ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி! i விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக தான் சாட்சியமளிக்க மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரிடம் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் வ…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை பகுதியில் இன்று 22.02.2020 நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம், குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது, " பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளதால் நாட்டில்…
-
- 1 reply
- 295 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் மன்னாரில் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை (25) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் இன்று சனிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின், முன் ஆரம்பமாகி மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும். இப் போராட்டத்தின் போது சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்…
-
- 0 replies
- 238 views
-
-
க.விஜயரெத்தினம் கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம், தமிழ் மக்களிடம், புத்திஜீவிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்று, நேற்று (19) நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக…
-
- 2 replies
- 659 views
-
-
எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள். எதிர் வருகின்ற பாராளுமன்ற பொது…
-
- 36 replies
- 2.1k views
-
-
(எம்.மனோசித்ரா) இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்திருக்கின்றமையை ராஜபக்ஷாக்கள் உண்மையில் எதிர்ப்பவர்களாக இருந்தால் , அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா என்று சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டுக்கு ராஜபக்ஷ ஆட்சியே வழியமைத்துக் கொடுத்ததாகவும் குற்றஞ்சுமத்தினார். ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றஞ்சுமத்திய அவர் மேலும் கூறியதாவது ' 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக…
-
- 1 reply
- 731 views
-
-
வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்! ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களைய…
-
- 16 replies
- 1.7k views
-
-
(செ.தேன்மொழி) ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய , இதன்காரணமாக சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து அதில் கிடைக்கும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயற்சித்ததோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அரசாங்கத…
-
- 1 reply
- 435 views
-
-
55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்.. கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது அக்கராயனில் கடந்த நான்கு ஆண் டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட் டுமானங்களைப் பார்வையிட்ட போது…
-
- 13 replies
- 1.7k views
-
-
நான்கு மணிநேரத்திற்குள் அடையாள அட்டை! by : Benitlas ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார். ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரியின் கையடயக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்த பின்னர் தி…
-
- 1 reply
- 509 views
-
-
சிறுபான்மையினர் விவகாரத்தில் ஜனாதிபதியை சில பேரினவாதிகளே இயக்குகின்றனர்- வேலுக்குமார் by : Litharsan நாட்டின் ஜனாதிபதியை ஒரு சில பேரினவாதிகளே இயக்குகின்றனர் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பேரினவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்களை திருப்திபடுத்துவதற்காகவே சாய்ந்தமருது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துசெய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “சாய்ந்தம…
-
- 0 replies
- 316 views
-
-
திருக்கேதிச்சரத்தில் பல இலட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ள மகா சிவராத்திரி திருவிழா! by : Litharsan வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர். அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்சர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு இந்…
-
- 0 replies
- 265 views
-
-
பொதுஜன பெரமுனமுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்பு- ரத்னாயக்க by : Litharsan உள்ளுராட்சி சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்று நாடாளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிநடைபோடும் என இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், நாட்டில் சமூகம், பொருளாதாரம், கலாசாரம், தனித்துவம் என அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் சீரழிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொத்மலை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று எமது தரப்பு ஆட்சியமைத்திருந்…
-
- 0 replies
- 263 views
-
-
சாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது -மனோ கணேசன் சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி,பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடைநிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோர செயலாகும்.இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யார் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும்பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரினதும் அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி …
-
- 1 reply
- 538 views
-
-
புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர…
-
- 3 replies
- 690 views
-
-
சாய்ந்தமருது நகர சபை விவகாரம் – அமைச்சரவையின் அதிரடி தீர்மானம் சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். http://athavannews.com/சாய்ந்தமருது-நகர-சபை-விவ/
-
- 6 replies
- 533 views
-
-
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – குற்றச்சாட்டுக்களை மறுத்தது கடற்படை இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடற்படை மறுத்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டையடுத்து படகின் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், கண்ணாடித் துண்டு பட்டதில் மீனவரொருவர் காயமடைந்துள்ளதாக இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது. கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட்…
-
- 0 replies
- 184 views
-
-
முன்னாள் நீதிபதி, உள்ளிட்ட இருவருக்கு 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை! முன்னாள் நீதிபதி உள்ளிட்ட இருவருக்கு 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதிபதி சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகச் செயற்பட்ட பொலிஸ் கொன்ஸ்ரபிள் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று(வியாழக்கிழமை) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். அத்துடன், இலஞ்சமாக பெற்ற 3 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு …
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இ…
-
- 35 replies
- 4.2k views
- 1 follower
-
-
யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமானக் கட்டணம் அதிகரிப்புக்கு இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலைய அதிகாரிகள், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரே அளவிலான விமான நிலைய வரி அறிவிடப்படுவதாகத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இந்தியன் எயார் நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர். இதன்போது…
-
- 7 replies
- 806 views
-
-
முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துல்லனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டுறவுகள் அமைப்பின் யாழ் இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்டாவது, நீதியரசர் விக்னேஸ்வரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி ச…
-
- 3 replies
- 1k views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசடியான நிலைமையினை தோற்றுவித்துள்ள அரசாங்கம். சர்வதேச மட்டத்தில் இலங்கையினை தனிப்படுத்தப்படுத்துவம் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றது என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமையினை பேரவையில் இலங்கையினை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றினோம். எனவும் தெரிவித்தார். பாராளு…
-
- 1 reply
- 852 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்.. ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார். இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொட…
-
- 0 replies
- 435 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 3 ஆண்டுகள் ந…
-
- 2 replies
- 354 views
-
-
மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றதும் முக்கியம் வாய்ந்ததுமான முறக்கட்டான்சேனை விஷ்ணு ஆலயம் மற்றும் இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு சமீபமாக நீண்ட காலமாக ஏற்படும் பாரிய மண்ணரிப்பு பாதிப்பை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆழுனர் திருமதி அனுராதா ஜயம்பத் மாவட்ட அரசாங்க அதிபரை பணித்துள்ளார். ஸ்ரீ ரமண மகரிசி அறப் பணி நிலையத்தின் இலங்கை கிளை தலைவர் மாரிமுத்து செல்லத்துரை இந்த மண்ணரிப்பு பாதிப்பு பற்றி கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இந்த பணிப்புரையை அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலுக்…
-
- 0 replies
- 347 views
-