ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.. by : Dhackshala பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதற்கமைய அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன், எஸ்.ஏ.ஜோதிலிங்கம், அரச அறிவியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோரின் கருத்துக்கள் காணொளி வாயிலாக… http://athavannews.com/பொதுத்தேர்தலில்-தமிழ்-மக/
-
- 3 replies
- 725 views
-
-
In இலங்கை June 24, 2020 5:03 am GMT 0 Comments 1218 by : Vithushagan மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர். குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக குடிநீருக்காக பயன்படும் கிணறுகள் உவர் நீராக மாறுவதனால் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்…
-
- 0 replies
- 488 views
-
-
In இலங்கை June 24, 2020 6:35 am GMT 0 Comments 1228 by : Vithushagan பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்த பணி யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி வரும் 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்…
-
- 0 replies
- 416 views
-
-
கருணா குறித்து பேசுபவர்கள்.. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் தெரிந்ததே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். குளியாப்பிட்டியவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சவால்களை எதிர்கொள்ள மு…
-
- 1 reply
- 441 views
-
-
பலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு! யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக் கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக பொலிஸ் நடமாடும் பிரிவு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. பலாலி பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. அதனால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுவேலி, காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவைகளைப் பெற்று வந்தனர்…
-
- 0 replies
- 572 views
-
-
ஊடகவியலாளர் தரிஷாவை பாதுகாக்க சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை! ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ஐந்து அமைப்புகளே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன. தரிஷா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், தரிஷா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சுவிஸ் தூதர…
-
- 0 replies
- 518 views
-
-
இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…! தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூ…
-
- 5 replies
- 831 views
-
-
மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்! by : Litharsan மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது மன்னாரில் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) மன்னார் மா…
-
- 0 replies
- 415 views
-
-
மக்களின் அமோக ஆதரவுடன் கொள்கை மாறா அரசியல் பயணம் தொடரும் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்குவதற்கு தயாராகிவிட்டனர். எனவே, மக்களின் ஆசியுடன் மக்களுக்கான எமது கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நேற்று மாலை (22.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கண்டி மாவட்டமென்பது மலையகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய மாவட்டமாகும்.கண்டி…
-
- 0 replies
- 414 views
-
-
வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற…
-
- 0 replies
- 313 views
-
-
சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்ததாக தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது. ஆணைக்குழுவில் நேற்று (22) சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார். இன்று அதிகாலை 1 மணிவரை அவர் ஆணைக்குழு முன் வாக்கு மூலம் வழங்கியதாக அததெரண செய்தியாளர் கூறினார். 2018 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை; இதனை கூறியுள்ளார். அதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால்…
-
- 2 replies
- 571 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்! காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடிவந்த வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (69-வயது) என்ற தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று (23) உயிரிழந்துள்ளார். இவரது மகன் 2008ம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றன. https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்ட-மகனை-4/
-
- 0 replies
- 326 views
-
-
நயினாதீவு செல்ல பாஸ் ; தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு June 24, 2020 நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தபெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருவிழாவில் கலந்து கொள்ள மிகச்சொற்பமான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும். பொலிஸ் அனுமதி இல்லாதவர்கள…
-
- 0 replies
- 219 views
-
-
கருணாவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம் June 24, 2020 கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மிகநீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். எனி…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு Report us Gokulan 4 hours ago வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஞானசாரதேரர் தெரிவித்த கர…
-
- 8 replies
- 1k views
-
-
காதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி! காதல் தோல்வியால் மன விரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது-23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார். அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் ஒரு…
-
- 1 reply
- 415 views
-
-
யாழ் அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க முற்பட்டவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். குறித்த இடத்தில் முற்காலத்து அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளதென தெரிவித்து தொல்பொருள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமையவே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரியவருகையில், புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளி பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க சட்டத்தரணி ஊடாக தனது அங்கிகாரம் பெற்றுள்ளார். உரிய திணைக்களங்களிடம் இருந்து அனுமதிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தொல்பொருள் திணைக்களத்திடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. …
-
- 0 replies
- 249 views
-
-
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணொருவருக்கு யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரால் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் வீடற்ற வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J252 பலாலி தெற்கு வசாவிளானில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு நேற்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது 2014ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில…
-
- 0 replies
- 287 views
-
-
மாற்றுத்திறனாளிகளுக்கு அவயங்கள் வழங்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜேர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் வேண்டுகோளில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் சிபாரிசில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பிறப்பில் அவயவங்களை இழந்தவர்களுக்கு இலவசமாக செயற்கை அவயங்கள் வழங்கும் நிகழ்வு செயலக சமூக சேவை அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி சமூக சேவை உத்தியோகத்தர் அசனார் நஜீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச …
-
- 0 replies
- 438 views
-
-
“தமிழர்கள் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்”- ஊடக அமைய கேள்வி பதிலில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தெளிவான ஒரு மாற்று திட்டத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் தாம் செயற்படப்போவதில்லை என்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைத்து நிறுவன ரீதியான, அறிவின் அடிப்படையிலான, உபாயங்களின் அடிப்படையிலான, காத்திரமான பாராளுமன்ற செயற்பாடுகளின் ஊடாக மேற்கொள்வதே தமது திட்டம் என்று தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்…
-
- 0 replies
- 477 views
-
-
நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம்- அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளன என்று தெரிவித்து அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மன்றில் இன்று சரணடைந்த விண்ணப்பதாரியை வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. புலம்பெயர் தமிழர் ஒருவர் அரியாலை முள்ளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கவுள்ளார். அவர் யாழ்ப்பா…
-
- 0 replies
- 727 views
-
-
ஜனாதிபதி தொடர்பாக... மங்கள, மஹிந்தவுக்கு கடிதம். மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக விசனம் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிரதமருக்கு எழுதியுள்ள குறித்த கடிதத்தில், “உங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பதவியினை வகித்தவன் என்கின்ற ரீதியில் இம்மட…
-
- 0 replies
- 230 views
-
-
யாழில் தேர்தல் வாக்கெண்ணும் ஒத்திகை! நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (23) காலை இடம்பெற்றது. கொரோனா தொற்று நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்கெண்ணுவது என்பதை ஆராயவே இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்திகை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. https://newuthayan.com/யாழில்-தேர்தல்-வாக்கெண்ண/
-
- 1 reply
- 359 views
-
-
சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த நூல்கள் வழங்கிவைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை மேன்படுத்தும் வகையில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இன்று (23) காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களுக்கு உலக அறிஞர்கள், ஞானிகள் மற்றும் புனிதர்கள் ஆகியோரின் நூல் தொகுதியினை வழங்கிவைத்தார். கொரோனா காலங்களில் பாடசாலை செல்லாமல் வீடுகளிலும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களிலும் உள்ள சிறார்களின் அறிவு திறனை மேம்படுத்தவே இந்த வேலைத் திட்டம் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது அரசாங்க அத…
-
- 0 replies
- 307 views
-
-
கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு! தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த போது ஆனையிறவில் ஒரே இரவில் 2000 – 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனும் வி.முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். கருணாவின் குறித்த கருத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .https:/…
-
- 14 replies
- 1.6k views
-