Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவப் பொலிஸாரைத் தொடர்ந்து கொழும்பில் களமிறக்கப்படும் கடல் மற்றும் விமானப் படையினர் கொழும்பு வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர், பொலிஸாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் உதவியினைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இராணுவ பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மிகவும் நெரிசலான நுழைவு, வெளியேறும் இடங்களில் இராணுவ பொலிஸார் குவிக்கப்பட்டனர். பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினது வழிக்கா…

    • 3 replies
    • 904 views
  2. நந்திக்கடல் – நாயாறு புனரமைப்பில் விசேட கவனம் : February 26, 2020 நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு உட்பட வடக்கின் பல்வேறு நீர் நிலைகளை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(25.02.2020) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உடனடியாக நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகிய நீர்நிலைகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தேவையான, …

  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக களமிறக்கப்பட்டனர்…. February 26, 2020 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங…

  4. நோ்முக தோ்வை நடாத்தும் இராணுவம்..! சிவில் அரச சேவைக்கு ஆட்சோ்ப்பா ? இராணுவத்திற்கு ஆட்சோ்ப்பா ? ஐனாதிபதி கோட்டபாய அரசாங்கத்தினால் நடைமுறை படுத்தப்படும் 1 லட்சம் வேலை வாய்ப்புக்கான நேர் முகத்தேர்வுகளில் இராணுவம் பங்கெடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மேற்படி 1 லட்சம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இன்று காலை தொடக்கம் பல மாவட்டங்களில் நேர்முக தேர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் செய்வதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இன்று ஐந்து கிராம சேவகர் பிரிவிற்…

  5. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: மன்னாரில் ஐந்து பிரதேச செயலகங்களிலும் நேர்முகத் தேர்வு ஆரம்பம்! by : Litharsan ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் நாட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களிலும் இன்று (புதன்கிழமை) காலை முதல் நேர்முகத் தேர்வு இடம்பெற்று வருகின்றது. குறித்த நேர்முகத் தேர்வின்போது வழிநடத்த ஒரு அரச அதிகாரியும் 2 இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பத்திரு…

  6. சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார். இன்றைய தினம் சமகி ஜனபல வேகயவின் புதிய அரசியல் நீரோட்டத்திற்கு முக்கியமான தினம் என்று தெரிவித்த அவர், இந்த கூட்டணியின் மூன்று கட்சிகளின் தலைவர்களினதும் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஒருமனதான தீர்மானத்தின் பேரில் இவ்வாறு ஆதரவளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக …

  7. ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவருக்கு விளக்கமறியல் ! by : Jeyachandran Vithushan ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது அவரை மார்ச் 11 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இம்மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://at…

  8. தெரிவு சரியானதாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியாரனவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக வைத்திருந்து அதனூடு அரசியல் செய்கின்ற தரப்பினரின் உணர்ச்சியை ஏற்படுத்தும் கருத்துக்களை நம்பி தொடர்ந்தும் அவ்வாறானவர்களையே மக்கள் தெரிவு செய்வார்களாயின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், ஊறணிப் பிரதேசத்தில் கரைவலை செயற்பாட்டை மேற்கொள்வதற்கான நிரந்தர அனுமதியை வழங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீ…

  9. எனது தெய்வம் பிரபாகரனே! அதனாலேயே அரசியல்வாதியானேன்- சார்ள்ஸ் எம்.பி. by : Litharsan என்னுடைய தெய்வம் பிரபாகரனே! அவர் மேல் வைத்த பாசமும் பற்றுமே என்னை அரசியல்வாதி ஆக்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழர்கள் வடக்கு கிழக்கில் தனித்துவமான அடையாளத்தோடு வாழ்வதற்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறோம். தமிழர்களுக்காக ஜனநாயக ரீதியில் தந்தை செல்வநாயகம் அன்று பயணித்திருந்தார். அதன்பின்னர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தார…

  10. தமிழ் இளைஞன் மீது காதல்..! முஸ்லிம் பெண்ணை கிளிநொச்சியிலிருந்து கடத்தி சென்ற 9 போ் ஓமந்தையில் கைது. இராணுவம் அதிரடி.! கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து திருகோணமலைக்கு இளம் பெண்ணை கடத்தி சென்ற 4 பெ ண்கள் உள்ளிட்ட 9 கடத்தல்காரா்களை ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவம் முற்றுகையிட்டு கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்டுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் (முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளன. காதலுக்கு பெற்றோரின் எதிர…

  11. பிரபாகரன் இல்லை என்ற துணிவில் இன்று பலா் பேசுகிறாா்கள்..! சம்பிக்க கூறுகிறாா்.. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இல்லை என்ற துணிவில் நாட்டை பிாிப்பது தொடா்பாகவும், பயங்கரவாதம் தொடா்பாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனா். புலிகள் தாக்குதல் நடாத்தியபோது இவா்களே ஒழிந்திருந்தவா்கள். மேற்கண்டவாறு நேற்று ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினா் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மாவில்லாறு போரினை ஆரம்பிக்க முன்நின்றவா்கள் நாங்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்கள் மீது கோபத்திலோ இந்த நடவடிக்கையை நாங்கள் ஆரம்பிக்கவில்லை. எமது நாட்டின் மீது இருந்த பற்று காரணமாகவே …

    • 1 reply
    • 1.1k views
  12. "வெள்ளை வான்" ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 பேர் கைது கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் வெள்ளை வான் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடமிருந்து டி56 ரக துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://athavannews.com/வெள்ளை-வான்-ஊடக-சந்திப்ப-2/

  13. மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது, கடந்த விசாரணையின்போது அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களுக்கு காணாமல்போனோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் பிரதி வாதங்களை மன்றில் முன்வைத்தார். காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாவதற்கு அரச தரப்பு சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையின்போது ஆட்சேப…

  14. வடக்கின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பில் வழக்குத்தாக்கல்! நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மாவட்டங்களின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். அடுத்த வாரமளவில் வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் நாம் பல போராட்டங்களையும் அழுத்தங்களையும் பிரயோகித்து அதன்பலனாக நாடாளுமன்றத்தில் இழுவை மடி தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் குறித்த சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இ…

  15. நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி! நெடுந்தீவு பிரதேச சபையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று(செவ்வாய்கிழமை) பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பெட்ரிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 6 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக் குழுவின் 2 உறுப்பினர்களும் உட்பட 9 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பிரசன்னமாகி இருந்தனர். இதன்போது,…

  16. கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி இடம்பெற்ற 44 இலட்ச கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்த டி56 ரக துப்பாக்கிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/235241/ராஜிதவின்-வெள்ளை-வேன்-ஊடக-சந்திப்பில்-கலந்துகொண்ட-இருவர்-உள்ளிட்ட-10-பேர்-கைது

    • 0 replies
    • 589 views
  17. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை. என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(25) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியில் கூட பெண்களாகிய எ…

    • 1 reply
    • 576 views
  18. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நே…

    • 5 replies
    • 1.3k views
  19. -நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சியின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளத்தின் கீழ், 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான கூட்டம் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில், நேற்று (24) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளால் அக்கராயன் குளத்தின் 4ஆம் வாய்க்கால் உட்பட முக்கிய வாய்க்கால்கள் புனரமைக்கப்பட வேண்டும், நெல்லுக்கான நிர்ணய விலை அறுவடை தொடங்க முதல் நிர்ணயிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகளின் கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 2,790 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/வ…

  20. திருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள் அடுத்த பாராளுமன்றம் திருடர்கள் இல்லாத பாராளுமன்றமாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆளும்கட்சி, எதிர்கட்சி எல்லா தரப்பிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கட்சி தலைவர்களுக்கு, கட்சிகளுக்கு சிலவேளை "கள்ளர்கள்" என அறியப்பட்டவர்களுக்கும் வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டி வரும். நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தவிர்க்க முடியாதது. ஆகவே "திருடர்" இல்லாத பாராளுமன்றம் உருவாவது மக்கள் கைகளில்தான் உள்ளது. கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பும் கட்சி சின்னத்துக்கு வாக்களியுங்கள். ஆனால், உங்கள் விருப்பு வாக்கை "திருடர்களுக்கு எதிராக" வழங்குங்கள். யார் நல்லவர், வல்லவர் …

  21. புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை கோரும் கம்மன்பில! யுத்தத்தின் போது இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 40 இன் கீழ் ஒன்றாம் தீர்மானத்திலிருந்து இருந்து, வெளியேற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால், சிலர் 30 இன் கீழ் ஒன்றாம் தீர்மானம் தொடர்பாகவும் குழ…

  22. Tuesday, February 25, 2020 - 6:07pm - விளையாட்டு, வெளி செயற்பாட்டுக்கு முன்னுரிமை - 2ஆம், 3ஆம் தவணைகளில் மாத்திரம் பரீட்சைகள் - இவ்வருடம் திட்டமிட்டபடி 1ஆம் தவணை பரீட்சைகள் எதிர்வரும் காலங்களில், பாடசாலைகளில் முதலாம் தவணையின் போது, தவணை பரீட்சைகளை நடாத்தாதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி உட்பட பல்வேறு உற்சவங்கள் மற்றும் வேறு விடயங்களுக்கான செயற்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ்விடயம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள், முதலாம் தவணை பரீ…

    • 0 replies
    • 669 views
  23. எச்சரிக்கை - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம்! கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் உயிரிழந்துள்ளனர். …

  24. இலங்கைக் குழு ஜெனீவா பயணம் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று (25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙகக-கழ-ஜனவ-பயணம/150-246004

  25. 100 நாட்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் by : Dhackshala ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.