ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக…
-
- 15 replies
- 1.3k views
-
-
நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் - இரா.சாணக்கியன் Admin (ரூத் ருத்ரா)நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்தினால் பிரதேச கழகங்களுக்கிடையே கடினப் பந்து சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர் சி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா. சாணக்கியன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, காணாமல் ஆக்கபட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின…
-
- 1 reply
- 639 views
-
-
கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்…
-
- 11 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெ…
-
- 19 replies
- 1.9k views
-
-
அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/08/government.jpg கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்க…
-
- 4 replies
- 744 views
-
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளரிடம் கொவிட் -19 பரவல் நிலைமைகளை கையாள முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம். முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம். இராண…
-
- 3 replies
- 394 views
-
-
ஆணைமடுவிலுள்ள தெனன்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று மூன்றாவது முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர் எனவும், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே முதலாவது முறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்துள்ளார். வெலிகந்த வைத்தியசாலையிலிருந்து குணமடைந்து வெளியேறிய பின்னர், இளைஞர் தெனன்குரியவிலுள்ள அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். அவர் தனது தாயுடன் தனிமைப்படுத்தலில் இருந்தபோது வைரஸின் அறிகுறிகள் தென்பட்ட பின்னர் மீண்டும் செப்டம்பர் 17 ஆம் திகதி ச…
-
- 0 replies
- 327 views
-
-
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்ததாக கூறிய கருத்துக்களை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும், திரிபுபடுத்தப்பட்ட செய்தியே வெளியிடப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்து நான் புகழாரம் சூட்டி பேசியதாக ஊடகம் ஒன்றின் திரிபுபடுத்தப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் குறித்த செய்தி பரவி வருகின்றது. இது உண்மைக்கு புறம்பான செய்து என்பதுடன் எனது பெ…
-
- 0 replies
- 421 views
-
-
யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்றையதினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/91371
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/பிர…
-
- 2 replies
- 571 views
-
-
“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.” இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும், “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https:/…
-
- 24 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பில் மண் அகழும் பிரச்சினையால் பாதிப்படையும் விவசாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழும் பிரச்சினை காரணமாக மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் சுற்றுச் சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்தபோது அவரை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன்போது மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச் சூழல் சம்பந்தமாக அவருடன் கலந்துரையாடியிர…
-
- 0 replies
- 352 views
-
-
20 தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்து 20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இனக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடும்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரிடம் பேசி இருக்கின்றோம். அவர்களும் எங…
-
- 0 replies
- 434 views
-
-
இருபதாவது திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் – சுரேஸ் எச்சரிக்கை! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/09/விடுதலைக்காக-உயிரை-அர்ப்பணித்த-தியாகிகளை-நினைவுகூருவது-தமிழரின்-அடிப்படை-உரிமை-சுரேஸ்-720x450.jpeg இருபதாவது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தம் தொடர்பில் அவர் வெ…
-
- 0 replies
- 346 views
-
-
உயர்தரப் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் கொவிட்-19 நிலைமையை பரீட்சைகள் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும், உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும். பரீட்சைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அட்டவணையானது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன…
-
- 0 replies
- 447 views
-
-
20ஆவது திருத்தத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஐ.நா.வில் எடுத்துரைத்த அருட்தந்தை இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்ச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையுமென அருட்தந்தை ஆ.குழந்தைசாமி, ஐ.நா.வில் எடுத்துரைத்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது. அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ.குழந்தைசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் க…
-
- 0 replies
- 403 views
-
-
வனஜீவராசிகள் திணைக்களம் அடாவடி..! சொந்த காணியில் விவசாயம் செய்த 14 விவசாயிகள் கைது, அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் தமது சொந்த காணிகளில் வயல் விதைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த 14 விவசாயிகள் வன வள ஜீவராசிகள் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விவசாயிகளிடம் காணிகளை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் உள்ள போதும் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தை முற்றுகையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் விவசாயிகள் இணைந்து தமது எதிர்ப்பை காண்பித்துள…
-
- 3 replies
- 870 views
-
-
ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்; அம்பாறையில் சர்ச்சை ஒரு பிள்ளையை, ஒரே நேரத்தில் உரிமை கோரிய பல தாய்மார்கள் பற்றிய கதைகளை, பாடப் புத்தகங்களிலும் பக்கத்துத் தெருக்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையொன்றுக்கு, ஒன்பது பெற்றோர் உரிமை கோரிய சம்பவத்தை மறந்துவிட முடியாது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையை அடுத்து, ‘சுனாமி பேபி - 81’ எனப் பெயரிடப்பட்டிருந்த அக்குழந்தை, உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தையும் அறிவோம். இப்போது, அது போன்றதொரு சம்பவம், நம் முன்னே மீண்டும…
-
- 1 reply
- 444 views
-
-
ஐ.நா தீர்மானத்தில் மாற்றமில்லை – ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்தலைமை நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் அப்படியே தான் உள்ளது. அதில் இருந்து சிறீலங்கா விலகினாலும் தீர்மானத்தில் மாற்றம் வராது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் கூட்டத்தொடரில் அது விவாதிக்கப்படும். இனநல்லிணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சையபி கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ”எமது தரப்பில் ஜேர்மனியே இந்த தீர்மானத்தின் பங்குதாரராக உள்ளது. நாம் அதில் பிரதான பங்கெடுக்கவில்லை. சிறீலங்கா அரசின் முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம். சிறீலங்கா …
-
- 0 replies
- 375 views
-
-
அனலைதீவு மீன்பிடி படகுத் துறை மக்களிடம் கையளிப்பு அனலைதீவு கடற்தொழிலாளர் சங்க வேண்டுகோளிற்கமையவும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமையவும் j/38 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் பயனுறும் விதமாக அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத் துறை, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேற்படி மீன்பிடித் துறையை ஆழப்படுத்தல் திட்டமானது கடற்தொழிலாளர் சங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு செயற்குழுவின் செயலாளர் திரு.தவசெல்வம் சிற்பரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுக்கமைய ரூபா. 5 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு மீனவர்களிடம் வைபவ ரீதியாக கையளிப்பு செய்யப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 290 views
-
-
கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம் C.L.Sisil October 2, 2020கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்2020-10-02T11:35:40+05:30 கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும், பரந்தனிலிருந்து 12 ஆ…
-
- 31 replies
- 3.7k views
- 1 follower
-
-
சமஷ்டி தீர்வுகான கருவியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இருக்கிறது – முழுமையாக அமுல்படுத்த இந்தியாவை வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன் இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். முழுமையான பேச்சின் விபரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. “இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங…
-
- 0 replies
- 285 views
-
-
இருபதாவது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்.கே.கே.மஸ்தான். இருபதாவது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதியின் விசேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக கற்குளம் படிவம் 1,2,3,4 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதான வீதி புனரமைப்பிற்கு 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பணிகள் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்…
-
- 1 reply
- 649 views
-
-
ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா ? - மெல்கம் ரஞ்சித் (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார். விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிர…
-
- 4 replies
- 849 views
-
-
பிரதமர் மஹிந்த என்னை ஏமாற்றிவிட்டார்; அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னைத் தொடர்புகொண்டு பேசுவார் என நினைத்தபோதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்பு மங்களராமைய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- “கடந்த 21ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் நான் முன்னெடுத்த நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. என்னோடும் அவர்கள் பேசினார்கள். இது குறித்து நீதிகிடைக்குமா என்பது குறித்து நாம் பார்த்து கொண்டுள்ளோம். நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாட்டின் பௌத்த கலாசார…
-
- 3 replies
- 752 views
-