ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
சிறப்பாக இடம்பெற்ற மடுமாதா திருவிழா! மன்னார் – மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று (02) காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி கொடியேற்றத்தினைத் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று (01) மாலை வேஸ்பர் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். …
-
- 0 replies
- 516 views
-
-
கட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி (எம்.நியூட்டன்) கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்த ரூபன் கட்சியின் தலைவருக்கம், செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்க…
-
- 0 replies
- 306 views
-
-
நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை July 2, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வே…
-
- 2 replies
- 386 views
-
-
ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் – விஜயகலா July 2, 2020 கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என முன்னாள் கல்வி இராசாங்க அமைச்சர்விஜயல மகேஸ்வரன் தெரிவித்தார். தும்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்ததாவது, 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள் என அவர் தெரிவித்த…
-
- 1 reply
- 345 views
-
-
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடவடிக்கை July 2, 2020 சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உரைகள்,பொய்யான தகவல்கள்,மத சமூக விடயங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது போன்றவற்றை கண்காணிக்கவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. கரிசனைக்குரிய சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. இவ்வாறான விடய…
-
- 0 replies
- 263 views
-
-
1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/1500-கிராம-உத்தியோகத்தர்கள்/
-
- 0 replies
- 293 views
-
-
யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதன்படி சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார். https://newuthayan.com/யாழில்-தேர்தல்-பிரச்சாரத/
-
- 8 replies
- 864 views
-
-
நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்! பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் குறித்த சந்த…
-
- 2 replies
- 511 views
-
-
காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு முன்னுரிமை காட்டுகின்றோம் என்றும் குறிப்பாக வீடமை…
-
- 0 replies
- 192 views
-
-
பொலிஸார் நால்வரிடம் இருந்து 31 மில்லியன் ரூபாய் கைப்பற்றல்! போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வரிடம் இருந்து இதுவரை 31.45 மில்லியன் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதத்துடன் புதிதாக மூன்று வாகனங்களும் ரி-56 மகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பொலிஸார் நால்வர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். https://newuthayan.com/பொலிஸார்-நால்வரிடம்-இருந/
-
- 0 replies
- 308 views
-
-
பிரச்சாரத்துக்கு எனது படத்தை பயன்படுத்தாதீர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தனது படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தமது கட்சியின் வேட்பாளர்களுக்கே இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். https://newuthayan.com/ஜனாதிபதி-விடுத்துள்ள-அறி/
-
- 2 replies
- 472 views
-
-
கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைக்க இணக்கம்: டக்ளஸின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றார் July 1, 2020 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை பிரதிநிதி…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்திருந்தார் என தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். இது…
-
- 1 reply
- 465 views
-
-
அலரிமாளிகையில் இன்றையதினம் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டு, இது யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மாம்பழம் ஒன்றை சுவைத்த பிரதமர் மஹிந்த, யாழ்ப்பாண மாம்பழம் மிகவும் அருமையான சுவைகொண்டது என்று கூறி சுவைத்து மகிழ்ந்தார் https://www.virakesari.lk/article/84925
-
- 1 reply
- 1.1k views
-
-
கை கழுவும் நீர் பூமரங்களிற்கு…! பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பழைய பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொண்டு கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்காக 10 இற்கும் மேற்பட்ட கை கழுவும் கோப்பைகளை சிறப்பான முறையில் வடிவமைத்து அவற்றை பூ மரங்களுக்கு பயன்தரும் வகையில் மிகவும் நேர்த்தியாகப் பொருத்தியுள்ளனர். இதனால், மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லும் முன்னர் தமது கைகளை தொற்று நீக்கிகள் மூலம் சுத்தப்படுத்துவதுடன் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தண்ணீர் வீண்விரயம் செய்வதும் தடுக்கப்படுகின்றது. உடுவில் மகளிர் கல்லூரியின் இந்த சிறப்பான செய…
-
- 6 replies
- 777 views
- 1 follower
-
-
கல்முனை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் நேற்று (30) மாலை இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய நிலையில் பாதிப்படைந்திருந்தன. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 25 க்கும் அதிகமானோர் பங்கேற்று பல்வேறு சுலோகங்களை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் இப்போராட்டத்தில் மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீலங்கா பெரமுனை கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீர…
-
- 0 replies
- 410 views
-
-
பொதுத் தேர்தலின் முஸ்லிம் சமூகம் தங்களது தார்மீக ஒற்றுமையை காட்ட வேண்டும்; ஜே.எம்.லாஹிர் நாட்டில் உள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை ஏற்படுத்திய கட்சி என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். தோப்பூர் பகுதியில் நேற்று (30) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: சமூகத்தின் விடுதலைக்காகவும், முஸ்லிம்களின் உரிமைக்காகவும் தற்போதைய கட்சியின் தேசியத் தலைமை ரவூப் ஹக்கீம் அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். அத்தோடு இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் முஸ்லிம் சமூ…
-
- 0 replies
- 390 views
-
-
நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். “1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள். …
-
- 16 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.! செவ்வாய், 30 ஜூன் 2020 10:24 PM தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர் சத்தமில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த 22 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விடயம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கைதானவர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஈ – காணி பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை July 1, 2020 காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ச…
-
- 5 replies
- 831 views
-
-
யாழில் அமுலுக்கு வரும் தடை! யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தெரிவித்துள்ளது. இவ் நடைமுறையானது இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றது. https://newuthayan.com/யாழில்-அமுலுக்கு-வரும்-த/
-
- 3 replies
- 878 views
-
-
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்! அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் …
-
- 0 replies
- 376 views
-
-
வடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அதற்கமைய முதல் பிரசாரக்கூட்டம் வவுனியாவில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்புக்கான அனைத்து பொருட்களும் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 432 views
-
-
தமிழர் தாயகம் வரலாறு தெரியாத தேரர்!- த.ம.தே கூட்டணி வேட்பாளர் காட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்றும் இந்த வரலாறு தெரியாமல் எல்லாவல மேத்தானந்த தேரர் உளறுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எஸ். நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களவர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார் தேரரின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றேன். இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று…
-
- 0 replies
- 389 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தம் கொண்டோரை தெரிவு செய்யுங்கள் – டக்ளஸ் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கபள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடாளுமன்ற தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ‘இன்று உலக நாடளுமன்ற தினம் (The International Day of Parliamentarism). அடுத்த நாடாளுமன்றத்தைத் தேரிவு செய்வதற்காக எமது மக்கள் தயாராகி வரும் சூழலில் இந்த நாள் வந்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் தன்னைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர் – கொ…
-
- 0 replies
- 708 views
-