ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹரான் இல்லை – புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி பகீர் தகவல் 019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபரே என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை என்றும் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கட்டாரில் 19 வருடங்களாக வசித்து சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்க…
-
- 0 replies
- 436 views
-
-
வேலைவாய்ப்பை பெற்று கொடுங்கள் – பிரதமரிடம் யாழ் ஆயர் கோரிக்கை! யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் இன்று (28) காலை சந்தித்து ஆசி பெற்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத விவகாரங்களுக்கான அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள நிலையில் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக யாழ். ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், “மதங்களுக்கிடையே ஒற்றுமையினை வளர்க்கவேண்டும். வடக்கில் மக…
-
- 0 replies
- 412 views
-
-
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரம் சேகரிப்பு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, “வேட்பாளர்களின் சொத்து விபரங்களை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன்அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படுவன. தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்த…
-
- 0 replies
- 465 views
-
-
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம் என இந்து சமய மதகுருமார் தெரிவித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய இந்து சமய மதகுருமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்கள், யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அமைச்சரை போன்று வேறு எந்த தரப்பினரும் இதுவரை செய்ததும் இல்லை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை. இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந…
-
- 34 replies
- 3.6k views
-
-
தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்களை ஆபத்தை எதிர்கொள்கின்றனவா? மக்கள் அச்சம் என்கின்றார் துரைராசசிங்கம் July 28, 2020 ஜனாதிபதியின் தொல்லியல் செயலணி உருவாக்கப்பட்ட பின்னர் சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகினறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமாகிய க. துரைராசிங்கம் தெரிவித்துள்ளார். ஏறாவூர்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் உட்பட்ட கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ள குசலான் என்ற சிற்றரசனால் ஆளப்பட்ட பிரதேசம் என அடையாளம் காட்டுவதனான குசலானன் மலை என்ற சிறப்பு பெயர் பெற்ற ஒரு முருகன் தலத்தில் உள்ள விக்கிரங்கங்கள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில…
-
- 1 reply
- 369 views
-
-
வன்னியில் சிங்கள ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி- அதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் என்ன? செல்வம் அடைக்கலநாதன் கருத்து July 28, 2020 வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வன்;னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட…
-
- 1 reply
- 422 views
-
-
மகனை மீட்டுத்தருமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கண்ணீர் விட்டுக் கதறிய தாய் நேற்றையதினம் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கடந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு குடும்ப கஷ்டம் காரணமாக முந்திரிகை விதைகளை விற்றுவந்த மகனை துப்பாக்கிச் சன்னங்கள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி இராணுவத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. வீட்டில…
-
- 1 reply
- 436 views
-
-
கோத்தபாயவின் ஏவலாளிகளை தோற்கடியுங்கள்..! தமிழ் மக்களிடம் அறைகூவல் விடுக்கின்றார் சரவணபவன்.. கோத்தாபயவை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தடவை விரட்டி அடித்துவிட்டோம். ஆனாலும், அவரின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக இங்கு வலம் வருபவர்களை இந்தத் தேர்தலுடன் அடித்து விரட்ட வேண்டும். எங்கள் சொந்தங்களை குருதி சிந்த வைத்த கோத்தாவை மறுபடியும் தோற்கடிக்க ஒரு வாய்ப்பு ஓகஸ்ட் 5ஆம் திகதி உங்களைத் தேடி வருகின்றது. கோத்தாவின் அடியாள்களான டக்ளஸ், அங்கஜனை தோற்கடிப்பதன் ஊடாக அதனை நீங்கள் செய்யவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் வேட்பாளருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்…
-
- 1 reply
- 434 views
-
-
இறுதிப் போர் காலத்தில் மக்கள் இழந்த நகைகள், சொத்துக்களை மீள பெற்றுக் கொடுப்போம்..! எமக்கு ஆணை வழங்கினால் அது நடக்கும்.! தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பேசுவது தமிழ்தேசியம் என்ற போதும் அவர்கள் நரி தந்திரமிக்கவர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தொழிலதிபருமான விண்ணன் கூறியிருக்கின்றார். யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை என பேசி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து தமது நரித் தந்திரம் மிக்க செயற்பாடுகளினால் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழ் மக்களையும…
-
- 1 reply
- 505 views
-
-
தனிமைப் படுத்தப் பட்டவர்களுக்கு, வாக்களிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது- மஹிந்த தேசப்பிரிய நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை எனவும் இவ்விடயம் குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். இந்…
-
- 0 replies
- 375 views
-
-
வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் என அறிவிப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் அதே இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை. ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் தேசியத்தை சிதைக்க சிங்கள தேசம் முயற்சி – ஜனநாயக போராளிகள் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடுக்கி விட்டு சிங்கள தேசம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுங்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “பேரினவாத சிந்தனைக்குள் திளைத்துப்போன சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் தமது ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்க…
-
- 0 replies
- 690 views
-
-
பிரபாகரன் வெற்றி கொள்ள நினைத்ததை பெற இடமளியேன் – மஹிந்த கிடுக்கிப்பிடி போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு எமது அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்படாது. எனவே மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும். யுத்தத்தின் போது ஏற்ப…
-
- 0 replies
- 499 views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்தது - ஹக்கீம் (ஆர்.யசி) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆதிக்கத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவும் அமைந்துள்ளது. இம்முறையும் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்கிதியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரவூப் ஹகீம் தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக தற்காலிகமாக ஏற்படுத்திக்கொடுத்த வடக்கு கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்ததாகவும் அவர் கூறுகின்றார். ஐக்கிய மக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல் July 27, 2020 உயிர்த்தஞாயிறுதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான முகமட் ஹஸ்துனின் மனைவி சாரா ஜெஸ்மின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மனைவியுடன் பெப்ரவரி முதல் ஏப்பிரல் 26 ம் திகதிவரை தங்கியிருந்தார் என சாராவின் தாயார் கவிதா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2015ம் திகதி ஜூலை மாதம் தனியார் வகுப்புக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை, நான் அவ்வேளை அபுதாபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது தாயார் மூலம் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என கவிதா ராஜேந்திரன் தெரிவி…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஏ – 9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை – சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகருக்கு விக்கினேஸ்வரன் தெரிவிப்பு ஏ – 9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களைப் பயப்படுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைப்பதற்கோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது.பின்னர் மக்கள் போகாதது கொரோனாவிற்குப் பயந்தே என்று அவர்கள் கூறலாம். அத்துடன் பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசி…
-
- 1 reply
- 602 views
-
-
விக்னேஸ்வரன் ஈழத்தின் நீதிக்கான குரல்: சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் புகழாரம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொகுதியில் நாடாளுமனர் வேட்பளராக போட்டியிடும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் விக்னேவரனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து அறிக்கையிலேயே இவ்வாறு தெருவித் துள்ளார் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. வழக்கறிஞர்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நேர்வுகள் வரலாற்றில் உள்ளன. ஆனால், ஒரு நீதியரசர் தன்னுடைய பணிக்காலத்திற்குப்பின், மிகவும் துடிப்பு மிக்க ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தி…
-
- 2 replies
- 586 views
- 1 follower
-
-
சுமந்திரன் போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்.! சுமந்திரன் போன்றவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை மதியம் ஆதரவாளர்களுடன் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்று கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்களது வாக்கு உரிமையை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கே வழங்க வேண்டும். நாங்கள் படுகின்ற கஸ்டம் தொடரும்.தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தான் குரல் கொடுப்பார்கள். வேறு யாரும் குரல் கொடுக்க மா…
-
- 6 replies
- 1.2k views
-
-
அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இணக்கம் யாழ்ப்பாணம் – அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த கடிதத்தினை பரிசீலனை செய்த பிரதமர், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக…
-
- 1 reply
- 852 views
-
-
’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’ -என்.ராஜ் சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார். மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறை…
-
- 29 replies
- 3.1k views
-
-
பிள்ளையான் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டனர். விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதன்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது கொலை செய்யப்பட்டமை…
-
- 2 replies
- 465 views
-
-
காற்றில் பறந்த திகாவின் வாக்குறுதிகள் கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுப்பான தோட்டத்தில், 2016ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில், 16 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அப்போதைய மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். களுபான தோட்டமானது, மலையுச்சியில் காணப்படுவதால், முழு தோட்டமே மண்சரிவு அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருந்தமையால், முழு தோட்ட மக்களுக்கும் 100 வீடுகள் கட்டித் தருவதாக, அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், மண்சரிவு இடம்பெற்று அ…
-
- 0 replies
- 787 views
-
-
கருணா 3000 பேரை கொன்றதாக தெரிவித்த கருத்து உட்பட முக்கிய பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பணவீக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்களை மக்கள் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார். 2,000 முதல் 3,000 இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பாக கருணா அம்மான் தெரிவித்த கருத்து, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் இறுதிச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டமை மற்றும் 201…
-
- 1 reply
- 442 views
-
-
வீட்டில் விபச்சாரம் நடக்கின்றது - வேட்பாளர்களை கிழித்து தொங்கவிட்ட சிவாஜி வீட்டில் இருப்பவர்கள் சாராயதவறணையை நடாத்துகின்றார்கள். அங்கு விபச்சாரமும் நடக்கின்றது. வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே துரத்தவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம. கே.சிவாயிலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தலைவர் கைகாட்டிய கூட்டமைப்பு அதனால் வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் ஜயசிக்குறு நடவடிக்கையில் பங்கெடுத்த கருணாவை தலைவர் பிராபகரன் அன்று பாராட்டியிருந்தார். அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்படியானால் த…
-
- 2 replies
- 750 views
-
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள கிளையில் அவர் தற்போது முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் – CIDயில் முன்னிலையாகும் ரிஷாட்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு வி…
-
- 1 reply
- 392 views
-