Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது திருத்தத்தை மாற்றினால் இந்தியா பகைத்துக்கொள்ளும்.! மூன்றில் இரண்டு பலம் வழங்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார். நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தை கோருகின்ற அரசாங்கம் 13ம் 19ம் திருத்தச்சட்டங்களை மாற்றப் போவதாக நேரடியாக தெரிவிக்கின்றது. அவ்வாறு மாற்றினால், தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி செயற்படும் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவர் இருக்க மாட்டார் என அவர் எச்சிரிக்கை விடுத்துள்ளார். மேலும் சர்வாதிகாரமுள்ள சில வரையறைகள் விதிக்கப்படும…

  2. வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால்போதும் அதிகாரப்பகிர்வு அவசியமில்லை..! இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும். இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர். அத்துடன், "வடக்கு மக்களுக்கு வாழும் உரிமை இருந்தால் போதும் அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை " , எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசமைப்பின் 13-ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய அரசால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். எனவே, அதனை மதிக்கவேண்டும், ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும்…

    • 4 replies
    • 937 views
  3. சஹ்ரான் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் விசாரணை! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அவருடன் தொடர்புடைய 14 கோப்புகளை பராமரித்து வந்ததாகவும் முன்னாள் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹசீமை கைது செய்ய தான் கடந்த 2018 ஆம் ஆண்டு திறந்த பிடியாணையை பெற்றிருந்த போது அவரை கைது செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவிற்…

    • 0 replies
    • 366 views
  4. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜப்பான் 800 மில்லியன் யென் உதவி கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக மருத்துவ சாதனங்களை பெற்றுக் கொள்ள 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் நேற்று (08) இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள…

    • 0 replies
    • 270 views
  5. ரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=130716

    • 0 replies
    • 455 views
  6. தொல்பொருள் ஆய்வு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்! by : Benitlas தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவ…

    • 0 replies
    • 332 views
  7. தமிழரசுக்கட்சியை பாதுகாப்பதற்காகவே தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளது – விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் by : Benitlas இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார். யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று(வியாழக்கிழமை) மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையிலிருந்து மாறக்கூடாது எனவும் அவர்…

    • 3 replies
    • 864 views
  8. மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை! by : Litharsan மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப் போவதாக ஆளும் தரப்பினர் கூறிவரும் சூழலி…

    • 0 replies
    • 400 views
  9. 4 ஹெலிகளை கொள்வனவு செய்ய அனுமதி இலங்கை விமானப்படையினர் பயிற்சி நடவடிக்கைகாக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். தற்போது பயிற்சிக்காகப் பயன்படுத்திவரும் 2 ஹெலிகொப்டர்களும் 1981ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/4-ஹலகள-களவனவ-சயய-அனமத/175-252975

  10. எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து..! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை, 16 பேர் கொண்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்…

    • 26 replies
    • 3.1k views
  11. யாழ். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல் தவறாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினர் 1995ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தனர். 147 பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். யாழ். குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் அப்போதைய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்கள் விமானப் படைக் குண்டு வீச்சில் சாவடைந்திருந்தனர். அவர்களை நினைவுகூர்ந்து நினைவ…

    • 10 replies
    • 1.7k views
  12. டிப்பர் மோதி 18 மாடுகள் பலி! கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளது. https://newuthayan.com/கிளிநொச்சியில்-லொறி-மோதி/

    • 2 replies
    • 479 views
  13. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது - சந்திரகுமார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தங்களோடுதான் இருக்கின்றார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவித்துள்ள கருத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் கருத்து. தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இந்த தேர்தலில் ஏமாற்றுவதற்கு இவ்வாறான அறிக்கைகளை அவர்கள் விடுகின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், பிராந்திய அரசியல் நலன்கள்சார்ந்து இந்தியா எப்பொழுதும் கொழும்போடுதான் இருந்துள்ளது. இன்றும் இருந்து வருகிறது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஏனைய நாடுகளின் எந்த விடயத்திலும் தலையிடுகின்ற போது தங்களின்…

  14. அம்பாறையில் இலவச கையேடுகள் வழங்கி வைப்பு! தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 100 இலவச கையேடுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கண்ணகி வித்தியாலயம், திருக்கோவில் புனித சவேரியார் வித்தியாலயம் மற்றும் கல்முனை பாசுபதேஸ்வரர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற 100 மாணவர்களுக்கே இவ்விலவச கையேடுகள் வழங்கப்பட்டன. https://newuthayan.com/அம்பாறையில்-இலவச-கையேடுக/

  15. தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் சனிக்கிழமை போராட்டம் July 9, 2020 தொல்பொருள் ஆய்வுகுழுவினரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11 ம் திகதி மட்டக்களப்பில் அமைதிவழிபோராட்டமொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் மட்டளக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி நியமித்துள்ள தொல்பொருள் ஆய்வுகுழுவில் தமிழர்களோ முஸ்லீம்களோ உள்வாங்கப்படவில்லை என தமிழ் உணர்வாளர்கள் அமை;பு சுட்டிக்காட்டியுள்ளது. ஒருதேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடு எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்பாடதபோதே மர்மம் தோ…

    • 1 reply
    • 352 views
  16. பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு July 9, 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பான விசேட அறிவித்தலொன்று பொலிஸ் தலைமையகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிவித்தலிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலின் ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன் தேர்தல் மு…

  17. ஆடி அமாவாசை தினத்தில் கடலோரங்களில் பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு அனுமதி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர்க் கடனை செய்வதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் குறித்த தரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சரவையில் அது தொடர்பில் பரஸ்தாபித்திருந்தார். இதையடுத்து குளங்கள் குறுகிய பரப்பை கொண்டுள்ளதால் கொரோனா தொற்று பரவும் சாத்தியம் அங்கு அதி…

  18. கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரை…

  19. பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அரசியல் பின்புலங்கள் கண்டறியப்பட வேண்டும்..!- சம்பிக்க நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடிப்படைவாத தாக்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரசியல் பின்புலங்கள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு சூத்திரதாரிகள் …

  20. சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்; நொருங்கியது ஆட்டோ! கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர். https://newuthayan.com/சங்கு…

    • 1 reply
    • 397 views
  21. விபத்து மரணங்களை தவிர்க்க கிளி. வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள்! வட மாகாணத்தில் அதிகரித்துவரும் பாரவூர்திகளால் ஏற்படுத்தப்படும் தவிர்க்கப்படக்கூடிய உயிரிழப்புக்கள் குறித்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள் இன்று (08) வெளியிட்டு வைக்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுனர்கள் இணைந்து குறித்த அறிக்கையினை தயாரித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் விபத்துக்களினால் அதிகளவான மரணங்கள் பதிவாகிவரும் நிலையில், அவற்றை தவிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடி்ககைகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மக்களைப் பீதிக…

    • 1 reply
    • 415 views
  22. வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி; 13 பேர் கைது! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் 3 படகுகள் மீட்கப்பட்டதுடன், சிலிண்டர்கள் உட்பட சட்டவிரோத தொழில் உபகரணங்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://newuthayan.com/வெற்றிலைக்கேணியில்-சட்ட/

  23. அதிர்ச்சிதரும் பொலிஸாரின் ட்ரக்ஸ் டீலிங் உண்மைகள்! பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் குழுவினர் சர்வதேச கடல்வழிப் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். பாரியளவில் போதைப்பொருட்களை பெற்று விற்பனை செய்தனர். அவர்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்தனர்” இவ்வாறு போதைப்பொருள் ஒழிப்பு பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பான வழக்கில் இன்று (08) நீதிமன்றில் சிஐடி சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஸிக்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வௌிப்படுத்தினார். மேலும் அவர் நீதிமன்றில் தெரிவிக்கையில், “கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் வீடுகள், சொகுசு வாகனங்களில் போதைப் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரிகளிடம் சட்டவிரோத துப்…

    • 3 replies
    • 654 views
  24. “இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு. எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது, “விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர…

  25. (ஆர்.யசி) கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை செயலணிக்கு வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எனவே இந்த விடயம் அரசியல் ரீதியில் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த காரணிகளை அமைச்சர் டக்லஸ் தேவானந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.