ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
இந்து ஆலயங்களை, சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் கொண்டுவர துரித நடவடிக்கை. இந்து ஆலயங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை சட்ட ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக பிரதேசங்கள் ரீதியாகச் சென்று சேவைகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்துள்ளார் இந்து சமய விவகார அமைச்சின் இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பாலான இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன இந்து சமய, கலாசார அலுவல்கள் திணை…
-
- 2 replies
- 515 views
-
-
அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது என்பதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராகவில்லையென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுவதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement–SOFA) என்று இனங்கா…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தென்பகுதி தீவிரமாகியுள்ளது. ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிவிட்டால் எல்லாம் சரியாக வரும் என்பது தென்பகுதி சார்ந்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் நினைப்பாகும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற தெரிவுப் பிரச்சினைகளுக்குச் சிங்கள அரசியல் கட்சிகள் முகங்கொடுத்துள்ளன. இதில் மகிந்த ராஜபக் தரப்பின் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்வை நிறுத்துவதென்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஏதேனும் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டாலன்றி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் என்பதில் மாற்றுத் தெரிவு இல்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் …
-
- 3 replies
- 1.4k views
-
-
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி - விக்கி அழைப்பு ! போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறுமட்டங…
-
- 2 replies
- 585 views
-
-
மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி ; ஒருவர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, நாவற்குடா வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவூரிலிருந்து கோழிகளை ஏற்றிச் சென்ற வானம் கான்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் மணல் ஏற்றுக் கொண்டு முன்னாள் சென்ன டிப்பர் வாகனத்துடன் மோதுண்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. டிப்பர் வானத்தின் டயர் வெடித்ததன் காரணமாகவே இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/624…
-
- 0 replies
- 426 views
-
-
இலங்கை அரசியலில் அதிரடி : பொதுஜன பெரமுனவின் சம்மேளனம் இன்று (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்மேளனம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளர அரங்கில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த சம்மேளனம் இடம்பெறவுள்ளது. இதில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ , கட்சியின் யாப்பின் பிரகாரம் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவிப்பார். இந்த சம்மேளனம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் உள்ளக விவகாரம் என்பதால் வெளித்தரப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று அதன் போஷகர் பசில் ராபக்ஷ தெரிவித்திருக்கிறார். சுமார் 100 நாட்கள் என்ற கால …
-
- 0 replies
- 265 views
-
-
யாழில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முதியவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 5 அடி 3 அங்குலம் உயரமும் 50 வயது மதிக்கத்தக்க இந்த முதியவர் சாரம் அணிந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த முதியவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 021222 2222, அல்லது 0213211258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய…
-
- 0 replies
- 298 views
-
-
கருவின் பெயரல்ல சஜித்தின் பெயரே முன்மொழியப்பட்டது – August 11, 2019 கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். சாதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப அமைச்சரான அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலும் சரி, மத்திய செயற்குழுவிலும் சரி சபாந…
-
- 0 replies
- 395 views
-
-
வலிகாமம் மேற்கில், செந்தமிழ் மாதிரிக் கிராமம் கையளிக்கப்பட்டது… August 10, 2019 இந்தியஅரசின் நிதிப்பங்களிப்பின் கீழ் அமைக்கப்பட்டசெந்தமிழ் மாதிரிக் கிராமத்தினைபயனாளிகளுக்குகையளித்தல். இந்திய அரசின் நிதிப்பங்களிப்பில் வீடமைப்பு கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சினால் மாதிரிக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்குபிரதேசத்தில் அமைக்கப்பட்ட செந்தமிழ் மாதிரிக் கிராம வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (10 ஆகஸ்ட் 2019) இடம் பெற்றது. இந்தியஅரசின் நிதிப்பங்களிப்பின் கீழ் அமைக்கப்படும் 100 மாதிரிக் கிராமங்களில் இது 3வது மாதிரிக் கிராமமாகும். வீடமைப்பு கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்…
-
- 0 replies
- 276 views
-
-
சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் மீண்டும் திருக்கேதீஸ்வர வளைவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். அத்துடன், இந்து மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர் பாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்களை நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் எம்.ஏ. சுமந்திரன் சந்தித்த நிலையில், இது குறித்து அவர்களுக்கு உறுதியளித்துள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித் தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்து அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்து மதத்துக்கு எதிராக இடம் பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர…
-
- 1 reply
- 797 views
-
-
மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல தலைவர்கள் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர போன்ற அரசியல் தலைவர்கள் இதனைத் தீர்மானிக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். வல்வெட்டித் துறையில், உலக சாதனை நீச்சல் வீரன் ஆழிக்குமரனின் நினைவாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நிதி …
-
- 3 replies
- 655 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் சந்தா பணத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் என்பன தெரிவித்துள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களது மாதாந்த வேதனத்தில் முன்னறிவிப்புகள் இன்றி, தொழிற்சங்கங்களுக்கான சந்தா, 233 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 150 ரூபாய் என்ற அப்படையில் தொழிற்சங்க சந்தா மாதாந்தம் அறவிடப்பட்டு வந்தது. எனினும், தற்போது அந்தத்தொகை 83 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக, தொழிலாளர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால், இவ்வாறு சந்தா பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவையில்…
-
- 3 replies
- 575 views
-
-
வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு முதற்தடவையாக அதுகுறித்து அரசியல் ரீதியில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரசியல் தலைவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவே. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான சாத்தியப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த போது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். வீரகேசரி நாளிதழுக்கு நேற்றைய தினம் ராஜபக்ஷ வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி இந்தியாவின் பிரபல தேசிய தினசரிகளில் ஒன…
-
- 8 replies
- 898 views
-
-
கம்போடியாவுடன் இணைந்து பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் – மைத்திரி தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரசார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கம்போடியாவின் தலைநகராகிய நொம் பென்னில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளுக்காக இருநாட்டு தூதரக நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார். மேலும் கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்படும் என்றும் கூறினார். பௌத…
-
- 3 replies
- 916 views
-
-
மட்டக்களப்பு என்ன சவுதி அரேபியாவா? மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு மதம் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு சவுதி அரேபியாவா எனக் கேள்வியெழுப்பியுள்ள அவர், உடனடியாக அந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “வெளிநாட்டிலிருந்து ஒரு தமிழ்மகன் நிதியைக் கொண்டுவந்திருந்தால் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொண்டுவரப்பட்டது என அவரைக் கைதுசெய்திரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். கலாச்சார நடுவம் செப்டம்பர் 2019 இல் திறக்கப்படும்? இந்திய அரசின் உதவியுடன் பிரதமர் விக்கிரமசிங்கவின் தேசியக் கொள்கைகள்,பொருண்மிய விவகாரங்கள், புனர் வாழ்வுமற்றும் மீளக்குடியேற்றம், வட மாகாணம் மற்றும் இளையோர் விவகாரம் அமைச்சின் தலைமத்துவத்தில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டு வரும் கலாச்சார நடுவம் ஓரளவுக்கு நிறைநிலையை அடைந்து வருகிறது. யாழ்ப்பாணம் புல்லுக்குளத்தில் பொது நூலகத்தை அடுத்து அமையவிருக்கும் இக் கலாச்சார நடுவம் சிறீலங்காவில் வாழும் அத்தனை சமூகங்களினதும் ஒற்றுமையான இருப்பைப் பிரதிபலிக்கும் தனித்துவமான கட்டிடமாக உருவாக்கப்படுகிறது. அத்தோடு யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் புத்துணர்ச்சி பெறச் செய்து, வள…
-
- 0 replies
- 361 views
-
-
ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 'இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா?' என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது. குறித்த கட்டுரையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது. இந்நிலையில் குறி…
-
- 0 replies
- 335 views
-
-
யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம். யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே தாக்குதலை நடத்தியதுடன், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி தப்பிச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்…
-
- 1 reply
- 568 views
-
-
பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டமை குறித்து கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, “பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவர் ஒரு நோக்கத்தைக் கொண்டு போரிட்டார். அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது. ஆனால் தற்போது இடம்பெற்ற தாக்குதல்கள் அவ்வாறானது இல்லை. அவர்கள் எந்த ந…
-
- 0 replies
- 869 views
-
-
சஜித்தின் நிகழ்வை புறக்கணித்த கூட்டமைப்பு? ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். வவுனியா பாவற்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கலைமகள் நகர் வீட்டுத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வின் பதாதைகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒளிப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. எனினும் அவர்களில் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்காமை சந்தே…
-
- 1 reply
- 588 views
-
-
வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே மக்களிடம் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, வவுனியா மேலதிக செயலர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிக…
-
- 1 reply
- 450 views
-
-
சுற்றுலா பயணிகளின் வானில் ஆயுதமா? -பொலிஸாரின் சோதனையால் மட்டு.வில் பதற்றம்! பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வாகனம், மட்டக்களப்பில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று (சனிக்கிழமை) காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இனந்தெரியாத நபரினால், 119 அவசர இலக்கத்தினூடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு, அந்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வ…
-
- 2 replies
- 483 views
-
-
கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ள கல்முனை தமிழ் மக்கள் மன்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கணக்காளர் நியமனம் எனும் விடயத்தை தனது கைக்குள் உள்வாங்கியுள்ளதாக கல்முனை தமிழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. குறித்த மன்றத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத் தரமுயர்வு எனும் கோரிக்கையானது மிக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாது இருந்து வருகின்றது. இவ்விடயம் சம்மந்தமாக கல்முனை தமிழ் மக்கள் மன்றமானது பல காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றது என்பதனை தெரிவிக்கும் அதேவேளை இவ் அமைப்பின் நடவடிக்கையானது அண்மையில் அதிதீவிர நிலையினை அடைந்து இருந்தது என்பது யாவரும் அறிந…
-
- 0 replies
- 281 views
-
-
வலி.வடக்கில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு யாழ்ப்பாணச் செய்தியாளர்Aug 09, 2019 | 5:27 by in செய்திகள் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம அலுவலர் பிரிவுகளின் வாக்காளர்களை, வெளிநாடுகளில் இருந்தாலும் கூட, உறவினர்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீ…
-
- 0 replies
- 421 views
-
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி ! முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொக்குளாய் - முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸா…
-
- 0 replies
- 518 views
-