Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடா, பிரித்தானியா, இந்தியாபோன்ற 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 48 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 48 நாடுகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பட…

    • 2 replies
    • 638 views
  2. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட முடியாது, வருமுன் காப்போம் எனும் முன்னாயத்த ஏற்பாடே சிறந்ததென, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.ஏ.டி.பி.எஸ். பொன்வீர தெரிவித்தார். பெற்றி கம்பஸில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விசே‪ட கூட்டம், ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்…

  3. பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற வேட்பாளர்கள் தெரிவின்போது இத் தெரிவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளாகள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதிக்கு மஸ்தானை முதன்மை வேட்பாளராக கொண்டு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தில் தெரிவு …

    • 2 replies
    • 292 views
  4. யுத்ததின்போது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் இன்று எங்களுடன் நிற்கின்றது இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச் சங்கம் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைக்காக இலட்சியங்களை அடைவதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றோம் இத்தகைய போராட்டங்களில் பலரை நாங்கள் இழந்து நிற்கின்றோம். யுத்த காலத்தில் எங்களைத் திரும்பிப் பார்க்காத சர்வதேச ச…

    • 12 replies
    • 1k views
  5. கொரோனா அச்சத்திலும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடும் சீனர்கள் – ஜே.வி.பி. சாடல் by : Dhackshala இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரானிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றபோதும் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று உருவாகிய சீனாவிலிருந்து வருபவர்கள் இலங்கையில் சுதந்திரமாக உள்ளனர் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கைய…

  6. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான அவர் குறித்து, மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமெ…

  7. பகிரங்க விவாதத்திற்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : விக்கி – சுமந்திரனுக்கும் அழைப்பு! எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளது. பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் எனத் தெரிவித்துள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண், அந்த விவாதத்திற்கு சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய…

    • 6 replies
    • 659 views
  8. யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டது என்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கும் விளக்கம் பின்வருமாறு; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்களால் அப்பீட புதுமுக மாணவர்களுக்கு கையட…

    • 4 replies
    • 996 views
  9. ஐ. தே க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மா…

    • 6 replies
    • 547 views
  10. TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

    • 12 replies
    • 1.1k views
  11. நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல் by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம். …

    • 1 reply
    • 406 views
  12. பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது குறித்தே சிந்திக்க வேண்டும்- மைத்திரி by : Yuganthini புதிதாக தோற்றுவிக்கின்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது எவ்வாறு என்பது தொடர்பாகவே அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை- மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியலுக்கு வந்து 52 வருடங்கள் ஆகின்றன. இதில் 26 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இதன்போது பல்வேறு போராட…

    • 2 replies
    • 320 views
  13. கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் பணம் அறவிடப்படுகிறதா? – இராணுவத் தளபதி விளக்கம் by : Dhackshala மட்டக்களப்பு பல்கலைகழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறிவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதற்காக 1…

    • 3 replies
    • 418 views
  14. முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது இல்லத்தில் கூட்டணியின்  ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் கூடி இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது. வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளைமறுதினம்  12ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும். அத்தோடு தமிழ் மக்கள் தேசிய…

    • 1 reply
    • 377 views
  15. சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மன்னார் ஆயர் எச்சரிக்கை முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழும்பிப் போய் உள்ளது. இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.சமய அடிப்படையில் கட்சியாகவோ சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடும். இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மான…

  16. அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத் திருக்கோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதி கோணேஸ்வரா கோயில் சந்தியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தம்பலகாமம் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். இன்று (10) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், தம்பலகாமம், பொற்கேணி பகுதியைச் சேர்ந்த 43 வயதான நடராசா தாஷன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார். பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு இருந்தவர் ஆவார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட அவர், திருகோணமலை ப…

    • 0 replies
    • 288 views
  17. -எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன், க. அகரன் நாடாளுமன்றத் தேர்தலில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போதிருந்த தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். “கூட்டமைப்புக்குள் பல்வேறு இழுபறி நில…

    • 0 replies
    • 273 views
  18. கிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தொடக்கம் இந்த தடுப்பு மையங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த தடுப்பு மையங்களுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார். …

    • 1 reply
    • 411 views
  19. ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி? கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். பெலவத்தையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளிட்ட அவர், “அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் இல்லத்திலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார். அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட முடியாது. ஆனால், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்பது நிச்சயம். ரணில் விக்ரமசிங்க கைத…

    • 3 replies
    • 829 views
  20. பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலர் தயாசிறி ஜயசேகர நேற்று குருநாகலவில் நடந்த ஊடக மாநாட்டிலேயே இந்த தகவலை வெளியிட்டார். “முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் அவருக்கு கிடையாது. அடுத்த நாடாள…

    • 0 replies
    • 283 views
  21. தனிமைப்படுத்தும் செயற்பாடு சிறையில் அடைக்கப்படுவதை போன்றது அல்ல தனிமைப்படுத்தும் செயற்பாடு சிறையில் அடைக்கப்படுவதை போன்றது அல்ல என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். அதர தெரணவில் ஔிபரப்பாகும் பிக் போகஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் செயற்பாடு தொடர்பில் தனிநபர் என்ற ரீதியில் சிந்திக்காது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்படுமாறு அவர் இதன் போது தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் நாட்டினுள் வைரஸ் பரவாத நிலையில் குறித்த வைரஸினை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்கு …

    • 0 replies
    • 425 views
  22. ஐதேகவை ஒருங்கிணைக்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி by கி.தவசீலன் in செய்திகள் ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் விசுவாசிகள் நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதிலும், இணக்கப்பாட்டுக்கு வரத் தவறிவிட்டனர், யானை சின்னத்தில் 22 மாவட்டங்களில் போட்டியிடுவோம் என்ற பிடிவாதத்தைக் ரணில் தரப்பு கைவிட மறுத்து விட்டது. இந்தச் சந்திப்பில் இருதரப்பு பிரதிநிதிகளும் சட்ட நிபுணர்களுடன் பங்கேற்றிருந்தனர். ரணி…

    • 0 replies
    • 286 views
  23. கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு by கார்வண்ணன் in செய்திகள் கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது. கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தேவாலயங்கள் மற்றும் தேவாலயப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிக்காக, சிறப்பு அதிரடிப்படையின் உந்துருளி அணியொன்றும் ஈட…

    • 0 replies
    • 253 views
  24. சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாயினால் குறைந்திருக்கும் – மங்கள by : Jeyachandran Vithushan ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போது செயற்படுத்தியிருந்தால் எரிபொருட்களின் விலை 20 ரூபாயினால் குறைத்திருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உலக சந்தையில் விலைகளுக்கு அமைய, நுகர்வோருக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காக எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் …

    • 0 replies
    • 456 views
  25. யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம் by : Jeyachandran Vithushan இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞனார்கள் மீது பெற்றோர் கூட…

    • 0 replies
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.