ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
சிறிலங்காவில் மனித உரிமைகளை மீறியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா சிறப்பு நிபுணர் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாத முறியடிப்பின் போது, மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பியோனில்லா நி அலெய்ன் ஜெனிவாவில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். “மோசமான மனித உரிமை சரிசனைகளுக்கு நிலையான தீர்வைக் காணும், முக்கியமான வாய்ப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்து அ…
-
- 1 reply
- 637 views
- 1 follower
-
-
February 27, 2019 கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்க கோரி 727 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கும் வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுக்குமிடையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு உடனடி தீர்வுகள் ஏதுமின்றி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுடன் போராட…
-
- 4 replies
- 384 views
-
-
தூக்கிலிட அமெரிக்காவிலிருந்தும் தயாராம்? | இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற அமெரிக்காவிலிருந்து ஒருவர் விண்ணப்பித்துள்ளார். சிறைச்சாலைகளில் மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி 101 விண்ணப்பப்படிவங்கள் உள்நாட்டிலிருந்தும், ஒரு விண்ணப்படிவம் அமெரிக்காவிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள…
-
- 0 replies
- 278 views
-
-
அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம், 06ஆம் நாள்களில் அவர் சிறிலங்காவின் தங்கியிருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆகிய அரச தரப்பு தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார். அத்துடன், காணாமல் போனோருக்கான பணியகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக, வணிக சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர…
-
- 0 replies
- 203 views
-
-
தமிழ் உறுப்பினர் உட்பட 5 பேரின் சொத்து விபரம் வெளியானது! தாமாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், தாரக பாலசூரிய, விதுர விக்கிரமநாயக்க, எரான் விக்கிரமரத்ன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே தாமாகவே முன்வந்து, தமது சொத்து விபரங்களை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதனை செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும், இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சொத்து விபரங்களை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தமிழ்-உறுப்பினர்-உட்பட-5-ப/
-
- 2 replies
- 900 views
-
-
பரந்தனில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சாரதி உட்பட நால்வர் காயம் March 1, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று (28) இரவு சுமார் பத்து முப்பது மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று பரந்தன் சந்தியை கடக்க முற்பட்ட போது முல்லை வீதியில் இருந்து திடீர் என வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று யாழ் நோக்கி வீதிக்கு ஏறியமையமையினையடுத்து பயணிகளின் நலன் கருதி பேருந்து சாரதி வீதியின் மறு…
-
- 1 reply
- 287 views
-
-
அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு புதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் அமுனுகம, எம்.ஏ.சுமந்திரன், ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக…
-
- 3 replies
- 811 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடர் – நழுவுகிறது சிறிலங்கா அரசு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு சிறிலங்காவில் இருந்து அரசாங்க குழு ஜெனிவாவுக்கு செல்லாது என்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 20ஆம் நாள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடிய பின்னர், உயர்மட்டக் குழுவை இங்கிருந்த அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்ஏ.அசீஸ் மற்றும் அவரது அதிகாரிகளையே இ…
-
- 5 replies
- 730 views
- 1 follower
-
-
‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’ எஸ்.நிதர்ஷன் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
பெண் பௌத்த மதகுருவை கொலை செய்துவிட்டு அவரது கணவரும் தற்கொலை புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா கும்புக்கடவள பிரதேசத்தில் பெண் பௌத்த மதகுரு கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு இந்த கொலையைச் செய்ததாக கூறப்படும் அவரின் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கடந்த மாதம் 4ஆம் திகதி பௌத்த மதகுருவாகியுள்ளார். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அவருக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவரது கணவர் மறைத்து வைத்திருந்த கூறிய ஆயுதத்தினால் குறித்த பென்…
-
- 16 replies
- 1.7k views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராவுள்ளதாக அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது 20 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதுதொடர்பாக அந்த கட்சி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் …
-
- 0 replies
- 217 views
-
-
பார்வையில், டக்ளஸ் தேவானந்தாவின் குமுறல்கள்… வடக்கில் பௌத்த மாநாட்டை வடமாகாண ஆளுநர் நடத்த உள்ளதாக கூறியமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ஈழமக்கள் ஜனநாய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில் பௌத்த மயமாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கில் பௌத்த மாநாடு நடத்துவது தேவையற்ற விடயம் அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என தெரிவித்தார். சொத்து விபர அறிவிப்பு – முழு பூசணிக்காயை சோ…
-
- 0 replies
- 265 views
-
-
March 1, 2019 Add Comment சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனைச் இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் , இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. வடமாகாணத்தில் நிலவும் காணி, நீர், வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதி…
-
- 0 replies
- 172 views
-
-
March 1, 2019 அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று முற்பகல் (01) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ் / பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல்வள நிலைய கட்டடத்தொகுதி மற்றும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதி, சிற்றுண்டிச்சாலை என்பன ஆளுநரால் திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், …
-
- 0 replies
- 243 views
-
-
போரை நிறுத்தாவிடின் போர்க்குற்றச்சாட்டு சுமத்துவோம் – சிறிலங்காவை எச்சரித்த பிளேக் அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு போரை நிறுத்தாவிட்டால், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த றோகித போகொல்லாகமவிடம் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார் என்று தகவல் வெளியிட்டுள்ளார் கலாநிதி மொகான் சமரநாயக்க. அரசியல் ஆய்வாளரும், மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராக இருந்த போது, அவரது ஊடகப் பேச்சாளராக பதவி வகித்தவருமான மொகான் சமரநாயக்க, கொழும்பில் நேற்று முன்தினம் ‘எலிய’ அமைப்பினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இதன்போது, அவர், “சிறிலங்காவில் கால் வ…
-
- 0 replies
- 555 views
-
-
சமந்தா பவர் உரையாற்ற முன் திடீரென வெளியேறினார் சிறிலங்கா அதிபர் கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து வெளியேறிச் சென்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கலந்து கொண்டார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர்…
-
- 0 replies
- 456 views
-
-
ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள் சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றனர். மைத்திரிபால சிறிசேனவும் சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோன்றே மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின…
-
- 8 replies
- 1.2k views
-
-
கோத்தபாயவுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு March 1, 2019 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் 15ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அன்றைய தினம் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்தநிலையில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்ததனையடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்ஸ உள்ளி…
-
- 1 reply
- 454 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர்… February 28, 2019 வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் காவற்துறையினர் புதிதாக இணைக்கப்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் காவற்துறையினர் இணைக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞசர், யுவதிகள் முன்வரவேண்டும். இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே…
-
- 1 reply
- 554 views
-
-
யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்: பொலிஸாரின் பாரபட்சம் குறித்து விசனம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவதுஇ ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் உப விடுதிக் காப்பாளர் ஆகியோர் பகிடிவதை தொடர்பாக சிரேஸ்ட மாணவிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது சிரேஷ்ட …
-
- 0 replies
- 298 views
-
-
1.5 பில்லியன் ரூபாய் கடன் திட்டத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் 1.5 பில்லியன் ரூபாய் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்தோடு 6ஆம் கட்ட கொடுப்பணவை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர்கள் கடனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் எதிர்வரும் முக்கிய தேர்தல்கள் காரணமாக, சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள இறுக்கமான செலவு கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் …
-
- 0 replies
- 210 views
-
-
சிறிலங்காவுக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் – வெளியானது தீர்மான முன்வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன. இதற்கான தீர்மான முன்வரைவு, ‘சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், ஜெனிவாவில் உள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் நேற்று உலாவ விடப்பட்டுள்ளது. இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித …
-
- 1 reply
- 572 views
-
-
(ஆர்.யசி) இலங்கையில் தமிழீழம் ஒருபோதும் மலரப்போவதில்லை. தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நனவாகாத கனவை எண்ணிக்கொண்டு சந்தர்ப்பங்களை தவறவிடாது நாம் அனைவரும் ஒரு நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தெரிவித்தார். அத்துடன் வடக்கு மக்களுக்கு அபிவிருத்திக்கான பாதையை உருவாக்கிக்கொடுத்து அவர்களின் கஷ்டங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர…
-
- 2 replies
- 610 views
- 1 follower
-
-
போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா Feb 18, 20190 இறுதிக் கட்டப்போரில் எவர் போர்க்குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கின்றேன். என்றும் கூறினார். http://www.samakalam.com/செய்திகள்/போர்க்குற்றம்-இழைத்தவர்/
-
- 65 replies
- 5.3k views
-
-
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தன்னைக் கைதுசெய்வதற்கு எதிரான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, எதிர்வரும் 7ஆம் திகதி பரிசீலிப்பதாக, உயர் நீதிமன்றம் இன்று (28) அறிவித்தது. பிரதம நீதியரசர் நலின் பெரேரா, நீதியரசர்களாக பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில், இந்த மனு இன்று, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனிப்பட்ட காரணத்துக்காக, இந்த வழக்கில் தன்னால்…
-
- 0 replies
- 219 views
-