Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் என அறிவிப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்ததும் அதே இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை. ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://…

  2. தமிழ் தேசியத்தை சிதைக்க சிங்கள தேசம் முயற்சி – ஜனநாயக போராளிகள் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடுக்கி விட்டு சிங்கள தேசம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுங்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “பேரினவாத சிந்தனைக்குள் திளைத்துப்போன சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் தமது ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்க…

  3. பிரபாகரன் வெற்றி கொள்ள நினைத்ததை பெற இடமளியேன் – மஹிந்த கிடுக்கிப்பிடி போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு எமது அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்படாது. எனவே மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும். யுத்தத்தின் போது ஏற்ப…

  4. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியை பெற்றுத்தர வேண்டும் July 25, 2020 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மன்னாரில் இன்று சனிக்கிழமை(25) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, …

  5. அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இணக்கம் யாழ்ப்பாணம் – அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த கடிதத்தினை பரிசீலனை செய்த பிரதமர், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக…

    • 1 reply
    • 852 views
  6. எழுபதாயிரம் வாக்குகள் கிடைத்தால் இரண்டு ஆசனங்கள் பெற முடியும் - திருமலையில் சம்பந்தன்.! இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சி.தர்சன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் உட்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் எழுபதாயிரம் வாக்குகளை அளிப்பதன் மூலம் இரு ஆசனங்களை கைப்பற்றமுடியும் என தெரிவித்தார். இலங்கை தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம். …

  7. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள கிளையில் அவர் தற்போது முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தாக்குதல் – CIDயில் முன்னிலையாகும் ரிஷாட்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு வி…

  8. வீட்டில் விபச்சாரம் நடக்கின்றது - வேட்பாளர்களை கிழித்து தொங்கவிட்ட சிவாஜி வீட்டில் இருப்பவர்கள் சாராயதவறணையை நடாத்துகின்றார்கள். அங்கு விபச்சாரமும் நடக்கின்றது. வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே துரத்தவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம. கே.சிவாயிலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தலைவர் கைகாட்டிய கூட்டமைப்பு அதனால் வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் ஜயசிக்குறு நடவடிக்கையில் பங்கெடுத்த கருணாவை தலைவர் பிராபகரன் அன்று பாராட்டியிருந்தார். அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்படியானால் த…

  9. கருணா 3000 பேரை கொன்றதாக தெரிவித்த கருத்து உட்பட முக்கிய பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பணவீக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்களை மக்கள் எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார். 2,000 முதல் 3,000 இராணுவத்தினரை கொலை செய்தமை தொடர்பாக கருணா அம்மான் தெரிவித்த கருத்து, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் இறுதிச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டமை மற்றும் 201…

  10. பிள்ளையான் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி. சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டனர். விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதன்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது கொலை செய்யப்பட்டமை…

    • 2 replies
    • 465 views
  11. காற்றில் பறந்த திகாவின் வாக்குறுதிகள் கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுப்பான தோட்டத்தில், 2016ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவில், 16 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அப்போதைய மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். களுபான தோட்டமானது, மலையுச்சியில் காணப்படுவதால், முழு தோட்டமே மண்சரிவு அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருந்தமையால், முழு தோட்ட மக்களுக்கும் 100 வீடுகள் கட்டித் தருவதாக, அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், மண்சரிவு இடம்பெற்று அ…

    • 0 replies
    • 787 views
  12. சம்பந்தனின் மிரட்டல்கள் ராஜபக்ச அரசுக்குத் தூசி - விமல் வீரவன்ச.! "தமிழர்கள் மாதிரி சிங்களவர்களையும் முட்டாளாக்கலாம் என்று சம்பந்தன் நினைக்கின்றார். அவரின் வாய்ச்சவடால் சிங்களவர்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது. அவரின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவேமாட்டோம். அவரின் எச்சரிக்கைகள் அரசுக்குத் தூசி போன்றது." இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 'சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழர்களை முட்ட…

    • 4 replies
    • 765 views
  13. முன்னாள் போராளியின் பணப்பரிசில் பாதியை பொலிஸ் அதிகாரி பெற்றார் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்ட சாட்சியம் கிடைக்கப்பெற்றுதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலி போராளியிடம் இருந்து இவ்வாறே பரிசுத் தொகையில் பாதி தொகையை பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளார். குறித்த நபர் 2016ம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊ…

    • 5 replies
    • 1.2k views
  14. திருமலை மாவட்டத்தை பாராளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் வெற்றி கொள்வோம்; ஹக்கீம் July 25, 2020 வாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் நவாஸ் மாஸ்டர் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்; கலந்துகொண்டு உரையா…

  15. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான வழக்குகள் கொழும்புக்கு மாற்றத் தீர்மானம் தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது…

  16. நாடாளுமன்றத்தை பொதுமக்கள் வெறுக்கின்றமைக்கான காரணத்தை வெளியிட்டார் அநுர நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிகளவான குற்றங்களில் ஈடுபடுகின்றமையினால்தான் மக்கள் நாடாளுமன்றத்தை வெறுக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அநுர குமாரதிசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் குற்றங்களில் ஈடுபடாத ஒரே கட்சியென்றால் அது எமது கட்சியாகவே இருக்க முடியும். நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பல்வேறு குற்றங்களில் ஈட…

  17. அரச பொது ஊழியர்கள் சங்கம் டக்ளசுக்கு ஆதரவு! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், “எமது சங்கமானது 30 வருடகால அனுபவத்தை கொண்டு வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட பாரிய தொழிற்சங்கமாகும். எமது தொழிற்சங்கமானது பாரிய திட்டங்களைக் கொண்டு தொழிற்சங்க ஊழியர்களின் ஊடாக மக்களுக்கும் சேவையாற்றி வந்திருக்கிறது. மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். அந்தவகையில் சுமார் முப்பது வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்தோம். …

  18. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது… July 26, 2020 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும். இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும். அதனை ஏற்பதற்கு சிறீலங்கா அரசு மறுத்தால் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவோம். இனவழிப்பு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வ…

  19. பெருந்தோட்ட மக்களை ஒருபோதும் கைவிடேன்- மஹிந்த மலையக மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு பேரிழப்பு. என்றாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை தமக்கு அளிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோதுகூட பெருந்தொட்ட மக்கள் தொடர்பாகவே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார். பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்…

  20. தேர்தலில் நிற்பவர்கள் அனைவருமே தேர்தல் ஆணைக்குழுவிடம் சொத்துப் பிரகடனம் செய்ய வேண்டும். நாட்டின் பிரஜைகள் ஆணைக்குழுவிடம் பணங்கட்டி குறித்த வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனத்தின் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் பகிரவோ, வேறு நபர்களிடம் அதைப் பற்றிச் சொல்லவோ முடியாது. ஒரு வேட்பாளரின் சொத்துப் பிரகடனத்தைப் பகிரங்கப்படுத்துவது தண்டணைக்குரிய குற்றமாகும். ஆனால் அரசியல்வாதிகளது சொத்து விபரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு அத்தியாவசியமானதொன்று. அடிப்படைப் பொறுப்புக்கூறல் என்றும் கொள்ளலாம். அண்மைக்காலங்களில் அரசியல்வாதிகள் பகிரங்க சொத்துப் பிரகடனத்தைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வந்திரு…

  21. தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள - பெளத்த ஆக்கிரமிப்பினை முன்னெடுத்துவரும் சிங்கள தொல்பொருள் திணைக்களம் கடந்த மாதம் 26 ஆம் திகதி மட்டக்களப்பு நகரின் வடக்காக 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமான சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இவ்வாறு விஜயம் செய்த சிங்கள - பெளத்த அணி, அவ்வாலயத்தின் முன்றலில் தேங்காய் உக்கவும், கற்பூரம் கொழுத்தவும், இன்னும் இதர வழிபாட்டுத் தேவைகளுக்காக தமிழர்களால் பல்லாண்டுகளாக பாவிக்கப்பட்டுவரும் செவ்வக வடிவக் கல் உட்பட்ட இதர கற்சின்னங்களை பலகோணங்களிலும் படமெடுத்தனர். அங்கு மக்களுக்கு அவர்கள் வழங்கிய அறிவுருத்தலில், இக்கற்கள் புராதன பெளத்த கற்சின்னங்களை ஒத்து உள்ளதால், அதனை தாம் கொழும்பிற்கு …

    • 20 replies
    • 2.6k views
  22. யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு குறித்து முக்கிய அறிவிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு எதிர்வரும் 12ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கமைய இந்த பதவிக்காக ஆறு பேர் விண்ணப்பத்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒருவரை துணைவேந்தராகத் தெரிவுசெய்ய வேண்டும். இதற்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களித்து தெரிவு செய்யும் முறைமை எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதனை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக்கழக மான…

  23. அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி July 25, 2020 “பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பத…

  24. பிள்ளையானால் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய முடியும்? அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி July 25, 2020 கனகராசா சரவணன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்பதால் கபினற் அமைச்சர் பதவியில் அமர முடியாது. எனவே அவர் பாராளுமன்றம் சென்று செய்யக் கூடியது என்ன ? என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 2020 பொது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் சல த…

    • 1 reply
    • 814 views
  25. தேர்தல் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் – ம.உ.ஆணைக்குழு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுக்குரியது என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. மேலும், “கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பெறப்பட்ட அனுபவங்கள் மூலமும் கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.