Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு – முடங்கியது நீதிச் சேவை! முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர். முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நி…

  2. திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை சரியாக ஆராய்ந்து வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கு முரணாக கட்சி மேற்கொண்ட தீர்மனத்தினாலேயே கட்சியிலிருந்து தூரமாக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றின் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கத…

  3. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை Sep 25, 2019 | 2:33by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதில் ராஜித சேனாரத்ன அஷூ மாரசிங்க, ரவூப் ஹக்கீம் ஆகியொர் தவிர ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றனர். …

  4. ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை இன்னும் இரு தினங்களுக்குள் முன்மொழிய பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. உட்கட்சிப் பூசல் மேலோங்கியிருந்த நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்த ஐந்து உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டனர். இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் அதிகரித்தது. சுய நலனுக்காக கட்சியை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என்று முன்வைக்கட்ட கருத்துக்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவே பலமான நிலையில் இருக்கின்றார் என்று கிடைத்த தகவல…

    • 3 replies
    • 983 views
  5. உயிரிழந்தது சர்ச்சைக்குரிய ‘டிகிரி’ யானை! கண்டி – தலதா பெரஹராவில் ஈடுபடுத்தப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த 70 வயதான டிக்கிரி என்ற யானை உயிரிழந்தது. கேகாலை – ரந்தெனிய பிரதேசத்தில் குறித்த யானை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தலதா மாளிகையின் விஸ்ணு ஆலயத்தின் ஊர்வலத்தில் டிகிரி எனப்படும் வயோதிப யானையை ஈடுபடுத்தியமை அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 70 வயதுடைய டிகிரி யானை பார்ப்பதற்கு நோயால் பாதிக்கப்பட்டது போலவும் உடல் மெலிந்த நிலையிலும் சோர்வுற்ற நிலையிலும் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றமையால் இந்த யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமை குறித்து பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். விலங்கு ஆர்வலர்…

  6. 15 நாட்களாக தொடரும் இராணுவத்தினரின் போராட்டம் – இருவர் உண்ணாவிரதம்! சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டுவந்த விசேட தேவையுடைய இராணுவத்தினரில் 2 பேர், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கடந்த 15 நாட்களாக அவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உயிர்வாழும் வரையில் சம்பளக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக, நேற்று நிதி அமைச்சு அறிவித்திருந்தது எனினும் இந்த அறிவிப்பின் பின்னரும் அவர்களது போராட்டம் தொடர்கிறது. அத்துடன் அவர்களில் இருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். த…

  7. வேட்பாளர் விவகாரம்: தமிழர்களுக்காக சஜித்துடன் முரண்படும் ரணில் தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ள அதிகாரப் பகிர்வு கோரிக்கையினை நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவிற்கு எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்ற உழைக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கோரிக்கை சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பும் இன்று (புதன்கிழமை) வெளியாகவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று மாலை நாடராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் க…

  8. ஹாபிசம், அரபு மயமாக்கல் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தெரிவுக்குழு பரிந்துரை ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைகுண்டு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்கள், அதிகரிக்கும் வஹாபிசம் மற்றும் அரபு மயமாக்கல் உள்ளிட்ட ஐந்து முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு அவர்களின் பரிந்துரைகளை வழங்க முடிவு செய்ததுள்ளனர். அக்குழுத் தலைவர் துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தின் குழு அறை 3 இல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த கூட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவச…

  9. “இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால் தான் முல்லைத்தீவு – நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள். …

  10. மட்டக்களப்பு – வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (24) பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவில் சட்டத்தரணிகளான சுகாஷ், கணேஷ்வரன் ஆகியோர் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் அனைவரும் தங்களது பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர். இப்பகிஸ்கரிப்புக் காரணமாக செவ்வாய்கிழமை நாட்களுக்குரிய வாழைச்சேனை திறந்த நீதிமன்றில் அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் எதிர்வரும் 2019.11.26ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்…

  11. September 24, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிக…

  12. இன்னொரு இனமுறுகலுக்கான உச்ச கட்ட முஸ்தீபுகளை ஞானசார மேற்கொண்டு வருகிறார்.பேரினவாத சக்திகளின் அடக்கி ஆளுகின்ற மனோபாவத்தின் விளைவே இது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் அல்லது தமிழ் பேசுகின்ற சமூகத்தை நசுக்கி ஒரு அடிமைச்சமூகமாக வைத்துக்கொள்ள முனைகின்ற ஒரு போக்கு தொடர்ச்சியாக உணரப்பட்டு வருகின்றது.தமிழின் தொன்மைக்கு முன்னால் சிங்களம் அழிந்து போய்விடும் என்ற மனப்பயத்தில் சிங்கள மொழிபேசுகின்ற சமூகத்தை ஒரு இருண்மைக்குள் வைத்துக்கொள்ள முனைகின்றது பேரினவாத சக்திகள்.பௌத்த மதத்தின் நேர்மையான உபதேசங்களை மறந்து குரோதத்தையும், முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதில் ஞானசார, அத்துரலியத்த போன்ற பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களை பொருத்தமட்டில் தமிழ் பேசுகின்ற சமூகத்தை அடக்கி ஆள …

  13. நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது : நீராவியடியில் தேரர்கள்! இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பௌத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவு எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது எனக்கூறி தாக்க முற்பட்டதாக சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பௌத்த தேரர்களின் செயற்பாடு குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதற்காக நாங்கள் சென்ற சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர…

  14. கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கின – சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்! கொழும்பில் பெய்யும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி சந்தி, புளூமெண்டல் ஜோர்ஜ் ஆர் டி சில்வா சந்தி, ஜேத்தவன வீதி, பேஸ்லைன் வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி மற்றும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, பலத்த மழையால் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்…

  15. Monday, September 23, 2019 - 10:53am இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது வந்துள்ளது. எனவே அவர் இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கட்டபிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்தி…

  16. “இந்த நாட்டில் பிக்குகளுக்குத் தனி மரியாதை உண்டு. ஆனால், அவர்களை அவமதித்து தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகளின் நடவடிக்கையினால்தான் முல்லைத்தீவு - நீராவியடியில் பதற்றம் ஏற்பட்டது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இறந்த விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை அமைதியான ஓர் இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தார்கள். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் செயற்படும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார்கள். இந்தச் சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தினரையும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்று இந்த விவகாரத்தை ஊதிப்பெருக்…

  17. கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி? – ரணில், சஜித், கரு ஆலோசனை Sep 23, 2019 | 2:30by கி.தவசீலன் in செய்திகள் ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தவுள்ள அதிபர் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. …

  18. நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம் முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் . நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் . கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார்…

    • 10 replies
    • 1.2k views
  19. யாழ் இந்துவின் அதிபர், பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்க்க 1 லட்சம் கையூட்டு பெற்றதாக கூறி கைதாகியுள்ளார். http://www.hirunews.lk/224658/jaffna-hindu-college-principal-who-accepted-a-bribe-arrested

  20. இராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர் Sep 22, 2019by கார்வண்ணன் in செய்திகள் இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள், இராஜதந்திரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும் என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் பணியாற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும், சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று கொழும்பில் சந்தித்து, பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோ…

  21. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார். ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜகத் டி சில்வா இந்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, மேல் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம்.அதிகாரி ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். ஈஸ…

  22. மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளில் ஏதோவொரு கட்சி தான் ஜனாதிபதி ஆட்சியை கைப்பற்றும். ஒரு தேசியக் கட்சி தங்களுடைய வேட்பாளரை அறிவிக்காது தங்களுக்குள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேசியக் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. அவருடைய பெயரைக் கேட்டாலே எங்களுக்கு எல்லாம் பயமாய் இருந்தது. சிலவேளை அவர் வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற பயம் பல பேர் மத்தியில் இருக்கிறது. மீண்டும் வெள்ளை வேன் வரும…

  23. எவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை! கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. …

  24. வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது , பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன் , அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும்…

    • 0 replies
    • 300 views
  25. யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளைத் தேடிக்கொள்வது என்பது பெரும் சவாலான விடையமாகவுள்ளதுடன். யாழ்.மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளார்கள் என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட கல்லுண்டாய் வெளியில் புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளக வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காணியற்றவர்களாக உள்ளவர்கள் நிரந்தர வீடுகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சால் வழங்கப்பட்ட வீடுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே வ…

    • 0 replies
    • 328 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.