ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
(எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயதானங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன. எனவே தான் இவ்விடயம் தொடர்பில் அவரை சந்திக்கவிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்த சந்திப்பு நாளை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். https://www.virakesari.lk/article/63215
-
- 0 replies
- 308 views
-
-
திருக்கோணமலை நகரின் அடையாளமாகவும், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை கவருகின்ற மற்றும் அழகு சேர்க்கும் வகையிலும் காணப்படும் மான்களைப் பாதுகாப்பதற்காக திருகோணமலை நகரசபையும், ரொட்றிக் கழகமும் இணைந்து மான்களுக்கு தண்ணீர் தாங்கியுடன் கூடிய கொட்டில் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் மான்கள் தற்போது நகரின் பல பகுதிகளிலும் தனித்து நிற்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதுடன். அவற்றுக்குப் போதிய பாதுகாப்பில்லை. மான்களின் குட்டிகளை அவ்விடத்திலுள்ள நாய்கள் வேட்டையாடி உண்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலமை நீடிக்குமாயின் திருகோணமலை நகரிலுள்ள மானினம் அருகிவிடும். எனவே இதனை பாதுகாக்கும் பொருட்டு மான்…
-
- 0 replies
- 398 views
-
-
August 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். நேற்று புதன்…
-
- 0 replies
- 314 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்தலாம் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல ஆட்சித்தலைவர்களின் காலம் இருந்தது. ஆனால் எதிர்வரும் காலம் மக்களின், விவசாயிகளின் காலமாக ஏற்படுத்தவேண்டும். அதற்கான சந்தரப்பம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் மூலம் கிடைக்கின்றது. அதற…
-
- 0 replies
- 322 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:43 -மு.தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொ…
-
- 0 replies
- 726 views
-
-
ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம் ) மக்கள் வங்கியின் நற்பெயரை பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் நோக்கிலே வங்கியின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். மாறாக மக்கள் வங்கியை விற்கப்போவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் வங்கி(திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வங்கி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி பிழை…
-
- 0 replies
- 249 views
-
-
புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்? ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்…
-
- 1 reply
- 762 views
-
-
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/62932
-
- 32 replies
- 5.4k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில் இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும்போது இவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத…
-
- 0 replies
- 345 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர் ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார். இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து கலந்துரையாடுகயிலேயே பிரதமர் ரணில் …
-
- 0 replies
- 343 views
-
-
(எம்.மனோசித்ரா) அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபடவுள்ளனர். சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை இரு வாரங்களில் நிவர்த்தி செய்து தருமாரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் தற்போது இரண்டு வாரங்கள் கடந்திருந்தும் அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாகவே நாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனினும் அவை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ம…
-
- 1 reply
- 420 views
-
-
கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை! கொழும்பு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொம்பெனித்தெரு முதல் கோட்டை வரையான பகுதியில் உள்ள வாவியில் பயணிகள் படகு சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த படகு சேவையில் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையின் ஊடாக குறித்த தூரத்தை 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த படகு சேவை அனைத்துவித பாதுகாப்புடனும் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி…
-
- 0 replies
- 341 views
-
-
யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள்…
-
- 26 replies
- 3.8k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு பின்பற்றக்கூடாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கை தனது கடந்த காலத்தின் தனிமைப்பட்ட, மோதல்போக்கை பின்பற்றுகின்ற வெளிவிவகார கொள்கைக்கு திரும்பக்கூடாது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த காலத்தின் வெளிவிவகார கொள்கைகளை மீண்டும் பின்பற்றினால் கடந்த நான்குவருடங்களில் கிடைத்த பல நன்மைகளை இழக்கவேண்டிவரும் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்களசமரவீர இந்த வேண…
-
- 0 replies
- 697 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதால்அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி கொலைச் சதி மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களை அடுத்து அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். அவர் பருத்தித்…
-
- 0 replies
- 394 views
-
-
August 21, 2019 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில் சில விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகம்…
-
- 1 reply
- 704 views
-
-
Published by Priyatharshan on 2019-08-21 16:02:34 சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை, நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறை…
-
- 3 replies
- 963 views
-
-
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம் தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "மாகாண சபைத் தேர்தலை நடத்த வழிசெய்யும் விதத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ஒன்றைத் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். இது சிறந்த - ஆக்கபூர்வமான வழிமுறையாகும். 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழேயே கடந்த காலங்களி…
-
- 0 replies
- 375 views
-
-
( எம்.மனோசித்ரா ) கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் பின்னரே இந்த விடயம் குறித்து உறுதிப்படக் கூற முடியும். அனைத்து முஸ்லிம் தரப்புக்…
-
- 0 replies
- 399 views
-
-
2019 ஓகஸ்ட் 21 புதன்கிழமை, பி.ப. 02:36 -எஸ்.நிதர்ஷன் வங்கியால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயனடைந்ததைவிட பாதிப்படைந்ததுதான் அதிகமெனத் தெரிவித்த தொழிலதிபர் வி.ஜெயேந்திரன், இதனை வங்கிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், வங்கிகளில் பெற்ற கடனைச் செலுத்த முடியாமல், பலர் தற்கொலை செய்து வருவதாகவும் மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி, மக்களுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குவததாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, வங்கிகள், மக்களுக்கு கடன்களை வழங்க முதல் …
-
- 2 replies
- 426 views
-
-
Published by Daya on 2019-08-21 11:57:36 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும். நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொ…
-
- 0 replies
- 451 views
-
-
Published by T Yuwaraj on 2019-08-21 15:41:12 (எம்.மனோசித்ரா) மொழியால் பிரிவினைவாதம் ஏற்பட்டதைப் போன்று மதத்தால் ஏற்பட்டுள்ள பிரிவினை வாதத்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனை நாமும் முன்னுதாரணமாக கொண்டு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்குள் வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பாணந்துரையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ' தேசிய வழி ' மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங…
-
- 0 replies
- 668 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படகூடாது. என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளதுடன், திறக்கப்பட்டால் போராட்டம் நடாத்துவோம் எனவும் கூறியுள்ளனா். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார். இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எத…
-
- 2 replies
- 495 views
-
-
ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு! கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் …
-
- 0 replies
- 513 views
-