Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.ஆர்.எம்.வஸீம்) நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிக்காதவரை எங்களுக்கு…

    • 0 replies
    • 211 views
  2. யாழ். விமானநிலைய பெயர்ப்பலகை விவகாரம்: இனவாதத்தை தூண்டும் வகையிலான செய்திகள் கண்டனத்திற்குரியவை - ரஞ்சன் (நா.தனுஜா) யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயர்ப்பலகையில் முதலில் தமிழ்மொழியின் பெயரிடப்பட்டிருப்பதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும் யாழில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ இதனைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட வெளியிடாதது ஏன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியிருக்கிறார். யாழ் பலாலியில் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட நிலையில் விமானநிலையத்தின் பெயர் அதன…

  3. எமது அரசில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் : கோத்தாபய Published by R. Kalaichelvan on 2019- Share (இராஜதுரை ஹஷான்) பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவினை எதிர்க் கொண்டுள்ள மலையக மக்களுக்கு எமது அரசாங்கத்தில் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும். தேசிய வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்ள முடியும் என்ற மார்க்கத்தை நன்கு அறிவோம். ஆளும் தரப்பினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு செயற்பாட்டின் ஊடாக பதில் வழங்குவேன். என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்…

  4. (நா.தனுஜா) சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இவ்வாறு செய்வதற்கு அவருக்கு வெட்கமில்லையா? முதுகெலும்பு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். புதிய ஜனநாயக முன்னணியினால் கெகிராவ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், கடந்த செவ்வாய்கிழமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் முன்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ தலைகுனிய நேர்ந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள். அடிப்படைவாதம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எழுப்…

  5. தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்தோம் - சுதந்திரக் கட்சி (எம்.ஆர்.எம்.வஸீம்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார். கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக மத்திய கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ…

    • 0 replies
    • 317 views
  6. விஜேதாச ராஜபக்ஷ கோத்தாபயவுக்கு ஆதரவு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த அணியினருடன் இணைந்து பின்னர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/190996/

    • 0 replies
    • 345 views
  7. ஜந்து கட்சிகளின் ஒற்றுமை என்பது மக்களை ஏமாற்றும் செயற்பாடாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் ஜக்கியத்தை பற்றி பேசி, இனவாத சூழலை உருவாக்கி குளிர் காய்வதே அவர்களுடைய நோக்கம்.எனவே மீண்டும் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த ஐந்து கட்சிகளின் ஒன்றிணைவை பார்க்கமுடியும். என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த கட்சிகளின் செயற்பாடு ஒரு பொய்யானதாகவே தெரிகிறது. இருப்பதை இல்லாமல் செய்யும் வேலையையே இந்த கட்சிகள் செய்ய போகின்றார்கள்.இருப்பதை பாதுகாத்து முன…

    • 3 replies
    • 477 views
  8. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விமான சேவைகள், எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து …

    • 11 replies
    • 1.6k views
  9. எஸ்.நிதர்ஷன் தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறு…

  10. யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது – பந்துல யுத்தம் குறித்து பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘படைவீரர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. நாட்டை பாதுகாக்கும் யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் குறித்து தேர்தல் மேடைகளில் மக்களுக்கு கூற வேண்டிய கதைகள் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம், யுத்த வெற்றி அல்லது யுத்த வீரன் உள்ளிட்டவற்ற…

  11. (இராஜதுரை ஹஷhன்) அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும். நாட்டுக்க வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்தி…

    • 0 replies
    • 253 views
  12. விபத்துக்களால் ஏற்படும் மரணத்தை தவிர்க்கும் முகமாக கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் புதிய தலைக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எதிர்வரும் 08ம் திகதி தொடக்கம் 12 வரை நடைபெறவுள்ள சர்வதேச புத்தாக்குனர் போட்டியில் பங்குபற்றுமுகமாக இந்தோனேசியாவிற்கு கிழக்கு மாகணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் கணித பிரிவு கி.முகேஷ் ராம்(வயது- 17) என்ற மாணவன் தனது கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்து கூறுகையில், இரவு வேளையில் ஆள்நடமாற்றமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து நடைபெற்றால் இணைத்துக்கொள்ளப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கி மரணத்தை தவிர்த்துக் கொள்வதற்கான தலைக் கவசத்தினை கண்டுபிடித்துள்ளேன். எனது கண்டுபிடிப்பானது விபத்…

    • 4 replies
    • 706 views
  13. (தி.சோபிதன்) ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலை­மையை இலங்கையில் காலத்­திற்கு காலம் ஆட்­சிக்கு வரும் தலை­வர்கள் தமக்கு சாத­க­மாக கையாண்டு வடக்கு–கிழக்கில் சிங்­கள குடி­யேற்­றங்­க­ளையும் பௌத்த மய­மாக்­கல்­க­ளையும் அரங்­கேற்றி வரு­கின்­றனர் என்று யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளனர். எதிர்­வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தமிழர் தரப்பில் பொது நிலைப்­பா­டொன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சியில் ஈடு­பட்ட யாழ்ப்­பாணம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன…

  14. ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் மீது மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன் வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பகிரங்க சவால் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நான் ஒரு பச்சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் பல்வேறு வகையில் என் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் பெட்டிப் பாம்பாக போனதாகவும் …

    • 3 replies
    • 685 views
  15. (ஆர்.விதுஷா) மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர் நாடு திரும்புவதற்கா டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மலேசிய அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்று அந்நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களை மீறியவர்களை அவர்களது தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காகவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 5 மாத கால அவகாசமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் வீசா இன்றி சட்டவிரோதமான முறையிலும், மலேசிய விதிமுறைகள் சட்டதிட்டங்…

    • 0 replies
    • 891 views
  16. 2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கண்ணை­மூ­டிக்­கொண்டு ஆத­ரிக்­க­வில்லை. அப்­போ­தி­ருந்த 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து வடக்கு–கிழக்கை இணைத்தல், அர­சியல் தீர்வு, கைதி­களின் விடு­தலை உள்­ளிட்ட பல விட­யங்­களை உள்­ள­டக்­கிய ஆவ­ணங்­களைப் பார்த்­ததன் பின்­னரே நாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கினோம். அதனை நாங்கள் வெளி­யிட வேண்டாம் என்ற ரீதி­யி­லேயே நாம் அதனை வெளியில் சொல்­ல­வில்லை. ஆனால் எமது சக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் ஊடக சந்­திப்­பொன்றில் மக்­க­ளிடம் சொல்­ல­வேண்­டிய தேவை இருந்­ததன் கார­ண­மாக சரத் பொன்­சே­காவிடம் நாங்கள் செய்து கொண்ட எழுத்து மூல­மான உடன்­ப­டிக்கை பெற்­றி­ருக்­…

    • 1 reply
    • 400 views
  17. ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் பணிகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம் ஒன்றின் நிமித்தம் காரணமாகவே ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா (Akira Sugiyama) இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அகிரா சுகியாமா, குறித்த கட்டடப் பணிகளைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக சமூகத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/67095

  18. சகல தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக குற்றச்சாட்டு; ஆவேசம் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துகளை தமிழ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். "சரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை. சடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமல் போனதாக உறவினர்கள் கூறுகிறார்கள்" என கோட்டாபய ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்க முடியாதென்றும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலென்றும் அவர்கள் கூறினர். காணாமல்போனோர் சம்பந்தமாக அவர் கூறிய கருத்து, உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளை ஏளனப்படுத்தும் செயலாகும். சடலங்களைக் காணததால் காணாமல்போனோர் பற்றி பேசுகின்றனரென்பது தமிழர்களை இழிவுப்படுத்துவதாக இருக்கின்றதென்றும் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். யுத்…

    • 3 replies
    • 632 views
  19. பலாலி மக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இன்னும் விடுவிக்கப்பட இல்லை. அத்துறைமுகம் அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்ட போது இதனைத் தெரிவித்தார். மேலும், பலாலி விமானத் தளத்திற்கு கிழக்குப் பகுதியில் 2000 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இம்மக்களும் தான் இந்த விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டும். …

  20. அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த நிலையியேயே இவ்வாறு அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #அவன்கார்ட் #தலைவர் #கைது #நிசங்கசேனாதிபதி http://globaltamilnews.net/2019/132022/

  21. (இரா­ஜ­துரை ஹஷான்) ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன 35 அர­சியல் கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­ய­மைத்துக் கொள்ளும். பொதுக் கொள்­கை­யுடன் ஒத்­துப்­போகும் வகையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்தால் சாத­க­மான தீர்­மா­னங்­களை இரு தரப்பும் முன்­னெ­டுக்கும் என பொது­ஜன பெர­மு­னவின் பொதுச்­செ­ய­லாளர் சாகர காரி­ய­வசம் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுடன் பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­துவம் பெற்­றுள்ள அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புகள் உள்­ள­டங்­க­லாக இது­வ­ரையில் 23 கட்­சிகள் கூட்­ட­ணி­ய­மைத்துக் கொண்­டுள்­ளன. தற்­போதும் 12 அர­சியல் கட்­சி­க­ளுடன் தொடர…

    • 0 replies
    • 201 views
  22. யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என்று யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். “இளைஞரை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார். சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று அந்த பெண்ணை கண்டித்து வந்துள்ளார். இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கிய…

  23. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. படையினர் வசமிருந்து விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு நாளை அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. நாளை காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவிக்கின்றது. படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு கூட்டங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில் அண்மையில் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கிளிநொச்சி இராணுவ தலைம…

    • 0 replies
    • 230 views
  24. (எம்.நியூட்டன், ஆர். யசி) யாழப்பாணத்தில் சர்வதேச விமானநிலையத்தை அமைத்து உலகத்தரத்துடன் இணைத்தது போன்று நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புத் தரவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டியில் 70 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை குறிப்பாக அரசியல் தீர்வுகள் ஏற்படவில்லை இப்போது தேர்தல் காலம் என்பதால் அதைப் பற்றி பேச விருப்பவில்லை எவ்வளவு விரைவாக எவ்வளவு ஆற்றல் திறனுடன் இந்த நாட்டின் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவின் பணிப்பி…

    • 0 replies
    • 219 views
  25. யாழ். நிகழ்வில், சஜித்தின் போஸ்டர்களுடன்... தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டார். அந்நிகழ்வில் பிரதமருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணியும் கலந்துகொண்டது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஒளிப்படங்கள் பொறிக்கப்பட்ட துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன. ஜனாதிபதி வேட்பாளர் எவருக்கு தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்காத நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இது பரப்புரை நிகழ்வு அல்லாமல் அரச முறை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.