ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143666 topics in this forum
-
தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. இந்த நிலையில் நேற்று தமிழ்…
-
- 18 replies
- 1.2k views
-
-
படுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020 மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் காவற்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், காவற்துறை அதிகாரியொ…
-
- 2 replies
- 504 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம் Bharati May 23, 2020 யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்2020-05-23T07:48:26+00:00Breaking news, உள்ளூர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று நடைப…
-
- 10 replies
- 1.3k views
-
-
கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை Bharati May 31, 2020கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை2020-05-31T13:38:06+00:00 யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர். பின்னர் வீட்டில…
-
- 4 replies
- 990 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான்- மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (28) மணல் அகழ்வுக்குச் சென்ற நபர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் கைகலப்பாக மாறி வாகனேரிப் பகுதியைச் சேர்ந்த ஐவர் காயங்கள் அடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறித்த சம்பவத்தின் பின்னர் சுமூகமான முறையில் தமிழ், முஸ்லிம் உறவுகள் பேணப்பட்டு வரும் நிலையில், அதில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இரு சமூகங்களும் சுமூகமான முறையில் வாழ வேண்…
-
- 1 reply
- 351 views
-
-
குருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020 சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பணிப்புக்கு எதிராக அவரால் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை வரும் ஜூன் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்துவது பற்றியும் இடைக்காலக் கட்டளை பற்றியும் முன்னுரிமை விடயங்கள் ஜூன் 30ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டது. சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் …
-
- 0 replies
- 357 views
-
-
இன்று இடியுடன் கூடிய மழை தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் . கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அ…
-
- 0 replies
- 402 views
-
-
மலையகத்துக்கு விடுதலை கோரி இளைஞன் போராட்டம்! மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி தனி நபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (30) காலை முதல் ஈடுபட்டார். நுவரெலியா – பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 வயது) என்ற இளைஞரே, மட்டக்களப்பு ஒளவையார் சிலைக்கு கீழ் அமர்ந்து, “மலையகத்தின் ஒரு குரல்”, “விடுதலை வேண்டும்” ஆகிய சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். போராட்டம் தொடர்பாக குறித்த இளைஞன் தெரிவிக்கையில், ‘பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான், எனது த…
-
- 0 replies
- 381 views
-
-
இது குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவித்துள்ளதாவது- அரசாங்க அமைச்சரும் தொழிற்சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமானிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கடந்த செவ்வாய்கிழமை காலமான அமைச்சரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. தொண்டமானின் உடலை பார்வையிடுவதற்காக பெருமளவு மக்கள் திரள்வதை தடுப்பதற்கா அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர். அமைச்சரின் உடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்வேளையும் பெருமளவானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிசடங்குகள் காரணமாக வைரசினை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மக்களின் நம்பிக்கைகள் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
ஜூன் முதலாம் திகதி முதல் ரயில்கள் சேவையில்…! ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 19,593 பேர் வேலைக்காக பயணிக்க ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். https://newuthayan.com/ஜூன்-முதலாம்-திகதி-முதல்/
-
- 0 replies
- 375 views
-
-
வாழைச்சேனை கடதாசி ஆலை பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிப்பு! கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிப்பட்டுள்ளது என்று அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமையவும் பிரதமர் மஹிந்தவின் வழிகாட்டலிலும், பல வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த நடவடிக்கையாக அட்டை தயாரிக்கும் இயந்திரத்தை இயங்க வைக்கும் நிகழ்வை விமல் வீரவன்ச ஆரம்பித்து வைத்திருந்திருந்தார். இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்கடதாசி ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க, அமைச்சின் உயர் அதிகாரிகள்,…
-
- 0 replies
- 401 views
-
-
வவுனியாவில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு Bharati May 30, 2020வவுனியாவில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு2020-05-30T21:48:41+00:00 வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை இன்று சனிக்கிழமை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் ஊடாக பண்படுத்தியுள்ளார். இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர், ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியை சோதனை செய்து பார்த்தபோது இரண்டு மோட்டார…
-
- 0 replies
- 727 views
-
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் சுமந்திரனால் களமிறக்கப்பட்டவர் அம்பிகா. இவர் கடந்த ஜெனீவா பயணத்தின் போது அங்கு சிவில் சமூக பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்தார். அங்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமை ஒருங்கிணைப்பாளர்களரோடு சந்திப்பை மேற்கொண்டிருந்தார். அப்போது இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் கலந்துரையாடிய வேளையில் ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை, இலங்கை இனப்படுகொலை தொடர்பில் இலங்கை நீதிமன்றங்களினூடாகவே நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தமை ஏனையோருக்கு வேடிக்கையாவே இருந்தது என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளரான சுதா தெரிவித்திருந்தார். லங்காசிறிய…
-
- 38 replies
- 4.4k views
-
-
(ந.தனுஜா) கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் சுயமாக முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்குக் கிடைத்த நிதி, பொருள்சார் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புக்கள் தொடர்பான தகவல்களை சுயமாக முன்வந்து வெளிப்படுத்துவதனூடாக கொவிட் - 19 தொற்றுநோயைக் கையாள்வதிலான பிராந்திய மற…
-
- 3 replies
- 949 views
-
-
கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவு கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொடுப்பனவு விடயத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், www.auditorgeneral.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.ibctamil.com/srilanka/80/…
-
- 6 replies
- 577 views
-
-
இணையத்தில் ஒரு கேள்வி. சிங்கள மாணவர்கள் பாடசாலைகளில் தமிழ் மொழியினை படிக்க வேண்டுமா? சாயா திசாநாயக்க என்னும் பெண் அளித்துள்ள பதிலில், ஆம், 1 - 9 வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டும். மூன்றினையும் GCE க்கு எடுக்க முடியாவிடில் ஒரு பாடத்தினை விடுத்து தாய் மொழியினை எடுக்கலாம். பின்னர் அந்த ஒரு பாடத்தினை தனியாக முடிக்கலாம். இப்போது இலங்கையில் அரச, தனியார் வேலைகளுக்கு மூன்று மொழியும் தேவைப்படுவதால் மாணவர்களும் படிக்கின்றனர் என்கிறார் அவர். (யாழ் புகையிரத நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த சிங்கள இளைஞர்கள் பேசிய தமிழால் வியந்தேன். பின்னர், சிங்களவர்கள் அரச வேலை எடுக்க, தமிழ் மொழி பயில்வது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.) அத்துடன் …
-
- 28 replies
- 3k views
-
-
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்துமாறு, உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜனாதிபதி, க…
-
- 1 reply
- 586 views
-
-
பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!! இலங்கையர்களை.. குவைத் நாட்டில் விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருக்கும் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொது மன்னிப்பு காலம் இதுவரையில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டரீதியாக அங்கு தங்கியுள்ள நிலையில் 19ஆயிரம் இலங்கையர்களின் விசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர். இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அந்த …
-
- 3 replies
- 529 views
-
-
மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பெறுப்பேற்று மக்கள் விவசாயம் செய்ய பகிர்ந்தளிக்க வேண்டும், மலையகத்துக்கு விடுதலை வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நுவரெலியா பூண்டுலோயாவைச் சோந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு ஔவையார் சிலைக்கு கீழ் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று சனிக்கிழமை (30) ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருக்கும் ஔவையார் சிலையின் கீழ் மலையகத்தின் ஒரு குரல் விடுதலை வேண்டும் என்ற சுலோகம் தாங்கிய நிலையில் குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவை சேர்ந்த சண்முகம் மகேஸ்காந் என்ற 26 வயது இளைஞரின் தந்தையார் உயிரிழ…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில் ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று கொரோனா வைரஸின் பரவலால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கிழக்கு, குவைத், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையர் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதன் உண்மைத் தகவலை வெளிவிவகார அமைச்சர் வெள…
-
- 1 reply
- 383 views
-
-
இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயபப்டுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம். எனினும் இது தொடர்பில் ராஜபக்ஷ அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்குள்ளாகி வருகின்றது. இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோதனைச் சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளத…
-
- 1 reply
- 384 views
-
-
>தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோவில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமனங்கள் தமிழ் மக்களை அச்ச நிலைக்குள் வைத்திப்பதற்கான அரசு எடுத்த நடவடிக்கைகள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் த…
-
- 0 replies
- 332 views
-
-
ரணிலுக்கு எதிராக வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை! ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (29) இந்ததீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/ரணிலுக்கு-எதிராக-வரு/ இந்த குள்ளநரி இன்னுமா பதவியில இருக்கின்ற…
-
- 0 replies
- 385 views
-
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவரது சொந்த ஊரான ரம்பொடை …
-
- 0 replies
- 341 views
-
-
தொண்டமானின் அமைச்சு இனி மஹிந்தவுக்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளனி இதன்படி திங்கட்கிழமை குறித்த அமைச்சை பதவிப்பிரமாணத்துடன் பிரதமர் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது. https://newuthayan.com/தொண்டமானின்-அமைச்சு-இனி/
-
- 1 reply
- 861 views
-