Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவனெல்லை நீதிமன்றிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்) கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடம் இருந்து குண்டு தயாரிக்கும் படி முறைகள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புத்தளம், வனாத்துவில்லு - லக்டோ ஹவுஸ் தென்னத்தோப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொன்டு எவ்வாறு இந்த குண்டுகளை தயாரிக்கலாம் எனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு ( சி.ஐ…

  2. அரசு அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபரை வேலையிலிருந்து நீக்குவேன் என்று இலங்கையின் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, குறித்த நபர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; "ம…

  3. January 30, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ பங்கேற்கமாட்டாரென, மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்…

  4. January 30, 2019 வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் எழைக் குடும்பம் ஒன்றின் வீடானது விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டு பகுதியில் மூன்று பிள்ளைகளுடைய குடும்பமொன்றின் வீடே இன்று அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பமானது தமது வீடானது குடிசையாக உள்ளதனால், அவர்கள் அருகில் உள்ள அயலாரது வீட்டில் உறங்குவதே வழமையாகும். அந்தவகையில் நேற்றைய இரவும் குறித்த குடும்பம் அயல் வீட்டில் உறங்க சென்ற பின்னரே இன்று அதிகாலை அவர்களது வீடு எரிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்களது உடமைகள் அன…

  5. பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் போகக்கூடாது என்பது நம் முன்னோர்களின் வாக்கு.பொலிஸ் நிலையத்துக்குப் போகப்பழகிவிட்டால், மானம்; ரோசம்; கெளரவம் என எல்லாமும் சுணைக்கெட்டுப் போய்விடும். தவிர, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் கொடுப்பதாக இருந்தால்கூட பல மணிநேரம் தாமதிக்கப்படும். இந்தத் தாமதம் வேண்டுமென்றே செய்யப்படுவதாகும். இதுதவிர, கையூட்டுக் கொடுக்கின்ற கீழ் நிலைக்கும் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.எனவேதான் பொலிஸ் நிலையத்துக்குப் போகக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறிவைத்தனர். அப்படியானால், நீதியைத் தீர்ப்பாகத் தரக் கூடிய நீதிமன்ற வாசலில் கால்வைக்கக் கூடாது என்று ஏன் நம் முன்னோர்கள் கூறினார்கள் என்றால், அதற்கும் தகுந்த காரணம் உண்டு. …

  6. January 29, 2019 Add Comment திருகோணமலை கிண்ணியா காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கங்கை சாவத்து பாலத்துக்கு அருகில் இன்று காலை முதல் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியாப் பகுதியைச் சேர்ந்த மூவர் சட்டவிரோதமாக மணல் ஏற்ற முற்பட்டதாகத் தெரிவித்து, விசேட காவல்துறை அதிரடிப்படையினர், அவர்களைக் கைது செய்ய முயற்சித்த வேளை தப்பிச்செல்ல முற்பட்ட வான் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அச்சம் காரணமாக அவர்கள் கங்கையில் குதித்த நிலையில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பதுடன், மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார். …

  7. தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பயன்படுத்த தடை – சுரேன் ராகவன் அதிரடி தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மது பாவனை அல்லது புகை பிடிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு வட மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடியாக தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. வட …

    • 10 replies
    • 1.1k views
  8. வெளிநாட்டு பயணங்களில் மோடியை மிஞ்சுவாரா மைத்திரி?? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 41 மாதங்களில் 34 உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம், இருதரப்பு உடன்படிக்கைகள், நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கள் எனப் பல்வேறுபட்ட பேச்சுக்களை இந்த விஜயத்தின் போது அவர் நடத்தியுள்ளார். அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த வருடத்தின் ஆரம்பம் வரை இதுவரை 34 உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதில் 2015 இல் – 10, 2016 இல் – 12, 2017 இல் – 7, கடந்த வருடமும் இந்த வருட ஆரம்பத்திலும் என சேர்த்து 34 உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார். அத்தோடு அடுத்த மாதம் தாய்லாந்திற…

    • 2 replies
    • 739 views
  9. இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிகள் என்பதனை முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உணர்த்தியிருப்பதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் இது தொடரபாக கருத்து தெரிவிக்கையில்;, முப்பத்திரெண்டு ஆண்டுகள் கடந்து ஒரு தமிழனான என்னை வடக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பதன் மூலம் இலங்கை நாட்டில் தமிழர்கள் சமமான குடிமக்கள் என்பதனை ஜனாதிபதி உணர்த்தியிருக்கிறார். நாம் ஒன்றுபட்டு விழுந்த எம் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.…

    • 3 replies
    • 575 views
  10. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வீதியில் திரண்டுள்ள உறவுகள்!! பதிவேற்றிய காலம்: Jan 30, 2019 காணாமல் ஆக்கபட்டோரின் உண்மைய நிலையை வெளிப்படுத்தக் கோரி வவுனியாவில் ஆயிரக்கணக்கான உறவுகள் திரண்டுள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/story/11/காணாமல்-ஆக்கப்பட்டவர்களைத்-தேடி-வீதியில்-திரண்டுள்ள-உறவுகள்.html

  11. அண்­ணன், தம்பி சண்­டை- அண்­ணன் அடித்­துக் கொலை!! பதிவேற்றிய காலம்: Jan 30, 2019 அண்­ணன், தம்­பிக்கு இடை­யில் நடந்த மோத­லில் படு­கா­ய­ம­டைந்த அண்­ணன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் நேற்றுஇரவு யாழ்ப்­பா­ணம், பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. கொடுக்­கல் வாங்­க­லில் ஏற்­பட்ட தக­ராறே சண்­டைக்­குக் கார­ணம் என்று பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். நெல்­லி­யடி வதி­ரிப் பகு­தி­யைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­க­ளின் தந்­தை­யான சிறி­ரங்­க­நா­தன் சுதா­க­ரன் (வயது-38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். காசுப் பிணக்­குத் தொடர்­பில் அண்­ணன் தம்­பிக்கு இடை­யில் வாய்த் தர்க்­கம் நடந்­தது என்­றும், அது கைக­ல…

  12. புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிககொண்டிருக்கிறது.ஆனால் அதற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிவதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவார் எனக் கூட்டமைப்பு இப்போதும் எதிர்பார்க்கிறதாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுகின்ற அறிக்கைகளைப் பார்க்கும்போது நடந்தால் நடக்கட்டும், இல்லையயன்றால் அதுபற்றி நமக்குக் கவலையில்லை என்பதுபோலக் கூறி வருகிறார்.பொதுவில் ஆட்சியில் இருப்பவர்கள் தீர்வுத்திட்டமொன்றைக் கொண்டு வருவர். அதனை எதிர்க்கட்சி எதிர்க்கும். ஆளுங்கட்சியும் இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து குறித்த தீர்வுத் திட்டத்தை கைவிடும்.இலவுகாத்த கிளிபோல இருந்த தமிழ்த் தரப்புகள் மீண்ட…

  13. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர் J இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், “ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத சிறிலங்காவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன. சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான…

    • 11 replies
    • 1.5k views
  14. பறிபோகிறதா வவுனியா வடக்கு ஊற்றுப்புலம்? January 29, 2019 நடுக்காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை அமைத்துக் குடியேற்றம்! வவுனியா வடக்கில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையினக் குடியேற்றம் இடம்பெறுவதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். அத்துடன் நாடு காட்டிற்குள் பாரிய புத்தர் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச சபைக்கு உட்பட்ட ஊற்றுக்குளம் கிராமப் பகுதியில் இவ்வாறு காடு கழிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவ வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்குச் சொந்தமான பகுதியிலேயே இந்தக் குடியேற்ற முயற்சிகள் இடம்பெறுகின்றன. வவுனியா, வடக்கு, ஊ…

  15. மே மாதத்திற்கு முன் மாகாணசபை தேர்தல் ; ஜனாதிபதி பிரேரணை (இராஜதுரை ஹஷான்) அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன் ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமைக்கு அமைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என்ற பிரேரணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார். ஜனாதிபதியின் சிறப்பு அமைச்சரவையின் பரிந்துரைக்கு அமைய இப்பிரேரணை அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கும், பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் உள்ள மாகாண சபைகளுக்கும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன் ஒரே நாளில் நாடுதழுவிய ரீதியில் பழை…

  16. ரவிராஜ் கொலை வழக்கின் மீள்திருத்த மனு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு Editorial / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 11:18 Comments - 0 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீள்திருத்த மனுவை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியான சஷிகலா ரவிராஜினால் இந்த மீள்திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று தீபாலி விஜ…

  17. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம் புதினப்பணிமனைJan 30, 2019 | 1:02 by in செய்திகள் சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- சிறிலங்காவினுடைய புதிய இராணுவப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்ப…

  18. போலி அடையாள அட்டையுடன் சுகாதாரப் பரிசோதகராக பணியாற்றிய இளைஞனுக்கு விளக்கமறியல் January 30, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர மற்றும் நல்லூர் பொதுச் சகாதார பரிசோதகர்க…

  19. எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்; சபையில் சம்பந்தன் கேள்வி Editorial / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 02:43 Comments - 0 பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டது தொடர்பில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தின் இன்று (25) கேள்வி எழுப்பினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அதே கட்சி எவ்வாறு வகிக்க முடியுமெனவும், அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில், அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, “கௌரவ ச…

  20. காணாமல் போனோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – கையெழுத்து போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில் அமொிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும். எனக்கோாி வவுனியாவில் தொடா்ச்சியான போராட்டங்களை நடாத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனா். யாழ்ப்பாணத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழா் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோா் சங்கத்தின் செயலாளர் கிருஸ்ணன் ராஜ்குமாா் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மாசி மாதம் எமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் 2 வருட பூர்த்தி வரும் நாளில் எமத…

  21. யாழ்.பல்கலைகழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு January 29, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைகழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி இன்று செவ்வாய்க்கிழமை காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 22 வயதான சிறிதரன் கோகிலமதி எனும் மாணவியே சடலமாக மீட்கபட்டு உள்ளார். குறித்த மாணவி கடந்த சில வாரங்களாக மன விரக்தியில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருலாம் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்த, தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரு…

  22. மன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த ஒரு தொகுதி காணி கையளிப்பு- January 29, 2019 மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (29.01.19) காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவத்தின் வசம் இருந்த மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் வசமிருந்த 16 ஏக்கர் காணிகளுக்கான ஆவணங்கள், தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 6…

  23. இந்தியாவின் 70வது குடியரசு தினம் யாழில் கொண்டாடப்பட்டது… January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2019) யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசுதின நிகழ்வுகள் காலையில் தூதரகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவழியினர் ஊடகவியலாளர்கள் என 80ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடரந்து இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட குடியரசுதின வாழ்த்துச் செய்தி இந்திய துணைத் தூ…

    • 18 replies
    • 1.9k views
  24. 1 Min Read January 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn நேற்று முன்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நாளை புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள S13உத்தரதேவி புக…

    • 2 replies
    • 389 views
  25. யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது January 29, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மூன்று மாடிகளை கொண்ட வர்த்தக தொகுதி , வாகன தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி , யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதியினை பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியுள்ளது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும் , தவறும் பட்சத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.