Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி August 6, 2020 இலங்கையின் மிகப்பழயை அரசியல் கட்சியான ஐக்கியதேசிய கட்சி பொதுத்தேர்தலில் மிகமோசமான தோல்வியை தழுவும் நிலையில் காணப்படுகின்றது. இதுவரை வெளியான தேர்தல்முடிவுகளின் படி ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கியதேசிய கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றுவருவதுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. இன்று மாலைவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி ஐக்கியதேசிய கட்சி நான்காமிடத்திலேயே காணப்படுகின்றது. இன்று மாலை வரை ஐக்கியதேசிய கட்சி 2.47 வீத வாக்குகளையே பெற்றுள்ளது. ஐக்கியதேசிய கட்சியிலிருந்து பிரிந்த சஜித்பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 16.9 …

    • 2 replies
    • 975 views
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர், தனது படம் பொறிக்கப்பட்ட இலவச பியர் ரின் விநியோகித்ததாக முறையிடப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசங்களில் நேற்று இரவு பரவலாக பியர் ரின் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஹைஏஸ் வாகனம் ஒன்றில் வந்த கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மீசாலை, அல்லாரை, புத்தூர் சந்தியடி பகுதிகளில் இளைஞர்களிற்கு பியர் வழங்கினர். இளைஞர்கள் கூட்டமாக நிற்கும் இடங்கள், விளையாட ஒன்றுகூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி இலவச பியர் வழங்கினர். அந்த பியர் ரின்களில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு பொதுமக்கள் தொலைபேசியில் முறையிட்டனர்…

  3. கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு! நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இது…

  4. பிரதமர் மஹிந்தவுக்கு மோடி வாழ்த்து 2020 பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அலைபேசி ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநதவகக-மட-வழதத/175-254023

    • 1 reply
    • 774 views
  5. தனது மனைவி குறித்து பெருமைக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய எனது வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம் என் மனைவிதான் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் தங்களது 40ஆவது திருமண நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பதிவில், “40 வருடங்களுக்கு முன்னர், இதே நாளிலிருந்து அன்பான மனைவியாக, பாசமான தாயாக, நல்லதொரு நண்பியாக, என்னோடு நிழலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களே என் வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம்” என அவர் பதிவேற்றியுள்ளார். http://athavannews.com/தனது-மனைவி-குறித்து-பெரு/

  6. முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு 020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/87406

  7. லெபனான் வெடிப்புச் சம்பவம்: காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது. குறித்த எட்டு பேரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதில் குறைந்தது 135 பேர் உயிரிழந்ததுடன் ஐயாயிரம் பேர்வரை காயமடைந்துள்ளனர். குறித்த வெடிப்புச் சம்பவத்தில் லெபனானில் வசிக்கும் இலங்கையரின் வீடுகளும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டிலு…

  8. வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடு…

  9. தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக உபாலி தேரர் நியமனம் தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் வணக்கத்திற்குரிய அனுநாயக்கர் உபாலி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த நியமனத்துக்கான பத்திரம் உபாலி தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம், தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று நடத்தப்பட்டது. இதன்போதே இந்த நியமனம் பிரதமரினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் அக்ரஹ…

  10. தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் சுகாதார வழிகாட்டு…

  11. சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார். “இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.” …

    • 30 replies
    • 2.7k views
  12. யாழ்.மாவட்டத்தில் புத்திஜீவிகள், மற்றும் சாதாரண மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பவதாரணி முன்னிலை பெற்றிருக்கின்றது. இம்முறை இலங்கை பாராளுமன்ற தேர்தல் களத்தில் அண்ணளவாக 7400வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 319பெண்வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர். வடக்கு மாகாணத்தில் இம்முறை 7 ஆசனங்களுக்காக 325பேர் போட்டியிடுகின்றனர் . இதில் சுமாராக 35பெண்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை இந்த தேர்தல்களம் யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சியின் பெண்வேட்பாளரை முதன்மைப்படுத்தி நிற்பதாக உள்ளது. அது பலம் பலவீனம் என வேறுபட்ட அடிப்படையில் மக்களை அணுகுவதாக அமைந்துள்ளது. இம்முறை பெண்வேட்பாளர்கள் பலர் புதிதா…

  13. எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் கருணா அம்மானின் கரங்களை பலப்படுத்தி அவரை வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நிலைமை தொடர்பாக காரைதீவு பகுதியில் இன்று(2) முற்பகல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்தார்.மேலும் தனது கருத்தில்; முப்பது வருடமாக போராடிய எமது போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாம் எமது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளின் நலனுக்காக அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானை ஆதரிக்குமாறு மக்களை கேட்கின்றோம். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை…

  14. மன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆய…

  15. பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தக் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பா…

    • 37 replies
    • 3.2k views
  16. தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டிவிற்றர் பக்கத்தில் அவர் இவ்வாறு நன்றிதெரிவித்து பதிவிட்டுள்ளார். அத்துடன், இன்றைய தேர்தலில் கிட்டத்தட்ட 71வீதமானோர் வாக்களித்துள்ளமைக்கு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/தெற்காசியாவின்-முதலாவது/

    • 2 replies
    • 577 views
  17. யாழில் வாக்குப்பெட்டிகள்... வாக்குகள், எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வழமை போன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நாளை நடைபெறும். மேலும் வாக்கெண்ணும் நிலையத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து விமானத்தின் மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கே வாக்கெண்ணும் பணி…

  18. காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம் இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இ…

  19. சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு -எஸ்.நிதர்ஷன் யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில், கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி, இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் ஏற்கெனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவி…

    • 0 replies
    • 452 views
  20. மட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்! 2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பில் இருவர் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவர் வாக்களிக்கும் நிலையமாக கருதப்படும் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலைக்கு இன்று (புதன்கிழமை) காலை வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன. மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் கொண்டுசெல்லப்பட்டன. இரண்டு வாக்காளர்களாக உள்ள தொழு நோயாளர்கள் வாக்களிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்ற…

    • 0 replies
    • 411 views
  21. வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதப் படைகளின் பாதுகாப்பு! தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் ஆயுதமேந்திய அதிகாரியின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்தவகையில் 3067 ஆயுதம் தாங்கிய நடமாடும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பெட்டிகள் கொண்…

  22. மஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் ஸ்ரீலனாக பொதுஜன பெரமுனாவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின் போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்ததாகக் கூற…

    • 0 replies
    • 560 views
  23. வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் நின்று எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை அவர்கள் வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பில் தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்களிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கண்காணிப்பாளர்களும் பொலிசாரும் அவர்களை மடக்கிப்பிடித்தனர். தற்போது அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள். https://www.pagetamil.com/138169/

  24. திருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு 2020 பாராளுமன்றத் தேர்தல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் இன்று காலை 07.00 மணி முதல் இடம் பெற்று வருகிறது. வாக்களிப்பானது சுகாதார நடை முறைகளை பின்பற்றியவாறு வாக்களிப்பு இடம் பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தம்பலகாமம் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/87361

  25. யாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது. காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர் யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/87360

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.