Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றத்தை பொதுமக்கள் வெறுக்கின்றமைக்கான காரணத்தை வெளியிட்டார் அநுர நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிகளவான குற்றங்களில் ஈடுபடுகின்றமையினால்தான் மக்கள் நாடாளுமன்றத்தை வெறுக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் அநுர குமாரதிசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் குற்றங்களில் ஈடுபடாத ஒரே கட்சியென்றால் அது எமது கட்சியாகவே இருக்க முடியும். நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பல்வேறு குற்றங்களில் ஈட…

  2. யாழ். பல்கலையின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு குறித்து முக்கிய அறிவிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரிற்கான தெரிவு எதிர்வரும் 12ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டது. அதற்கமைய இந்த பதவிக்காக ஆறு பேர் விண்ணப்பத்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து ஒருவரை துணைவேந்தராகத் தெரிவுசெய்ய வேண்டும். இதற்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவையில் உள்ளோர் வாக்களித்து தெரிவு செய்யும் முறைமை எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதனை நடத்துவதற்காக மதிப்பீட்டாளர்கள் என நால்வர் பல்கலைக்கழக மான…

  3. தேர்தலில் நிற்பவர்கள் அனைவருமே தேர்தல் ஆணைக்குழுவிடம் சொத்துப் பிரகடனம் செய்ய வேண்டும். நாட்டின் பிரஜைகள் ஆணைக்குழுவிடம் பணங்கட்டி குறித்த வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனத்தின் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் பகிரவோ, வேறு நபர்களிடம் அதைப் பற்றிச் சொல்லவோ முடியாது. ஒரு வேட்பாளரின் சொத்துப் பிரகடனத்தைப் பகிரங்கப்படுத்துவது தண்டணைக்குரிய குற்றமாகும். ஆனால் அரசியல்வாதிகளது சொத்து விபரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு அத்தியாவசியமானதொன்று. அடிப்படைப் பொறுப்புக்கூறல் என்றும் கொள்ளலாம். அண்மைக்காலங்களில் அரசியல்வாதிகள் பகிரங்க சொத்துப் பிரகடனத்தைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வந்திரு…

  4. அரச பொது ஊழியர்கள் சங்கம் டக்ளசுக்கு ஆதரவு! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், “எமது சங்கமானது 30 வருடகால அனுபவத்தை கொண்டு வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட பாரிய தொழிற்சங்கமாகும். எமது தொழிற்சங்கமானது பாரிய திட்டங்களைக் கொண்டு தொழிற்சங்க ஊழியர்களின் ஊடாக மக்களுக்கும் சேவையாற்றி வந்திருக்கிறது. மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். அந்தவகையில் சுமார் முப்பது வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்தோம். …

  5. பெருந்தோட்ட மக்களை ஒருபோதும் கைவிடேன்- மஹிந்த மலையக மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு பேரிழப்பு. என்றாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை தமக்கு அளிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “அமரர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோதுகூட பெருந்தொட்ட மக்கள் தொடர்பாகவே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார். பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்…

  6. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது… July 26, 2020 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும். இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரித்து வெளியிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் தமிழ்த் தேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும். அதனை ஏற்பதற்கு சிறீலங்கா அரசு மறுத்தால் ஐக்கிய நாடுகள் சபையிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமெனக் கோருவோம். இனவழிப்பு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வ…

  7. சம்பந்தனின் மிரட்டல்கள் ராஜபக்ச அரசுக்குத் தூசி - விமல் வீரவன்ச.! "தமிழர்கள் மாதிரி சிங்களவர்களையும் முட்டாளாக்கலாம் என்று சம்பந்தன் நினைக்கின்றார். அவரின் வாய்ச்சவடால் சிங்களவர்கள் மத்தியில் எடுபடவே மாட்டாது. அவரின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவேமாட்டோம். அவரின் எச்சரிக்கைகள் அரசுக்குத் தூசி போன்றது." இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 'சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழர்களை முட்ட…

    • 4 replies
    • 765 views
  8. எழுபதாயிரம் வாக்குகள் கிடைத்தால் இரண்டு ஆசனங்கள் பெற முடியும் - திருமலையில் சம்பந்தன்.! இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சி.தர்சன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் உட்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் எழுபதாயிரம் வாக்குகளை அளிப்பதன் மூலம் இரு ஆசனங்களை கைப்பற்றமுடியும் என தெரிவித்தார். இலங்கை தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம். …

  9. தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன் தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் 70வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்து வருகின்றது. தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வநாயகம் மற்றும…

    • 9 replies
    • 917 views
  10. தேர்தல் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் – ம.உ.ஆணைக்குழு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுக்குரியது என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. மேலும், “கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது பெறப்பட்ட அனுபவங்கள் மூலமும் கொ…

  11. பிள்ளையானால் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய முடியும்? அம்பிட்டிய சுமணரத்தன தேரர் கேள்வி July 25, 2020 கனகராசா சரவணன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும் இருப்பதால் கபினற் அமைச்சர் பதவியில் அமர முடியாது. எனவே அவர் பாராளுமன்றம் சென்று செய்யக் கூடியது என்ன ? என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இன்று சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 2020 பொது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் சல த…

    • 1 reply
    • 814 views
  12. அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி July 25, 2020 “பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பத…

  13. 201ஆம் ஆண்டு தேர்தலில் யாழ் தேர்தல் மாட்டத்தில் நடந்த “தில்லாலங்கடி“ வேலை மீண்டும் இடம்பெற போகிறதா என வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2015 தேர்தலில் சில “பிழையான“ சம்பவங்களிற்கு துணை போனதாக கூறப்படும் மொஹமட் என்ற அதிகாரி, ஓய்வுபெற்ற பின்னரும் மீளவும் அழைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது இதற்காகவா என்ற அதிர்ச்சிக் கேள்வியையும் எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டுயாழ் தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் சில பிரச்சனைகள் உள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தேர்தல் முடிவுகள் முழுநாளு…

  14. முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் -மனோ கணேசன் ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும், துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான ம…

  15. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான வழக்குகள் கொழும்புக்கு மாற்றத் தீர்மானம் தொல்பொருள்களை பாதுகாத்து தேசிய மரபுரிமைகளை உறுதி செய்வதற்கு தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.இச்சட்டம் எவ்வாறு திருத்தப்பட வேண்டுமென்பது குறித்து ஆராய்வதற்கு மகாசங்கத்தினர் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் அழிவுகளை நிறுத்தி நாட்டின் மரபுரிமைகளை எதிர்கால தலைமுறைக்கு வழங்குவதில் நடைமுறையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பது இச்சட்டத்தை திருத்தவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது…

  16. திருமலை மாவட்டத்தை பாராளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் வெற்றி கொள்வோம்; ஹக்கீம் July 25, 2020 வாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் நவாஸ் மாஸ்டர் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்; கலந்துகொண்டு உரையா…

  17. புதிய அரசமைப்பு உருவாகாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என்றவர்களுக்கு யாழில் வணபிதா சாட்டை July 25, 2020 புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என வணபிதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வொன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் வணபிதா ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வராவிடின் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு இராஜினாமா செய்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அதன் பின்னர் தேர்தலை சந…

  18. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியை பெற்றுத்தர வேண்டும் July 25, 2020 காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மன்னாரில் இன்று சனிக்கிழமை(25) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, …

  19. நாங்களும் மலையகத்தில் பிறந்தவர்கள்தான் - மக்களுக்கு சேவையாற்றவே பிரபு தேர்தலில் போட்டியிடுகின்றார் - முத்தையா முரளிதரன் தெரிவிப்பு" நாங்களும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கண்டியில்தான் பிறந்தோம். எனது அப்பா மஸ்கெலியா பகுதியில் வாழ்ந்தவர். அவரின் முயற்சியால் நாம் இன்று பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.எம்மிடம் பணம், புகழ், பெயர் எல்லாம் இருக்கின்றது. அரசியலுக்குவந்ததான் அவற்றை சம்பாதிக்கவேண்டும் என்றில்லை. எனினும், மக்களுக்கு சேவையாற்றவே எனது சகோதரர் தேர்தலில் போட்டியிடுகின்றார். முத்தையா பிரபு வெற்றிபெற்றாலும், பெறாவிட்டாலும் வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்."இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா ம…

    • 0 replies
    • 373 views
  20. ஒன்றையாட்சிக்குள்ளேயே தீர்வு; ஒருமித்த நாட்டுக்குள் முடியாது! – மஹிந்த ஒருமித்த நாடு என்ற சொற்பதத்துக்குள் சமஷ்டி தீர்வை – தன்னாட்சி தீர்வை – உருவாக்க முடியும். எதிரணிகளின் இந்த திருட்டுத்தனம் பற்றி நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். அதனாலேயே ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், “ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு. இந்த சொற்பதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோம். சம்பந்தர் அணியினரும் சஜித் அணியினரும் கூறும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தை ஏற்கமாட்டோம். அதுதான் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சொற்பதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியாவது …

  21. முன்னாள் போராளியின் பணப்பரிசில் பாதியை பொலிஸ் அதிகாரி பெற்றார் போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்ட சாட்சியம் கிடைக்கப்பெற்றுதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப்புலி போராளியிடம் இருந்து இவ்வாறே பரிசுத் தொகையில் பாதி தொகையை பொலிஸ் அதிகாரி பெற்றுள்ளார். குறித்த நபர் 2016ம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊ…

    • 5 replies
    • 1.2k views
  22. எதிர்காலத்தை காக்க நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் - இரா.சாணக்கியன் எதிர்காலத்தினைக் காப்பதற்கு நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “எதிர்வரும் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றிலிருந்து 12 நாட்களே உள்ளன. இந்த 12 நாட்களே எம் எதிர்காலத்தினை தீர்மானிக்கவுள்ளன. இந்த தீர்க்கமான காலகட்டத்தில் நாம் அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இ…

  23. சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள்; மஹிந்தவுக்கு விக்கி பதில் July 24, 2020 “வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன். கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் வல்வெட்டித்துறையில் இன்று மாலை இடம்பெற்ற போது தலைவருரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு; “ஆகஸ்ட் 5ம் திகதிக்கு மிகச் சொற்ப நாட்கள…

  24. போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது ´´போராட்ட காலத்திலே தான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது´´ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார், உப்புக்குளத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட், 19 வருட அரசியல் பயணத்தில், எல்லாக் காலமும் போராட்டத்துடனேயே நீச்சலடித்து வருகிறேன். உங்கள் ஊரான …

    • 1 reply
    • 851 views
  25. O/L, A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளை திறக்கும் தினம் மற்றும் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சி இதனை தெரிவித்துள்ளது. ஏனைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்…

    • 0 replies
    • 559 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.