Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவ…

    • 3 replies
    • 862 views
  2. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் இலங்கையில் வெளிநாட்டு படைத்தளமொன்றிக்கு வழிவகுக்கும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது. மாறாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே காணப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. இதே வேளை , நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக இலங்கை அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் (SOFA)குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மேலோங்கியுள…

    • 1 reply
    • 980 views
  3. இராணுவத்திடம் எமது உறவுகள் சரணடைந்தார்கள் என்பதற்கு நாங்களே சாட்சி : காணாமல்போனோரின் உறவுகள் அமையம் (நா.தனுஜா) தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஆயுதம் ஏந்திப் போராடிய எமது உறவுகள் இராணுவத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்தே சரணடைந்தார்கள். அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்றுகூறி எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. எமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி இதற்கான எமது பதிலை விரைவில் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவோம் என்று காணாமல்போனோரின் உறவுகள் அமையம் கூறியிருக்கிறது. https://www.virakesari.lk/article/60390

    • 1 reply
    • 706 views
  4. கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் : கூட்டமைப்பு விளக்கம் (எம்.மனோசித்ரா) தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டு தான் ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது என்றால் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையே கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்ப…

    • 1 reply
    • 480 views
  5. ‘சோபா’வை எதிர்க்கும் சிறிலங்கா – உன்னிப்பாக கவனிக்கும் புதுடெல்லி மதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் இறைமையை மீறும் எந்தவொரு உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் புதன்கிழமை அறிவித்த நிலையில், நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் கொழும்பின் முடிவுக்கு மதிப்பளிப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது. ”இந்த விடயத்தில் கொழும்பின் முடிவுக்கு புதுடெல்லி மதிப்பளிக்கும்.இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எமது …

    • 2 replies
    • 1.1k views
  6. இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பிளச மண்டபத்தில் இடம்பெற்றது. முதல் நாளான இன்று முப்படையினர் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு எவ்வாறு வழங்குவ…

    • 1 reply
    • 380 views
  7. சம்­பந்தன், அநுர அமைச்சு பத­வி­களைப் பெறு­வதே சிறந்­தது - பொதுஜன பெரமுன (இரா­ஜ­துரை ஹஷான்) தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் இது­வ­ரையில் தீர்வு பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று குறிப்­பிடும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்­சி­யைப் பாது­காத்து தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­கின்­றது. எதிர்த் தரப்­பி­ன­ராக இருந்து கொண்டு கூட்­ட­மைப்­பி­னரும், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யாக செயற்­ப­டு­வதை விட அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­…

  8. தேர்­தலின் பின்­னரும் ஐ.தே.க.வே ஆட்­சி­ய­மைக்கும் - மனோ­க­ணேசன் (நா.தனுஜா) தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அதனால் வேறொரு அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாகத் தவ­றாகப் புரிந்­து­கொள்ளக் கூடாது. தேர்­தலின் பின்னர் புதி­தாக ஆட்­சி­ய­மைக்கும் அர­சாங்­கமும் நாங்­க­ளாகத் தான் இருப்போம். இந்த ஆட்­சியில் குறை­பா­டுகள் இருந்­தன. ஆனால் 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் காணப்­பட்ட அர­சாங்­கத்தை விடவும் எமது அர­சாங்கம் பல­ ம­டங்கு சிறந்­த­தாகும் என்று தேசிய ஒரு­மைப்­ப­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்­து­ச­மய அலு­வல்கள் அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்தார். அருண் பிரசாத் அறக்­கட்­ட­ளையின் தலைவர் எம்.மாணிக்­க­வா­ச­கத்­தினால் அருண் மா…

  9. வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9 பில்லியன் ரூபா செலவில் விசேட திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடன் உடன்படிக்கையில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க கைச்சாத்திட்டுள்ளார். கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டு அபிவிருத்தியின் முதலாவது படியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரி…

  10. கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம் அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம் நீண்ட தொலைவுக்கு பெருமளவு சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடியது. W.G.N 1710 என்ற இலக்கமுடைய இந்த விமானம், பஹ்ரெய்னில் இருந்து கட்டுநாயக்க வந்துள்ளது. முன்னதாக, ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் இருந்து இந்த விமானம் பஹ்ரெய்னுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் இந்த …

    • 0 replies
    • 329 views
  11. கூட்டமைப்பு எம்.பிகளுக்கு 50 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி? தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கம் செயற்பட முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே, இதனை ஐதேக – க…

    • 0 replies
    • 601 views
  12. அகில இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் மௌலவிகள் குழுவொன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர், வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நேற்று சந்தித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், திரிபுபடுத்தப்பட்டவாறு அச்சிடப்பட்ட குர்ஆனின் பகுதிகள் குறித்து இதன்போது, மௌலவிகளினால், மாநாயக்க தேரருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/220207/வரக்காகொட-ஸ்ரீ-ஞானரத்ன-தேரரை-சந்தித்துள்ள-மௌலவிகள்-குழு

    • 0 replies
    • 348 views
  13. இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் 12.07.2019 நேற்று இறைபேறடைந்தார். ஏன்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாத…

    • 0 replies
    • 964 views
  14. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார். இதன் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் ப…

    • 5 replies
    • 1.1k views
  15. (நா.தினுஷா) தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது. கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா , மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக தோற்றகடிப்போம் என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…

    • 1 reply
    • 443 views
  16. முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள் குழந்தைகளுடன் வீதியில் கைவிடப்பட்டுள்ளதாக அந்த நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் அவரது தந்தையுடன் ஊவாபரணகம பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனை வெளிப்படுத்தியிருந்தார். தந்தையின் பாதுகாப்பில் இருந்த இவர், 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் தனது கணவருக்கு தவறான உறவு காணப்படுவதாக பதுளையில் உள்ள காதி நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனினும் தனது குழந்தையை பராமரிக்க நியாயமான இழப்பீட்டை அந்த நீதிமன்றத்திடம் கோரிய போதும்…

    • 0 replies
    • 614 views
  17. இலங்கை தற்கொலைத் தாக்குதல்: சஹரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி? வீட்டு உரிமையாளர் பேட்டி சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்ப…

  18. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை காரணமாக இந்தியாவின் தென்பகுதியில் அமெரிக்க இராணுவதளமொன்று ஏற்படுத்தப்படலாம் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கை எடுக்கும் முடிவை மதிக்கும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது இலங்கையின் இறைமையை மீறும் விதத்தில் தனது நாடு எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடாது என பிரதமர்…

  19. July 12, 2019 யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன…

  20. தமிழ் மக்களின் வாக்குகளாலேயே நான் இத்தனை வருடகாலம் பாராளுமன்றத்திற்குத் தேர்வாகி சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான எனது கௌரவத்தை வெளிப்படுத்துவதுடன், நாமனைவரும் இன,மத பேதமின்றி ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்று சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று …

    • 0 replies
    • 371 views
  21. முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை இணைத்து ஆராய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளரால், பிரதேச சபைக்கான பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, சபையில் உள்ளவர்களுடைய கருத்துகளுக்காக இடமளிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் இடம்பெற்ற வாதப்…

    • 0 replies
    • 321 views
  22. சோபா உடனபடிக்கையில் கைச்சாத்திடுவதனூடாக, 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர், எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமம் என, ஜனாதிபதியின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, சோபா, அக்சா, மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே, மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அரசாங்கம் இந்த சோபா உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவம், சீருடை தரித்து ஆயுதத்துடன் நடமாடும் நிலைமை உருவாகும் என்றும் பயங்கரவாதிகளும் எந்ததொரு தடைகளும் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்…

    • 6 replies
    • 1.3k views
  23. டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கை கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர் பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார் வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ஒருவரின் ஆபாசமான வார்த்தைபிரயோகங்களை இலங்கை வீதிகளில் எதிர்கொள்ளவேண்டியுள்ளதை சுட்டிக…

    • 0 replies
    • 291 views
  24. மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்தார…

    • 0 replies
    • 570 views
  25. யாழ்.மிருசுவில் - ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கர் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி உரிமையாளரான தம்பிராசா மகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளதுடன் மாற்றுக் காணி மற்றும் இழப்பீடு வேண்டாம் என நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு சுமார் 5 இலட்சம் ரூபா செலவு செய்து எனது காணியை துப்புரவு செய்தேன். 2012ஆம் ஆண்டு எனது காணிக்குள் அடாத்தாக புகுந்த இராணுவத்தினர் காணிக்குள் நுழைய கூடாது என கூறியதுடன் காணியை சுவீகரித்து விட்டனர். இதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக வழக்கு தொடர்ந்தபோதும் தென்னம் தோட்டத்தை விடவும் தே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.