Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று திரும்பியவர் April 3, 2020 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், அவர் இரத்மலானை ,வெடிகந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த குறித்த நபரும் அவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் இருவரும் அண்மையில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதேவேளை உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #உயிரிழந்த #இந்தியா #கொரோனா http://globaltamilnews.net/2020/139935/

    • 2 replies
    • 441 views
  2. COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு போன்ற சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கிய அணியொன்றுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று வரையப்பட்ட கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் ஹரித அலுத்கேயால் வரையப்பட்ட இக்கடிதத்தின் பிரதிகள், சுகாதாரமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர்களுக்கும் பிரதியிடப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/செய்திகள்/நிபுணர்களுடன்-கலந்துரையாடுக/175-247915

    • 1 reply
    • 408 views
  3. உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது – கல்வி அமைச்சு by : Jeyachandran Vithushan 2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு சில தரப்பினரால் வதந்திகள் பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உயர்தரப்-பரீட்சை-ஒத்திவை…

  4. வெறுமையாகியுள்ள தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமானது, இன்று வெறுமையாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மத்திய நிலையத்தில் தங்கியிருந்த அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதுடன், இறுதியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த 33 பேரும் இன்று அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையத்தில் மொத்தமாக 479 பேர் இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். …

    • 1 reply
    • 371 views
  5. (ஆர்.யசி) கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உ…

    • 5 replies
    • 467 views
  6. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினால் நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட எட்டு கிராமங்களில் ஊடரங்கினால் எதுவித வருமானமும் இல்லாத நிலையில் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கிவரும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்பு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினால் நேற்று வியாழக்கிழமை நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன் ஆரம்ப நிகழ்வு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட எட்டு கிராமங்களில் உள்ள 350 பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் இதன்போது ஆலயத்தினால் வழங்கப்பட்டன.ஆலயத்தின் நிர்வாகத்தினர், ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள், பி…

    • 1 reply
    • 308 views
  7. யாழில் மேலும் 6 பேருக்கு பரிசோதனை: 50 பேருக்கு தொற்று இல்லையென்பது உறுதி! by : Litharsan யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, கொரோனோ வைரஸ் அறிகுறி சந்தேகத்தில் நேற்று 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்குத் தொற்று இல்லை எனபது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்றுநோய் சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்…

    • 0 replies
    • 309 views
  8. கொழும்பில் சிக்கியுள்ள மலையகம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகள்- ஜனகன் முக்கிய கோரிக்கை! by : Litharsan மலையகத்திலிருந்தும் வடக்கு கிழக்கில் இருந்தும் வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் இந்த இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

    • 0 replies
    • 296 views
  9. யாழ் மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அந்த நோய் பச்சிலைப் பள்ளிப் பிரதேசத்துக்கும் பரவாமால் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அச்ச சூழ்நிலை முடிவடையும் வரை பச்சிலைப்பளிப் பிரதேசத்துக்குள் வருவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கமநல சேவைகள் நிலையப் பெரும்பாக அலுவலர், சுகாதார மருத்துவ அதிகாரி, பண…

  10. ஊரடங்கு சட்டத்தினை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் – மூவர் காயம்! பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டதையும் மீறி பயணித்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த காரில் 4 பேர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தினை-மீறி/

    • 1 reply
    • 611 views
  11. கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி திரட்டு – அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு எனக் கூறி நிதி சேகரிக்கும் சில நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதியத்திற்கு நேரடியாக பணம் மூலமாகவோ காசோலைகள் மூலமோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேறு வழிகளின் ஊடாக பங்களிப்பதை தவிர வேறு எவறுக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிதியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்கம் “சுகாதார நோய்த்தடுப்புக்காக” அனைத்து மக்க…

  12. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார். அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/140421

    • 4 replies
    • 589 views
  13. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயை இழந்தது ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது. இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொல…

  14. இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளர். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவத் துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதைத் தடுப்பதற்…

    • 25 replies
    • 2.1k views
  15. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும். கிழக்கின் அடையாளச்சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது. எனினும்,கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நம்பிக்கை ப…

    • 0 replies
    • 337 views
  16. மிருசுவில் படுகொலை சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி! by : Jeyachandran Vithushan மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நா…

    • 41 replies
    • 3.5k views
  17. கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே இன்று(வியாழக்கிழமை) இவ்வாறு தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழந்த-ம/

    • 3 replies
    • 589 views
  18. மலையகத்திலிருந்து வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் மலையக இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கொழும்பில் பணி நிமிர்த்தமாகத் தங்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்,…

    • 0 replies
    • 274 views
  19. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக ஊரடங்குச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பில் இந்து ஆலயங்கள் பலவற்றால் வருமானத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் வருமானத்தினை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாக சபை பல இலட்சம் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை இன்று (வியா…

    • 1 reply
    • 441 views
  20. தற்கொலைதாரிகளுக்கு உதவிய இருவர் கைது Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:24 - 0 - 46 கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து இவர்கள் இன்று (02) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய நபர் கொதட்டுவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய…

    • 0 replies
    • 413 views
  21. யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்க…

    • 0 replies
    • 687 views
  22. எமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு அனைவரும் தனித்திருக்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும், அறிவுறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவிமடுக்கின்றோம். அதற்கு எமது ஒத்துழைப்பைக் கொடுப்போம். நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது. ஒருவரினுடைய தவறினாலே பலபேருக்கு தொற்றக் கூடியது இந்த வைரஸ். ஆகையால்தான்…

    • 0 replies
    • 284 views
  23. மினுவாங்கொடையில் மறைந்திருந்த 31 வெளிநாட்டவர்கள் சிக்கினர் கனகராசா சரவணன் மினுவாங்கொடை, நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த வெளிநாட்டுப் பிரைஜகள் 31 பேரை, இன்று (02) கண்டுபிடித்துள்ளதாக, மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை, பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திய போது, அங்கு ஒளிந்திருந்த நேபாளம் நாட்டுப் பிரஜைகள் 30 பேரும் இந்தியப் பிரஜை ஒருவரும் உட்பட 31 பேரைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தும் முகாங்கள…

    • 0 replies
    • 362 views
  24. (எம்.மனோசித்ரா) தமது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் இம் மாதம் 04 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 ஒழிப்பு தொடர்பான அனைத்து சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ.யு.ரோஹனவினால் இது தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் செயலாருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி கால வரையரையின்றி தமது க…

    • 0 replies
    • 229 views
  25. கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் (30) விளக்கு வைத்து பண்டமெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்தூர் சந்திக்கு மாட்டு வண்டில்களில் பண்டம் எடுத்து செல்வது வழமை ஆயினும் இந்த ஆண்டு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக புளியம்பொக்கணை கற்பக விநாயகர் ஆலத்திற்கே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/புளியம்பொக்கணை-நாகதம்பி/ இந்த நேரத்திலுமா? 🙄

    • 6 replies
    • 979 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.