ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
சட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு… June 5, 2019 June 5, 2019 சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, கபீர் ஹாசீம் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதி இந்த நியமனங்களை வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 352 views
-
-
இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன் இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கத…
-
- 30 replies
- 3k views
-
-
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பலதரப்பட்ட விமர்சங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த வார இறுத…
-
- 4 replies
- 901 views
-
-
சபையில் மங்கள சமரவீர - மனோ கணேசனுக்கிடையில் கடும் வாக்குவாதம் அரச அடவு மற்றும் முதலீட்டு வங்கி தலைமைக் காரியாலய கட்டடம் தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையில் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதன்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் அரச அடவு மற்றும் முதலீட்டு வங்கி தலைமைக் காரியாலய அமைப்பதற்கான கட்டடத்தை பெறுவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வொக் ஷோல் வீதியில் உள்ள கட்டடமொன்றை பெ…
-
- 0 replies
- 532 views
-
-
ரிஷாத்தை உடன் கைது செய்ய வேண்டும்:தேரர்கள் உண்ணாவிரதம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைதுசெய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றில் தேரர்கள் சிலர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ரிசாத் பதியுதினுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவரை கைது செய்யும் வரையில் போராட்டம் தொடரும் என்றும் இவர்கள் அறிவித்துள்ளனர். தேரர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பெருமளவு மக்கள் அங்கு கூடியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை…
-
- 0 replies
- 329 views
-
-
சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு – மேலும் ஒரு உயிரை காவுகொண்டது! மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அவரது உறவினர்களிடம் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த அருண்பிரசாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மேலதிக சிசிச்சைக்காக உலங்கு விமானத்தின் மூலம் கண்டி போதனா வைத்த…
-
- 0 replies
- 407 views
-
-
முஸ்லிம் சமூகம்... மனித குலத்திற்கு, கிடைத்த கொடை – ஜனாதிபதி மைத்திரி. அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைவாழ் முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநாள் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமது சமயக் கடமைகளை நிறைவுசெய்து இன்றைய தினத்தில் ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அனைவரினதும் பிரார்த்தனைகள…
-
- 0 replies
- 618 views
-
-
வைத்தியர் சேகு ஷிஹாப்தீனுக்கு எதிராக 735 முறைப்பாடுகள்! கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி என்பருக்கு எதிராக இதுவரை 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் இன்று மட்டும் 70 முறைபாடுகள் பதிவாகியுள்ளது. மேலும் தம்புள்ளை வைத்தியசாலையில் இன்று 21 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் 40 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத …
-
- 0 replies
- 521 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அவர்களை ஓரம்கட்ட முற்பட்டால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் எச்சரித்தி ருக்கின்றார். முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் நாட்டில் முஸ்லீம் – சிங்கள இனக் கலவரம் வெடிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை வழங்கியது முஸ்லிம்களே. அவர்களே எமக்கு உதவினார்கள். எனினும் இன்று நடக்கும் விடயங்களை அவதானிக்கையில் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம்களும் பிரிவினைவாதிகளாக மாறுவதற்கு வாய்ப…
-
- 0 replies
- 452 views
-
-
இணைக்கப்பட்டுள்ள சிங்கள ஹிரு செய்திகளில் 14:14 to 17:00 நிமிடங்களில் ஏப்ரல் 21 குண்டுவெடிப்பின் பின்னர் ஊரடங்கு நேரத்தில் ஹிஸ்புல்லாவின் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான CCTV காட்சிகள் இடம்பெறுகின்றன. ஊரடங்கு நேரத்தில் ஏப்ரல் 22 இரவு 09:12 முதல் 10:06 வரை பாசிக்குடா விடுதியொன்றில் ஹிஸ்புல்லா சவுதி அரேபியாவைச் சேர்ந்த சிலருடன் உரையாடுவதும் பெட்டிகள் பரிமாறப்படுவதும் குறித்த விடுதியின் CCTV காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது. அந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர்கள் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என பௌத்த தேரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்! கீழே இணைக்கப்பட்டுள்ள குறித்த சிங்கள ஹிரு செய்திகள் பெரும்பாலும் உண்ணாவிரதம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய செய…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் சமஷ்டி கட்டமைப்புக்குள் தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தலைமை ஏற்று முன்னெடுக்கவேண்டும் "இலங்கை தமிழ் மக்கள் உங்களிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று இந்திய மக்களை தேர்தலில் வெற்றிபெற்ற அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதன்போது கோட்டாபயவின் சட்டத்தரணி இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளதாவது, “சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கோட்டபாய இன்னும் நாடு திரும்பவில்லை. அவருக்கு மேலும் சில மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையினால், வெளிநாட்டு பயண அனுமதியை…
-
- 5 replies
- 937 views
-
-
தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கமுடியாது – ஸ்ரீதரன் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தும் மனிதர்களாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நீண்டகால எதிர்பார்ப்பின் பின்னர் இந்த உதவி திட்டம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதற்காக அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றன். ஏற்கனவே 11…
-
- 1 reply
- 724 views
-
-
பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். அதன்படி அவ்வாறு ராஜினாமா செய்த அமைச்சர்களின் விபரம் வருமாறு அமைச்சரவை அமைச்சர்கள் 1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல் 2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் 3. கபீர் ஹாசிம் - நெடுஞ்சாலைகள் 4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் - தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்கள் 1. பைசல் காசிம் - சுகாதார போசனை சுதேச…
-
- 1 reply
- 578 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் ரிஷாத் உரை என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன். அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம். அத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளைய…
-
- 1 reply
- 532 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) பிமல் ரத்நாயக்க, இதற்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் சிலரும் மறைமுகமாக ஆதரவளித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் முஸ்லிம்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இல்லாமலாக்குவதன் மூலம் அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்கவும் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாது அடிப்படைவாதத்தை இல்லாமலாக்க முடியாது. மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் அமைச்சர்கள் மீது மாத்திரம் சுமத்தி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கா நாங்கள் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 417 views
-
-
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும், அது குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில்…
-
- 0 replies
- 407 views
-
-
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் விரைவில் தகவல்களை வழங்குமாறு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளது. சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், அந்த நிறுவனம் தொடர்பிலான வேறு தகவல்கள் என்பன கோரப்பட்டுள்ளதாக ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 615 views
-
-
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது. இதேவேளை இன்று காலை 11.00 மணியளவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/123468/
-
- 0 replies
- 326 views
-
-
இந்நாடு இனியும் ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது - மனோ கூறும் விளக்கம் கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கலந்தாலோசனையின் போது,…
-
- 1 reply
- 707 views
-
-
கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் புலனாய்வுப் பிரிவினர் வீட்டிற்கு வந்திருந்தனர். எனக்கு எதிராக இலங்கை ISIS பயங்கரவாதிகள் மேற்கொண்ட படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை வழங்கியதுடன் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வரும்படி கேட்டிருந்தனர். அங்கு சென்றதும் முழுமையான தகவல்களை அறிந்துகொண்டேன். 2014 ஆம் ஆண்டு முதல் நான் இஸ்லாம் குறித்த சிந்தனையை தூண்டும் விதமான விமர்சனங்களையும், கேள்விகளையும் பேஸ்புக் மூலம் முன்வைத்து வரும் நிலையில், எனது பேஸ்புக் பதிவுகளை இலங்கை ISIS இனர் மற்றும் அதன் தலைவன் மெளலவி சஹ்ரான் ஹாஷீம் ஆகியோரும் வாசித்து வந்துள்ளனர். சஹ்ரான் என்னை பன்றி என்று அழைத்து வந்துள்ளான். எனது இருப்பிடம் மற்றும் நடமாட்டங்களை கண்டுபிடிப்பதற்கு முயன்ற பொழுதும் சஹ்ரான் இற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம் (ஆர்.யசி, எம்.எப்.எம்.பஸீர்) பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிவதில் தடையாக உள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் மீது முன்வைகபட்ட குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அத்துடன் குற்றவாளிகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மீது நம்பிக்கை இல்லாததால் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாதகாலத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு …
-
- 2 replies
- 813 views
-
-
குறுக்கே பாய்ந்த சருகுபுலியால் இருவர் பலி மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19) மற்றும் கௌரீஸ்வரன் விதுஷன் (வயது 20) ஆகியோரே பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களான இவ்விருவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி வந்துகொண்டிருந்துள்ளனர். அப்பொழுது கொடுவாமடு எனுமிடத்தைக் கடக்கும்போது சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதி…
-
- 0 replies
- 353 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள 559 முஸ்லிம்கள் விசாரணையின் பின்னர் விடுதலை - ஜனாதிபதி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்பதோடு, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விட…
-
- 0 replies
- 350 views
-
-
இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் கார்வண்ணன்Jun 02, 2019 | 4:01 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது. திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடி…
-
- 6 replies
- 778 views
-