Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292

    • 0 replies
    • 715 views
  2. தேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52 (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம். இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை உடையவர்களா…

    • 0 replies
    • 263 views
  3. மக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா? மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா?: திகா Published by Loga Dharshini on 2019-10-22 12:58:28 நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது மக்­களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்­பாங்­கு­டைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா என்­பதை மலை­யக மக்கள் ஒப்­பிட்­டு­பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத…

    • 0 replies
    • 299 views
  4. கோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி Oct 22, 2019 | 7:09by கார்வண்ணன் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அகிம்சா விக்ரமதுங்க முடிவு செய்துள்ளார். வெளிநாட்டு அதிகாரபூர்வ விலக்குரிமை இருப்பதாக கூறி, அடிப்படையில், லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக…

  5. 13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள் எனவும், இதனை தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன் எனவும் தமிழ் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சமஸ்டி ரீதியிலான தீர்வொன்றை தர முடியாது எனவும், ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என ஜனாதிபதியும், பிரதமரும், தெற்கு அரசியல்வாதிகளும் அறிவித்து வரும் நிலையில், இப்படியான யோசனையொன்றை தமிழ் மக்களுக்காக முன்வைத்திருப்பதன் நோக்கம்…

    • 0 replies
    • 451 views
  6. அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவை Oct 22, 2019 | 6:48by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணத்துக்குப் பயணத்தை மேற்கொண்டது. இதன்போது திருச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையே அந்த விமானத்தைக் கண்காணித்தது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இ…

    • 0 replies
    • 345 views
  7. ஹோமாகமை கொடகம பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரை மீகொட பொலிஸார் கைது செய்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. சந்தேக நபரான மருத்துவரை , பெண்ணின் கணவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதுடன் அவர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கொடகம பிரதேசத்தில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என பொலிஸார் குறிப்ப…

    • 0 replies
    • 285 views
  8. 5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியா: கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் உண்மையாக இந்த 5 கட்சிகளும் இந்தியா கொடுத்த ஆலோசனையின் படிதான் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்- கோத்தாவிற்கிடையிலான தேர்தல் அல்ல. இது கட்சிகளுக்கிடையிலான போட்டி தேர்தலும் அல்ல. வல்லரசுக்களிற்கிடையிலான போட்டியாகும்…

  9. 2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019 கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவரே பெண்ணை கொலை செய்துள்ளதாகவும், அவர்பெண்ணை இழுத்துச் சென்று உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளார் என்றும் நீதி விசாரணைகளில் தெரியவந்தது. வயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரர் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். கோண்டாவில் நெட்டிலிப்பாய் ப…

  10. கோட்டாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது, அமெரிக்க நீதிமன்றம். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பாக தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்…

  11. (ஆர்.யசி) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். …

  12. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்திய தூதுவர்களிடம் அனுமதி பெறாமல் மசலக்கூடம் போக மாட்டார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சிட்டனர் என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. …

  13. 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது? 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். …

  14. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி இதனைக் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நா…

    • 4 replies
    • 625 views
  15. இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ள…

  16. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த தலைவரென்றால் அது சஜித் பிரேமதாசவே என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் எதிர்நோக்க இருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலானது, முக்கியமாக இரு வேட்பாளர்களான புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் இ…

  17. (எம்.மனோசித்ரா) இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமலவில் இனவாத மோதல்கள் ஏற்பட்டன. அதன் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாரிய சேவையாற்றியுள்ளார். அந்த சேவையை ஒருநாளும் எம்மால் மறக்க முடியாது. எனவே சஜித் அரசாங்கத்தில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படடுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என்றும் அவர் கூறினார். ஐக்க…

    • 0 replies
    • 491 views
  18. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று (21) நடைபெற்றது. (படப்பிடிப்பு: என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நனவ-தனம/46-240227

    • 0 replies
    • 389 views
  19. திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம் Oct 17, 2019by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இ தன் முதற்கட்டமாக சென்னையில் இருந்து, வந்த அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நி…

  20. TNA இன் நிபந்தனைகளுக்கு UNP உடன்படாது – கபீர் ஹஷீம் வாக்குகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம், அவர்களுக்கு இவ்வாறு, இவர்களுக்கு இவ்வாறு என்று இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்காக முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் நாங்கள் உறுதியான தீர்மானத்திலேயே இருக்கிறோம்…

    • 6 replies
    • 779 views
  21. சிறிலங்கா அதிபர் தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா Oct 21, 2019 | 10:20by இந்தியச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியாவின் ‘எகொனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் சீன அதரவு கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, ஐதேகவின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். அடுத்த மாதம் இந்த தேர்தலின் முடிவு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கும். அதிபர் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதானமான போட்டி சஜித்…

    • 2 replies
    • 609 views
  22. (நா.தனுஜா) பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார். புதிய ஜனநாயக முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் மாநாடு இன்று கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்துவது தொடர்பான கொள்கைகள் மற்றும் அவற்றுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தத்தில் அனைவரின் முன்னிலையிலும் ஜனா…

  23. October 21, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலைய…

  24. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது Published by J Anojan on 2019-10-21 15:36:30 (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாயர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவ…

  25. கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா Published by Loga Dharshini on 2019-10-21 15:46:23 ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வை வழங்க முடியும் என்றால் மகிந்த ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏன் சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்­க­வில்­லை­யென தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர…

    • 0 replies
    • 256 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.