ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்று தெரியவந்ததை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “மன்னார் புதைகுழிக்கு சிறிலங்கா இராணுவமே பொறுப்பு என்று அனைத்துலக சமூகத்திடம் கூறுவதற்கு பலரும் தயங்கவில்லை. எல்லாவ…
-
- 3 replies
- 963 views
-
-
March 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அரசாங்கத்துக்கு எதிராக கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கூட்டணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாரென, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 166 views
-
-
மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே – தடவியல் நிபுணரின் அதிர்ச்சி தகவல் மன்னார் மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே என தடவியல் நிபுணர் பேராசிரியர் செல்வ சுரேஷ் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அந்த புதைகுழி கி.பி.1400 – கி.பி.1650 வருட காலத்திற்குரியது என பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து, ” மன்னார்மனித புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டதே. இது தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஸ்ரீலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை குறித்து கருத்து
-
- 2 replies
- 541 views
-
-
சீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு எந்த பாதுகாப்புக் கரிசனையும் இல்லை என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். உலகில் சீனாவின் Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளைப பயன்படுத்தும் 170 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கியுள்ளது. Huawei நிறுவனத்தின் நிறுவனர், சீன இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், பல நாடுகள் Huawei நிறுவனத்தின் தயாரிப்பான கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து கரிசனையை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் அஜி…
-
- 0 replies
- 296 views
-
-
மன்னார் புதைகுழி குறித்து இன்னொரு ஆய்வை நடத்த வேண்டும் – சிவமோகன் மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவை, 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்று தெரியவந்தது. எனினும், இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூற முடியாது. அதேவேளை, மன்னார் புதைகுழியின் முக்கியத்துவம் கருதி, இரண்டாவது ஆய்வு ஒன்றை மேற…
-
- 0 replies
- 422 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிக்க மகிந்த அணி, ஜேவிபி கங்கணம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜேவிபியும் சூளுரைத்துள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது. தமிழ் சட்ட நிபுணர்கள் பலரும் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தனர். இந்தநிலையில், பயங்கரவாத எத…
-
- 1 reply
- 781 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு March 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று(10) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இல.258 ஆனந்தபுரம் கிழக்கில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மஞ்சல், வெள்ளை கொடிகளுடன் இளைஞர்களின் உந்துருளி பவனியுடன் இன்று காலை பத்து மணியளவில் முன்னாள் முதலமைச்சர் வருகை தந்து கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அத்தோடு கட்சியின் கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு …
-
- 1 reply
- 645 views
-
-
நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம் – ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடள…
-
- 1 reply
- 503 views
-
-
கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய ஒப்புக்கொள்ள மாட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால் 13 ஆவது அரசியலமை…
-
- 0 replies
- 204 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் விடுமுறை நாட்களில் முற்பகல் பத்து மணி வரை யே வெளிநோயாளர் பிரிவில் பொது மக்கள் சிகிசை பெற்று வந்தனர். இதனால் பெருமளவான மக்கள் சிகிசையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கைக்க அமைவாக மதியம் 12 மணி வரை வெளிநோயாளர் பிரிவில் சிகிசை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 321 views
-
-
March 10, 2019 இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறி…
-
- 0 replies
- 720 views
-
-
March 10, 2019 தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் வரை எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ பொறுமையாக காத்திருக்க வேண்டுமென, பாராளுளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசமைப்பைக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தால் அது வெற்றியடையாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/115660/
-
- 0 replies
- 557 views
-
-
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த மறுக்கும் சிறிலங்கா இராணுவம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கடுமையான கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை நடத்த சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, …
-
- 1 reply
- 681 views
-
-
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறப்பு : March 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் மன்னாரில் திறக்கப்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தெற்கில் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 2ஆம் திகதி இந்த அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் வடக்கு, கிழக்கு , தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல் போனோர் பணியகம், இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வருடத்துக்குள் பூர்த்தியாக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவே…
-
- 0 replies
- 438 views
-
-
சிறிலங்காவுக்கு கடன் வழங்க இழுத்தடிக்கிறது சீனா சிறிலங்கா அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கடந்தகாலங்களில் சிறிலங்காவுக்கான கடன்களை சீனா துரிதமாக வழங்கியது. இப்போது, சீனா கடன்களை வழங்க தாமதிக்கிறது. மேலதிக நிபந்தனைகளையும் விதிக்கிறது. இதற்குப் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமை தான். சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணம் அல்ல. சீனாவை விட ஜப்பானிடம் இருந்தே அதிக கடன்களை பெற்றிருக்கிறது சிறிலங்கா” என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 257 views
-
-
-
மீண்டும் கூத்தாடும் சிறிசேன - இம்முறை ஜெனீவாவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2 ஆண்டுகள் தருமாறு ஜெனீவாவில் கேட்டுக் பெற்றுக் கொண்ட மைத்திரி, இவ்வாரம், ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, நாட்டில் பெறப்படுள்ள அமைதியினை பேண, தான் பழைய காயங்களை கிளற விரும்பவில்லை எனவும், தான் ஐநாவுக்கு சொல்ல விரும்புவது எல்லாம், எங்களை, அப்படியே எங்கள் போக்கில் விட்டுவிடுங்கள், பழைய காயங்களை கிளற வேண்டுமென்று கூறாதீர்கள், என்று தெரிவித்தார். ஒரு சில மணிநேரங்களிலேயே, ரணில் விக்கிரமசிங்கவின் அரசு, அவர் நிலைப்பாட்டில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும், தாம் , யுத்த குற்ற விசாரணை விஷயத்தில், தொடர்ந்து ஐநாயுடன் செயல் படப் போவதாகவும் அறிவித்தது. அரசின் அமைச்சர்கள் யாரு…
-
- 0 replies
- 910 views
-
-
நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிக…
-
- 19 replies
- 1.3k views
-
-
(ஆர்.விதுஷா) அமெரிக்க நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கைக்கு அமைய மனித புதை குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே நோக்கும்போது நீதிமன்றத்தின் முடிவுகளே இறுதியானவை. ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசகரு மொழிகள் இந்து மத கலாசார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்து விட்டோம். அது யார் என உரிய நேரத்தில் அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51559
-
- 0 replies
- 510 views
-
-
சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவையில்லை!!!கோத்தபாய ராஜபக்ச. சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெறாமல் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் கட்சிகள் பிழையான திசையில் பயணித்துக்கொண்டுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டு தங்களது மக்களை அபிவிருத்தி செய்யவிரும்பில்லை,அதிகாரத்திற்கு வெளியே எதிர்கட்சியாகவிருந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் வடமாகாணத்திற்கு பொறுப்பாக அவர்களை மக்கள் தெரிவு செய்தவேளை அவர்கள் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை. மேலும் அபிவிருத்திக்காக அனுப்ப…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
March 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn விடுதலை புலிகளுடனான யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகளாகும் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்தார். யுத்தத்தின்ப…
-
- 0 replies
- 597 views
-
-
March 9, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி நழுவிவிட முடியாது என்று கூறியுள்…
-
- 0 replies
- 337 views
-
-
காணாமலாக்கப்பட்டவா்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பும் வகையில் துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டமொன்றை 16ஆம் திகதி நடத்தவுள்ளனர். இந்நிலையில் அதனை குழப்பும் வகையில் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தை 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டு துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறான துண்டுபிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த துண்டுபிரசுரத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்ட…
-
- 0 replies
- 558 views
-
-
ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மக்களின் கோரிக்கைகளை சேகரிப்பதற்கு தனியான அமைப்பொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவ…
-
- 5 replies
- 935 views
- 1 follower
-