ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
யுத்த வெற்றியின் 11ஆவது ஆண்டுப் பூர்த்தியின் போது விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சித்து புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்... https://youtu.be/EdFlBUajnTs https://youtu.be/71XE5oHYLwI https://www.tamilwin.com/sta…
-
- 2 replies
- 874 views
-
-
சங்ககாராவின் யுத்த வெற்றி நாள் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் இலங்கை கிரிக்கட் வீரர்களில் நல்லவர், நேர்மையாயனவர், இனவாதம் அற்றவர் என்று எல்லாம் தமிழ் இளைஞர் , யுவதிகளினால் பாராட்டி மிகவும் மதிக்கப்பட்டுவந்த முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தை வென்றதாக தென் இலங்கையில் கொண்டாடப்படும் மே 19 வெற்றி நாளில் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து அவரின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்களின் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது. இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த படையினருக்கு நன்றி செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள அவர் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு …
-
- 19 replies
- 2.1k views
-
-
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த டிலும் அமுனுகம, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து ஜனாதிபதியினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் கூற…
-
- 4 replies
- 865 views
-
-
சீரற்ற வானிலை – 20 ஆயிரத்து 265 பேர் பாதிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 356 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 142 குடும்பங்களை சேர்ந்த 608 பேர், தெரிவுசெய்யப்பட்ட 34 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 21 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 150 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்ப…
-
- 1 reply
- 517 views
-
-
மட்டக்களப்பில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச காணியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஷ்ணகாந் தெரிவித்தார். கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு படையினர், கல்குடா பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ பரவல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வ…
-
- 0 replies
- 407 views
-
-
சர்வதேச அமைப்புகளின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை விலகினால் அது நாட்டுக்குத்தான் பேராபத்தாக மாறும். இது நாட்டின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தெரியாதா? என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார் . படையினருக்கு அழுத்தங்கள் கொடுக்கும் வகையிலும் நாட்டுக்கு அநீதியை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தொடர்ந்து செயற்பட்டால் அவற்றின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போர் வெற்றி விழாவில் உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் ம…
-
- 3 replies
- 724 views
-
-
மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது Bharati May 21, 2020 மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது2020-05-21T15:24:16+00:00Breaking news, உள்ளூர் கொழும்பு, மாளிகாவத்தையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 4 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒருவர், வீடொன்றில் வைத்து நிவாரணமாக பொருட்களையும், பணத்தை விநியோகம் செய்த போதே அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்ற போது ஏற்பட்ட சன நெரிசலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. மாளிகாவத்தை மிரானியா மாவ…
-
- 3 replies
- 959 views
-
-
திருகோணமலை - மூதூர் பகுதியில் யுவதியொருவரை கடத்திச் சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரொருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார். நடுத்தீவு, மூதூர் - 7, பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வெருகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய தமிழ் யுவதியொருவரை கடத்தி சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்திச் செல்வதாக அப்பிரதேச பள்ளிவாசலினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் குறித்த இளை…
-
- 0 replies
- 434 views
-
-
11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை Leftin May 19, 2020 11ஆவது போர் வெற்றி விழா இன்று மாலை2020-05-19T10:11:31+00:00Breaking news, உள்ளூர் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறுகின்றது. இன்றைய போர் வெற்றி விழாவில் 14 ஆயிரத்து 617 இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்படவுள்ளன. இலங்கையில் இராணுவ வரலாற்றில் இடம்பெற்றுள்ள பதவி உயர்வு நிகழ்வுகளில் ஒரு நாளில் அதிக இராணுவத்த…
-
- 30 replies
- 3.3k views
- 1 follower
-
-
(ஆர்.யசி) நாட்டின் தேவைக்காக பாதுகாப்பு படைகளை சகல துறைகளிலும் இணைத்துக்கொள்வதே ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் உறுதியான நிலைப்பாடாகும். எமது கொள்கைத்திட்டம் என்ன என்பதை ஜனாதிபதி போர்வெற்றி தினத்தில் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தெளிவாக தெரிவித்துவிட்டார் என்கிறது அரசாங்கம். ஜனாதிபதியின் தீர்மானங்களில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லையெனவும் கூறுகின்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியின் போர் வெற்றிதின உரை மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே சந்திப்பில் இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்து…
-
- 1 reply
- 307 views
-
-
(எம்.நியூட்டன்) ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்தைத் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அத்தகைய நிலையில் தான் பாராளுமன்றத் தேர்த…
-
- 2 replies
- 394 views
-
-
கொரோனாவினால் மரணமடைந்தவர்களை மத முறைப்படி நல்லடக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களை அவரவர் மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீமினால் முன்வைத்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபையின் இறுதி கட்ட நிகழ்வில் திடீரென எழுந்த கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், ‘கடந்த காலங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் அனர்த்தங்களினால் …
-
- 0 replies
- 471 views
-
-
யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (வியாழக்கிழமை) மாலை மீட்கப்பட்டது. பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தமிழ் யுவதியை அவ்வழியாக சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற…
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் slemb.abudhabi@mfa.gov.lk மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்ற…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா Rajeevan Arasaratnam May 21, 2020 ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது என்ற சிந்தனையே விபரீதமானது- ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா2020-05-21T08:34:15+00:00உள்ளூர் ஐநாவிலிருந்து இலங்கை விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் எச்சரித்துள்ளார். இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என இலங்கை ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளமை குறித்தே முன்னாள் தூதுவர் தனது கருத்தினைவெளியிட்டுள்ளார் . ஜனாதிபதி தனது உரையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையையும்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை 2020இல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் ஏற்கெனவே எதிர்வுகூறியிருந்த மீட்சி நிலைக்கு மாறாக, நாட்டின் மோசமான கடன்நிலை காரணமாக, பெருமளவு பொருளாதார சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும், S&P குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மோசமான கடன் நிலைமையை கவனத்திற்கொண்டு, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தரப்படுத்தலிலிருந்து மேலும் ஒரு நிலை குறைத்து B-ஆக தரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே B தரப்படுத்தலை இலங்கை உறுதியான புறத்தோற்றத்துடன் கொண்டிருந்ததாக S&P தெரிவித்ததுடன், முதலீட்டு தரப்படுத்தலிலிருந்து ஆறு மட்டங்கள் குறைந்ததாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது…
-
- 0 replies
- 395 views
-
-
முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த படையினரும் பொலிஸாரும் சுகாதார தரப்பினருடன் இணைந்து கொவிட் 19ற்கு எதிரான இன்னொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தமல்ல எவ்பிஐயினால் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிற்கு …
-
- 18 replies
- 1.2k views
-
-
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக மூடப்பட்டது ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் அவசர நிலமை காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் தூதரகத்தினை slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணையம் மூலம் அல்லது 800 119 119 என்ற தொலைபேசி இயக்கத்தின் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவித்துள்ளது.இந்நிலையில் ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையிலேயே அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஐக்கிய-அரபு-…
-
- 0 replies
- 493 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கடும் காற்று மழை: இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 150 திருமலை மீனவர்கள் Bharati May 21, 2020 கடும் காற்று மழை: இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 150 திருமலை மீனவர்கள்2020-05-21T07:32:24+00:00உள்ளூர் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற 30 மீன்பிடி படகுகளே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இவ்வாறு இந்தோனேஷியாவில் கரையொதுங்கிய மீனவர்களை இலங்கைக்குத் திருப்பிக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 879 views
-
-
பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்ட விடயங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே, அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயன்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கு தான் மீண்ட…
-
- 1 reply
- 434 views
-
-
அடக்குமுறைகள் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் – சிறிநேசன் by : Benitlas அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இறுதியுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் வடக்கு-கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட…
-
- 1 reply
- 390 views
-
-
முன்னாள் எம்.பி.செல்வத்துக்கு கதிரின் திறந்த மடல் சிங்கள மொழி நேர்காணலொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம். ஏ. சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்ததையடுத்து , தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமிர்தலிங்கம் சகாப்தத்தின் நூலின் ஆசிரியரான கதிர் பாலசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு திறந்த மடலொன்றை எழுதியுள்ளார். மதிப்பிற்குரிய திரு. செல்வம் அடைக்கலநாதன் கவனத்திற்கு திரு. சுமந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/82356
-
- 8 replies
- 968 views
-
-
முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று சுடர் ஏற்றப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை புதுக்குடியிருப்பில் விசுவமடு தனியார் ஒருவரின் காணியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள். மே 18 …
-
- 26 replies
- 3.3k views
-