Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் கட்சியை மைத்திரிபால சிறிசேனவே வழிநடத்துவார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோகன லக்ஸ்மன் பியதாச கூறுகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக் கூட்டணியாக களமிறங்கும். சின்னமும் பொதுவான ஒன்றாக இருக்கும். நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றே நாம் கூறியுள்ளோம். எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/71253

    • 0 replies
    • 538 views
  2. நா.தனுஜா) ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும். தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வா…

    • 8 replies
    • 894 views
  3. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென தெரிவித்தார் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது இது ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற கோசம் தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி …

    • 0 replies
    • 369 views
  4. சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை. ஆனால் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும். என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டது சரி என்பது தெளிவாகின்றது. அவருக்கு ஆதரவு தெரிவித்த டக்ளஸ் தேவானந்த உள்ளிட்டோர் முகத்தை எங்கே வைக்க போகிறார்கள். இனியும் அமைச்சரவையில் இருப்பதா என்பதனை அவர் யோசிக்க வேண்டும். யுத்தம் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக…

    • 0 replies
    • 419 views
  5. தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் – துரைரெட்ணம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கிழக்கு மாகாண ரீதியாக தமிழர்களின் வாக்குவீதம் நாற்பது, முஸ்லிம்களின் வாக்குவீதம் முப்பத்தொன்பது, சிங்களவர்களின் வாக்குவீதம் இருபத்தி மூன்று. இதில் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 74 வீதம் தமிழர்கள், 23 வீதம் முஸ்லிம்கள், 0…

    • 2 replies
    • 879 views
  6. தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகள் கைது தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த சுதாகர் (வயது40). இவரது மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஸ்கரன் (10), உதயகுமார் (40) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீ‌ஷன் (42), அவரது மனைவி திலக்சனா (31) என தெரியவந்தது. கடந்த 2013-ம் …

    • 1 reply
    • 346 views
  7. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருநாள் உடையும் என்பது தனக்கு தெரியும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தனது கருத்தில், தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும். கடந்த சனாதிபதித் தேர்தலில் நாங்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்பதற்காக முயற்சிகளைச் செய்தோம். மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம், ஓடும் கப…

    • 45 replies
    • 4.4k views
  8. இராணுவத் தளபதியின் கோரிக்கைக்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் மேஜர் ஜெனரல்களாகவும் 25 பேர் பிரிகேடியர்களாகவும் ஜனாதிபதியால் பதவிஉயர்த்தப்பட்டுள்துடன் மேலும் 34 பேர் லெப்டினன் கேர்ணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71190 63 Senior Army Officers promoted President Gotabaya Rajapaksa, with the concurrence of the Ministry of Defence and recommendations of the Commander of the Army, Lieutenant General Shavendra Silva has promoted a total of 63 Senior Officers to their respective next ranks. The President in his position…

  9. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட…

  10. ராஜிதவின் நாடகத்துடைய முழுவடிவத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம்- பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வெள்ளை வேன் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் நடத்திய ஊடக மாநாட்டு நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது விசாரணைகளில் தெரியவரும். அத்துடன் அந்த நாடகத்தின் நடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? அந்த நாசக்கார குண்டர்கள் யார்? என்பது விரைவில் பொது மக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/193779/

    • 1 reply
    • 372 views
  11. விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார். முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவு…

  12. வடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தொஸிமித் சூ மோட்டிஜிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (13.12.2019) நடைபெற்றது. இதன்போது, வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் அமைச்சரினால் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்ற அமைச்சர், கடற்றொழிலினை இலங்கையில் மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வக…

  13. மணலை பாதையில் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பத்திர முறை மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. மாறாக மணல் அகழ்வதற்கோ அல்லது சட்ட விரோதமாக கொண்டு செல்வதற்கோ அனுமதிபத்திர முறைமை நீக்கப்படவில்லை. இவ்விடயத்தில் பழைய முறையிலான சட்ட நடவடிக்கைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ' செயற்படும் நாடு ' என்ற தொனிப்பொருளிலான வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாரியபொல மற்றும் பொல்கஹாவெல ஆசனங்களை இணைக்கும் ஹங்ஹமுன ஹூமிய வீதி, வாரியபொல ஆசனத்தின் கிடபொல ரத்கரவ் வீதி, ஹிரியால ஆசனத்தின் லெனவ அபன்பொல வீதி , நிக்கவெரட்டிய ஆசனத்தின் பலுகொல்ல வீதி மற…

    • 0 replies
    • 425 views
  14. மணல் வாகன வழித்தட அனுமதி நீக்கப்பட்டதையடுத்து தீவிரமடையும் மணல் கொள்ளை! மணல் வாகன வழித்தட அனுமதி அண்மையில் நீக்கப்பட்டிருந்தது .அதாவது மணலை ஏற்றிக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் தேவையில்லை என்ற அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இரவு நேரங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றப்பட்டு களவாக கொண்டு செல்லப்படுகின்றது . அளம்பில் பகுதியில் உப்புமாவெளி பிரதேசம் அதனை …

    • 2 replies
    • 441 views
  15. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடிய…

  16. (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. நான் தொடச்சியாக கட்சி தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை. அவ்வாறு இருப்பதற்கான அவசியமும் இல்லை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். நாம் முறையாக நேரடியாக களத்தில் இறங்கி பாடுபட்டால் எம்மால் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ள முடியும். சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எம்மால் வெற்றி பெற முடியாமல் போகும் என்று சிலர் பின்வாங்கியிருக்க…

    • 0 replies
    • 293 views
  17. (நா.தனுஜா) சம்பிக ரணவக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக ஆளுந்தரப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எம்மீது அடக்குமுறைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் பிரயோகிப்பதற்கான ஆரம்ப அறி குறிகளாகும். இத்தகைய செயற்பாடுகளால் ஒருபோதும் எம்மை முடக்கிவிடமுடியாது. மாறாக நாம் ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்தும் வலுவாகப் போராடுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். எதிரணியைச் சேர்ந்த பாட்டலி சம்பிக ரணவக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக ஆளுந்தரப்பினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளிப்படுத்தும் அதேவேளை மேற்படி தமது தரப்பு உறு…

  18. பிரதமர் வேட்பாளராக சஜித் – ரணிலுக்கு ஐதேக மீளமைப்புக்குழு பரிந்துரை Dec 16, 2019 | 5:36by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அடுத்த பொதுத் தேர்தலில் ஐதேகவின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஐதேக மீளமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. லக்ஸ்மன் கிரியெல்ல, மலிக் சமரவிக்ரம, வஜிர அபேவர்த்தன, ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷூ மாரசிங்க, தலதா அத்துகோரள ஆகியோரைக் கொண்ட ஐதேகவின் மீளமைப்புக் குழுவே, இந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆராய்வதற்காக, ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தை, டிசெம்பர் 20ஆம் நாளுக்கு முன்னர் கூட்டுமாறு கட்சியின் 26 …

  19. தூதரக பணியாளர் கடத்தல் – ராஜித சேனாரத்னவிடம் விரைவில் விசாரணை Dec 16, 2019 | 5:40by கி.தவசீலன் in செய்திகள் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது. சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரும்பாலும், இந்த …

  20. இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை-இரா.சம்பந்தன் சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டிய காலம் விரைவில் வரும்.இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாம் எப்போதும் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறோம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம்.இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

  21. இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுபவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/70686

  22. இஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை! - மகிந்த கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார் இந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத தளபாடங்களோ, அல்லது பாரிய இராணுவ நடவடிக்கைகளோ சாத்தியப்படாது என்று கூறும் ஸ்ரீலங்கா பிரதமர், அதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பே அவசியப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் சேவை கட்டளை மற்றும் படை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு கலாசாலையில் படை அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு வி…

    • 3 replies
    • 632 views
  23. அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை திருப்பி அனுப்பாது திட்டமிடப்பட்ட வேலைகளை செய்து முடிக்கும்படி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வேண்டியுள்ளார். கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இவ் வருடத்துக்கான இரண்டாவது அமர்வு இதன் குழுக்கூட்டத்தின் தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்ைகயில் ஏற்கனவே இவ் மாவட்ட அபிவிருத்தி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிறுத்தி இவ் அபிவிருத்தி வேலைகளை முடக்குவது நல்லதல்ல. இந்த நிதி மாவட்டத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒரு முதல்…

    • 2 replies
    • 785 views
  24. ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் சிறப்புச் செய்தியாளர்Dec 15, 2019 | 4:26 யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்…

  25. தாயகத்தில் எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன-செல்வம் அடைக்கலநாதன் தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும். அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.