Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில்…. July 7, 2019 அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார். நாட்டில் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்தி அமைதியான நிலைமைகள் ஏற்படுத்தவதற்காக இக்கட்டான நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருந்தார்கள். இந்நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் நெருக்கடியான நிலைமைகள், கல்முனை வடக்கு உப பிரிவைத் தரமுயர்த்துதல், மீண்டும் அமைச்சு …

  2. இந்து, பௌத்த மக்கள் 90,000க்கு மேற்பட்டோர், இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய பிள்ளைகள் திருமணம் செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முரணாகும் என்றும் ஆகையால், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் திருமணம் செய்துக்கொள்வதைத் தடை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் இவ்விட…

  3. பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெத்தைகள் அடங்கிய 65 கொள்கலன்களை சுங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவை கழிவுப்பொருட்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார். இவற்றில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் காணப்படலாம் எனவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார். சில கொள்கலன்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது. தனியார் நிறுவனமொன்றே நாட்டிற்கு இந்த மெத்தைகளை இறக்குமதி செய்துள்ளது. இதுவரையில் இவ்வாறான மெத்தைகள் அடங்கிய 100 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது. கழிவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்ற…

  4. எதிர்க்கட்சித் தலைவருக்கும் இலங்கைக்கான முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுக்கும் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஆப்கானிஸ்தான் , இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பலஸ்தீனம், பங்களாதேஷ், குவைத், கட்டார், மாலைத்தீவு, ஈரான், லிபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, செஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கையின் அபிவிருத்திக்காக மத்திய கிழக்கு நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளன. எனவே அந்நா…

    • 1 reply
    • 443 views
  5. இலங்கையின் பிரதான சுற்றுலா நகர்களில் ஒன்று நுவர-எலிய. முன்பு, பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், கொழும்பு-பதுளை ரயில் பாதையில் ஒரு கிளையாக நானு ஓயவில் இருந்து நுவர-எலியவுக்கு ரயில் சேவை நடைபெற்ற போதிலும் பின் வந்த காலங்களில் இச்சேவை கைவிடப்பட்டு விட்டது. இப்போது நுவர-எலிய நானு ஓய இடையே கேபிள்கார் (வட-ஊர்ந்து?) சேவை நடாத்த முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன. 28 தூண்களில், ஒரு கேபிள்காரில் 10 நபர்கள் பிரயாணிக்கும் வண்ணம் 48 கேபிள்கார்கள் சேவையில் ஈடுபடுத்தபடவுள்ளன. 50 மில்லியன் அமரிக்க டாலர் செலவில் இலங்கை நிறுவனம் ஒன்றிக்கும் அவுஸ்ர்ரேலிய நிறுவனம் ஒன்றுக்கும் இடையே கூட்டு முதலீடாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. http://www.dailymirror.lk/breaking_news/Cable-ca…

    • 0 replies
    • 879 views
  6. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம், இலங்கையின் இறையாண்மை எந்தவித்திலும் பாதிப்புகள் ஏற்படமாட்டாது என, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலேனா டெப்பிளிஸ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றின் நேர்காணலில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியுள்ளதாவது, இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாது என்றும் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மாத்திரம், பயிற்சி, அனர்த்த பதிலளிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கிச் செயற்படுவது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒப்பந்தங்களால்-இறையாண்மைக்கு-பாதிப்பில்-…

    • 0 replies
    • 291 views
  7. யாழ்., வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் செனட் குழு, மீள்குடியேற்ற நிலைமைகள், மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்தும் ஆராய்ந்துள்ளது. வலி. வடக்கு மயிலிட்டி துறைமுகம், மயிலிட்டி வடக்கு கிராமம் ஆகியவற்றுக்கு இந்த குழு விஜயம் மேற்கொண்டது. இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவகர், வலி.வடக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வுக்குழு தலைவர் குணபாலசிங்கம் ஆகியோர் சந்தித்து நிலைமைகளை எடுத்து கூறியிருந்தனர். இதன்போது, விசேடமாக காங்கேசன்துறை பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணிகளை மீள்குடியேற்றத்துக்காக …

    • 0 replies
    • 359 views
  8. 700 சதுர கிலோ மீற்றர் காணியில் 20 சதுர கிலோமீற்றர்தான் இருக்கிறது : கல்குடா முஸ்லிம்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குவங்கி அரசியலுக்கு முஸ்லிம்ங்களை பலியாக்க முடியாது. நல்லிணக்கத்தை விரும்புவதால் எமது தலையில் ஏறி யாரையும் பயணிக்க இனியும் அனுமதிக்க முடியாது. என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களினதும்,கல்குடா தொகுதி மக்களினதும் குறைகேள் சந்திப்போன்று நேற்று மாலை ஓட்டமாவடியில் அமைப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்…

    • 2 replies
    • 795 views
  9. புலம் பெயர் நாடுகளில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு! தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்பட்டு வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புக்களினால் கரும்புலிகள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் முதலாவது தற்கொலைக் தாக்குதல் இடம்பெற்ற ஜுலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுதலைப்புலிகளால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் இன்றைய தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஓப்ரேஷன் லிப்ரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான …

    • 4 replies
    • 846 views
  10. கடற்படையினரால் புதிய பவளப்பாறை ஒன்றை காங்கேசன்துறை கடற்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இது வரை கண்டுபிடிக்கப்படாத மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இதற்கமைவாக வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த வீரர்களினால் காங்கேசன்துறை துறைமுக வளவில் இது வரையில் இல்லாத பவளப்பாறை கண்டு பிடிக்கப்பட்டுள…

    • 2 replies
    • 793 views
  11. மரண தண்டனை நிறைவேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி வரை இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்ட…

    • 3 replies
    • 812 views
  12. “தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்” மூலமாக வெங்காய கொட்டகைகள் அமைப்பதற்கான மானியம் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இன்று வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால், விவசாய வெங்காய செய்கையாளர்களிடம் மானியத்துக்கான காசோலைகள் வழகப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட 124 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. https://newuthayan.com/story/14/வெங்காய-கொட்டில்-அமைக்க-124.html

    • 1 reply
    • 381 views
  13. இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக தொடர்ந்து 868 நாள்களாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை ஊர்வலமாகச் சென்றடைந்தனர். https://newuthayan.com/…

  14. July 6, 2019 அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில், காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் காஷ் உட்பட…

  15. நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்! பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டதையடுத்து ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு தற்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே தமிழர் திருவிழா பொங்கல் உற்சவங்கள் ஆரம்பமாகி இருக்கின்றது. அந்த வகையில் தொடர்ந்து ஆலயத்திலேயே அபிஷேகம் மற்றும் வளர்ந்து நேர்ந்து பொங்கல் மற்றும் விசேட அம்சமாக சமூக வலைத்தள நண்பர்கள் ஆல…

  16. கிழக்கில் கரும்புலிகள் தினம் இல்லை – கிளிநாச்சியில் மட்டும் அனுஸ்டிக்கப்பட்ட்து.. July 6, 2019 கிழக்கில் கரும்புலிகள் தினம் இம்முறை அனுஸ்டிக்கப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு தரப்பு கடும் தேடுதல் நடாத்தியதை காண முடிந்தது. ஜீலை 05 தமிழிழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினமான நேற்று கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் வழமையை விட அதிகரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பெரியநீலாவணை சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு காரைதீவு திருக்கோவில் மல்வத்தை உள்ளிட்ட பொது இடங்கள் கோயில்கள் என்பன பாதுகாப்பு படை மற்றும் புலனாய்வு துறையினரின் தீவிர கண்காணிப்பு உள்ளாகி இருந்தன. இம்முறை நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொட…

  17. தமிழ்மக்களின் காணிகளை விடுவிப்பதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த முடியும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தமிழ்மக்களின் காணிகளை சுவீகரிப்பதன் மூலம் சமாதானத்தையே பாதுகாப்பையே ஏற்படுத்தாது காணிகள் விடுவிப்பதன்மூலம் தான் சமாதானத்தை பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகமாற்றும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத்தினரின் பிடிக்குள் இருப்பது அநீதியாகவுள்ளது. அந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். நிலங…

  18. ஞானசார தேரரின் பொது மன்னிப்பை ரத்து செய்யக் கோரி ஜெனீவாவில் மனு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டிலுள்ள முஸ்லிம் புலம்பெயர் அமைப்பொன்றினால் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள எஸ்.ரி.பீ. எனும் பெயரில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்பொன்றின் பெயரில் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் அமைப்பில் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த முறைப்பாட்டில் குறித்த தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது மன்னிப்பை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஏப…

    • 0 replies
    • 312 views
  19. திறமையான நிர்வாகத்தை நடத்திய பிரபாகரன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது - விக்கி போதைப் பொருள் விற்றே பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது அவர் அவ்வாறு கூறுவதற்கு என்ன ஆதாரங்கள், சாட்சியங்கள் உண்டு என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். . அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்பில் ஜோன் அமரதுங்கவின் தலைமையில் போதை பொருள் தடுப்பு சம்மந…

  20. கண்டி - போகம்பர மைதானத்தில், பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படவுள்ள மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக, 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதும் அனைத்து இன மக்களையும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதன் கீழ் நெறிப்படுத்துவதே, இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று, இனியொரு பயங்கரவாத் தாக்குதல் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில், பொதுபல சேனா தொடர்ந்தும் செயற்படும் என்றும் அதற்கான முதல் நடவடிக்கையாவே, இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். htt…

    • 2 replies
    • 475 views
  21. எதிர்வரும் தேர்தலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர ன் போட்டியிட வேண்டும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு கிடைக்காது விடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றிச் சிந்திக்கவேண்டி வரும் என்ற சம்பந்தனின் கூற்று தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என நேற்று கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் சுமந்திரன் எம்.பிய…

  22. SLFP – SLPP கட்சிகளுக்கிடையிலான 6ம் கட்ட கலந்துரையாடல் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/185227/

    • 2 replies
    • 478 views
  23. (இராஜதுரை ஹஷான்) குண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சட்டவொழுங்கு அமைச்சர் ஆகியோர் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு வராவிடின் சட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். முஸ்லிம் அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சாட்டுவதால் ஒருபோதும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசியல் இலாபத்திற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்…

  24. July 5, 2019 முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு இராணுவ படை பிரிவின் அருகாமையில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குண்டு வெடிப்பு சத்தம் கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து அங்கு தீ வைத்த வேளையிலே அதில் இருந்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. குறித்த இடத்தில் காவற்துறையின் வ…

  25. முல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணப் பிரதிநிதிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபா குகதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நீராவிடியப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூ…

    • 0 replies
    • 399 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.