ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
வலப்பனை கோர விபத்து – கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழப்பு 59பேர் காயம் வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹா ஊவாபத்தன, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 59பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை செல்லும் வழியில் குறித்த பேருந்து, பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, பேருந்தில்…
-
- 1 reply
- 812 views
-
-
பிணைமுறி மோசடி – மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் சமரசிறி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://athavannews.com/பிணைமுறி-மோசடி-சமரசிறி-உ/
-
- 0 replies
- 302 views
-
-
ரிசாட் மாத்திரமா பிரச்சினை? சம்பிக்க காணி பிடிப்பது பிரச்சினையில்லையா? – லஹிரு கேள்வி அமைச்சர் ரிசாட் பத்தியுத்தீன் வில்பத்துவில் காணி பிடிப்பது மாத்திரம் ஏன் பிரச்சினையாக தெரிவதாகவும், ஹேமாகமவில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க காணி பிடிப்பது மாத்திரம் பிரச்சினையாக தெரிவதில்லையெனவும் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பின் தலைவர் லஹிரு சிறிமான்ன கேள்வி எழுப்பினார். வில்பத்து வனப் பிரச்சினை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தம்மைப் பொருத்த வரை இரண்டும் தவறாகும். இனவாதக் கண் கொண்டு பார்ப்பதனால், வில்பத்து மாத்திரம் சிலருக்குப் பிரச்சினையாக தெரிகின்றது. இது தவறானது. 2030 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்…
-
- 0 replies
- 318 views
-
-
கூட்டுப் பயிற்சிக்காக 4 அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் சிறிலங்கா வருகை சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, அவுஸ்ரேலிய கடற்படையின் நான்கு பாரிய போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன. Indo-Pacific Endeavour 2019 திட்டத்தின் கீழ், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் அவுஸ்ரேலிய கடற்படை கூட்டுப் பயிறிகள் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிறிலங்கா வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள் 30 ஆம் நாள் வரை இங்கு தரித்து நின்று சிறிலங்கா கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இதற்கமைய, HMAS Canberra மற்றும் HMAS Newcastle ஆகியன, கொழும்புத் துறைமுகத்துக்கும், HMAS Success மற்றும், HMAS …
-
- 0 replies
- 270 views
-
-
இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா நாட்டின் எந்தவொரு இனத்தையும் இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை என்றும் தீவிரவாதத்தை வேரறுப்பதே தமது பிரதான நோக்கமாக இருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொடிகாவத்தை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்று, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, பொருளாதார …
-
- 6 replies
- 1.8k views
-
-
March 24, 2019 ஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொலன்னாவை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்;. மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார் அரசாங்கத்தின் மீதான பற்று குறைவடைந்துள்ளமையின் காரணமாக அனைத்து தரப்பினரும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் அத…
-
- 1 reply
- 649 views
-
-
ஜனாதிபதி வேட்பளார் – ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு எதிர்வரும் ஜனாதிபதி வேட்பளார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அதாவது சஜித் பிரேமதாசவிற்கு பின்னால் ஒரு தரப்பினரும் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு பின்னால் மற்றுமொரு தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்தை தெரிவித்து வருவதாலேயே இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என கட்சி சார்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறாக, அவர் பிரதமராக தொடர்ந்தும் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் சஜித் பிரேமதாச அல்லது கரு ஜயசூரிய ஆகிய இர…
-
- 0 replies
- 627 views
-
-
தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் – தவராசா! வடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் பல பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றும் வேலைத்திட்டத்தினை வடக்கு ஆளுநர் கைவிட வேண்டும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரப் பகிர்வின் விளைவுதான் இந்த மாகாண சபை. எனவே தமிழ் மற்றும் முஸ்…
-
- 0 replies
- 398 views
-
-
(தி.சோபிதன்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். சுதந்திரக் கடசியின் மறுசீரமைப்பு செயற்திட்ட மகாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கடசிக்கான புதிய செயலாளராக தயாசிறி ஜயசேகரவை அண்மையில் நியமித்தார். …
-
- 1 reply
- 273 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு வெளிநாட்ட…
-
- 0 replies
- 257 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக வெயில் உள்ள இடங்களில் குடி தண்ணீர் போத்தல்கள் , மென்பானங்கள் , இளநீர் போன்றவற்றை வைக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு சாவகச்சேரி சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அவற்றை திறந்த வாகனங்களில் ஏற்றி வெயிலில் அவற்றை கொண்டு சென்று விற்பனை செய்வதனையும் நிறுத்துமாறும், தவறும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வியாபரிகளை சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் சுகாதார பிரிவினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , …
-
- 0 replies
- 680 views
-
-
March 24, 2019 இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய ‘பகத் சிங் புரம்’ புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று (24) நடைபெற்றுள்ளது இடம்பெற்றது. அமைச்சர் பழனி திகாம்பரமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர், காணி மற்றும் பா…
-
- 0 replies
- 276 views
-
-
வைத்தியர்களின் அசமந்த போக்கினால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 444 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கைத் தலைவர்களிடம் திராணி கிடையாது – கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு உண்மையை எதிர்கொள்வதற்கு திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்ப…
-
- 1 reply
- 458 views
-
-
பறிமுதல் செய்யப்பட்ட ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது. மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்தவர…
-
- 0 replies
- 256 views
-
-
தமிழர்கள் என்பதால் அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் – அனந்தி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழர்கள் எனும் காரணத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்க உத்தியோகதர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கூற முடியாதென தெரிவிக்கின்றனர். ஆனால் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அரசாங்க உத்தியோகத்தர்களும் கடமைய…
-
- 0 replies
- 398 views
-
-
திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரம் – இந்துக்களை மீண்டும் இணையுமாறு சர்வமத பேரவை அழைப்பு மன்னார் சர்வ மதப்பேரவையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமய சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென மன்னார் சர்வ மதப்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் சர்வமதப்பேரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மன்னார் மாவட்டத்தில் பல்லின பல்சமய மக்கள் பல நூற்றாண்டு காலகமாக ஒற்றுமையாக, அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர். யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள்…
-
- 0 replies
- 386 views
-
-
உள்நாட்டு நீதி முறையை மாத்திரம் ஏற்று இறையாண்மையை பாதுகாத்துள்ளோம் – பிரதமர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்க மறுத்ததன் மூலம், தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67ஆவது ஆண்டு நினைவு நாள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜெனீவா அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அனைத்துலக சமூகம் உள்நாட்டு நீதி முறையை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் எனவே, போர்க்கு…
-
- 0 replies
- 331 views
-
-
40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் – யோகேஸ்வரன் ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வும் வெபர் விளையாட்டு அரங்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்ப…
-
- 0 replies
- 291 views
-
-
தேசிய இந்து மாகா சபையை அமைக்க விரைவில் நடவடிக்கை – மனோ இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய இந்து மாகா சபை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வட. கொழும்பு இந்து பரிபாலன சங்கத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், ”கூட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒரு பொறிமுறை வேண்டுமென்ற அடிப்படையிலே நாட்டில் இலங்கை தேசிய இந்து மகா சபையை அமைக்க இருக்கின்றோம். இந்து அறங்காவலர்கள், மதத் தலைவர்கள், இந்துக் கல்லூரிகள், அறநெறி பாடப் பொறிமுறை ஆகிய அனைத்தைய…
-
- 0 replies
- 293 views
-
-
ஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவு வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ”நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தப் பிரச்சினைகளை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் ம…
-
- 1 reply
- 788 views
-
-
அனைத்துலக விசாரணையை நிராகரித்து இறைமையை பாதுகாத்துள்ளோம் – ரணில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடந்த சிறிலங்காவின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜெனிவா அமர்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், அனைத்துலக சமூகம் உள்நாட்டு நீதி முறையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் எனவே, போர்க்குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்ப்பு வெளியானது இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன மொன்றினை ஆரம்பிக்க ஓமான் நாடு $3.85 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது என்ற செய்தி நேற்று முன்தினம் வெளியாகி, கொழும்பு பரபரப்பாகியது. ஆனால் அது தவறான செய்தி, ஓமானுக்கும் அந்த விசயத்துக்கும் தொடர்பு இல்லை என்று, ஓமான் மறுத்தது. இன்று இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்து அனுமதிக்கும் board of investment இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ரகசியமாக இருக்கும் இந்த விபரங்களை ஓமான் தொடர்பான விடயங்கள் தவறாக பொது வெளியில் சொல்லப் பட்டுள்ளதால், இதனை வெளியிட்டு உள்ளது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கபூரினை சேர்ந்த Silver …
-
- 5 replies
- 1.1k views
-
-
March 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மன்னார் வெள்ளாங்குளத்தில் இந்து ஆலயம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வீதி அருகாக காணப்படும் குறித்த ஆயலத்தின் மீது நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் இந்த ஆலயத்தில…
-
- 3 replies
- 915 views
-
-
சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில், அமைச்சின் செயலாளர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 824 views
-