ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143688 topics in this forum
-
ரணிலைச் சந்தித்த ரெலோ, புளொட் – 48 மணி நேரத்துக்குள் முடிவு Nov 05, 2019 | 1:55by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ரெலோவும், புளொட்டும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் முடிவை அறிவிக்கவுள்ளன. கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை கூட்டமைப்பின் தலைமை இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு …
-
- 0 replies
- 271 views
-
-
வடக்கு, கிழக்குக்கு வெளிநாட்டு உதவியை பெற கொடை நாடுகளின் மாநாடு – சஜித் வாக்குறுதி Nov 05, 2019 | 2:19by Vanni in செய்திகள் வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று தேர்தல் பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தாம் அதிபராகப் பொறுப்பேற்றதும், கூடிய விரைவில் இந்த மாநாடு கூட்டப்படும் என்றும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அதிபர் அபிவிருத்தி செயலணிகளில் இரண்டு புதிய சிறப்பு பி…
-
- 0 replies
- 236 views
-
-
"நான் காட்டிக்கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை": கருணா அம்மான் ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் …
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகும் – சி.வி.விக்னேஸ்வரன் வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் ஜனநாயக உரிமையை மதிப்பதாக தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன், யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வாகுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக்கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் தமது 13 அம்சக் கோரிக்க…
-
- 0 replies
- 331 views
-
-
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்திக்க சம்பந்தன் தீர்மானம் – மாவை தகவல் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்காளிக்கட்சிகள் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஒரு சிலர் ஆதரவை தெரிவித்துள்ள போதிலும் ஒரு சிலர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அனைவரும் பொது நிலைப்பாடு ஒன்றினை எட்டி கூட்டான இணைந்து பயணிக்க முடியும். அது குறித்து விரை…
-
- 0 replies
- 172 views
-
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு உண்ணாவிரதப் போராட்டம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். சுதந்திர சதுக்கத்திலேயே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமெரிக்காவுடனான-ஒப்பந்-2/
-
- 0 replies
- 145 views
-
-
பயங்கரவாதம் தலைதூக்க இனியொருபோதும் இடமளிக்கமாட்டேன்- சஜித் நாட்டில் பயங்கரவாதம், இனவாதம், அடிப்படைவாதம் என்பன இனியொருபோதும் தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னிணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “நாம் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். என்னிடம் இரகசிய ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்று எதுவும் இல்லை. மேலும் அனைத்து மக்களையும் ஒருதாய் மக்களாக பார்க்கும் யுகம் தோன்றம்பெற வேண்டுமாயின், எதிர்வரும் தேர்தலில் என்னுடன் கைகோர்த்து அன்னம் சின்…
-
- 0 replies
- 221 views
-
-
17 இன் பின்னர் நாட்டை விட்டும் வெளியேறுங்கள்- மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் எனவும் வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவது தான் சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்…
-
- 1 reply
- 559 views
-
-
கிழக்கு மாகாணம் காத்தான்குடியில் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் போராட்டம் தாக்குதல், கொலை அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் கோசம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டு எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகவியலாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டியணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர…
-
- 0 replies
- 318 views
-
-
ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை பாதுகாப்பதல்ல, அரசாங்கத்தை பாதுகாப்பதே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று முன்தினம் (03) ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்; வட, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்ட…
-
- 0 replies
- 212 views
-
-
Published by J Anojan on 2019-11-04 20:47:18 (நா.தனுஜா) கோத்தபாய ராஜபக்ஷ பல்கலைக்கழகத் தெரிவிற்கான வெட்டுப்புள்ளி வழங்கல் முறையை இரத்துச் செய்வதாகவும், அதற்குப் பதிலாக பாடசாலைவாரியாக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களைத் தெரிவு செய்யக்கூடிய விஞ்ஞானமுறையொன்றை உருவாக்கவிருப்பதாகவும் கூறுகின்றார். அவர் கூறுவதை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்? வெட்டுப்புள்ளி முறையை நீக்குவதால் இலவசக்கல்வி முற்றாக அழிந்துபோகும் நிலையே ஏற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலவசக்கல்வியையும் இல்லாமல் செய்யத் திட்டமிடுகின்றார்கள். எனவே தான் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவைத் தோற்கடித்து, சஜித் பிரேமதாசவை வெற்றி …
-
- 2 replies
- 443 views
-
-
தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதன்போது அவர்களது கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களை வழிமறித்த பொலிஸார் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு செல்ல விடாததன் காரணத்தினால் வீதியோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள் 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது ஒ…
-
- 15 replies
- 1.1k views
-
-
சஜித்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ஜீ.எல்.பீரிஸ் Published by Loga Dharshini on 2019-11-04 16:34:25 (எம்.மனோசித்ரா) 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு என்று மிகத் தெளிவாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென சஜித்தை ஆதரிக்க ஏகமனதாக தீர்மானித்துள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியிர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் கூட்டணியமைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மிரிஹானையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவத…
-
- 3 replies
- 448 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்குகொண்ட பிரசார கூட்டம் இன்றையதினம் (4) முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசற்ற்ஹ்தில் இடம்பெற்றது . இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் கேப்ப்பாபுலவு மக்களின் காணிபிரச்சினைக்கும் தன்னால் தீர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் . தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் , முல்லைத்தீவின் ஆறு பிரதேச செயலகங்களிலும் 660 சிறு கிராமங்களை உள்ளடக்கியதாக ஒவ்வொரு குடும்பங்களது ஒவ்வொரு உறுப்பினர்களின் எதிர்கால பொறுப்பையும் சஜித் பிரேமதாச கைக்கு எடுத்துள்ளார் என்பதைக் கூறிக் கொள்கிறேன். பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இப்பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் கைத்தொழிலை சிறந்த ம…
-
- 0 replies
- 402 views
-
-
Published by J Anojan on 2019-11-04 17:17:48 (நா.தனுஜா) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்பன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான கலந்துரையாடல்களே இதன்போது இடம்பெற்றன. தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்…
-
- 0 replies
- 405 views
-
-
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் காலை10.30 மணியளவில் ஆரம்பமானது.கொடிஏற்றலைதொடர்ந்து செயலாளர்நாயகம் டக்ளஸ்தேவானந்தா பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழாமண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் நிகழ்வுகள்ஆரம்பமாகின.மேலும் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் குறித்த மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஈழமக்கள்-ஜனநாயகக்கட்சிய/
-
- 7 replies
- 648 views
-
-
நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், வரும் 16ஆம் நாளுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் முடிவடையலாம். இந்த நிலையில், சிறிலங்கா அதிபராக, நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை அடுத்தவாரம் நிகழ்த்தவுள்ளார். வரும் 7ஆம் நாள், வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது உரையில் கவனம் செலுத்தவுள்ள முக்கியமான விடயம் என்னவென்று தெரியவரவில்லை. எனினும், மிகவும் சர்ச்சைக்குரிய, முக்கி…
-
- 1 reply
- 286 views
-
-
துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது பூண்டுலோயாவில் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் – 31, வெற்றுத் தோட்டாக்கள் – 8 மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் 13 கிலோ கிராம் கஞ்சா என்பன சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 330 views
-
-
அன்னம் நீரிலிருந்து பாலைக் குடித்துவிட்டு தமிழர்களைக் கைவிட்டுவிடும் ;சிவாஜி அன்னம் நீரிலிருந்து பாலைக் குடித்துவிட்டு தமிழர்களைக் கைவிட்டுவிடும் ;சிவாஜி Published by T Yuwaraj on 2019-11-04 16:26:35 தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத்துரோகத்தினை செய்துள்ளது என சனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் அறிவித்த விடயமானது தமிழரசு கட்சி இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்ப…
-
- 0 replies
- 259 views
-
-
கோட்டாபய ஏன் நேரடி விவாதத்தை மறுத்து வருகின்றார்- சஜித் விளக்கம் 7:00 am November 4, 2019 0 198 Views இலத்திரனியல் திரையைப் பார்த்தே அரசியல் மேடைகளில் உரையாற்றி வருவதாகவும், இந்த திரையின்றி நேரடியாக பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ விவாதம் பற்றி எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் அறிவிக்காமல் உள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தனித்து விவாதத்தில் கலந்து கொள்ள அச்சம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவையும் உடன் அழைத்து வரலாம். மஹிந்தவை மாத்திரமின்றி ஆயிரக்கணக்கானோரை அழைத்து வந்தாலும் எனது தரப்பில் நான் தனியாகவே பங்குபற்றுவ…
-
- 0 replies
- 231 views
-
-
எவருடனும் இரகசிய உடன்படிக்கைகள் இல்லை – பிரதமர் தமக்கு எந்தவொரு தரப்பினருடனும் இரகசியமாகவோ பகிரங்கமாகவோ இரகசிய உடன்படிக்கைகள் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது சுதந்திரமான யாழ்ப்பாணம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பாதுகாத்து அபிவிருத்தியை நோக்கி செல்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும் அதிகமான காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பில் தேடப்படுகின்றன. யுத்தத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பிலும் கரிசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பி…
-
- 0 replies
- 254 views
-
-
முல்லைத்தீவில் கடும் பாதுகாப்பு மத்தியில் சஜித்தின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.இந்நிலையில் கூட்டத்திற்காக வருகை தரும் மக்கள் சோதனைகளின் பின்னர் மைதான வளாகத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான வீதிகள் தோறும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவில்-கடும்-பாத/
-
- 0 replies
- 259 views
-
-
காலாவதியான மருந்துகள் எரியூட்டம்: அசௌகரியத்துக்கு உள்ளாகினர் பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் உரிய பொறிமுறைகள் இன்றி காலாவதியான மருந்துகள் வட.மாகாண சுகாதார அமைச்சின் வளாகத்தில் தீ மூட்டி அழிக்க முற்பட்டமையால் அயலில் இருந்த பொதுமக்கள் ஓவ்வாமைக்கு உட்பட்டதுடன் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். யாழ்.பண்ணை பகுதியில் அமைந்துள்ள வட.மாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்டிக் போத்தல்களுடன் பாரிய குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று ( திங்கட்கிழமை) இரவு தீ மூட்டியுள்ளனர். அதனால் பிளாஸ்டிக் போத்தல்கள் எரிந்தும், மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தூர்நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடு…
-
- 2 replies
- 471 views
-
-
'சஜித் ஆட்சியில் பிரேமதாசவினருக்கு பதவியில்லை’ குடும்ப தலையீடு இல்லாத ஜனநாயக ஆட்சியொன்றை கட்டியெழுப்பவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்று சுதந்திரமாக கூட்டங்களை நடத்த முடிகின்றது. மனதில் உள்ள கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்க முடிகின்றது. சற்று பின்னோக்கி பாருங்கள். இவ்வாறான ஒரு நிலையா அன்று காணப்பட்டது?. ஒரு குடும்பத்திடம் ஆட்சி அதிகாரங்கள் குவிந்திருந்தன. அவ்வாறான ஒரு யுகத்துக்கு மீண்டும் திரும்புவதாக நாட்டின் எதிர்பார்ப்பு? நான் ஒன்று உறுதியாக இந்த இடத்தில் கூ…
-
- 0 replies
- 284 views
-
-
கோத்தா ஆட்சிக்கு வந்தால் எம்சிசி உடன்பாடு மீளாய்வு – ரம்புக்வெல Oct 31, 2019 | 6:22by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால், அமைச்சரவையினால் நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் எம்சிசி கொடை உடன்பாடு உள்ளிட்ட அனைத்து இருதரப்பு உடன்பாடுகளையும், மீளாய்வு செய்வார் என்று, அவரது பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வியத்மக அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ”அதிபர் தேர்தல்களுக்கு முன்னதாக, எம்சிசி உடன்பாட்டுக்கு, அரசாங்கம் ஏன் அமைச்சரவை ஒப்புதல் கோரியது என்பது குறித்து பலத்த கரிசனைகள் …
-
- 8 replies
- 1.1k views
-