ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஷ்வனுடனான தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் தொடர்பில் எவ்வித அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை. போலியான வாக்குறுதிகளினால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் இன்று கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பொதுஜன பெரமுன பயணிக்கும் . பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் ஸ்ரீ…
-
- 2 replies
- 934 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு வாகனங்கள் வேண்டும், வீடு வேண்டும், சம்பளம் வேண்டும் என்றால் அப்பவே அரசாங்கத்துடன் பேசுவார்கள் ஆனால் அவர்களிற்கு இளைஞர்களின் பிரச்சினை குறித்து பேச நேரமில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை வல்வெட்டித்துறை மண்ணில் வைத்து கடுமையாக சாடினார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற நிகழ்வு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;, நான் தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என கதைக்க ம…
-
- 1 reply
- 357 views
- 1 follower
-
-
மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துர்நடத்தைச் சம்பத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பாலியல் துர்நடத்தை மேற்கொள்ளப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. பாலியல் துர்நடத்தையின் பின்னர் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூற…
-
- 0 replies
- 383 views
-
-
கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்" ஞானசார" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதான…
-
- 1 reply
- 822 views
-
-
யாழ்.கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் தொல்லையினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ளதுடன், பெற்றோா் தலைமறைவான நிலையில் பிள்ளைகள் அனாதரவாக விடப்பட்டுள்ளனா். என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலா் எஸ்.தவரூபன் கூட்டிக்காட்டியுள்ளாா். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது,கரவெட்ட…
-
- 0 replies
- 431 views
-
-
21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார். பொதுத் தேர்தலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது. அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61568
-
- 0 replies
- 250 views
-
-
வல்லரசுகள் தமிழ்மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் July 30, 2019 வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தை அமுல்படுத்துமாறு கூற முன்னர் அந்த வல்லரசுகள் தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அப்படியானால் தான் தமிழ்மக்களுக்கு வல்லரசு நாடுகள் மீது நம்பிக்கையே வருமெனத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரு…
-
- 0 replies
- 744 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புற்றுநோயாளர்களின் உடல் கழிவுகள் யாழிற்கு எடுத்து வரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது. பல பாகங்களில் இருந்தும் எடுத்து வரப்பட்டுள்ள மனித உடல் பாகங்கள் தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் வெளியானது. “தென்னிலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்கு மனித உடல் பாகங்கள் கொண்டு வரப்படுகின்றன. புற்றுநோயாளர்களில் இருந்து அகற்றப்பட்ட பாகங்களை எரித்து அழிக்கவே அவை கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தெல்லிப்பழை வைத்தியசாலையிலுள்ள இயந்திரத்தில் அவற்றை எரிக்க முடியாது. 1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலேயே அவற்றை …
-
- 0 replies
- 410 views
-
-
உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது July 29, 2019 நிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அது குறித்து மேலும் தெரியவருவதாவது, உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி , பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி வன்னி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர். அந்நிலையில் மனைவி , பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாது விரக்தியில் வாழ்ந்து வந்ததனால் தனது உயிரை மாய்க்கவே …
-
- 1 reply
- 744 views
-
-
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் என கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக, …
-
- 0 replies
- 456 views
-
-
ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்தயில் கைது! தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முஹம்மட் அப்துல் காதர் அசீம் எனப்படும் குறித்த சந்தேகநபர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதுடன் நுவரெலியால் கைப்பற்றப்ட்ட பயங்கரவாதிளின் முகாமில் சஹாரனுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கா…
-
- 0 replies
- 483 views
-
-
றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், றிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கூறினார். எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் ச…
-
- 1 reply
- 545 views
-
-
பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, பராக்கிரம சமுத்திரம் நீரின்றி வற்றியுள்ளது. இந்நிலையில், குறித்த சமுத்திரத்தை அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் பராக்கிரம சமுத்திரம், தற்போது நீரின்றி வற்றிக் காணப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் பராக்கிரம சமுத்திரம் இவ்வாறு வரட்சியால் வற்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பராக்கிரம சமுத்திரத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயச் செய்கையை மேற்கொள்ள பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளர். http://www.tamilmirror.lk/செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாடிய மக்கள் றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர். உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாத…
-
- 0 replies
- 624 views
-
-
இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியரான மு.சின்னத்தம்பி காலமானார் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார். கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இ…
-
- 1 reply
- 1k views
-
-
விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம் July 29, 2019 அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #யாழ்ப்பாணம் #விபத்தில் #பலி #காயம் http://globaltamilnews.net/2019/12751…
-
- 1 reply
- 583 views
-
-
செப்டெம்பர் 07 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரளுங்கள் தமிழ் மக்கள் பேரவை அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் மையக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழ் மக்கள் பேரவையினால் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிரகாரம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்ற சிங்கள, முஸ்லிம் முற்போக்கு அமைப்புக்களும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் ஆதரவை வழங்கி குறித்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத்தரப்பால் ஆக…
-
- 0 replies
- 468 views
-
-
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்! அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சியுள்ள 7பேரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இவர்கள், சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது, ஏற்கனவே வகித்த பதவிகளையே இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டோரும் அமைச்சுக்களை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://ath…
-
- 7 replies
- 1.1k views
-
-
சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண மாநகர சபையால், 5ஜி வலையமைப்பு அமைப்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாதென, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவடடத்தில், ஸ்மாட் கோபுரங்கள், பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும், யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் மட்டும் நடப்படுவதாகவும் அதில் 5 ஜி அலைக்கற்றை பொருத்தப்படவுள்ளதாக சில நபர்கள் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் கோபுர விடயத்தில் அரசியல் இலாபம் தேட முனைகின்றவர்களை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.க…
-
- 1 reply
- 1k views
-
-
வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சற்ரன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் மருத்துவத்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே நலிந்துபோயுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தாம் இந்தத் திட்டத்தினை முன்னெடு…
-
- 15 replies
- 1.8k views
-
-
நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி தொடர்கின்றது; மக்கள் விசனம் வவுனியா சாந்தசோலைக்கு நேற்று மாலையில் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் இருவர் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொண்ட கடன் பணத்தையும் தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் தவறினால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து அடாவடி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். நுண்நிதி நிறுவனப்பணியாளர்களிடம் மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்த குடும்பப்பெண்களிடம் அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் குற…
-
- 4 replies
- 907 views
-
-
ஹஸ்பர் ஏ ஹலீம்- வெளிவாரி பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்கக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியாவில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (29) திங்கட் கிழமை கிண்ணியா திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் கிண்ணியா பீச்சுக்கு முன்னால் இடம் பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கும் அதிகமான வெளிவாரி பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுக்கும் நியமனங்களை வழங்குமாறும் கோசங்களை எழுப்பியிருந்தார்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்குதலில் அரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தால் எதிர்வரும் தேர்தல்களை நாங்கள் புறக்கணிப்போம், அரச நியமனங்களின் போது எங்களையும் உள்வாங்கு, பட்டதாரிகள் நாட்டின் சொத்து, பத்து இலட்சம்…
-
- 0 replies
- 485 views
-
-
மக்கள் ஆதரவு இல்லை எனில் ஓய்வு – கிழட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை…. July 29, 2019 அடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளா் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை வழங்காமல் வலிந்து கிழட்டு அரசியல் செய்யும் விருப்பம் அல்லது தேவை தனக்கில்லை எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் …
-
- 1 reply
- 661 views
-
-
44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. விசேட நிபுணர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட அறிக்கையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க இருக்கின்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் இந்த பரந்துபட்ட விபர அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். அமைதியான ஒன்றுகூடல் நிலைமை தொடர்பில் இலங்கை எந்த மட்டத்தில் உள்ளது என்பது குறித்தே அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறார். கடந்தவாரம…
-
- 1 reply
- 489 views
-