Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியில்வாதிகள் தான் எனக் கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று தெரியாமல், நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாக்கு…

  2. `இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்' - எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக JEWEL SAMAD இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; "இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை" என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பேராசிரியர் நுஃமானிடம், பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்ட செவ்வியிலேயே, இந்த கருத்துக்களை பேராசிரிய…

  3. தவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019 “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம்” – புலனாய்வுத் துறை தமது தேவைக்காக இவர்களை பயன்படுத்தியது – அசாத் சாலி- #asathsali #gotabayarajapaksa #thowheedjamath அசாத் சாலி: “இஸ்லாமியர்களான நாங்கள் இந்த அரசுக்கும் கடந்த அரசுக்கும் இந்த தவ்பிக் ஜமாத் குறித்து விபரங்களை கொடுத்துள்ளோம். புலனாய்வு துறையில் இருந்தார்கள் சாலே மற்றும் அவரது சீடர் மொகமட். இவர்கள் இருவரையும் இப்போது கூட இங்கு அழைத்து கேளுங்கள். நாங்கள் தவ்பிக் ஜமாத் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தவில்லையா என்று? (தவ்பிக் ஜமாத் புகைப் படங்களைக் காட…

  4. மட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதும், இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஆங்காங்கு முஸ்லிம் இனத்தவர்களே கைதுசெய்யப்பட்டு வருவதும், இந்தச் சம்பவத்தை முஸ்லிம் குழு ஒன்றை நோக்கிய நிலையில் பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றது. மட்டக்களப்பு தற்கொலைத்தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் ஒரு பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.…

  5. தவ்ஜித் ஜமாத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! சுமந்திரன் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் விசாரிக்கப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இந்த தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு தனி சமூகத்தையும் விமர்சிக்க கூடாது. அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.அதனை நாங்கள் மதிக்கிறோம். தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது.அவர்கள் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்று…

  6. சந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர். பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில், சந்தேகத்துக்கு இடமான பொதி, மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் கிடைத்ததும் முதலில் அங்கு வரும் அதிரடிப் படையினர் அப்பகுதியில் இருந்து முதலில் அனைத்து பொது மக்களையும் அப்புறப்படுத்துவர். பின்னர் எக்ஸ் ரே கதிர்வீச்சு தொழில்னுட்பத்தை பயன்படுத்தி அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை ஆராய்வர். அதன் பின்னர் அப்பொதியை திறக்க Detonation எனும் முறையை பயன்படுத்துவர். இதன்போது அது வெடிப்புச் சத்தம் போன்ற சத்தத்தை தோற்றுவித்து திறந்துகொள்ளும்.…

  7. வெள்ளவத்தையில் வெடித்தது குண்டு அல்ல…. April 24, 2019 வௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். http://globaltamilnews.net/2019/119201/

  8. தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர். சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெறும் விசாரணைகளிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் விசாரணைகளில் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த அடையாளம் காணப்பட்ட எட்டு பேரில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்கடடினார். அப்பெண்ணே தெமட்டகொடை சொகுசு வீட்டில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக சந்த…

  9. இலங்­கையின் அழகை ரசிக்க வந்து உயிரிழந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்னும் ஒவ்­வொரு கதை நீள்­கி­றது...! அழ­கான இலங்­கையின் கடலை ரசித்­த­படி தங்கள் நாளை சந்­தோ­ச­மா­கத்தான் ஆரம்­பித்­தி­ருப்­பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று. ஆம்! இலங்­கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்­ட­வர்கள் அலங்­கோ­ல­மா­கிப்போய் திரும்பிப் போகி­றார்கள். அதில் இலங்­கையைச் சுற்றிப் பார்க்க வந்­த­வர்கள் வெள்ளைத் துணியில் சுற்றிப் போகி­றார் கள். கடந்த ஞாயி­றன்று இலங்­கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்­கு­தலில் மொத்தம் 35 வெளிநாட்­ட­வர்கள் பலி­யா­னார்கள். அந்த ஒவ்­வொரு வெளி­நாட்­ட­வ­ருக்குப் பின்­னாலும் ஒவ்­வொரு கதை நீள்­கி­…

  10. மட்டக்களப்பில் 359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 359 சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த உயிர்த்த ஞாயிறு திகத்தன்று இலங்கையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் மரணமடைந்த 359 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி வேண்டி களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் இந்த 359 ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு இன்று (புதன்கிழமை) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கல்முனை விகாராதிபதி சங்கரத்தினதேரர், களுவாஞ்சிகுடி சிவ ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவான சண்முக மயூரவதன குருக்கள், ஓந்தாச்சிமடம் சிமர்னா தேவாலயத்தின் அருட்தந்தை சு…

  11. மட்டக்களப்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் – இறுதி நேரத்தில் இலக்கு மாற்றப்பட்டதா? மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கான இலக்கு இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி, முதலில் புனித மரியாள் தேவாலயத்தையே இலக்கு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மட்டக்களப்பு – புனித மரியாள் கத்தோலிக்கத் தேவாலயத்தின் ஆராதனைகள் விரைவாகவே முடிவடைந்ததால், தற்கொலைக் குண்டுதாரி தனது இலக்கை மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு – புனித மைக்கேல் ஆண்கள் பாடசாலைக்கு எதிரில் அமைந்த…

  12. குண்டுவெடிப்பு சம்பவம் – உயிர்த்தியாகம் செய்த உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். தெமட்டகொடை – மஹவில பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தச் சென்றபோது, இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 3 பொலிஸாரின் இறுதிச் சடங்குகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், உயிரிழந்த மூவரில் ஒருவர் பொலிஸ் பரிசோதகராகவும் ஏனைய இருவரும் பொலிஸ் அலுவலர்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 300 பேரளவில் வைத்தியசாலையில் சிகிச்சைப…

  13. தற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்! தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது. புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும்…

  14. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தே…

  15. வத்தளையில் ஆண் ஒருவர் புர்கா அணிந்து சென்றதால் இன்று காலை பதற்ற நிலைமை ஏற்பட்டது. புர்கா உடையுடன் சென்றவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அந்த நபரைச் சுற்றிவளைத்துச் சோதனை செய்ய முற்பட்டனர். அதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. சோதனையில் புர்கா அணிந்திருந்தது ஒரு ஆண் எனத் தெரியவந்தது. அதையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்த பொதுமக்கள் அந்த நபரைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை, நேற்று நாடாளுமன்றில் புர்கா உடையைத் தடை செய்ய வேண்டும் என்று தனிநபர் பிரேரணை சமர்ப்பித்த நாடாளுமன்ற உறுப்பினருக்குத்…

  16. நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/54345

    • 7 replies
    • 1.4k views
  17. சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டார் மைத்திரி – சுமந்திரன் குற்றச்சாட்டு சட்டத்திற்கு முரணான வகையில் பொலிஸ் திணைக்களத்தை ஜனாதிபதி தனது மேற்பார்வையின் கீழ் வைத்திருந்தார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், 19 ஆவது திருத்தத்திற்கு பின்னர் ஜனாதிபதி சட்டம் மற்றும் ஒழுங்கினை பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். அத்தோடு 19 திருத்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பு மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு பதவியையே தன்கீழ் வைத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக தவிர்த்திருக்கப்பட வேண்டிய இந்த கொடூர தாக்குதலுக்கு அவரே ப…

  18. கொழும்பு: 41 வயதாகும், முகமது ஹாசன், கொழும்பிலுள்ள பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். ஆனால், 2 நாட்களாக அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. குடும்பத்தார் எவ்வளவோ கெஞ்சியும், மசூதிக்கு தொழுகை நேரத்திற்கு மட்டும் செல்கிறாரே தவிர வீடு திரும்ப வழியில்லை. 60 வயதாகும் ஜரீனா பேகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சரியாக தூங்கவேயில்லை. "எனக்கு தெரியும், உள்ளூர் மக்கள் முஸ்லீம்கள் மீது கோபத்தில் இருப்பார்கள்" என்று சொல்லும்போதே, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. துவேஷம் கல் வீச்சு கண்ணீரை துடைத்தபடியே தொடர்கிறார் ஜரீனா பேகம். "கைக் குழந்தையுடன் தேவாலயம் வந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள், இப்படி ஒரு துவேஷத்தை, மனதில் வைத்திருப்பார்கள் என்…

    • 0 replies
    • 1k views
  19. - + Subscribe to THE HINDU TAMIL YouTube கோப்புப்படம் கோவையில் ஐஎஸ்ஐஎஸ் வழக்கு தொடர்பாக என்ஐஏ அமைப்பு விசாரணையை முடித்தபின்தான், இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த மாதம் இந்திய உளவு அமைப்புகள் சார்பில் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது 9 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு சார்பில் பலமுறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. …

  20. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு ஜெனரல் தயா ரத்னாயக்க நியமிக்கப்படவுள்ளார் என்று அறிய வருகின்றது. ஜெனரல் தயா ரத்னாயக்க 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2015 பெப்ரவரி மாதம் வரையில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தார். அதேவேளை, பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதில் சரத் பொன்சேகாவை நியமிக்கப்படலாம் என்ற தகவலும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து …

  21. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வன்முறையானது எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம் பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீண்டும் பிரகடணப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும், அதற்குத் துணைபோகின்றவர்களையும், துணைபோகின்றவர்களில் சுயலாப அரசியல்வாதிகள் இருந்தால் அத்தகையவர்களையும் ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். …

  22. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்போதும் மஹிந்த ராஜபக…

  23. (ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) இலங்கையில் மதரஸாக்களிலேயே இஸ்லாமிய பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. ஆகவே நாட்டில் அடிப்படை வாத அமைப்புகளை முதலில் தடை செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வனாத்துவில்லுவவில் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட பின்னரும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட போதும் இது தொடர்பாக ஆராயுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயத்தில் விசாரணைகளை முன்னெடுத்து ஏற்படும் பாதிப்புகளை தடுக்குமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் தற்போது மீண்…

  24. April 24, 2019 உரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? அரசாங்கத்தை தாண்டிய ஒரு சக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய ரோ இலங்கைக்கு வலியுறுத்தியும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினர். http://globalt…

  25. இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ''ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்'' - ருவன் விஜயவர்த்தனே Getty Images இலங்கை தொடர் குண்டுவெடிப்பு ''இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்'' என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ''அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,'' என்றும் அவர் கூறியுள்ளார். ''தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.