ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143171 topics in this forum
-
முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார். அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொர…
-
- 8 replies
- 931 views
- 1 follower
-
-
நா.தனுஜா) சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டி அறவீட்டுடன் கடன்களை வழங்குவதாக முன்வைக்கப்பட்ட கருத்தை இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது. இலங்கையில் இயங்கும் சில வங்கிகளின் ஊடாக சவுதி அரேபிய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு சதவீத வட்டியுடனான கடன்களை வழங்கி வருகிறது என்று கடந்த மாதம் 13 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார கூறியிருந்தார். இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி…
-
- 1 reply
- 414 views
-
-
(எம்.மனோசித்ரா) முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 7 ஆம் திகதி பொது பல சேனா அமைப்பு கண்டியில் மாநாடோன்றினை ஏற்பாடு செய்துள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். அந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அற…
-
- 0 replies
- 369 views
-
-
July 4, 2019 வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமானது. …
-
- 0 replies
- 247 views
-
-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஏழு பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறிய மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட மாணவர்கள் எனவும் கடந்த செவ்வாய்கிழமை(2) இரவு சுமார் ஒன்பது மணியளவில் குறித்த பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் முடிவு தொடர்பாக எழுந்த பிரச்சினை ஒன்றை அடுத்தே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இதில் குறைந்த பட்சம் 7 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையி…
-
- 0 replies
- 685 views
-
-
ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பது யார் ? - எஸ்.பி. திஸாநாயக்க (எம்.ஆர்.எம்.வஸீம்) ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள், அவரை கைதுசெய்வதற்கு போதுமானதாகும். ஆனால் அவரை கைதுசெய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக்கணக்கில் 5கோடி ரூபா பரிமாற்றப்பட்டுவந்மை தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது. என்றாலும் இவ்வளவு பா…
-
- 0 replies
- 616 views
-
-
சிறிகஜன் தொடர்பில் விசாரணை…. July 4, 2019 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிக் காவற்துறைப் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிக் காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் …
-
- 0 replies
- 726 views
-
-
வறட்சியால் வெகுவாக குறைந்து வரும் உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் வெகுவான குறைந்து வருவதைக் காணமுடிகிறது. இதனால் நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் நீரைப் பெற்று மேற்கொள்ளப்பட்டு வரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உன்னிச்சை குளத்தில் இருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தின் பல நகரப் பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகின்ற அதேவேளை, அக்குளத்தின் வலதுகை, இடதுகை வாய்க்கால்கள் ஊடாக வயல் நிலங்களுக்கும், நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகின்றது. ஜனவரி மாத காலப்பகுதியில் 33அடி நீர்மட்டம் இருந்தபோதிலும் தற்போது சுமார்…
-
- 0 replies
- 385 views
-
-
தோட்டத்தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்துடன் 50 ரூபாவை இணைத்து வழங்கும் விடயம் தொடர்பான பிரச்சினையை தீர்க்க பிரதமரினால் மூவரடங்கிய விசேட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தையடுத்தே பிரதமர் இந்நடவடிக்கையினை எடுத்துள்ளார். http://thinakkural.lk/article/31180
-
- 2 replies
- 316 views
-
-
திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அச்சம் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய நிர்மாணிக்கப்பட்ட சாகாமம் குளமானது தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக வரண்ட நிலையில் காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் பொருளாதார ரீதியான வீழ்ச்சியை திருக்கோவில் பிரதேச மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என விவசாய அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. இப்பிரதேசத்தில் வாழும் சுமார் 33 ஆயிரம் மக்கள் சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் தமது ஜீவனோபாய தொழிலாக விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இவ் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினை…
-
- 0 replies
- 303 views
-
-
லொறி - டிப்பர் வாகனம் விபத்து ; இருவர் உயிரிழப்பு! கிளிநொச்சி - யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறித்த இரு வாகனங்களில் சாரதிகளே உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/59688
-
- 0 replies
- 542 views
-
-
8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் ; ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நிராகரித்தது. பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன், சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். பருத்தித்துறையில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை மலசல கூடத்துக்க…
-
- 0 replies
- 513 views
-
-
முப்பது வருடங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போகின்றது. மக்களைப் பிரித்து அரசியல் செய்து வயிறு வளர்க்க தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் அதிகார சபையின் பிரதான கூட்டம் நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள ஜம்போ கார்ட்ன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளர் தர்மப்பிரிய விஜேசிங்க தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போ…
-
- 1 reply
- 355 views
-
-
(இராஜதுரை ஹஷான்) பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவின் நலன் விசாரிக்க சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்கள் என பொதுஜன பெரமுன காரியாலயம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகே, பியங்கர ஜயரத்ன, இந்திக அனுருத்த, மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோரே நேற்று இவ்வாறு சென்றுள்ளார்கள். தற்போது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், விரைவில் நாடு திரும்பி நாட்டு மக்களின் அரசியல் எதிர்பார்ப…
-
- 1 reply
- 414 views
-
-
பாதுகாப்புக் கடவை அமைக்குமாறு கோரி, கிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவைக்கு முன்பாக பிரதேச மக்களால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது. போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர். ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் போரா…
-
- 3 replies
- 750 views
- 1 follower
-
-
மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை, ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து அன்றும் இன்றும் தான் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (03) பிற்பகல் உடரட்ட அமரபுர சங்க சபைக்கு சொந்தமான மகாவலி நதிக்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை மண்டபத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். உடரட்ட அமரபுர சாசன ஜோதிகா சங்க சபைக்கு சொந்தமான இந்த இடத்தில் மூன்று மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. …
-
- 0 replies
- 288 views
-
-
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேசிய உளவுத் துறை ஒரு போதும் உறுதி செய்யப்பட்ட தெளிவான தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கோ அல்லது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கோ அளித்திருக்கவில்லை என அவர்களது சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தார். 21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் நேற்றுயை தினம் சி.ஐ.டி…
-
- 0 replies
- 503 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். படத்தின் காப்புரிமை மருத்துவமனையில் அன…
-
- 3 replies
- 685 views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், ஏன் இந்த அப்பாவிகளுக்கு வழங்க முடியாது ; சட்டத்தரணி சுகாஸ் நீண்டகாலமாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் விடுவிக்க முடியும். என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் அங்குத் தெரிவிக்கையில், அரசியல் கைதி சகாதேவனின் மரணம் இயற்கை மரணமாக நாங்கள் கருதவில்லை. அவருக்கு உரிய முறையில…
-
- 2 replies
- 595 views
- 1 follower
-
-
கொக்குவில்-மானிப்பாய் – சுன்னாகம் பகுதிகளில் கைதான, வாள்வெட்டு சந்தேக நபர்கள் பிணையில்… July 3, 2019 July 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம…
-
- 1 reply
- 602 views
- 1 follower
-
-
சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது. சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரிகம பகுதிக்குச் சென்று ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தனர். இந்நிலையில் வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த வேன் அண்மையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் குறித்த வேன் தொடர்பான வழக்கு இன்…
-
- 0 replies
- 283 views
-
-
1 Min Read July 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஆனமடுவ- சிலாபம் வீதியின் பள்ளம சேருகெலே பிரதேசத்தில் இன்று (3.07.19) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 308 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பிரபலமடைந்துள்ளவர் அமைச்சர் சஜித் பிரேமதாச எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, இவரை வெற்றியடையச் செய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனது அபிப்ராயத்துக்கமைய, அமைச்சர் சஜித் பிரேமதாசவே பிரபல்யமடைந்துள்ளார். அவருக்கு தான் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். மறு பக்கம் யார் வந்தாலும், எந்த ராஜபக்ஸ வந்தாலும் குடும்பத்துக்குள்ளே சங்கீத கதிரை போட்டியாக அது மாறும். எது எப்படியோ அமைச்சர் சஜித்தை வெற்றிப் பெறச் செய்…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழ் மொழிப் பரீட்சையில் சந்தர்ப்பம் கூறுக என்றொரு வினா முறைமை உண்டு. மகாபாரதம், இராமாயணம் போன்ற இதி காசங்களில் இருந்து கூற்று அல்லது பாடலைத் தந்து இஃது யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்? கூறப்பட்டது என்பதாக அந்தக் கேள்வி அமையும். குறித்த பாடப்பரப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக அப்படி யயாரு வினா கேட்கப்படுவது வழக்கம். நம் அரசியலிலும் இவ்வாறான வினாக்களைக் கேட்டால், அதற்குக் கிடைக்கின்ற விடை; மக்கள் மறந்துவிட்டார்கள் இனி நாம் புரட்டிக் கதைக்கலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்குத்தக்க பாடம் புகட்டும். இருந்தும் யார் அந்தப் பணியைச் செய்யப் போகிறார்கள். வேண்டுமானால் பொறுப்புள்ள இணையங்கள் சந்தர்ப்பம் கூறுக…
-
- 0 replies
- 945 views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதமேந்தி போராடிய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இறுதிவரை கொள்கையில் உறுதியாக நின்று மரணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்தது எனவும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம…
-
- 1 reply
- 765 views
-