Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சிறப்புச் செய்தியாளர்Sep 17, 2019 | 15:06 by in செய்திகள் பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 300 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்திருந்தார். அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக, பலாலி விமான நிலைய ஓடுபாதை …

  2. நாட்டின் ஆசிரியர்களில் 10 வீதமானவர்கள் சேவைக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி நாட்டில் ஆசிரியர் சேவையிலுள்ளவர்களில் 10 வீதமானவர்கள் குறித்த சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி சுமார் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேரில் 10 வீதமானவர்கள் ஆசிரியர் சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்பது கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மேலும், பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் …

  3. நொவம்பர் 15இல் அதிபர் தேர்தல் நடக்க வாய்ப்பு Sep 18, 2019 | 2:28by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நொவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதன்போதே, நொவம்பர் 15ஆம் நாள் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், அதிபர் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசியல் கட்சிகளின் செயலர்களிடம் தெரிவித்துள்ளது. …

  4. தகவல் அறியும் உரிமைக்கு.. வலுச்சேர்க்க, ‘தகவல் மாதம்’ பிரகடனம் சர்வதேச தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தினத்திற்கு அமைவாக ‘தகவல் மாதம்’ என்பதை பிரகடனப்படுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 12இன் கீழான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கான சட்டம் தற்பொழுது உலகில் சிறந்த 4ஆவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்…

  5. வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இக் குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்குளங்கள் ஆழமாக்கப்பட்டு அகலமாக்கப்பட்டு மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கலந்…

  6. இலங்கையில் பொதுமக்களை சித்திரவதை செய்யும் 50 பயங்கரவாத விசாரணை பிரிவினரின் பெயர் விபரங்கள்- வெளியிட்டது யஸ்மின் சூக்கா அமைப்பு இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த தனது புதிய விசாரணை அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது அறிக்கையில் சித்திரவதைகளில் ஈடுபடும் 58 பேரின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது. இவர்களில் பலர் அதிகாரிகள் நிலையிலுள்ளனர் என தெரிவித்துள்ள ச…

    • 2 replies
    • 582 views
  7. அம்பாறை, பாலமுனை பகுதியில் வெடிப்பொருள்கள் மீட்பு -வசந்த சந்திரபால, எம்.ஏ.றமீஸ் அம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து வெடிப்பொருள்கள் சில இன்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிப்பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றக்கட்டுள்ளன. இதேவேளை, பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tam…

  8. தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை என தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள் என்றும் எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ((16) நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன அழிப்பு என்பது வெறும் கொல்லுதலைக் …

    • 2 replies
    • 597 views
  9. எழுக தமிழ் பேரணி பெரும் வெற்றி-வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.பேரணி தோல்வியென குறிப்பிடுபவர்கள், பேரணி தோல்வியடைய வேண்டுமென விரும்பியவர்கள்தான். அவர்கள் பேரணிக்கு வந்திருந்தால், கலந்து கொண்ட மக்களை பார்த்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்தார்கள். இதுவே பெரிய வெற்றிதான். ஏனெனில், இதற்கு முன்னர் வெளியிடங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை. இம்முறை வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர். …

  10. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினை அல்ல, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கு தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவுசெய்வீர்களா என்பதை கூறுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா. சம்பந்தன் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமை சந்திக்க முன்னர் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூ…

  11. சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்? Sep 18, 2019 | 2:35by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீனாவினால் மேற்கொள்ளப்படும், திட்டங்களை ஆய்வு செய்யவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 9 மணியளவில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் தாமரைக் கோபுர திறப்பு…

  12. கிங்ஸ்பெரி தற்கொலை குண்டுதாரியின் சடலத்தை அடக்கம் செய்ய உத்தரவு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட அசாம் மொஹமட் முபாரக் என்பவரின் சடலத்தை பொரள்ளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த சடலத்தை அடக்கம் செய்வதற்காக திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்தியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தற்கொலை குண்டுதாரியின் சடலம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்றம் இ…

  13. சரத் பொன்சேகாவுக்கு இணையான பதவி நிலைகளை பெறும் முன்னாள் தளபதிகள் Sep 18, 2019 | 2:22by கார்வண்ணன் in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி நிலைகளை அளிக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பணியாற்றிய அட்மிரல் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும், விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ஆகவும் உயர் கௌரவ பதவிநிலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பதவிக்கு இணையான பதவி நிலைகளாக இவை உள்ளன. இதற்கான அரசிதழ…

  14. அதிபர் வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடாது கூட்டமைப்பு Sep 18, 2019 | 2:31by கி.தவசீலன் in செய்திகள் அரசியலமைப்பு சபையில், எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், ஒரு ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதிபர் தேர்தல் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா பிரதமருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், …

  15. கூட்டமைப்பின் அங்கதனாக கோட்டாவை சந்திக்கிறாா் சுமந்திரன்..! அடுத்தகட்டம் சம்மந்தன் களத்தில் இறங்குவாராம்..! ஜனாதிபதி வேட்பாளா்கள் அனைவரையும் சந்திக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தீா்மானத்தின் பிரகாரம் கோட்டாபாய ராயபக்சாவை சந்திக்க திகதி குறிக்கப்படுவற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கின்றது. தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போதே இது தொடர்பிலும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்பு இரு தடவைகள் கட்சி ரீதியாக கோத்தபாய ராயபக்சா உரையாடினார். தற்போது வேட்பாளராக அறிவி…

  16. மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி நடைபயணம் யங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயணத்தில் அனைவரும் கலந்துகொண்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.இந்த நடைபயணம் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.(15) http://…

  17. சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு திடீர் பயணம்? சிறப்புச் செய்தியாளர்Sep 18, 2019 | 2:35 by in செய்திகள் Mசீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய திட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட சீனாவினால் மேற்கொள்ளப்படும், திட்டங்களை ஆய்வு செய்யவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை 9 மணியளவில் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் தாமரைக் கோபுர திறப்பு விழாவில், உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தாமர…

  18. உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு! உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக குடியிருப்பாளர் தினம் ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றம…

  19. (நா.தனுஜா) கொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக்குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர…

  20. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன் Sep 17, 20190 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்…

  21. இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த மடிக்கணனி, கைத்தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டு உரிமையாளர…

  22. -செல்வநாயகம் ரவிசாந் வட- கிழக்கு இணைப்பை மீளவும் கொண்டுவருவதில் இந்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். எழுக தமிழ்ப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டது போன்று வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. வட- கிழக்கு இணைந்த தமிழர் தாயகமென்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டு 18 வருட காலம் வட- கிழக்கு இணைந்த ஒரு மாநிலமிருந்தது. அந்த மாநிலம் மீள உருவாக்கப்பட்டால் தான் தமிழ்மக்கள் இந்…

    • 8 replies
    • 1.1k views
  23. மைத்திரியின், மகளின்.. ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார். பிரதி சபாநாயகர் ஆனதா குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் புதிய மதுபான சாலைகளுக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பாக சபையில் பேசப்பட்டது. இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பில் முதலில் ஜனாதிபதி முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும் என்றும…

  24. “அரசியலாய்ப் பார்க்காது தமிழர்களின் அடையாளமாக எழுக தமிழைப் பாருங்கள்” ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளமாக தமிழ் மக்களின் இருப்புக்காண பிரதிபலிப்பாக எழுக தமிழை பாருங்கள் என மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் தெரிவித்துள்ளார். வருகின்ற 16 ஆம் திகதி யாழ்பாணத்தில் இடம் பெறவுள்ள எழுக தமிழ் பற்றி இன்று (14.09.2019) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாரும் அரசியல் இலாபம் கருதியோ மக்களை திசை திருப்பும் நோக்கிலோ எழுக தமிழ் நிகழ்வை பார்ப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொடர்ச்சியாக எமது தமிழ் மக்களின் இருப்பை இவ்வாறான நிகழ்வுகள் போராட்டங்கள் புறக்கணிப்புக்கள் மாத்திரமே சர்வதேச ரீதியில் கொண்டு …

    • 2 replies
    • 507 views
  25. முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை இந்த அரசு பெற்றுத் தர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார். சபையின் 17 வது அமர்வு இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஆடை சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. சட்டமானது சுற்றறிக்கை , வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக காலத்திற்கு காலம் தெளிவு படுத்தப் பட்டும் அதனை அறிந்திராத, அல்லது தவறான புரிதல்களைக் கொண்ட சில அரச அதிகாரிகளினால் பாடசாலைகள், பரீட்சை மண்டபங்கள், வைத்திய சாலைகள் போன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.