Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்துள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாக மூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் சபையின் உப தவிசாளர் ஜெயகரன் குறித்த கண்டனத்தைச் சபைக்குக் கொண்டு வந்தார். அவர் அங்குத் தெரிவிக்கையில், தமிழ் பத்திரிக்கையான வீரகேசரி பத்திரிக்கையின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் குறித்த செய்தியாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காலில் படுகாயம் அடைந்து ந…

    • 0 replies
    • 198 views
  2. (நா.தனுஜா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அநுராதபுர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார். யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தம்பர அமில தேரர் சுட்டிக்காட்ட…

    • 0 replies
    • 346 views
  3. ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு தெரி­விக்­கு­மே­யானால் அதனை தமிழ் முற்­போக்கு கூட்­டணி வர­வேற்கும். அதில் எமக்கு ஆட்­சே­பனை கிடை­யாது என்று கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கலா­நிதி. வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார். அண்­மையில் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பொக­வந்­த­லாவ பகு­தியில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேற்று பார்­வை­யிட்ட பின்பு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் கருத்த தெரி­விக்­கையில், ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்…

    • 0 replies
    • 282 views
  4. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன் தினம் (11.10.2019) இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவந்ததன் அடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இரணைதீவு மக்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை ப…

    • 0 replies
    • 320 views
  5. (ஆர்.யசி) இந்நாட்டினை ஆட்சி செய்யவேண்டும் என்றால், சிங்கள மக்களை ஆதரிப்பதை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும். ஒரு இனத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து ஏனைய இனங்களை நிராகரித்தால் நாடு தீப்பிடித்து எரியும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த நாட்டினை இராணுவ ஆட்சியில் கொண்டு செல்ல வேண்டுமா அல்லது மக்களால் ஆளக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ச…

    • 0 replies
    • 139 views
  6. யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் 30 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இராணுவத்தினரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில் பெண் ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தி…

  7. யுத்தத்தை வெற்றி கொண்ட நாளே சிறந்த நாள் – தேசிய பாதுகாப்பே முதன்மையானது… October 12, 2019 நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலிச் சேவை ஒன்றுக்கு இது குறித்து வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மூன்று வேலை உணவு உண்டு நிம்மதியாக வாழ வேண்டும் எனவே விரும்புகிறார்கள் என்றும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்கப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகள் தீ…

  8. புலிகளுடன் தொடர்பு – ராமசாமியை கைது செய்ய வலியுறுத்தல் – தமிழ் சினிமா பிரபலத்துக்கு தடை? October 12, 2019 விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டி பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் சினிமா பிரபலத்துக்கும் மலேசிய அரசு தடை விதிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் எனக் கூறி 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பினாங்கு துணை முதல்…

  9. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய முன்னணியின் சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண…

    • 10 replies
    • 1.2k views
  10. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். http://valampurii.lk/valampurii/content.php…

  11. கோத்தாவுக்கு ஆதரவா? – மறுக்கிறது இதொகா Oct 10, 2019 | 5:27by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இதொகாவின் மூத்த உதவித் தலைவரும், பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொனஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக மகிந்த அமரவீர கூறியுள்ளது அடிப்படையற்றது. அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை. அதேவேளை, சஜித் பிரேமதாசவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக அந்தக் கட்…

  12. (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த…

    • 5 replies
    • 1k views
  13. கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு …

  14. (நா.தனுஜா) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்த…

  15. (செ.தேன்மொழி) தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் தியதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் எமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார். அதேவேளை 50 பேரணிகளையும், 250 கூட்டங்களையும் 3500 மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பு - பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/66694 மஹிந்த, ரணிலால் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மு…

    • 2 replies
    • 661 views
  16. -மு.தமிழ்ச் செல்வன், எஸ்.என்.நிபோஜன் “ஜனாதிபதித் தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஓர் அபாயகரமான நிலையாகும்” என, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து, அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை …

    • 3 replies
    • 1k views
  17. -சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு, இன்று, கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நினைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சமகால அரசியல் நிலை தொடர்பிலும், கோட்டாபய ராயபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோர் குறித்தும் கருத்துத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/நினைவேந்தல்-நிகழ்வு/72-239833

    • 0 replies
    • 369 views
  18. உலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எக­னொமிக்ஸ் (Focus Economics) என்ற பொரு­ளா­தார ஆய்வு நிறு­வ­னத்தின் அறிக்­கைக்கு அமைய வெளி­யிடப்பட்­டுள்­ளது. 126 நாடு­களின் மொத்த தேசிய உற்­பத்­தியை ஆய்­வுக்கு உட்­ப­டுத்தி இந்த ஆய்­வ­றிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கைக்கு அமைய உலகின் வறு­மை­யான நாடு­களின் பட்­டி­யலில் கொங்கோ குடி­ய­ரசு முத­லி­டத்தைப் பெற்­றுள்­ளது. அதேவேளை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்­கள் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் பெற்­றுக்­கொண்­டுள்­ளன. இந்­தப்­பட்­டி­யலில் இலங்கை 36 ஆவது இடத்தில் காணப்­ப­டு­கி­றது. 2017 ஆம் ஆண்டில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யின்­ப­டியும், இலங்கை 36 ஆவது இடத்­தையே பெற்­றி­ருந்­தமை குறிப்­பி…

    • 0 replies
    • 451 views
  19. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/66620 ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்ப…

    • 17 replies
    • 1.6k views
  20. ஹிஸ்புல்லா நியமனம் | முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி- துஷார இந்துணில் October 10, 2019 marumoli 0 Comments துஷார இந்துணில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேட்பாளர் நியமனம் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சிறீலங்கா பொதுஜன பெரமுன வின் தந்திரோபாயச் சூழ்ச்சி என ஐ.தே.கட்சி யின் பா.உ. துஷாரா இந்துணில் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஐ.தே.கட்சியும், சஜித் பிரேமதாசா போன்றோரும் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர் என்று கூறுவதன் மூலம் பெளத்த சிங்கள மக்களைக் கோதபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வைப்பதற்கு ரத்தன தேரர் முயல்கின்றார். அதே போல ஹிஸ்புல்லா சுதந்திரமான வேட்பாளராகக் களமிறங்குவதன் மூலம் முஸ்லிம் மக்கள் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிக்…

  21. நீதிபதிகளை தெரிவு செய்யும் தேர்தல் அல்ல – கோட்டாவிற்கு தம்பர அமில தேரர் பதிலடி! மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் தேவைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. ‘ஒன்றாக முன்னோக்கி செல்வோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே கலாநிதி தம்பர அமில தேரர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தான் நவ…

    • 1 reply
    • 1.3k views
  22. ஆணை வழங்குங்கள், சிறுபான்மையாக இருந்தபோது செய்ததை விட செய்வோம்- ரணில் பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக இருந்து கொண்டு முன்னெடுத்த சீர்திருத்தங்களை பல மடங்காக்க ஆணை வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஐந்து வருடங்களில் நடத்திய வெளிப்படையான ஆட்சியின் மூலம் செயற்படுத்தப்பட்ட சீர்திருத்த செயன்முறையை முன்கொண்டு செல்ல, ஜனாதிபதி தேர்தலிலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு வழங்கினால் அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் சீர்த்திருத்தம் மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயரிய இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். சிவில் சம…

    • 2 replies
    • 384 views
  23. CMR THAMILFM இல் நடைபெற்ற கருத்துக்களத்தில் தமிழர் தாயகத்தில் ஆசிரிய மாணவ உறவுநிலை தொடர்பாக யாழ்பல்கலைகழக முகாமைத்துவ கற்கைகள் நெறிகள் வணிகபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் வழங்கிய நேர்காணல்நேர்கண்டவர் : பாலா ரத்னம்

    • 1 reply
    • 254 views
  24. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்று தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் கோதாபயவுக்கு ஆதரவு வழங்குவது ஏற்புடையதல்ல. இந்த செயற்பாடு சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பதாகும். குறித்த கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தால், நாம் தலைமைத்துவத்தை ஏற்று கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்பி இருப்போம். ராஜபக்ஷக்…

  25. (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் அழைத்துவரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன், அச்சித்திரவதை கூடத்தில் இருக்கும் போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையே என நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் விசா…

    • 0 replies
    • 852 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.