ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
-மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வரலாற்றில் முதற்றடவையாக நரம்பியல் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வரலாற்றில் இதுவரை காலமும் நரம்பியல் வைத்தியர் ஒருவர் இன்றியே காணப்பட்டு வந்த நிலையில், முதற்றடவையாக தற்போது நரம்யில் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்குச் சென்ற நோயாளிகள் இனிவரும் நாள்களில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தங்களது சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். http://www.tamilmirror.lk/வன்னி/களநசசகக-நரமபயல-வததய-நபணர-நயமனம/72-245522
-
- 0 replies
- 368 views
-
-
இறுதி தீர்மானத்திற்கு கூடிய ஐக்கிய தேசிய கட்சி! உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதன் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினர் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று (14) பிற்பகல் 02.30 க்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார். ´சமகி ஜனபல வேகய´ என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர…
-
- 1 reply
- 400 views
-
-
இலங்கை அரசாங்கம்; வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நீதி உண்மை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இன்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இன்றைய நினைவுகூறல் என்பது தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த பதிலுக்காக வலுக்கட்டாயமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் வலிமிகுந்த நீண்ட கால காத்திருப்பை நினைவுபடுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளை …
-
- 1 reply
- 370 views
-
-
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் நகர் மத்தியில் ச.தொ.ச. கட்டுமான பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மீட்கப்பட்டதடயப்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்காக தரப்படுத்த சென்றபோது மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் பொறுப்பிலிருந்த பாதுகாப்பு அறைக் கதவு கைபிடி உடைந்தும் யன்னல் திறந்திருந்தும் காணப்பட்டதால் பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இவ் வழக்கில் முன்னிலையான அரச சட்டவாதி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சார்பாக ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி மீது தகாத வார்த்தையை பிரயோகித்தமையால் சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்தனர். 2018 மார்ச் மாதம் மன்னார் நகரில் கண்டு பிடிக்கப்பட்ட மன்னார் ச.தொ.ச. புதை குழி வழக்கு கடந்த திங்கட…
-
- 0 replies
- 412 views
-
-
ரிசாட் மனைவியின் மற்றுமொரு வீடு....! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கள்கள் தொடர்பிலான ஆவணங்கள் மீட்கப்பட்ட வீடானது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவிக்கு சொந்தமான வீீடு என குற்றப்புலனாய்வு திணைக்களம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. ஆவணங்கள் மீட்கப்பட்ட குறித்த வீடானது வௌ்ளவத்தையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 650 views
-
-
33 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு சீனாவின் வுஹானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்ட 33 பேர், இன்று (24) பிற்பகல் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 33 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட வைத்தி பரிசோதனைகளின் போது, எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில், அவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து அக்குரேகொட இராணுவ முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்ப…
-
- 0 replies
- 353 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை! by : Benitlas குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உதயங்க வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை! ரஸ்யா…
-
- 0 replies
- 252 views
-
-
அரசியல் இருப்புக்காக அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன் by : Litharsan இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தரமான கல்விக் கொள்கையை உருவாக்காமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் கிராமிய அபிவிருத்திம் திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 259 views
-
-
யாழ். – சென்னை விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பரிசீலனை February 14, 2020 யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து சாதகாரமான முடிவொன்றினை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய இன்று(13.02.2020) விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க> கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட உறுதிமொழி வழ…
-
- 1 reply
- 422 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தம்மிடம் சில இளையோர்கள் முகநூலில் இருக்கின்றார் என்பதை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் மு…
-
- 9 replies
- 887 views
-
-
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையேடுக்கும்- செல்வம் எம்.பி. by : Litharsan தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணம் இன்று இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்கள் நாள்தோறும் இம்சிக்கப்படும் நிலை காணப்பட…
-
- 3 replies
- 483 views
-
-
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கும் உடன்படிக்கையை நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கம்பனிகள், தொழிற்சங்கங்கள், அரச தரப்பு என முத்தரப்பினர் இணைந்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவிருந்தன. எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தொண்டமான் ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்ததால், இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடு…
-
- 1 reply
- 357 views
-
-
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அன…
-
- 0 replies
- 608 views
-
-
செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது. செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 06 மணியளவில் குறித்த பிள்ளையார் சிலையை அடித்து உடைத்து வீசப்பட்டுள்ளதை உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் நேற்று (12) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர். மேலும் இ…
-
- 4 replies
- 767 views
-
-
எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும் மின்சார கட்டணங்களை அதிகரிக்க போவதில்லை என தெரிவித்த மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர , தீடீர் மின் வெட்டுக்கு ஒரு போதும் இனி இடமளிக்க போவதில்லையென தெரிவித்தார். இந்திய சக்தி வளர்ச்சி மன்றத்தின் மூன்றாவது கூட்டம் இன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். புதுப்பிக்க கூடிய சக்தி மூலங்கள் மூலம் இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சூரிய சக்தி மூலத்தை பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில…
-
- 2 replies
- 339 views
-
-
பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும். இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வ…
-
- 6 replies
- 1.4k views
-
-
367 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு சபையில் சமர்ப்பிப்பு! நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காக செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாயினை செலுத்தும் வகையில் இந்த மதிப்பீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைத்தது.…
-
- 0 replies
- 268 views
-
-
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற "பலமானதொரு அரசு" எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள் என்ற கருப்பொருளின் கீழ் “யுத்துகம அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும் உருவாக்குதல், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் மக்கள் இறைமை, ஒற்றை ஆட்சியை நாட்டில் உறுதிப்படுத்தல், நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறைகளுக்கிடையில் அதிகார சமநிலை மற்றும் கடமையை முதன்மையாகக்கொண்ட சமூகம் என்ற ஐந்து இலக்கு…
-
- 1 reply
- 684 views
-
-
இதயம் சின்னத்தை அனுமதித்தால் தேசியப்பட்டியல் : ரணிலுக்கு விசேட சலுகையை அறிவித்தார் சஜித்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி நேற்று தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் இருக்கும் பிணக்குகளை தீர்த்து ‘இதயம்’ சின்னத்தின் கீழ் போட்டியிட ஒப்புக் கொண்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே நாளை இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 1 reply
- 322 views
-
-
கடந்த இரண்டு வாரங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக சுமார் 33 இலட்சம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்ய உதவியுள்ளனர். நாட்டில் உள்ள அரிசி மாஃபியாவை இல்லாது செய்யும் நோக்கில் இராணுவம் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள இராணுவ தலைமையகங்கள் தலையீடு செய்து நெல் கொள்வனவுக்கு உதவி செய்துள்ளன. நெல்லுக்கு உத்தரவாத விலையை பெற்றுக்கொடுத்து விவசாயிகள் அதிகபட்ச விலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 38 களஞ்சியசாலைகள் இராணுவத்தினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்…
-
- 0 replies
- 584 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், விசேட தீர்ப்பாயம் மூலம் விசாரித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் - சர்வதேச குற்றவியல் விசாரணையானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களினது அமைப்பின் இணைப்பாளர் க.கருணாவதி தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின் அமைப்பினர் நேற்று பிற்பகல் கிளிநொச்சி யில் அமைந்துள்ள சோலைவனம் விடுதியில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 30/1 தீர்மானத்தில் உள்ளக விசார…
-
- 0 replies
- 423 views
-
-
இ.தொ.கா - எஸ்.பி கடும் வாக்குவாதம்: கூட்டத்தில் குழப்பம் டி.சந்துரு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்துக்கும், இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இ.தொ.காவின் அங்கத்தவர்கள், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எவ்விதமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தின் போது, நானு ஒயாவில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் குடும்பமொன்றுக்கு எதிராக, நுவரெலியா பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறவேண்டு…
-
- 0 replies
- 872 views
-
-
கொஸ்கொட தாரகவின் சிறையில் மற்றுமொரு மோதல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினரான கொஸ்கொட தாரக, அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் மீது, மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது சகோதர இணையத்தளமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. சிறைச்சாலையில் “ஐ” பிரிவில் கடும் பாதுகாப்புடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக, அங்கிரு…
-
- 0 replies
- 460 views
-
-
தொல்பொருள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழா?: தமிழர் வரலாற்றைத் திரிவுபடுத்தும் முயற்சி- சீ.வீ.கே. by : Litharsan தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள் கொண்டு வருவது பொருத்தமான விடயமல்ல என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றைத் திரிவுபடுத்த எத்தணிப்பதாகவே எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஏற்கனவே, தொல்பொருள் திணைக்களம்தான் தமிழர்களின் பூர்வீகம், புராதனம் உள்ளி…
-
- 0 replies
- 401 views
-
-
தலைமறைவான குருநாகல் வைத்தியருக்கு இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக நேற்று (12) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற ஆயுர் வேத வைத்தியரும் பாலியல் வல்லுறவுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்ததாக வைத்தியரின் உதவியாளராக கடமையாற்றிய சிங்கள பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு திருகோணமலை மேல் ந…
-
- 0 replies
- 589 views
-