Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாணவனை தாக்கிய அதிபருக்கு ஓராண்டுச் சிறை! 15 வயது மாணவனை கன்னத்தில் தாக்கிய அதிபருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று (26) தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அதிபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், முறைப்பாடு செய்த மாணவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் வழங்குமாறும், அதனை செலுத்த தவறின் மேலும் 6 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் சேவைக்கு தாக்கம் செலுத்தாமல் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதியில் எப்பாவல பாடசாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்…

  2. இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன்,…

    • 8 replies
    • 804 views
  3. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து கலந்துரையாடல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று (25) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளனர். இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லலை. அத்தோடு, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் த…

    • 5 replies
    • 1.1k views
  4. ஸ்ரீலங்காவின் எல்லை மற்றும் கடலோரா பாதுகாப்பு பலவீனமானதாக காணப்படுகின்றது என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் காணப்பட்ட பயங்கரவாதநிலை குறித்த தனது வருடாந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, ஸ்ரீலங்காவின் எல்லைக்காவல் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்ந்தும் பலவீனமானதாக காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளுடனும் ஜப்பானுடனும் இணைந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் எல்லை முகாமைத்துவ நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா தனது கடல்சார் எல்லையை பாதுகாப்பதற்காக அமெரிக்காவுடனான தனது இணைப்பை வி…

    • 0 replies
    • 499 views
  5. நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ அல்லது ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லையென முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சரும், பாராளுமன்ற வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உண்மையில் போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையில் இருந்து பலர் கிளிநொச்சி சென்று நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார்கள். அப்படி ஒருமுறை பொங்கு தமிழ் விழாவில் நான் உரை நிகழ்த்தும் போது, “இலங்கையில் தமிழ் தேசியமும், சிங்கள தேசியமும் ஒன்றாய் வாழ இன்னமும் அவகாசம் இருக்கிறது. இரண்டு இனங்களுக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும். சமத்துவம் இல்லாவிட்டாலேயே பிரிந்து செல்லும் தேவை ஏற்படுகிறத…

    • 0 replies
    • 886 views
  6. வடபகுதியில் பெருமளவு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் இடம்பெற்றிருந்தன, அதேபோல கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முயற்சியின் பயனாகவே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு முயற்சி எடுக்கப்பட்டது.ஏனைய அரசாங்கங்களோடு ஒப்பிடும்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது சிறுபான்மை இனத்தவர்களாக ஆகிய தமிழ் முஸ்லிம் மக்கள் மீது அதிக அக்கறை காட்டியதோடு ஜனநாயக ஆட்சியை மேற்கொண்டது என விஜயக…

    • 1 reply
    • 364 views
  7. கொழும்பு – யாழ் பஸ் விபத்து : 18 பேர் காயம் ஏ-9 வீதியில் இன்று அதிகாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து, ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த 18 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/கொழும்பு-யாழ்-பஸ்-விபத்த/

    • 1 reply
    • 534 views
  8. தமிழர்களுக்கு சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயமான தீர்வு என சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ளும்படி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் செயற்பட்டார் .தமிழர்களுக்கு சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு அவசியம் என்றும் அதற்காக நாம் முழுமையாக செயற்பட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும் மாற்று அணியென கூறிக்கொள்பவர்களால் 5 ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமா என கேள்வியெழுப்பிய சுமந்திரன், அவர்கள் தமிழர்களை சின்னபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள் என மேலும் தெரிவித்தார்.நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார…

  9. தமிழரசுக்கட்சியின் வீட்டை விச நாகங்கள் சூழ்ந்துள்ளது – இப்படி சொல்கிறார் அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவதென்பது நகைச்சுவையானது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (27) திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது’ தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், …

    • 2 replies
    • 651 views
  10. சித்தண்கேணியில் அச்சுறுத்தல் விடுத்து கொள்ளை! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தி தாக்கி 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. வயோதிபப் பெண்கள் இருவர் மட்டும் வதியும் வீடொன்றில் நேற்று (26) அதிகாலை 1.10 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர். ஒருவர் அவ்வாறு ஆலயத்துக்குச் சென்றார். அதன்பின்னர் மற்றைய வயோதிபப் பெண் கூக்கு…

  11. இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால் எச்சரிக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கருணாவின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட நெருக்கமான நபரின் பேஸ்புக் கணக்கிற்கு அவ்வாறு அரசாங்கத்தின் எச்சரிக்கை அடங்கிய தகவல் கிடைத்துதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மத தலைவர்களுக்கு கருத்து வெளியிடும் முழுமையான சுதந்திர வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக அந்த சுதந்திரத்தை தடை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில்…

    • 1 reply
    • 562 views
  12. இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், சர்வதேசம் என்பது இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியாக பயன்டுத்திக் கொள்ள முடியுமே தவிர முழுமையாக நம்பி இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். கரம்பன் கிழக்கு ஸ்ரீ ஞான வைரவர் சனசமூக நிலைய முன்றலில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாகவும், பூகோள அரசியல் நகர்வுகளை பயன்டுத்தியும் தமிழ் மக்களின் பிரச்…

    • 3 replies
    • 588 views
  13. சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும்…! கொவிட்-19 தொற்று தற்போது இலங்கையில் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொவிட்-19 காரணமாக 46 வழிகாட்டல் கோவைகள் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும்போது, பொதுமக்கள் இது குறித்து கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வைரஸ் தாக்க நிலையை தவிர்க்கும் பொறுப்பு அனைத்து மக்கள…

  14. மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை ! கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளைமுதல் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள…

  15. இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா? – .விக்னேஸ்வரன் கேள்வி பாரம்பரியமாக தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும்.அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை…

    • 1 reply
    • 319 views
  16. பதவி விலகினார் பேராசிரியர் ஜயந்த தனபால! அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார். தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் முடிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்ற அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எனவே பெரும்பாலும் இந்த வெற்றிடத்திற்கான புதிய நியமனம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்பட…

  17. குருபரனுக்கு எதிராக ஆஜராக சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு! யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளின் போது, அரச நிறுவனங்களான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் – குருபரனுக்கு எதிராக வாதாடுவதற்குச் சட்டத்தரணிகளை நியமிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளின் போது, அரச நிறுவனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசன…

  18. நயினாதீவுக்கான பாஸ் நடைமுறை இரத்து! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று (26) யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது. இதன்போது எமக்கு பதிலளித்த பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மால், அவ்வாறான எந்த பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாகவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப.பொலிஸ் …

  19. ஷாபி விவகாரம்; பரிசோதனையில் பாதிப்பில்லை என கண்டறியப்பட்டது குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராகவிருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த பெண் ஒருவருக்கு குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி பரிசோதனைகளில் அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும் தடங்கல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (25) இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குருநாகல் நீதிமன்றின் …

  20. சிறுவன் விழுங்கிய ஊசி 25 நிமிட போராட்டத்தின் பின்னர் அகற்றப்பட்டது வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக விழுங்கப்பட்ட 3 அங்குல நீளமான ஊசி 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (20) மாலை குறித்த சிறுவன் ஊசியை விழுங்கிய நிலையில் மறுநாள் (21) வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்து கதிரியக்கப்படம் பிடிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று நெஞ்சடைக்கூட்டு பகுதிகளிலுள்ள இதயம் நுரையீரல் துளைக்க வாய்ப்புள்ள நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதே தினம் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்…

  21. குடியிருப்பு குளப்பகுதியை சீர்கேடான நிலைக்கு தள்ளும் குடிமகன்கள் வவுனியா – குடியிருப்பு குளப்பகுதியில் நின்று மது அருந்துபவர்கள் மதுப்போத்தல்களை அப்பகுதியில் வீசுவதால் சுகாதார சீர்கேடான நிலமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் என்பன அமைந்துள்ளன. இதனால் மாலை வேளைகளில் அப்பகுதியில் அதிகளவான மக்கள் மற்றும் சிறுவர்கள் வந்து செல்லும் இடம் என்று தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் மாலை வேளைகளில் அங்கு நின்று மது அருந்துபவர்கள் மதுபோத்தல்களை குளத்தினுள் வீசுவதுடன், ஆலய சூழலுக்கு அண்மையில் வீசி வருவதும், போத்தல்களை வீதிகளில் போட்டு உடைக்கும் நிலையும் நீடித்து வருகின்றது. இத…

  22. மடு திருவிழாவில் 1000 பக்தர்களே கலந்து கொள்ள முடியும்! மன்னார் மடுமாதாவின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில், வருடந்தோறும் அரச அனுசரனையுடன் நடைபெறும் பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும். த…

  23. கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று – அனந்தி சசிதரன் மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள். கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருணா கடந்த காலங்க…

    • 14 replies
    • 1.3k views
  24. யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர். https://newuthayan.com/யாழ்-ஆயரை-சந்தித்த-த-தே-ம-ம/

    • 4 replies
    • 1k views
  25. "ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை" தான் என்று நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன? என்ற கேள்வியை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடமும் முன்வைத்தோம். ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு இலங்கைத்தீவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை திரட்டி அதனை சத்தியக் கடதாசிகளாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த செயல்திட்டத்தை செய்த ஒரேயொரு கட்சி நாங்கள் மட்டும் தான். தமிழ் மக்கள் சார்பில் பேசுகின்ற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரப்பு…

    • 4 replies
    • 860 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.