ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
பொதுமக்களின் துன்பங்களை போக்கும் ஜனாதிபதியாகுவேன்… சஜித் பிரேமதாச October 30, 2019 தனது நிர்வாகத்தின் கீழ் ஒரு தேசிய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தப் போவதாகக் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் நேற்று (29.10.19) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொது மக்களை கேந்திரமாக கொண்ட சிறந்த பொது சேவையை மேற்கொள்ள தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் உள்ள அனைத்து பிரதேச சபை அலுவலகங்களிலும் ஜனாதிபதி அபிவிருத்தி பிரிவொன்றை ஸ்தாபித்து, அனைத்து தேர்தல் பிரிவுகளிலும், அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் பொதுமக்களின் தன…
-
- 0 replies
- 271 views
-
-
தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது… October 30, 2019 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை (31.10.19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, அரச தனியார் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு படையினரின் தபால் மூல வாக்காளர்கள் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க உள்ளனர். மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தினத்தில் தபால் வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி வாக்களிக்க கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதன்படி, தமது சேவை…
-
- 0 replies
- 369 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ளும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கப் போவதாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். இது தொடர்பில் சிவில் சமூக குழுவினர் நேற்று முன்தினம் முதல் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் வேட்பாளர்களின் முடிவை அறிவிக்க ஐந்து நாட்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் 'நமது கனவு 'எனும் 8 பிரதான திட்டங்களைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் இலங்கை மன்றக்கல்லூரியில் வெ ளியிடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், எமது தேர்தல் விஞ்ஞாப…
-
- 3 replies
- 515 views
-
-
வறுமையை ஒழிப்பதற்கு ஒரு புதிய திட்டம் – சஜித் பிரேமதாச நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதிய திட்டம் நாட்டில் செயற்படுத்தப்படும் எனவும் கூறினார். தற்போது நாட்டில் ஏராளமானோர் இன்னும் வறுமையில் வாழ்கிறார்கள் என கூறிய சஜித் பிரேமதாச அவர்களின் வறுமையை ஒழிப்பதற்காக சமுர்தி திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறின…
-
- 0 replies
- 496 views
-
-
எமது ஆட்சியில் மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத் பொன்சேகா நாட்டில் வலுவான பாதுகாப்பு முறைமை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீரைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர் சிறையில் இருக்க அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடித்திரிவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். அத்தோடு சேமலாப நிதியைக் கோரி போராட்…
-
- 0 replies
- 226 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார். இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கை - சீன திட்டங்கள் குறி…
-
- 5 replies
- 1.1k views
-
-
Wednesday, October 30, 2019 - 6:00am ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களை படுகொலை செய்த இனப்படுகொலைக்கும் , இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சஜித் பிரேமதாச மற்றும் சரத் பொன்சேகா, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பதில் கூறவேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்பாடியில் நேற்று (29) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராஜபக்ஷ குடும்பத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்றது. தமிழ் மக்களின் எதிர்காலம் பற்…
-
- 0 replies
- 535 views
-
-
தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - கோத்தாபய Published by J Anojan on 2019-10-28 15:41:02 (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். வவுனியா நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார். நாட்டு மக்களின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்திற் கொண்டு சிறந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை வெளிப்படுத்தியுள்ளோம். கிராமிய கைத்தொழில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான கொள்கை திட்டங்களை உள்ளடக்க…
-
- 10 replies
- 2.7k views
-
-
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு தினமும் உணவு இன்றி 24 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். மேற்பிரிவு மாணவர்களான தாய் தந்தையை இழந்து உறவினர்களுடன் வசித்து வரும் இவ்வாறான மாணவர்களே தினமும் பாடசாலைக்கு உணவு இன்றி பசியுடன் செல்கின்றனர். இதனால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் இச் செயற்பாட்டினால் மாணவர்கள் சிலர் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்க தூண்டுவதாகவும் மாணவச்சமூகம் ஒரு சீர்கேடான நிலைக்குத்தள்ளப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.விக்கினேஸ்வரன் தமது பாடசாலையின் மாணவர்களின் தேவை கருதியும் தற்போது…
-
- 3 replies
- 1k views
-
-
(எம்.மனோசித்ரா) 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் அந்த ஆட்சி காலத்தில் மனிதர்களை கடத்திச் சென்று செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவ்வாறானதொரு அச்சுறுத்தலான சூழலிலேயே நாம் வாழ்ந்தோம். ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை. விரும்பியவாறு அரசியலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. ஜனாநாகமும் இருக்கவில்லை. அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரமே இருந்தார்கள். ஏகாதிபதி சொல்வதை மாத்…
-
- 4 replies
- 608 views
-
-
இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு; வவுனியாவில் தாய் கைது க.அகரன் அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி, தனது நான்கு வயது பெண் பிள்ளை மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். அத்துடன், தானும் கிணற்றுக்குள் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதுடன், மீட்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை அம்பியுலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, தாயை கைதுசெய்யத நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://www.tamilmirror.lk/வ…
-
- 1 reply
- 819 views
-
-
(ஆர்.விதுஷா) இவ் வருடத்தின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகி 486 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தேசிய பாலியல்சார் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் சந்திரிக்கா ஜெயக்கொடி, எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளிகள் இவ் வருடத்தில் மாத்திரம் சுமார் 3,393 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் செய்தி சேகரிக்கும் போது ஊடகவியலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் இடம் பெற்றது. எ…
-
- 3 replies
- 929 views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30பொதுமக்களின் நினைவு தினம் நேற்றுமுன்தினம் (23) அனுஷ்டிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுகொலைசெய்தனர். கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர். இவர்களை நினைவுகூரும் வகையில் …
-
- 5 replies
- 1.1k views
-
-
குங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர Published by J Anojan on 2019-10-28 14:43:24 (ஆர்.யசி) தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக…
-
- 6 replies
- 749 views
-
-
மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணியும் பேட்கள் குறித்து உரையாடுவதற்கு நான் வெட்கப்பட மாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பேட்கள் குறித்து சஜித் பிரேமதாச ஆற்றிய தொடர்பில் அவரை எதிரணியினர் மோசமாக விமர்சித்த நிலையில் பதிலடியாக இந்தக் கருத்தை சஜித் முன்வைத்துள்ளார். மேலும், யுனிசேப் தகவல்படி இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட பருவ வயதுடைய பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பாடசாலை கல்வியை தவற விடுகின்றனர். எமது அரசு சுகாதர பொருட்களுக்கான வரியை 100% இருந்து 63% குறைத்தனர். ஆனால் ஆயிரக் கணக்கான பெண்கள் இன்னம…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கிற்கு செல்வது பாதுகாப்பு இல்லை என கூறிய கோத்தா இப்போது மட்டும் எவ்வாறு யாழ்ப்பாண் சென்றார் என்று அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (28) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் யாழுக்கு வந்திருந்தனர். இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கிற்கு பயணம் செய்வது குறித்த பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கை புறக்கணித்திருந்தார். இப்ப…
-
- 0 replies
- 338 views
-
-
முப்பது வருட யுத்தம் நாட்டின் பல்வேறுபட்ட இழப்புக்களுக்கும் தியாகத்திற்கும் மத்தியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மக்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அவரவர் கலாசார மரபுகளைப்பேணவும் ஒற்றுமையுடன் ஜனநாயக மரபுகளைப்பேணி வாழ்வதறகாக நடைமுறையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் நாட்டின் தேசியபாதுகாப்பை உறுதிப்படுத்தி கௌரவமாக மக்களை பாதுகாக்க வேண்டிள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசுசெய்து வரும் இந்த நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறுபட்ட மீள்கட்டமைப்பு புணருத்தான நடவடிக்கைகளையும் பல அபிவிருத்திகள் செயற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் நிலையில் குறிப்பாக வட புலத்திலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட யாழ் ,கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம்களின் விடயம் ம…
-
- 0 replies
- 451 views
-
-
சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை கொழும்பில் நேற்று பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமந்திரனுக்கும் நந்திக்கடல் போன்று ஒரு பதில் வேண்டுமெனில் ஒரு மாதத்தில் அந்த பதிலை வழங்க இந்த நாட்டு மக்கள் தயார் என எச்சரித்துள்ள அவர் தாம் முல்லைத்தீவில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் பிரிவினைவாதத்திற்கு இன்று வடக்கு முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளது. நாம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரிவினைவாதம் வடக்கில் கடந்த மூன்று வருடங்களில் மிக வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அதனை முற்றாக இல்லாதொழிக…
-
- 21 replies
- 1.9k views
-
-
காணிகளை விடுவிக்க ராணுவம் மறுப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர மாவை முடிவு யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அந்தந்த மாவட்டங்களின் ஆளுநர்களும் அவ்வப்பகுதி மக்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் படையினரும் (தளபதிகள்)கலந்து பேசி மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. சில இடங்களில் மக்…
-
- 1 reply
- 318 views
-
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு அணிசேரா இயக்க நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது அவசியம் : திலக் மாரப்பன Published by R. Kalaichelvan on 2019-10-29 14:27:13 (நா.தனுஜா) அனைத்து வகையிலுமான பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கை கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, அத்தகைய தீவிரவாத செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கு அணிசேரா இயக்கத்தின் அங்கத்துவ நாடுகள் கூட்டாக செயற்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அழைப்பு விடுத்திருக்கிறார். அணிசேரா இயக்கத்தின் 18 ஆவது உச்சி மாநாடு கடந்த 26 ஆம் திகதி அஸர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்கினார்.…
-
- 1 reply
- 268 views
-
-
சம்பள அதிகரிப்பதில் பாரிய புரட்சிகளை செய்திருக்கிறோம் – ரவூப் ஹக்கீம் சம்பள உயர்வில் நாங்கள் பாரிய புரட்சிகளை செய்திருக்கிறோம். மக்களின் வாழ்வாதார செலவு அதிகரித்துள்ள போதிலும், கடந்த அரசாங்கத்தை விட பாரிய விலைக்குறைப்புகளையும் செய்திருக்கின்றோம். நாங்கள் அவற்றை விளம்பரப்படுத்தாமையினால்தான் அதுகுறித்து யாரும் பேசுவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பேராதனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர் மேலும் கூறியதாவது; பல்…
-
- 1 reply
- 270 views
-
-
மரண தண்டனைக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு, நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் 10 ஆம் திகதி குறித்த இடைக்கால தடையுத்தரவை நீட்டிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார். அதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடையுத்தர…
-
- 1 reply
- 344 views
-
-
கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே கோத்தாபயவின் வெற்றியை தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி : அளுத்கமகே Published by R. Kalaichelvan on 2019-10-29 15:09:32 (இராஜதுரை ஹஷான்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை தடுப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் பாரிய சதிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்னும் ஒரிரு நாட்களுக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல்யமான நபர்கள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த ஊடக…
-
- 0 replies
- 487 views
-
-
கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த Oct 29, 2019 | 1:34by Vanni in செய்திகள் தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த பொதுஜன பெரமுனவின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “மக்களுக்கு சேவையாற்றியவரையேஅதிபர் வேட்பாளராக களமிறக்கியுள்ளேன். சிறந்த பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்க அனைவரும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை அதிபராக…
-
- 0 replies
- 260 views
-
-
தமிழ்க் கட்சிகளுடன் சஜித் பேசத் தயாரில்லை – ஷிரால் லக்திலக Oct 29, 2019 | 1:51by கி.தவசீலன் in செய்திகள் ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என்று, அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார். “ஐக்கிய இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக, சஜித் பிரேமதாச தெளிவான கொள்கையை முன்வைத்துள்ளார். அதற்கு அப்பால் பேச்சுக்களை நடத்துவதற்கு எதுவும் இல்லை. தமிழ்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தமிழ் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதாக…
-
- 0 replies
- 226 views
-