ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்றிரவு 9.30 மணியளவில் சீனா சென்றுள்ளார். யுஎல்188 என்ற விமானத்தில் 17 பிரதிநிதிகளுடன் பிரதமர் பயணமானார். இந்தப் பயணத்தின் போது, சீனாவின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள சில கைத்தொழில் வலயங்கள், கொள்கலன் முனையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நிலையங்கள், படைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தி இடங்களை அவர் பார்வையிடவுள்ளார். பிரதமரட எதிர்வரும் 17ஆம் நாள் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இதற்கிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk…
-
- 1 reply
- 242 views
-
-
நீர்கொழும்பு சைவகோவில் நிர்வாகஸ்தர் சுட்டுப்படுகொலை புதன், 31 டிசம்பர் 2008, 23:49 மணி தமிழீழம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணியளவில் நீர்கொழும்பு காளிகோவில் நிர்வாகஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வேலையை முடித்துவிட்டு திரும்பும்போது உந்துருளியில் சென்ற இனம்தெரியாத ஆயுததாரியால் சுட்டுப்காயப்படுத்தப்பட்டு பின்னர் காயம் காரணமாக புதன்கிழமை கொழும்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரை முதலில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக் மாற்றப்பட்டு சாவடைந்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 0 replies
- 865 views
-
-
வட மாகாணசபையும், வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடாவை நேற்று சந்தித்த பின்னர், தனது யாழ்.விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் பொறிமுறைகளும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செ…
-
- 0 replies
- 327 views
-
-
கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்-த ஹின்டு' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருக்கும் கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பொதுமக்கள் எவரும் இல்லையெனவும், கட்டடங்கள் இடிபாடடைந்த நிலையில் காட்சியளிப்பதாகவும் கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடிக்கொருவர் நிறுத்தப்பட்டிருப்பதுடன், மீட்கப்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் த -ஹின்டு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
44ஆவது பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.35க்கு இருந்த சுப நேரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56946-2013-01-15-07-15-12.html
-
- 4 replies
- 422 views
-
-
மன்னாரில் “மாவா“அமோக விற்பனை போதையை ஏற்படுத்தக்கூடிய 'மாவா' என அழைக்கப்படுகின்ற ஒரு வகைப் பாக்கு, மன்னாரில் இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் பஸார் பகுதியில் குறித்த போதைப்பாக்கு மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு சரைப் மாவாப் பாக்கு, 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது. இந்தப் போதைப்பாக்கினை இளைஞர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும், தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. எனவே, மன்னார் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் குறித்த…
-
- 0 replies
- 590 views
-
-
தமிழர்களின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் தமிழர்களின் ஆதரவு வி.புலிகளின்பாலே செல்லும்.
-
- 2 replies
- 1.5k views
-
-
தடுப்பு முகாம் அகதித் தாயும் - குடியுரிமை கொண்ட குழந்தையும்: ஓர் அவுஸ்திரேலியா சிக்கல் [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 12:01 GMT ] [ நித்தியபாரதி ] அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011…
-
- 1 reply
- 339 views
-
-
வர்த்தகர் சுலைமான் படுகொலை :பிரதான சந்தேகநபர் உட்பட எழுவர் கைது கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த வர்த்தகர் மொஹமட் சுலைமா னின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏழு பேரை பொலி ஸார் கைதுசெய்துள்ளனர். கொலையை மேற்கொண்ட சந்தேகநபரையும் அதன்பின்னர் வர்த்தகரின் சடல த்தை வாடகை வாகனம் மூலம் கொழும்பில் இருந்து மாவனெல்ல, ஹெம்மா த்தகம பகுதிக்கு கொண்டு செல்ல இணங்கிய குழுவினரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆடைத்தொழில்துறையை சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சுலைமான், கப்பம் கோரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு…
-
- 0 replies
- 364 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் ஸ்ரீலனாக பொதுஜன பெரமுனாவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின் போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்ததாகக் கூற…
-
- 0 replies
- 559 views
-
-
பறவைகள் சரணாலயம்' என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள ராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. ஆனால், ``ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள ராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது'' என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பர நாதன். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்யேக பேட்டி. ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன? ``இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்துவருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனை…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் எம்.ஆர். நாராயணசுவாமிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியாவின் பாராமுகம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை எட்டுவதில் இருந்து விலகி நிற்பதற்கு கொழும்புக்கு ஊக்கமளிக்கிறது. விடுதலைப் புலிகள் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கையைத் தான் இந்தியா இன்னமும் கடைப்பிடிக்கிறது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம…
-
- 2 replies
- 551 views
-
-
துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு -என்.ராஜ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை வீரகேசரி நாளேடு 1/15/2009 9:51:29 PM - வன்னியில் முல்லைத்தீவு பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதையடுத்து அங்கிருந்து மக்கள் யாழ். குடாநாட்டுப் பகுதிக்கும் வவுனியா மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். வன்னியிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் வந்தவண்ணமுள்ளதாக தென்மராட்சி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று புதன்கிழமை இரவு இயக்கச்சி பகுதிக்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு தங்கியிருந்த மக்களை வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். இவர்களில் இ…
-
- 0 replies
- 3k views
-
-
அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார் கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) சென்ற கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் அ.சிவசுப்பிரமணியம் நிலைமைகளை பார்வையிட்டார். கிளிநொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தீ விபத்தில் 125 கடைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறித்த தீ விபத்தினால் பல லட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகி கோடிக்கண க்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
- 0 replies
- 243 views
-
-
LTTE recovers 13 SLA dead bodies in Kallaa'ru front [TamilNet, Thursday, 22 January 2009, 16:43 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) officials Thursday said their defensive formations put up stiff resistance against the Sri Lanka Army (SLA) that attempted to advance through Kallaa'ru in Northwestern front, killing 40 SLA soldiers and causing injuries to 70. The Tigers have claimed that the SLA attempt to advance was thwarted after heavy fighting. The Tigers have seized weapons in the clearing mission that followed. The LTTE officials did not issue details on their casualties. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28104
-
- 1 reply
- 3.8k views
-
-
ஷிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நடைமுறை தொடர்பிலும் ஏனைய சட்டம் மற்றும் நீதித்துறைசார் விடயங்களையும் ஆராய்வதற்காக இலங்கை செல்லவிருந்த சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இப்போது வருவதற்கான 'தகைமைகள்' சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கான வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா பிபிசி தமிழோசையிடம் கூறினார். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130202_inbarassovisa.shtml
-
- 3 replies
- 397 views
-
-
சுகாதார சேவையில் முன்னேற்றம் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்பாடு செய்தி ருந்த தொற்றா நோயினை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கலந்துகொண்டுள்ளார். 'நிலையான அபிவிருத்தியின் குறிக்கோளை அடையும் நோக்கத்துக்காக சுகாதார சேவையின் இலக்குகளுக்கு பங்களித்தல்' எனும் தலைப்பில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதனை வரவேற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணி ப்பாளர் நாயகம் மாகிரட் சான் அம…
-
- 0 replies
- 247 views
-
-
தமிழர்களை அழிக்க சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் தான் தேவையான அனைத்தையும் வழங்கி இயக்கி வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் - தற்போது இறுதி கட்டமாக - தமிழினத்தை வேரறுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தை அரங்கேற்றுகின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சீற்றம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 756 views
-
-
இனவழிப்பு செய்த மஹிந்த ராஜபக்ஷ 2 நாள் சுற்றுப் பயணமாக நாளை (08) (வெள்ளிக்கிழமை) காலை டெல்லி செல்கிறார். கொழும்பில் இருந்து விமானத்தில் செல்லும் அவர், பீகார் மாநிலம் புத்தகயா செல்கிறார். புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் வழிபாடு நடத்துகிறார். இரவு 7 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி திருமலைக்கு செல்கிறார். இரவு பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுதினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார். பின்னர் ரேணிகுண்டாவுக்கு காரில் செல்கிறார். அங்கு இருந்த விமானம் மூலம் கொழும்பு திரும்புகிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் …
-
- 18 replies
- 2.9k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்ட மக்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதலைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
வெளிநாட்டு எலிகள் கொழும்புக்கு படையெடுப்பு By A.L.Nifraz 2013-02-11 09:34:43 கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் உணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களின் மூலமே வெளிநாட்டு எலிகள் இங்கு படையெடுத்துள்ளன. கொழும்பு துறைமுகம்,…
-
- 4 replies
- 639 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர். செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போதுஇ 'நீங்கள் விடுதலைப் புலிகளா?' என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும்இ…
-
- 4 replies
- 2k views
-
-
இஸ்லாம் மதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், அதன் பின்னணி தொடர்பில் காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவிருந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டில் சில பேரினஜாதக் குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சித்து இன முரண்பாடொன்றை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். இந்த இனவாதக் குழுவின் பின்னணி என்ன? இந்தக் குழு முஸ்லிம்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்? முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகளா? பள்ளிவாசல்களில் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றனவா? ஹலால் சான்றிதழ் ஏன் எதற்கு? அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை விமர்சிக்க இந்தக்குழுவுக்கு யோக்கியதை இருக்கின்றதா? ஊடக பலத்தினால் இஸ்லா…
-
- 2 replies
- 469 views
-