ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குளிர்ந்த நீரை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர் தொடர்பில் முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்த அவரது பேஸ்புக் பக்கத்தின் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் போது தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார். அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீத…
-
- 31 replies
- 4.3k views
- 1 follower
-
-
பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய முகப்படம் கொண்ட மலையகமும் எழுச்சியும், எழுச்சி என்பதுமலையகத்திற்கு எட்டா கனியா போன்ற வாசகங்களை கொண்ட துண்டு பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் விநியோகம் செய்த இரண்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய புகைப்படத்தை கொண்ட துண்டுபிரசுரத்தை பொகவந்தலாவ நகரம் மற்றும் சில தோட்டபகுதிகளில் விநியோகம் செய்து கொண்டிருந்த போதே பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், குறித்த துண்டுபிர…
-
- 0 replies
- 488 views
-
-
ஜெனிவா பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு! Published by J Anojan on 2019-11-28 16:18:35 (ஆர்.யசி) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சராக வெளிவிவகார அமைச்சில் இன்று கடமை பொறுப்பேற்ற அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். எமது அரசாங்கத்தின் சர்வதேச கொள…
-
- 0 replies
- 321 views
-
-
சுவிஸ் தூதரக பணியாளர் அச்சுறுத்தல் – அரசாங்கத்துக்கு தெரியாதாம் Nov 28, 2019 | 1:24by கி.தவசீலன் in செய்திகள் சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிஸ் தூதரக பணியாளர் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. இதுகுறித்து சிறிலங்கா அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தங்களுக…
-
- 0 replies
- 413 views
-
-
புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமனம் புதிய இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ரஞ்சித் சியம்பலாபிடிய – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுக்கமகே – மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன – மின்வலு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண – அரச முகாமைத்தும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ – சுற்றுலா மேம்பாட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
அண்மைய ஆட்சிமாற்றம் நம்பிக்கையீனங்களை கோடிட்டு காட்டுகின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி தாயகத்திலும் சர்வ தேசமெங்கிலும் வாழ்கின்ற இந்தத் தேசத் துக்காய் தமது வாழ்நாளை அர்ப்பணித்த. போராளிகள், தேசப்பற்றாளர்கள், விடுத லைப் புலிகள் சார்ந்த கட்டமைப்புக்களை இணைத்துக்கொண்டு அவர்களது பாரிய பங்களிப் போடு எமது மக்களுக்கான ஓர் காத்திரமானதும் உண்மையானதுமான அரசி யல் பயணத்தை முன்னெடுக்க இந்தப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுகின்றோம்.நாம் என்றுமே மாவீரர்களின் தியாகத்துக் கும் மக்களின் உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டே பயணிப்போம் எனவும் எமது மாவீரர்களின் தியாகங்கள் மீதேறி அரசியற் பகடையாட எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் இந்த மாவீரர் நாளிலே உறுதி பூணுகின்…
-
- 2 replies
- 710 views
-
-
வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைத்தது பாதுகாப்பு அமைச்சு நாட்டில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் நடைபாதை கடைகள் ஆகியன பொலிஸாரினால் அகற்றப்படவுள்ளதான செய்தி பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள், நடைபாதை கடைகள் எனபவற்றை அகற்றுவது தொடர்பாக எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிஸாரினால் அவ்வாறு எதுவும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். http://athavannews.com/வதந்திக்கு-முற்…
-
- 2 replies
- 971 views
-
-
மீண்டும் வெள்ளை வேன் கலாச்சாரம் – மகேஷ் சேனநாயக்க பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர் பட்டியலை வெளிப்படுத்தி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்திருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு வெள்ளை வேனை ஞாபக மூட்டுவதாக உள்ளது என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.அத்துடன் இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பம் சகிதம் நாட்டைவிட்டு சென்றுள்ளதை அறிகின்றேன். அதேபோன்று இரகசிய பொலிஸ் பிரிவு அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அல்லது அவர்கள் உரிய அனுமதியுடன் செல்லவேண்டும் என்பதற்காக அவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது என மேலும் தெரிவித்தார். இது எந்த நாட்டிலும் இடம்பெறக்…
-
- 0 replies
- 523 views
-
-
கோத்தபய ராஜபக்ஷ வருகைக்கு எதிர்ப்பு டெல்லியில் வைகோ கைது இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.தனது இந்திய பயணத்தின் போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கோத்தபய ராஜபக்சே முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.டெல்…
-
- 0 replies
- 420 views
-
-
புதிய அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு : வரிகள் பல இரத்து – வற் வரி 8 வீதமாக குறைப்பு உடன் அமுலாகும் வகையில் வரிகள் பலவற்றை இரத்துச் செய்வதற்கும் வற் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை குறைப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்றதுடன் அதன்போது ஜனாதிபதியினால் இது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கு…
-
- 1 reply
- 465 views
-
-
முத்தையா முரளிதரன் வடமாகாண ஆளுனராக நியமனம் வட மாகாண ஆளுனராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவால் நியமிக்கப்படவுள்ளார். ஒன்பது மாகாணங்களில் ஆறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மீதி மூன்றுக்குமான ஆளுனர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர். இவர்களில் வட மாகாணத்திற்கு முரளிதரனும், வட மத்திய மாகாணத்திற்கு பேராசிரியர் திஸவிதாரணவும், கிழக்கு மாகாணத்திற்கு செல்வி அனுராதா யஹம்பத் அவர்களும் நியமிக்கப்படவுள்ளனரென நம்பபப்டுகிறது. முத்தையா முரளிதரனை, ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் அழைத்து வட மாகாண ஆளுனர் பதவியை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார் எனத் தெரியவருகிறது. அனுராதா யஹம்பத், தேசிய வணிகர் சங்கத்தின் தலைவ…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்! நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு By: இந்தியாவுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி, காணி விடுவிப்பு, இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார். இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ம…
-
- 1 reply
- 537 views
- 1 follower
-
-
ஐ.தே.மு.வின் தலைவரே எதிர்க்கட்சித் தலைவர்! சபாநாயகர் கரு ஜயசூரிய ட்வீட் By: Submitted: 2019-11-27 19:36:53 பாராளுமன்ற சம்பிரதாயங்களை உறுதிப்படுத்தி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உள்ளக நெருக்கடியை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்வது சிறந்தது என தம்மை சவாலுக்குட்படுத்துவோருக்கு சுட்டிக்காட்டுவதாக தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் சபாநாயகர் பதிவிட்டுள்ளார். http://aruvi.com/article/tam/2019/11/28/4870/
-
- 0 replies
- 354 views
-
-
உயிரிழந்தவர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி மக்களதும் ஆழ்மன விருப்பமாகும் – டக்ளஸ் தேவானந்தா எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.அரசியல் துஷ்பிரயோகங்கள் இன்றி உயிரிழந்தவர்களை தமது ஆழ்மனங்களில் நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் உரிமையை யாரும் தடுக்க மாட்டார்கள். மக்களின் உணர்வுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் மதிப்பளிப்போம்.உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு…
-
- 0 replies
- 344 views
-
-
வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான ஆளுநர் நியமனங்கள் இழுபறியாகவே உள்ளன. ஆளுநர்கள் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகள். தேவைப்படின் மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையே கையில் எடுத்துக் கொள்ளக்கூடிய தற்றுணிவு அதிகாரம் அவர்களுக்கு உண்டு. எனவே ஜனாதிபதிக்கு மிக வேண்டிய, விசுவாசமான – நெருக்கமானவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுவது வழமை. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆளுநர் நியமனம் என்பது ஏனைய மாகாணங்களைப் போன்றது அல்ல. அவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான நெருக்கம் இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். இது ஏன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. பதவியைப் பொறுப்பேற்ற கையுடனேயே தென்னிலங்கையின் 6 மாகாணங்களுக்கு உடனடியாக ஆளுநர்களை நியமித்து விட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஆனால், வடக…
-
- 5 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு-ஐயன்குளம் பகுதியில், 2007 ஆம் ஆண்டு 11 மாதம் 27ஆம் திகதி முதலுதவி சிகிச்சைக்காக சென்ற நோயாளர் காவு வண்டி மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட உறவுகளினுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்று நண்பகல் 1.30 மணியளவில் ஐயன்குளம் பகுதியில் இடம்பெற்றது. 2007 ஆம் ஆண்டு இதே நாளிலே முதலுதவி சிகிச்சைக்காக சென்ற மானவர்கள் பயணித்த நோயாளர் காவு வண்டி மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளான வைரமுத்து கிருஷ்ணவேணி, சண்முகவேல் சகுந்தலாதேவி, அற்புதராசா அஜிநாத் சந்திரசேகரம் டிரொசா , நித்தியானந்தன் நிதர்சனா, கருணாகரன் கௌசிகா, நாகரத்தினம் மதிகரன், நாகரத்தினம் பி…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழ் மாற்று அணி உருவாக்கம் – அவசியமில்லை எங்களுடன் இணையுங்கள் என்கிறது கூட்டமைப்பு தமிழ் கட்சிகளில் மாற்று அணிகள் உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து ஆதவனுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களை தவறான பாதைக்கு கொண்டு சென்றதன் விளைவாகவே புதிய தமிழ் கட்சியொன்றை உருவாக்க வேண்…
-
- 1 reply
- 785 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் கார்த்திகை 27 மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/69886
-
- 1 reply
- 493 views
-
-
கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹெனிஸ் வோல்கர் நெடிர்கூரன், இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளார். நாளைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் வெள்ளைவான் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பிலயே பிரதமருடன், சுவிட்சர்லாந்து தூதுவர் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றி வரும் பெண் ஒருவர் நேற்று வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அந்தப் பெண்ணிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி தற்பொழுது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் நிசாந்த சில்வா, பற்றி விசாரணை செய்யப்பட்டதாக…
-
- 1 reply
- 510 views
-
-
2007 - 2009 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் எம்மால் சேகரிக்கப்பட்ட மாவீரர்களின் விபரங்கள் வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராளிகள், துணைப்படையினர், போர் உதவிப்படையினர் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் 2900ற்கும் மேற்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணைப்பு: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=17729
-
- 3 replies
- 1.4k views
-
-
உங்கள் உறவுகளை நினைவுகூர துயிலுமில்லம் நோக்கி அணிதிரளுங்கள்:வதந்திகளை நம்ப வேண்டாம்! AdminNovember 27, 2019 வதந்திகளை நம்பாதீர்கள்! மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஏற்பாடு செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது ! கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்ட 15 பேரை காணவில்லை! பொலிஸார் வீதித்தடைபோட்டு சோதனை! மாவீரர் நாள் நிகழ்வினை நடத்த விடாமல் இராணுவம் குழப்பம்! இவ்வாறு பல வதந்திகள் குறிப்பிட்ட சில குழுவினரால் பரவவிடப்படுகின்றது. மேற்படி வதந்திகளை பரப்புவோரின் பிரதான நோக்கம் மக்களிடையே அச்சநிலையை தோற்றுவித்து இம்முறை மாவீரர் தின நிகழ்வில் கடந்த முறைபோன்று பெருமளவில் மக்களை பங்குகொள்ளவிடாமல் செய்வதே. இங்கு எவ…
-
- 0 replies
- 635 views
-
-
மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்றைய தினம் காலை 10 மணியளவில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/69825 மாவீரர் நினைவேந்தல்... வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மாவீர்ர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிர…
-
- 0 replies
- 552 views
-
-
தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் யாழ். பல்கலை மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி இன்று (வியாழக்கிழமை) காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இந்த நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, பல்கலைக்கழக வாளாகத்துக்குள் மேலும் பல மாணவர்கள் நுழைய முற்பட்டதையடுத்து வாயிலில் அசாதாரண நிலை தற்போது தோன்றியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இவ்வாறு படலையை உ…
-
- 0 replies
- 457 views
-
-
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் நியமனம்! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்று வருகின்றது http://athavannews.com/பாதுகாப்பு-இராஜாங்க-அமைச/
-
- 0 replies
- 471 views
-
-
எதிர்கட்சித் தலைவர் விவகாரம் – கட்சிக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்குமாறு சபாநாயகர் அழைப்பு! நாடாளுமன்ற மரபுகளை மீறி எதிர்கட்சித் தலைவர் நியமனம் இடம்பெறக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு கட்சிக்குள்ளேயே பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அந்த பதிவில் “எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் எனது தீர்மானம் நிறுவப்பட்ட நாடாளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டது. அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது நாடா…
-
- 0 replies
- 226 views
-