன்னும் இரண்டு வருடங்கள் அதனுடன் வாழ வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அது மிகவும் மோசமான நிலைமையாகும். இதுவரையில் 65 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் PCR பரிசோதனைக்கமைய எதிர்வரும…
-
- 2 replies
- 479 views
-
-
வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…
-
- 7 replies
- 1.2k views
-
-
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவினை சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்குமாறு கோரிக்கை November 4, 2020 இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பியுள்ளார் என அவரது ஊடகப்பிாவு தொிவித்துள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தினை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு (ஜூலை 17 2021) முன்னதாக தெரிவிக்கும்படியும் தேவைப்பட்டால் நாடளுமன்ற விவாதமொன்றையும் இதுதொடர்பில் ஒழுங்கு செய்யுமாறும் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கையினை மு…
-
- 0 replies
- 475 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) என் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய். நாட்டில் நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் நான் விடுதலையாகுவேன் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைருமாள ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எந்த ஒரு குற்றமும் செய்யாமல் புலம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்க சென்றார்கள் என்ற ஒரு காரணத்தை வைத்து அதற்கு பொறு…
-
- 7 replies
- 824 views
- 1 follower
-
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம் கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதா…
-
- 18 replies
- 2.1k views
-
-
கொரோனா தொற்று அச்சம் : யாழில் மூடப்பட்டிருந்த கடைகள் இன்று திறப்பு யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து சென்று கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு சுகாதாரப் பகுதியினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று காலை குறித்த கடைகள் அனைத்தும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. யாழ் மாநக…
-
- 0 replies
- 420 views
-
-
மாவையை செயலாளராக அங்கீகரித்தமை கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி : செல்வம் எம்.பி . (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜாவை நியமிப்பதற்கு ரெலோ அங்கீகரித்தமையானது கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான முதற்படி என்று அதன் தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய விபரங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன. ஆகவே அதுபற்றிய கவனத்தினை பங்காளிக்கட்சியகள் என்ற அடிப்படையில் தமிழ…
-
- 0 replies
- 701 views
-
-
கூட்டு முயற்சிக்கு நாம் உடன்படவில்லை: சுமந்திரன் அணி மாவையிடம் நேரில் ஒப்பாரி! November 3, 2020 தமிழ் தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டு வரும் சடுதியான மாற்றங்களில் தமக்கு உடன்பாடில்லை, அவை தமக்கு தெரியாமல் நடக்கிறது என எம்.ஏ.சுமந்திரன் தரப்பு குற்றம்சுமத்தியுள்ளது. எம்.ஏ.சுமந்திரனும், அவர் தரப்பு எம்.பிக்களான சி.சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் நேற்று, மாவை சேனாதிராசாவிடம் நேரில் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நேற்று (2) நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தனர். தமிழ் அரசியலில் அண்மையில் சடுதியான மாற்றங்கள் நடந்து வருகிறது. தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற…
-
- 6 replies
- 1.3k views
-
-
மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சரியென கூறும் அமைச்சர்! இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மதரீதியான சடங்கில் ஈடுபடும் தனது முடிவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சரியானதே கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய விதிமுறைகள் குறித்து விவாதிக்க இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், சுகாதார வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தும்போது, மதரீதியான சடங்கில் ஈடுபடுவதற்கும் தான் …
-
- 8 replies
- 824 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,…
-
- 1 reply
- 503 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை சபையில் முன்வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கவிதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நா…
-
- 0 replies
- 582 views
-
-
பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநி தியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில், பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பரிந் துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அங்கீ கரித்துள்ளார் என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப் படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்…
-
- 2 replies
- 678 views
-
-
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தின் கருவாட்டு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (02.11.2020) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த தொழிற்சாலையில் கொரோனா தொற்று நீக்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்ற இயந்திரத்தின் ஊடாக ஐந்து மணித்தியாலங்களில் சுமார் 400 கிலோ கருவாடுகள் வரை உற்பத்தி செய்ய முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 610 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசாங்கம் கூறினாலும் வைரஸ் சமூக பரவலாகிவிட்டது. அரசாங்கம் மட்டுமே இந்த உண்மைகளை தொடர்ந்தும் மறைத்துக்கொண்டுள்ளது என சபையில் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சுகாதார பணிப்பாளர் நியமனத்திலும் அரசாங்கம் ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137756/dasda.jpg பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, மூன்று மணிநேரம் மாத்திரம் சபை அமர்வுகள் இடம்பெற்ற வேளையில் சுகாதார அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமைகளை அறிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை கூறுகையில் அவர் இதனைக் …
-
- 0 replies
- 293 views
-
-
மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் செயற்படுகிறார் – மங்கள குற்றச்சாட்டு நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் செயற்படுகிறார் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலிலிருந்து மீட்டெழ மத வழிபாட்டில் ஈடுபடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சஷ மதத்தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மத ரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் …
-
- 0 replies
- 635 views
-
-
பல்கலைக்கழக அனுமதி - மேலதிகமாக 10,000 பேருக்கு சந்தர்ப்பம் நாட்டில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு இந்த வருடத்தில் இணைத்துக்கொள்ளப்படும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடத்தில் பல்கலைக்கழக பிரவேசத்தில் உள்வாங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சமிக்க நாடு என்ற தொலைநோக்கின் கீழ் இம்முறை 41,500 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மருத்துவ பீடத்திற்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடத்திற்கு 405 மாண…
-
- 0 replies
- 589 views
-
-
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டன – பவித்ரா சுகாதார, வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம் மக்கள் உள்ளிட்டவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை வரலாற்றிலேயே சுகாதார அமைச்சின் சேவைகள் மிகவும் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசுகள் மாறினாலும் அமைச்சர்கள் மாறினாலும் மக்களுக்கு உயர்ந்த சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்பதுவே நோக்கமாக இருந்தது. இதனைத்தான் நாமும் ந…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில் முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து முன்னாள் சபாநாயகர் கருத்து by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/Karu-Jayasuriya.jpg சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் எடுப்பதன் ஊடாகவே நாடு தொடர்ச்சியாக முடக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகள், குறிப்பாக எழுமாற்றாக மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் சுகாதார சேவையின் செயற்திறனை உயர்த்துதல் ஆகிய ஆலோசனைகள் த…
-
- 0 replies
- 574 views
-
-
கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஷாத் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்றைய தினம் திங்கட்கிழமை(2) காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 'கொரோனா' தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ,சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னால் அமைச்சர் ரிஷாத் …
-
- 6 replies
- 709 views
-
-
பரீட்சை பெறுபேறுகள் வெளிவருவதை உறுதிப்படுத்த புதிய நடைமுறை - யாழ். பல்கலை துணை வேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவருவதை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய நடைமுறை ஒன்றை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அறிமுகப்படுத்தியுள்ளார். பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவராதனால் பட்டமளிப்பு விழா காலதாமதடைதல் மற்றும் மாணவர்கள் தொழில்வாய்ப்புக்களை பெறமுடியாமல் சிரமங்களை எதிர்நோக்குதல் பற்றிக் கடந்த முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கை மூலம் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவர் இந்தப் புதிய இறுக்கமான நடைமுறையை…
-
- 0 replies
- 356 views
-
-
காத்தான்குடியில் பாரிய தீ - பல கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம் மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இன்று காலை 10.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர். மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு ம…
-
- 0 replies
- 280 views
-
-
உகந்தமலையில் இம்முறை கந்தசஷ்டி விரதாதிகளுக்கு தடை! November 3, 2020 காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தில் இந்தவருடத்திற்கான கந்தசஷ்டி விரதகாலத்தில் ஆலயத்தில் தங்கியிருந்துவிரதம்அனுஸ்ட்டிக்கும் விரதாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தெரிவித்தார். நாட்டில் நிலவும் சமகால கொரோனா சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு ஆலய பரிபாலனசபையின் உயர்பீடக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்துக்களின் மிகமுக்கிய விரதங்களிலொன்றான கந்தசஷ்டி விரதம் இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி தீபாவளியன்று ஆரம்பமாகின்றது. ஆறுநாட்கள் …
-
- 0 replies
- 431 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படவேண்டும் - அரசாங்க அதிபர் கருணாகரன் வேண்டுகோள் By BATTINEWS MAIN on Monday, November 02, 2020 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தி…
-
- 0 replies
- 303 views
-
-
திருக்கோவிலில் 14 வீடுகள் கையளிப்பு! BATTINEWS MAINNovember 2, 2020 (காரைதீவு சகா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் 'சுபீட்சத்தின் நோக்கு' எண்ணக்கருவுக்கமைய 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் ரூபாய் 10 லட்சம் பெறுமதியான 14 வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களால் வைபவரீதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டன.இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.அனோஜா கிராமசேவை நிருவாக உத்தியோத்தர் எஸ்.பரிமளவாணி மற்றும் வீடமைப்பு உத்தியோத்தர் கே.திவாகரன் ஆகியோர் இணைந்து இவ் …
-
- 0 replies
- 293 views
-